search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுப்மன் கில்"

    • ரோகித் சர்மா ஸ்கோரில் 13 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் அடங்கும்.
    • இந்த தொடரில் ரோகித் சர்மாவின் 2-வது சதம் இதுவாகும்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 218 ரன்னில் சுருண்டது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஆகியோரின் அரைசதங்களால் முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 52 ரன்களுடனும், சுப்மன் கில் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் ரோகித் சர்மா, கில் ஆட்டம் தொடங்கியதில் இருந்து அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். கில் 64 பந்தில் அரைசதம் அடிக்க, ரோகித் சர்மா சதத்தை நோக்கி சென்றார்.

    அரைசதம் அடித்த பின் கில் ரோகித் சர்மாவுக்கு இணையாக சதத்தை நோக்கி வந்தார். 147 பந்தில் 99 ரன்களை தொட்டார் ரோகித் சர்மார். 56-வது ஓவரை பஷீர் வீசினார். இந்த ஓவரில் ஒரு ரன் அடிக்காமல் மெய்டன் ஆக்கினார் ரோகித் சர்மா.

    ஹார்ட்லி வீசிய அடுத்த ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் அடித்து 154 பந்தில் சதம் அடித்தார் ரோகித் சர்மா. இந்த தொடரில் அவரின் 2-வது சதம் இதுவாகும்.

    ரோகித் சர்மா சதம் விளாசிய நிலையில்,  அடுத்த ஓவரில் பந்தை பவுண்டரிக்கு விரட்டி சுப்மன் கில்லும் சதம் அடித்தார். இவர் 137 பந்தில் 10 பவுண்டரி, 5 சிக்சருடன் சதம் அடித்தார்.

    • ஜெய்ஸ்வால் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • கில் 64 பந்தில் அரைசதம் அடித்தார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 218 ரன்னில் சுருண்டது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஆகியோரின் அரைசதங்களால் முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 52 ரன்களுடனும், சுப்மன் கில் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் அதிரடி ஆட்டத்தை தொடங்கினர். சுப்மன் கில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 64 பந்தில் அரைசதம் அடித்தார். ரோகித் சர்மா சதத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.

    45 ஓவர் முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ரோகித் சர்மா 76 ரன்களுடனும், கில் 65 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். ஜெய்ஸ்வால் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    • ஜெய்ஸ்வால் 3 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தில் உள்ளார்.
    • ரோகித் ஒரு இடம் பின் தங்கி 13-வது இடத்தில் இருக்கிறார்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதில் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய இளம் வீரர்களான கில், ஜெய்ஸ்வால் மற்றும் துருவ் ஜூரெல் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்படுவதன் மூலம் ஏற்றம் கண்டுள்ளனர்.

    இந்திய இளம் வீரர்களான ஜெய்ஸ்வால் 3 இடங்கள் முன்னேறி 12-வது இடத்திலும் கில் 4 இடங்கள் முன்னேறி 31-வது இடத்திலும் ஜூரெல் 31 இடங்கள் முன்னேறி 69-வது இடத்திலும் உள்ளனர். ரோகித் ஒரு இடம் பின் தங்கி 13-வது இடத்தில் இருக்கிறார்.

    முதலிடத்தில் நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் தொடருகிறார். ரூட் 2 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். விராட் கோலி 2 இடங்கள் பின் தங்கி 9-வது இடத்தில் இருக்கிறார். இந்திய அணி வீரர்கள் பொறுத்தவரை கோலி மட்டுமே டாப் 10 இடத்திற்குள் உள்ளார்.

    டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா முதலிடத்தில் தொடருகிறார். மற்றொரு இந்திய வீரரான அஸ்வின் 2-வது இடத்தில் உள்ளார். குல்தீப் யாதவ் 10 இடங்கள் முன்னேறி 32-வது இடத்தை பிடித்துள்ளார்.

    டெஸ்ட் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் ஜடேஜா முதலிடத்திலும், அஸ்வின் 2-வது இடத்திலும் உள்ளனர். இதில் ஜோ ரூட் 3 இடங்கள் முன்னேறி 4-வது இடத்தில் உள்ளார். மற்ற தரவரிசைகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை.

    • வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்-க்கு முதல் ஸ்பெல் அற்புதமாக அமைந்தது.
    • போட்டியும் தொடரும் எங்களுடையது என்பதில் மிகவும் மகிழ்ச்சி என சச்சின் கூறினார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிய 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துருவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

    இந்நிலையில் இளம் வீரர்களை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டி உள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய அணி மீண்டும் நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து போராடி வெற்றி பெற்றது. இது நமது வீரர்களின் குணத்தையும் மன வலிமையையும் காட்டுகிறது. வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்-க்கு முதல் ஸ்பெல் அற்புதமாக அமைந்தது.

    துருவ், இரு இன்னிங்சிலும் பந்தின் லென்த்தை கணித்து விளையாடினார். மேலும் அவரது புட்வொர்க் துல்லியமாக இருந்தது. அவருடன் குல்தீப் யாதவின் பார்ட்னர்ஷிப் முதல் இன்னிங்சில் ஆட்டத்தை நமது கையில் வைத்திருந்தது. 2-வது இன்னிங்சில் வெற்றி பெற முக்கிய பங்காற்றியது. 2-வது இன்னிங்சில் குல்தீப்பின் பந்து வீச்சு முக்கியமானது.

    சுப்மன் கில் சேசிங்கில் தனது உள்ளுணர்வைக் கட்டுப்படுத்துவதில் சிறந்த குணத்தை வெளிப்படுத்தி முக்கியமான அரை சதம் எடுத்தார். மேலும் சீனியர் வீரர்களான அஸ்வின், ஜடேஜா, ரோகித் ஆகியோர் தங்களது வேலைகளை சரியாக செய்தனர்.

    போட்டியும் தொடரும் எங்களுடையது என்பதில் மிகவும் மகிழ்ச்சி.

    இவ்வாறு சச்சின் கூறினார்.

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7-ந் தேதி தொடங்குகிறது.

    • இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 319 ரன்கள் எடுத்தது.
    • 2வது இன்னிங்சில் இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால், சுப்மன் கில் பொறுப்புடன் ஆடினர்.

    ராஜ்கோட்:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 445 ரன்களை குவித்தது. ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் சதம் விளாசி அசத்தினர்.

    இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 4 விக்கெட்டும், ரேஹான் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் டக்கெட் 153 ரன்களுக்கு அவுட்டானார்.

    இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், ஜடேஜா, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 196 ரன் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் சதமடித்தார். சுப்மன் கில் 65 ரன்னுடன் களத்தில் இருந்தார். இதன்மூலம் இந்திய அணி இங்கிலாந்தை விட 322 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுப்மன் கில் 91 ரன்னில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு இணைந்த சுப்மன் கில், குல்தீப் யாதவ் ஜோடி 55 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஜெய்ஸ்வால் களமிறங்கினார். குல்தீப் யாதவ் 27 ரன்னில் அவுட்டானார்.

    ஜெய்ஸ்வாலுடன் சர்பராஸ் கான் ஜோடி சேர்ந்தார். ஜெய்ஸ்வால் பொறுப்புடன் ஆடினார். இந்த ஜோடியின் ஆட்டத்தால் 300 ரன்களைக் கடந்தது.

    நான்காம் நாள் உணவு இடைவேளையில் இந்தியா 4 விக்கெட்டுக்கு 314 ரன்கள் எடுத்து, 440 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    ஜெய்ஸ்வால் 149 ரன்னுடனும், சர்ப்ராஸ் கான் 22 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    • இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் சுப்மன்கில் (104 ரன்) சதம் அடித்தார்.
    • 22-வது டெஸ்டில் ஆடும் அவர் 3-வது சதத்தை பதிவு செய்தார்.

    மும்பை:

    இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் சுப்மன்கில் (104 ரன்) சதம் அடித்தார். 22-வது டெஸ்டில் ஆடும் அவர் 3-வது சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் அவர் தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்தார். 12 இன்னிங்சுகளுக்கு பிறகு அவர் செஞ்சூரி அடித்துள்ளார்.

    இந்த நிலையில் சுப்மன் கில்லை தனித்துவத்தின் சகாப்தம் என டெண்டுல்கர் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    சுப்மன்கில்லின் இன்னிங்ஸ் அவரது திறமையை வெளிப்படுத்துகிறது. சரியான நேரத்தில் இந்த சதத்தை அடித்துள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2017-ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய மண்ணில் 3-வது பேட்ஸ்மேன் சதம் அடித்தது இல்லை.
    • சுப்மன் கில் நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின்போது சதம் அடித்தார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய 3-வது நாள் போட்டியின்போது இந்திய அணியின் சுப்மன் கில் சதம் விளாசினார்.

    டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து சொதப்பி வரும் சுப்மன் கில்லை ரஞ்சி போட்டியில் விளையாட சொல்ல வேண்டும் என தொடர்ந்து விமர்சனம் வைக்கப்பட்டது. இந்த விமர்சனத்திற்கு சுப்மன் கில் முற்றுப் புள்ளி வைத்தார்.

    மேலும், இந்திய டெஸ்ட் அணியில் 3-வது நபராக களம் இறங்கும் பேட்ஸ்மேன் இந்திய மண்ணில் சதம் அடித்து ஏழு வருடங்கள் ஆகிறது. புஜாரா கடந்த 2017-ம் ஆண்டு சதம் அடித்திருந்தார். அதன்பின் 3-வது வீரராக களம் இறங்கிய வீரர்கள் இந்திய மண்ணில் சதம் அடித்தது கிடையாது. தற்போது சுப்மன் கில் சதம் அடித்து ஏழு ஆண்டு காத்திருப்பை பூர்த்தி செய்துள்ளார்.

    விசாகப்பட்டினம் டெஸ்டில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 396 ரன்கள் குவித்தது. பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 255 ரன்னில் சுருண்டது.

    இந்தியா 2-வது இன்னிங்சில் 253 ரன்னில் ஆல்அவுட் ஆக, இங்கிலாந்து அணிக்கு 399 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    • இந்திய அணி முதல் இன்னிங்சில் 396 ரன்களில் ஆல் அவுட்டானது.
    • தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்து அசத்தினார்.

    விசாகப்பட்டினம்:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 396 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்து அசத்தினார். அவர் 209 ரன்னில் அவுட் ஆனார்.

    இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயப் பஷிர் மற்றும் ரெஹான் அகமது ஆகியோர் தலா 3 விக்கெட்டு வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 253 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 143 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஜாக் கிராலி 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பென் ஸ்டோக்சும் 47 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய பும்ரா 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்து, 171 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

    இதற்கிடையே, மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ரோகித் சர்மா 13 ரன்னும், ஜெய்ஸ்வால் 17 ரன்னும் எடுத்தனர். 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சுப்மன் கில், ஷ்ரேயஸ் அய்யர் ஜோடி 81 ரன் சேர்த்த நிலையில் அய்யர் 29 ரன்னில் வெளியேறினார்.

    ரஜத் படிதார் 9 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய சுப்மன் கில் அரை சதம் கடந்தார். 3-ம் நாள் உணவு இடைவேளையில் இந்தியா 4 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்து, 273 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. சுப்மன் கில் 60 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இந்நிலையில், பொறுப்புடன் ஆடிய சுப்மன் கில் சதமடித்து அசத்தினார். இதுவரை இந்திய அணி 350க்கும் மேற்பட்ட ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    • இந்திய அணி முதல் இன்னிங்சில் 396 ரன்களில் ஆல் அவுட்டானது.
    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 253 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    விசாகப்பட்டினம்:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 396 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்து அசத்தினார். அவர் 209 ரன்னில் அவுட் ஆனார்.

    இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயப் பஷிர் மற்றும் ரெஹான் அகமது ஆகியோர் தலா 3 விக்கெட்டு வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 253 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 143 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஜாக் கிராலி 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பென் ஸ்டோக்சும் 47 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய பும்ரா 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்து, 171 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ரோகித் சர்மா 13 ரன்னும், ஜெய்ஸ்வால் 17 ரன்னும் எடுத்தனர். 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சுப்மன் கில், ஷ்ரேயஸ் அய்யர் ஜோடி 81 ரன் சேர்த்த நிலையில் அய்யர் 29 ரன்னில் வெளியேறினார்.

    ரஜத் படிதார் 9 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய சுப்மன் கில் அரை சதம் கடந்தார்.

    மூன்றாம் நாள் உணவு இடைவேளையில் இந்தியா 4 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்து, 273 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    சுப்மன் கில் 60 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    • இந்திய அணியின் ஜெய்ஸ்வால் 179 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
    • இங்கிலாந்து அணி தரப்பில் ரெஹான், பஷிர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    விசாகப்பட்டினம்:

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. ரஜத் படிதார் முதன்முறையாக இந்திய அணியில் அறிமுகம் ஆனார். மேலும் முகேஷ் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா- ஜெய்ஸ்வால் ஆகியோர் களம் இறங்கினர். ரோகித் சர்மா 14 ரன்களிலும், அடுத்து வந்த சுப்மன் கில் களம் 34 ரன்களிலும் ஷ்ரேயஸ் அய்யர் 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜெய்ஸ்வால் தனது 2-வது சதத்தை விளாசினார்.

    ஜெய்வாலுடன் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடிய ராஜத் பட்டிதார் 32 ரன்னில் பரிதாபமாக ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அக்ஷர் படேல் (27) மற்றும் பரத் (17) கட் ஷாட் ஆட முயன்று கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 93 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் பஷிர், ரெஹான், 2 விக்கெட்டும் ஆண்டர்சன், டாம் ஹார்ட்லி ஆகியோர் தலா 1 விக்கெட்டும் கைப்பர்றினர். ஜெய்ஸ்வால் 170 ரன்களுடனும் அஸ்வின் 5 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

    ஆட்ட நேர முடிவில் இந்திய அணி வீரர்கள் தேவையில்லாமல் பவுண்டரி அடிக்க ஆசைப்பட்டு அவுட் ஆனது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    • ரோகித் சர்மா 14 ரன்களில் ஆட்மிழந்து ஏமாற்றம் அளித்தார்.
    • ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் சுப்மன் கில் 34 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. முதல் டெஸ்டில் விளையாடிய ஜடேஜா, கேஎல் ராகுல், முகமது சிராஜ் ஆகியோர் இந்த டெஸ்டில் இடம் பெறவில்லை.

    ரஜத் படிதார் முதன்முறையாக இந்திய அணியில் அறிமுகம் ஆனார். மேலும் முகேஷ் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இங்கிலாந்து அணியில் ஜேக் லீச், மார்க் வுட் இடம் பெறவில்லை. சோயிப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் இடம் பிடித்தனர்.

    டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் முதல் 15 ஓவர் வரை விக்கெட் இழக்கவில்லை. இதனால் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் 18-வது ஓவரில் ரோகித் சர்மா 41 பந்தில் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பஷீர் அறிமுக போட்டியிலேயே இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா விக்கெட்டை வீழ்த்தினார். அப்போது இந்தியா 40 ரன்கள் எடுத்திருந்தது.

    அடுத்து சுப்மன் கில் களம் இறங்கினார். இவர் ஜெய்ஸ்வால் உடன் இணைந்து சிறப்பாக விளையாடினார். மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன் சுப்மன் கில் 46 பந்தில் 34 ரன்கள் எடுத்து ஆண்டர்சன் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியா 89 ரன்கள் எடுத்திருந்தது.

    3-வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால் உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். ஜெய்ஸ்வால் 30-வது ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸ், பவுண்டரிகள் விளாசி அரைசதம் கடந்தார். மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 31 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்துள்ளது.

    ஜெய்ஸ்வால் 51 ரன்களுடனும், ஷ்ரேயாஸ் அய்யர் 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    • தோல்விக்கு 2-வது இன்னிங்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பலாக செயல்பட்டது முக்கிய காரணம்.
    • 2-வது இன்னிங்சில் கில் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

    ஐதராபாத்:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது.

    இந்த தோல்விக்கு 2-வது இன்னிங்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பலாக செயல்பட்டது முக்கிய காரணம். குறிப்பாக சமீப காலங்களாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி வரும் சுப்மன் கில் முதல் இன்னிங்சில் 23 ரன்களில் அவுட்டான நிலையில் முக்கியமான 2-வது இன்னிங்சில் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

    இந்நிலையில் சுப்மன் கில்லின் பேட்டிங் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்தீவ் பட்டேல் விமர்சித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    முதல் இன்னிங்சில் சுப்மன் கில் பேட்டிங் செய்த அணுகுமுறையை நாம் பார்த்தோம். அவர் நல்ல ஷாட்டுகளை அடிப்பதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. அப்படி நீங்கள் ரன்கள் அடிக்க முயற்சிக்கவில்லை எனில் சர்வதேச கிரிக்கெட்டில் எதிரணி பவுலர்கள் எளிதாக அடிப்பதற்கு தேவையான சுமாரான பந்துகளை உங்களுக்கு வீச மாட்டார்கள்.

    நீங்கள் அங்கே உங்களுடைய திறமையை காண்பிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் பவுண்டரிகளை அடிக்க முயற்சிக்காவிட்டாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை மாற்ற வேண்டும். எனவே அதில் எப்படி முன்னேறலாம் என்பதை அவர் பார்க்க வேண்டும்.

    என்று பார்தீவ் பட்டேல் கூறினார்.

    ×