search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுதந்திர தினவிழா"

    • நெற்குப்பையில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
    • பிடாரி அம்மன் கோவிலில் தூய்மை பணி நடந்தது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பை பேரூராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடந்தது. பேரூராட்சி சேர்மன் பழனியப்பன் (பொறுப்பு) தலைமை வகித்தார்.

    இளநிலை உதவியாளர் சேரலாதன், வரித்தண்டர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் கவுரவிக்கப் பட்டனர். தூய்மை பணியா ளர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது. மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது. பின்னர் பிடாரி அம்மன் கோவிலில் தூய்மை பணி நடந்தது.

    • தென் மாவட்டங்களில் இருந்து வந்த ரெயில்களும் நிரம்பி இருந்ததால் எழும்பூர், தி.நகர், தாம்பரம் நிலையங்களில் கூட்டம் மிகுதியாக இருந்தன.
    • கோயம்பேடு பஸ் நிலையம் அருகிலும், மேம்பாலத்திலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    சென்னை:

    அரசு விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமையை தொடர்ந்து நேற்று சுதந்திர தின விழா விடுமுறை கிடைத்ததால் வெளியூர் செல்லக்கூடியவர்கள் வெள்ளிக்கிழமை பயணத்தை மேற்கொண்டனர்.

    சென்னையில் இருந்து பஸ், ரெயில், கார்களில் சென்றவர்கள் இன்று சென்னை திரும்பினார்கள்.

    சென்னை திரும்ப வசதியாக பல்வேறு நகரங்களில் இருந்து வழக்கமான பஸ்களை விட கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டன.

    2,100 பஸ்களுடன் கூடுதலாக 500 சிறப்பு பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன. வெளியூர்களில் இருந்து அரசு பஸ்களில் சென்னை வருவதற்கு 30 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருந்தனர்.

    இதே போல 3000 பேர் சென்னையில் இருந்து முன்பதிவு செய்து வெளியூர் புறப்பட்டு சென்றனர். சுமார் 1.5 லட்சம் பேர் அரசு பஸ்களில் பயணம் செய்து சென்னை திரும்பியுள்ளனர்.

    இது தவிர ஆம்னி பஸ்களிலும் கூட்டம் நிரம்பி இருந்தன. 25 ஆயிரம் பேர் அதில் பயணம் செய்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து புறப்பட்டு வந்த பஸ்கள் இன்று அதிகாலை முதல் கோயம்பேடுக்கு வரத் தொடங்கின.

    பெரும்பாலான பஸ்கள் தாம்பரம், கிண்டி, வடபழனி வழியாக வந்தன. இதனால் கோயம்பேடு 100 அடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டன.

    காலை 7 மணி முதல் 9 மணி வரை அதிகளவில் பஸ்கள் வந்ததால் நெரிசல் காணப்பட்டன. கோயம்பேடு பஸ் நிலையம் அருகிலும், மேம்பாலத்திலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    இதே போல தென் மாவட்டங்களில் இருந்து வந்த ரெயில்களும் நிரம்பி இருந்ததால் எழும்பூர், தி.நகர், தாம்பரம் நிலையங்களில் காலையில் கூட்டம் மிகுதியாக இருந்தன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • செங்கோட்டையில் பிரதமர் மோடி 10-வது முறையாக நேற்று கொடியேற்றினார்
    • அவரது இரண்டு முறை பிரதமர் பதவி காலத்தில் கடைசி சுதந்திர தின உரை

    சுதந்திர தினவிழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி நேற்று உரையாற்றினார். அப்போது அடுத்த முறையும் டெல்லி செங்கேட்டையில் கொடியேற்றுவேன். இந்தியாவின் சாதனைகளை நாட்டு மக்களுக்கு பட்டியலிடுவேன் எனக் கூறினார்.

    மோடியின் இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் விமர்சன கருத்துகளை தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ''பிரதமர் மோடி அடுத்த வருடம் அவரது வீட்டில்தான் கொடி ஏற்றுவார்'' எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இது செங்கோட்டையில் மோடியின் கடைசி கொடியேற்றம் என லல்லு பிரசாத் யாதவ், மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் பா.ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் அ.தி.மு.க.-வின் மாநிலங்களவை எம்.பி., மல்லிகார்ஜூன கார்கே சரியாகத்தான் கூறியுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தம்பிதுரை கூறுகையில் ''பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை. இந்தியாதான் அவரது குடும்பம், செங்கோட்டைதான் அவரது வீடு. பிரதமர் மோடி அடுத்த ஆண்டு அவரது வீட்டில்தான் தேசியகொடி ஏற்றுவார் என காங்கிரஸ் தலைவர் கார்கே சரியாகத்தான் கூறியுள்ளார்'' என்றார்.

    • 4 வீரர்களும் சேர்ந்து தேசிய கொடியுடன் கூடிய கம்பியை கடலுக்குள் குறிப்பிட்ட ஒரு இடத்தில் ஊன்றினர்.
    • பாம்பன் ரோடு பாலம், கப்பல் நிறுத்தும் தளம் உள்ளிட்ட இடங்களிலும் கொண்டாடினார்கள்.

    ராமநாதபுரம்:

    நாடு முழுவதும் சுதந்திர தினம் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில், இந்திய கடலோர காவல் படையினரும் உற்சாகமாக கொண்டாடினார்கள். இதையொட்டி கடல், கடற்கரை, கப்பல்களில் தேசியக்கொடி ஏற்றினார்கள்.

    மூழ்கு நீச்சலில் (ஸ்கூபா டைவிங்) நிபுணத்துவம் பெற்ற கடலோர காவல் படை வீரர்கள் 4 பேர் இணைந்து, தேசியக்கொடியுடன் கடலுக்குள் நீந்திச்சென்றனர். 4 வீரர்களும் சேர்ந்து தேசிய கொடியுடன் கூடிய கம்பியை கடலுக்குள் குறிப்பிட்ட ஒரு இடத்தில் ஊன்றினர். தொடர்ந்து, தேசியக் கொடியானது கடலுக்கு மேல்பரப்பில் பறந்தது. அப்போது கடலுக்குள் இருந்தபடியே கடலோர காவல் படை வீரர்கள் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர்.

    இதேபோல் கடலோர காவல் படைக்கு சொந்தமான ரோந்து கப்பல்களில் நின்றபடி, அனைத்து வீரர்களும் தேசியக்கொடியை கைகளில் உயர்த்தி, சுதந்திர தின விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். மேலும் இந்திய கடல் எல்லையில் உள்ள 5-வது மணல் திட்டு பகுதியில் கடலோர காவல் படை வீரர்கள் இந்தியாவின் வரைபடம் போல் அணிவகுத்து நின்று, தேசிய கொடியை உயர்த்தி மரியாதை செலுத்தினர்.

    பாம்பன் ரோடு பாலம், கப்பல் நிறுத்தும் தளம் உள்ளிட்ட இடங்களிலும் கொண்டாடினார்கள். இதுகுறித்த வீடியோவை இந்திய கடலோர காவல் படையின் டுவிட்டர் பக்கத்திலும், சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோக்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    • ரூ.34 லட்சத்து 36ஆயிரத்து 633 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • சிக்கண்ணா அரசு கல்லூரியில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    உடுமலை:

    உடுமலை வட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் பங்கேற்கும் குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை தொடங்கியது.இதில் கால்பந்து, ஆக்கி, கபடி, கையுந்து பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட குழு போட்டிகள், தனி நபா் போட்டிகள், பல்வேறு பிரிவுகளில் ஓட்டப் பந்தயங்கள் மற்றும் தடகளப் போட்டிகள் நடைபெற உள்ளன.

    முதல் நிகழ்வாக உடுமலையை அடுத்துள்ள ருத்ரவேணி முத்துசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் கேரம் போட்டி நடைபெற்றது. கல்லூரி ஆலோசகா் ஜெ.மஞ்சுளா போட்டிகளை தொடங்கிவைத்தாா்.இதில் இரட்டையா் பிரிவில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் 17 பள்ளிகளும், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் 21 பள்ளிகளும், 18 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் 11 அணிகளும் கலந்து கொண்டன.

    ஒற்றையா் பிரிவில் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 18 பள்ளிகளும், 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 21 பள்ளிகளும், 18 வயதுக்குட்பட்ட பிரிவில் 13 பள்ளிகளும் கலந்து கொண்டன. ஒவ்வொரு பிரிவுகளிலும் முதலாவதாக வந்த மூன்று போ் தோ்வு செய்யப்பட்டனா். இவா்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கு பெற முடியும். 

    • பழனி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
    • அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார்.

    விழுப்புரம்:

    சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி விழுப்புரத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் இன்று காலை சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டர் பழனி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் கலெக்டர் பழனி, போலீஸ் சூப்பிரண்டு சஷாங்சாய் ஆகியோர் திறந்த ஜீப்பில் சென்று காவல்த்துறை, வனத்துறை, தீயணைப்பு ஆகிய துறையினர் ஊர்காவல், தேசிய மாணவர் படையினர், இளம் செஞ்சிலுவை சங்கத்தினர் ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்து பரிசுகளை வழங்கினார்.

    அதன் பிறகு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 200 பேருக்கு நற்சான்றிதழை மாவட்ட கலெக்டர் பழனி வழங்கினார். அதனை தொடர்ந்து அரசின் பல்வேறு துறைகள் சார்பில் ஏழை, எளிய மக்கள் 20 பேருக்கு ரூ.25,37,246 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவிகளின் பல்வேறு கண்கவர் கலை நிகழ்ச்சிகளும், தமிழக பாரம்பரிய கலையான மல்லர்கம்ப கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இவர்கள் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை கலெக்டர் பழனி வழங்கினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக், போலீஸ் சூப்பிரண்டு சஷாங்சாய், எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், மாவட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட கூடுதல் கலெக்டர் சித்ராவிஜயன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், கோட்டாட்சியர் பிரவீனாகுமாரி, தாசில்தார் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    முன்னதாக காந்தி சிலைக்கு கலெக்டர் பழனி, நகராட்சி ஆணையர் ரமேஷ் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினர்.

    விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற தலைவர் சர்க்கரை தமிழ்ச்செல்வி பிரபு தலைமையில் தேசிய கொடி ஏற்றி சிறப்புரையாற்றி பின்னர் விழாவிற்கு வந்திருந்த கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார் .துணைத் தலைவர் சித்திக் அலி,விழுப்புரம் நகராட்சி கமிஷனர் ரமேஷ், கவுன்சிலர்கள் மணவாளன், சிவக்குமார்,அமர் ஜி.உஷா மோகன், வசந்தா, மகாலட்சுமி உள்ளிட்ட கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • விழாவிற்கு கலெக்டர் சரயு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
    • சிறப்பாக பணியாற்றிய மைக்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 305 பேருக்கு சான்றிதழும் வழங்கினார்.

    கிருஷ்ணகிரி, 

    இந்திய நாட்டின் 77-வது சுதந்திர தின விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் சுதந்திர தினவிழா நடை பெற்றது.

    இந்த விழாவிற்கு கலெக்டர் சரயு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அவர் காவல்துறை அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்.

    பின்னர் 23 பயனாளிகளுக்கு ரூ.13 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கலெக்டர் சரயு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    மேலும் சிறப்பாக பணியாற்றிய மைக்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 305 பேருக்கு சான்றிதழும் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாக்கூர், வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். செல்லக்குமார், திட்ட இயக்குனர் வந்தனா கார்க், வருவாய் கோட்டாட்சியர் பாபு உட்பட அரசு அலுவலர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    • பெசன்ட்நகர் மகாலட்சுமி கோவிலில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பங்கேற்று சமபந்தி விருந்தில் உணவருந்தினார்.
    • வடபழனி முருகன் கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார்.

    சென்னை:

    சுதந்திர தினத்தையொட்டி ஆண்டுதோறும் கோவில்களில் சமபந்தி விருந்து வழங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் கோவில்களில் அறுசுவை உணவுடன் கூடிய சமபந்தி விருந்து இன்று நடைபெற்றது.

    இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் இந்த சமபந்தி விருந்து நடந்தது. சென்னையில் 32 கோவில்களில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, கோவில் செயல் அலுவலர் மற்றும் இணை ஆணையர் நித்யா மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    பார்த்தசாரதி கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தின்போது 200 பேருக்கு வேட்டி- சேலையும் வழங்கப்பட்டது. பொதுமக்களோடு அமர்ந்து சமபந்தி விருந்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர்பாபு ஆகியோர் உணவருந்தினர்.

    பின்னர் வேட்டி-சேலையை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். வடை-பாயாசம், சர்க்கரை பொங்கல் ஆகியவற்றுடன் சுவையான அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இதனை பொதுமக்கள் ருசித்து சாப்பிட்டனர்.

    தேனாம்பேட்டை பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் நடந்த சமபந்தி விருந்தில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு பொதுமக்களோடு அமர்ந்து உணவருந்தினார். அடையாறில் உள்ள ஆனந்த பத்மநாபசுவாமி கோவிலில் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்றார்.

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அமைச்சர் பெரியசாமி, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோரும் கலந்து கொண்டு சமபந்தி விருந்தில் மக்களோடு மக்களாக அமர்ந்து உணவருந்தினார்கள்.

    பெசன்ட்நகர் மகாலட்சுமி கோவிலில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பங்கேற்று சமபந்தி விருந்தில் உணவருந்தினார். வடபழனி முருகன் கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார். இதில் கோவில் தக்கார் ஆதிமூலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவிலில் நடந்த சமபந்தி விருந்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர். அரண்மனைக்கார தெருவில் உள்ள கச்சாலீஸ்வரர் கோவிலில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தம்புசெட்டி தெருவில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் துணை சபாநாயகர் பிச்சாண்டி, வில்லிவாக்கத்தில் உள்ள சவுமிய தாமோதர பெருமாள் கோவிலில் அரசு தலைமை கொறடா செழியன் ஆகியோரும் பங்கேற்று சமபந்தி விருந்தில் உணவருந்தினார்கள்.

    பார்த்தசாரதி கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் சாதத்துடன் சாம்பார், வத்த குழம்பு, ரசம், உருளை கிழங்கு- பட்டாணி பொறியல், கேரட்- கோஸ் பொறியல், அவியல், சேமியா பாயாசம், மெதுவடை, தயிர் பச்சடி, மோர், ஊறுகாய் ஆகியவற்றுடன் சர்க்கரை பொங்கலும் சேர்த்து வழங்கப்பட்டு உள்ளது.

    இதேபோன்று அனைத்து கோவில்களிலும் 3 வகையான கூட்டு சமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு மணக்க, மணக்க சிறப்பு சைவ உணவு சமபந்தி விருந்தில் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
    • இதில் வடக்கு மாவட்ட துணை தலைவர் கருப்பாயூரணி வேலு ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

    மதுரை

    காங்கிரஸ் கட்சியின் மதுரை வடக்கு மாவட்ட தலைவர் ஆலாத்தூர் ரவி உத்தரவின்பேரில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. ஒத்தக்கடை வட்டார தலைவர் சவுந்தரபாண்டியன் ஏற்பாட்டில் ஒத்தக்கடை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேசியகொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் வடக்கு மாவட்ட துணை தலைவர் கருப்பாயூரணி வேலு ஆறுமுகம் தலைமை தாங்கினார். கிராம கமிட்டி தலைவர் ஜெயராஜ் பாண்டியன், வெள்ளையன், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலைச்செல்வன், மாயாண்டி முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் நாகேந்திரன், முகமது அலி, சாகுல் அமீது, பாஸ்கரன், யோகேஸ் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
    • அதிகா ரிகள் அலுவலர்கள், துப்புரவு, எலகட்ரிக்கல் அலுவலர்கள் மாணவர்கள் சிறப்பாக விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த கிருஷ்ணன்கோவிலில் அமைந்துள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 77-வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பல்கலைக்கழக துணைத் தலைவா் முனைவர் எஸ்.சசி ஆனந்த் தலைமை தாங்கினார். துணைவேந்தா் முனைவர் எஸ்.நாராயணன், தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மேலும், என்.சி.சி. மாண வர்களின் அணிவகுப்பு மரியாதையை எற்றுக்கொண்டார். பதிவாளா்முனைவர் வே.வாசுதேவன் முன்னிலை வகித் தார்.

    விழாவில் சுதந்திரதின உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர். என்.சி.சி. மாணவர்களுக்கு உயர் தகுதி பேட்சு களை துணைவேந்தர் அணிவித்து பேசினார். இதில் டீன்கள், துறைத் தலைவா்கள், கலசலிங்கம் குரூப் கல்வி நிறுவன முதல்வா்கள், பேராசிரியா்கள் மற்றும் அலுவ லா்கள் கலந்து கொண்டனா். விளையாட்டுத்துறை அதிகாரிகள் அலுவலர்கள், துப்புரவு, எலகட்ரிக்கல் அலுவலர்கள் மாணவர்கள் சிறப்பாக விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுடைய இடத்திற்கு திரும்பவும், மணிப்பூரில் அமைதி ஏற்படவும் அரசு தொடர்ந்து செயலாற்றி வருகிறது
    • தவறு செய்வது மனித இயல்வு. அதை நாம் மன்னிக்கவும், மறக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும்

    மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இரண்டு பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த கொடூர செயல் அனைவரையும் பதைபதைக்கச் செய்தது. இதற்கு நாடு தழுவிய அளவில் கண்டனம் கிளம்பியது. தற்போது மணிப்பூரில் அமைதி திரும்பிய வண்ணம் உள்ளது.

    இந்த நிலையில் மூன்று முக்கிய விசயங்கள்தான் மணிப்பூரில் விலைமதிப்பற்ற உயிர்ப்பலிக்கு முக்கிய காரணம் என அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

    77-வது சுதந்திர தினவிழாவையொட்டி தேசியக் கொடி ஏற்றி வைத்து பிரேன் சிங் பேசியதாவது:-

    'குறிப்பிட்ட தவறான புரிதல்கள், சுயநலனுக்கான செயல்கள், நாட்டை சீர்குலைப்பதற்கான வெளிநாட்டு சதி ஆகியவை மணிப்பூரில் விலைமதிப்பற்ற உயிர்களை காவு வாங்கியுள்ளது. ஏராளமானோர் நிவாரண முகாமலில் வசிக்க காரணமாகிவிட்டது.

    பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுடைய இடத்திற்கு திரும்பவும், மணிப்பூரில் அமைதி ஏற்படவும் அரசு தொடர்ந்து செயலாற்றி வருகிறது. சொந்த வீட்டிற்கு உடனடியாக செல்ல முடியாதவர்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள வீட்டிற்கு மாற்றப்படுவார்கள். தவறு செய்வது மனித இயல்வு. அதை நாம் மன்னிக்கவும், மறக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். அரசியலமைப்பு வழங்கியுள்ளதற்கு எதிராக அரசு எதையும் செய்யவில்லை. யாரும் அவ்வாறு செய்ய முடியாது.

    ஒரு குடும்பம் ஒரு வாழ்வாதாரம் என்ற திட்டத்தை வழங்கவும், மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

    • கவர்னர் மாளிகையில் தியாகிகள், அரசியல்கட்சி பிரமுகர்கள், முக்கியஸ்தர்களுக்கு கவர்னர் தமிழிசை தேநீர் விருந்து அளித்தார்.
    • கவர்னர் ஜனநாயத்துக்கு எதிராக அரசியல் கட்சி தலைவர் போல செயல்படுவதாக கூறி தி.மு.க, காங்கிரஸ் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனர்.

    புதுச்சேரி:

    சுதந்திர தினவிழாவையொட்டி கவர்னர் மாளிகையில் தியாகிகள், அரசியல்கட்சி பிரமுகர்கள், முக்கியஸ்தர்களுக்கு கவர்னர் தமிழிசை தேநீர் விருந்து அளித்தார்.

    இந்த விருந்து நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ. ஜெயக்குமார், செல்வ கணபதி எம்.பி, துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், ஜான்குமார், கல்யாணசுந்தரம், அங்காளன், கே.எஸ்.பி.ரமேஷ், ரிச்சர்டு, லட்சுமி காந்தன், பாஸ்கர், வி.பி.ராமலிங்கம், பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன், கருணாநிதி, தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, போலீஸ் டி.ஜி.பி சீனிவாஸ் மற்றும் அரசு செயலர்கள், உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

    அதேநேரத்தில் கவர்னர் ஜனநாயத்துக்கு எதிராக அரசியல் கட்சி தலைவர் போல செயல்படுவதாக கூறி தி.மு.க, காங்கிரஸ் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனர்.

    இதன்படி தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணித்தனர்.

    ×