search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுகேஷ் சந்திரசேகர்"

    • சுகேஷ் சந்திரசேகரின் மோசடி தெரிந்து இருந்தும் ஜாக்குலின் அவரோடு பழகியதுடன் பரிசு பொருட்களை பெற்றுள்ளார் என்ற குற்றாச்சாட்டு எழுந்திருந்தது.
    • ரூ.200 கோடி மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் நேற்று மீண்டும் டெல்லி சிறப்பு கோர்ட்டில் ஆஜரானார்.

    இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடி மோசடி வழக்கில் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை கோர்ட்டில் தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரையும் சேர்த்தது. மோசடி பணத்தில் சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலினுக்கு ரூ.7 கோடி மதிப்பிலான விலை உயர்ந்த நகைகள், பரிசு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

     

    ஜாக்குலின் 

    ஜாக்குலின் 

    சுகேஷ் சந்திரசேகரின் மோசடி தெரிந்து இருந்தும் ஜாக்குலின் அவரோடு பழகியதுடன் பரிசு பொருட்களை பெற்றுள்ளார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி நடிகை ஜாக்குலின் விளக்கம் அளித்து வந்தார். மோசடி வழக்கில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீனும் பெற்றார். அந்த ஜாமீன் காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது.


     


    நீதிமன்றத்தில் ஆஜரான ஜாக்குலின் 

    நீதிமன்றத்தில் ஆஜரான ஜாக்குலின் 

    இந்த நிலையில், ரூ.200 கோடி மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் நேற்று மீண்டும் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரிடம் பண மோசடி தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது. பின்னர் அவர் நீதிமன்றத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.

    • சித்ரவதை செய்து எங்களை கொல்லப்போவதாக மிரட்டுகிறார்கள்.
    • சிறையில் என்னை உடல்ரீதியாக தாக்கினார்கள்.

    புதுடெல்லி :

    தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட வழக்கு, தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி பணம் பறித்த வழக்கு உள்ளிட்ட பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கியவர் சுகேஷ் சந்திரசேகர். இவரும், இவருடைய மனைவி லீனா பவுலோசும் தற்போது டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த வாரம் சுகேஷ் சந்திரசேகர், ஆம் ஆத்மி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். தென் மாநிலங்களில் கட்சிக்கு ஆட்கள் சேர்க்க ரூ.500 கோடி தருமாறு டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கேட்டதாகவும், தனக்கு மாநிலங்களவை பதவி வழங்க ரூ.50 கோடி அவர் பெற்றதாகவும், சிறையில் தனது பாதுகாப்பு மற்றும் சொகுசு வாழ்க்கைக்கு சுகாதார மந்திரி சத்யேந்தர் ஜெயின் ரூ.10 கோடி, சிறைத்துறை டி.ஜி.பி. ரூ.12.5 கோடி பெற்றதாகவும் அவர் கூறிய குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த பண பரிமாற்ற விவகாரங்கள் டெல்லி போக்குவரத்துத்துறை மந்திரி கைலாஷ் கெலாட் வீட்டில் நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

    இந்த குற்றச்சாட்டுகளை கெஜ்ரிவாலும், அமைச்சர்களும் மறுத்தனர். தேர்தலுக்காக பா.ஜனதா நடத்தும் வேலை என்றும் குறிப்பிட்டனர். ஆனால் தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும், தான் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை இல்லையெனில் தன்னை தூக்கிலிடலாம், மாறாக உண்மை என்றால் கெஜ்ரிவால் என்ன செய்வார்? என்றும் சுகேஷ் சந்திரசேகர் சவாலாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கிடையே, தனது குற்றச்சாட்டுகள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கவும் கவர்னரை வலியுறுத்தி இருந்தார்.

    இந்த நிலையில் அவர் தன் வக்கீல் அசோக் கே.சிங் மூலம் கவர்னருக்கு மேலும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், "கெஜ்ரிவால் உள்ளிட்டோருக்கு எதிராக மிக முக்கியமான ஆதாரங்களை நான் வைத்திருக்கிறேன். இதை அவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். அதனால் எனக்கும், என் மனைவிக்கும் தீங்கு விளைய நேரிடும். இதற்கிடையே எனக்கு சமரச தூது வருகிறது. சமரசம் ஆகாவிட்டால் சித்ரவதை செய்து எங்களை கொல்லப்போவதாக மிரட்டுகிறார்கள். 2 நாட்களுக்கு முன்புகூட சிறையில் என்னை உடல்ரீதியாக தாக்கினார்கள். எனவே, நீதியின் நலனுக்காக இதில் விசாரணை முடியும்வரை என்னையும், என் மனைவியையும் டெல்லிக்கு வெளியே உத்தரபிரதேசம், அரியானா அல்லது உத்தரகாண்டில் உள்ள சிறைக்கு மாற்றுங்கள். நாங்கள் மிகப்பெரிய ஆபத்தில் இருக்கிறோம்" என்று கெஞ்சலாக சுகேஷ் சந்திரசேகர் கேட்டுள்ளார்.

    இந்த தகவல்களை அவருடைய வக்கீல் நேற்று தெரிவித்துள்ளார்.

    • சுகேஷ் சந்திரசேகர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
    • காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அஜோய்குமார் முதல் கோரிக்கையை வைத்துள்ளார்.

    புதுடெல்லி :

    இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் ஆம் ஆத்மி கட்சி மீதும், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சுகாதார மந்திரி சத்யேந்தர் ஜெயின் மீதும் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. தனக்கு கட்சி பதவி கிடைக்கும் என்பதற்காக கெஜ்ரிவாலிடம் ரூ.50 கோடி கொடுத்ததாக அவர் தெரிவித்த புகார் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    இந்த நிலையில் இந்த புகார் குறித்த உண்மை நிலையை அறிய வேண்டும் என்பதில் பிற அரசியல் கட்சி தலைவர்கள் ஆர்வமாக உள்ளனர்.

    அந்த வகையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அஜோய்குமார் அதற்கான முதல் கோரிக்கையை வைத்துள்ளார். ஒரு முதல்-மந்திரிக்கு குறிப்பிட்ட தொகையை வழங்கியதை ஒருவர் தெளிவாக ஒப்புக்கொள்வது இதுவே முதல்முறை என்று கூறியுள்ள அவர், எனவே அரவிந்த் கெஜ்ரிவால், சத்யேந்தர் ஜெயின் மற்றும் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று கேட்டுள்ளார்.

    • குற்றச்சாட்டுகளை நிரூபிக்காவிட்டால் முதல்-மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
    • இந்த கடிதம் அவரது வக்கீல் மூலம் வெளியானது.

    புதுடெல்லி :

    மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், தனது சமீபத்திய கடிதத்தில், டெல்லியின் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அது உண்மை இல்லை என்றால், தனது முந்தைய புகாரை வாபஸ் பெறுமாறு சிறை நிர்வாகம் ஏன் என்னை வற்புறுத்துகிறது எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.

    அவர் நேற்று வெளியிட்ட மற்றொரு கடிதத்தில், ஆம் ஆத்மி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் பொய்யானால் என்னை தூக்கிலிடுங்கள். அதேநேரம், குற்றச்சாட்டுகளை நிரூபிக்காவிட்டால் முதல்-மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இந்த கடிதம் அவரது வக்கீல் மூலம் நேற்று வெளியானது. அதில், 'நான் அமைதியாக இருந்தேன், எல்லாவற்றையும் புறக்கணித்தேன். ஆனால் உங்களின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் மற்றும் சிறை நிர்வாகம், மந்திரி சத்யேந்தர் ஜெயின் ஆகியோரது அச்சுறுத்தல்கள் என்னை திருப்பிவிட்டிருக்கின்றன' என்று சுரேஷ் சந்திரசேகர் கூறியுள்ளார்.

    தனது முந்தைய புகாரில் உண்மை இல்லை என்றால், சிறை நிர்வாகம் தன்னை ஏன் வற்புறுத்துகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    • இந்த குற்றச்சாட்டு ஆம் ஆத்மி கட்சிக்கு பெரிய தலைவலியை உருவாக்கி இருக்கிறது.
    • சுகேஷ் சந்திரசேகர் கூறிய இந்த விஷயங்களை டெல்லி பா.ஜனதா தீவிரமாக எடுத்துள்ளது.

    புதுடெல்லி :

    இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு உள்பட பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கி டெல்லி மண்டோலி சிறையில் இருக்கும் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், தற்போது ஆம் ஆத்மி கட்சி மீது கூறியிருக்கும் குற்றச்சாட்டுகள் அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    டெல்லி திகார் சிறையில் தான் இருந்தபோது தனது சொகுசு வாழ்க்கைக்கும், பாதுகாப்புக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கு கோடிக்கணக்கில் பணம் செலுத்தியதாக டெல்லி கவர்னர் வினய்குமார் சக்சேனாவுக்கு அவர் கடிதம் எழுதியிருந்தார். டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்தர் ஜெயின் ரூ.10 கோடியும், சிறைத்துறை டி.ஜி.பி. சந்தீப் கோயல் ரூ.12.5 கோடி பெற்றதாகவும் குறிப்பிட்ட அவர், மாநிலங்களவை எம்.பி. பதவிக்காக ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.50 கோடி கொடுத்ததாகவும் கூறியிருந்தார்.

    மேலும் தென் மாநிலங்களில் கட்சிக்கு ஆட்கள் சேர்க்க ஆம் ஆத்மி கட்சி தன்னிடம் ரூ.500 கோடி கேட்டதாகவும் புகார் தெரிவித்து இருந்தார்.

    இந்த குற்றச்சாட்டுகளில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மந்திரிகள் சத்யேந்தர் ஜெயின், கைலாஷ் கெலாட் ஆகியோரது பெயர்கள் அடிபட்டன. ஆனால் "இந்த குற்றச்சாட்டுகள் கற்பனையானவை, குஜராத் தேர்தல் தோல்வி பயத்தில் பா.ஜனதா நடத்தும் வேலை இது' என கெஜ்ரிவால் மறுப்பு தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் சுகேஷ் சந்திரசேகர் தனது வக்கீல் மூலம் மீண்டும் ஒரு கடிதத்தை வெளியிட்டு இருக்கிறார்.

    அதில், 'சிறையில்தான் தொடர்ந்து மிரட்டப்படுவதாக தெரிவித்துள்ள அவர், இந்த விஷயத்தில் ஆம் ஆத்மி கட்சி மீது சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும்' என்று டெல்லி கவர்னரை வலியுறுத்தியுள்ளார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆம் ஆத்மி கட்சிக்கு பெரிய தலைவலியை உருவாக்கி இருக்கிறது.

    சுகேஷ் சந்திரசேகர் கூறிய இந்த விஷயங்களை டெல்லி பா.ஜனதா தீவிரமாக எடுத்துள்ளது. சுகேஷ் கூறியபடி சி.பி.ஐ. விசாரணைக்கு அழுத்தம் கொடுக்குமாறு டெல்லி கவர்னரை பா.ஜனதா வலியுறுத்த உள்ளது. இது தொடர்பாக விரைவில் கவர்னரை சந்திக்க இருப்பதாக டெல்லி பா.ஜனதா தலைவர் ஆதேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.

    • ஆம் ஆத்மிக்கு ரூ.50 கோடி கொடுத்ததாக கூறியிருந்த சுகேஷ் சந்திரசேகர் கூறியிருந்தார்.
    • கெஜ்ரிவால் மீதும் சுகேஷ் சந்திரசேகர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

    புதுடெல்லி :

    இரட்டை இலை சின்னத்துக்காக தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது உள்ளிட்ட பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கி டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி துணை நிலை கவர்னருக்கு கடிதம் ஒன்று எழுதியிருந்தார்.

    அதில் டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயின் மற்றும் திகார் சிறை டி.ஜி.பி. சந்தீப் கோயல் ஆகியோர் மீது கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். சிறையில் தனது பாதுகாப்புக்கு டி.ஜி.பி. ரூ.12.50 கோடி பெற்றதாகவும், மந்திரி சத்யேந்தர் ஜெயின் ரூ.10 கோடி பெற்றதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த நிலையில், கவர்னருக்கு கடிதம் எழுதியதால் சத்யேந்தர் ஜெயின் மற்றும் முன்னாள் டி.ஜி.பி.யால் தான் மிரட்டப்படுவதாக தனது வக்கீலுக்கும், ஊடகங்களுக்கும் சுகேஷ் சந்திரசேகர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இது ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த கடிதத்தில் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் மீதும் சுகேஷ் சந்திரசேகர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். அதாவது, ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.500 கோடி திரட்டுமாறு கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டதாக குறிப்பிட்டு இருந்தார்.

    மேலும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக ஆம் ஆத்மிக்கு ரூ.50 கோடி கொடுத்ததாக கூறியிருந்த சுகேஷ் சந்திரசேகர், தன்னை 'குண்டர்' என்று கூறிய கெஜ்ரிவாலை 'மகா குண்டர்' என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

    சுகேஷ் சந்திரசேகரின் இந்த கடிதம் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்-மந்திரி கெஜ்ரிவால் உடனடியாக பதவி விலக வேண்டும் என பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவாலா கூறியுள்ளார்.

    டெல்லி மந்திரி கைலாஷ் கெலாட்டின் பண்ணை வீட்டில் வைத்து சுகேஷ் சந்திரசேகரை கெஜ்ரிவால் சந்தித்தது உண்மையா? என கேள்வி எழுப்பியுள்ள அவர், குற்றச்சாட்டில் சிக்கியுள்ள மந்திரி சத்யேந்தர் ஜெயினை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

    ஆம் ஆத்மிக்கு பணம் கொடுத்ததாக சுகேஷ் சந்திரசேகர் கூறியுள்ள குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது என கூறியுள்ள டெல்லி பா.ஜனதா தலைவர் அதேஷ் குப்தா, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான கெஜ்ரிவால் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

    ஆனால் இந்த குற்றச்சாட்டை ஆம் ஆத்மி மறுத்துள்ளது. "குஜராத் மற்றும் டெல்லி உள்ளாட்சி தேர்தல் தோல்வி பயம் காரணமாக பா.ஜனதா ஒரு குண்டரை ஆம் ஆத்மிக்கு எதிராக ஒப்பந்தம் செய்துள்ளது" என டெல்லி துணை முதல்-மந்திரி மனிஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார்.

    • குஜராத்தில் இப்போது பா.ஜ.க. மோசமான நிலையில் உள்ளது.
    • ஆம் ஆத்மி கட்சி கடுமையான ஊழல் கட்சி.

    புதுடெல்லி :

    தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க.வின் தேர்தல் சின்னமான இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணிக்கு பெற்றுத்தர ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியது உள்ளிட்ட வழக்குகளில் கைதானவர் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர்.

    இவர் தற்போது டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர், "ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சத்யேந்திர ஜெயின், 2019-ம் ஆண்டு, எனக்கு சிறையில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக என்னை மிரட்டி ரூ.10 கோடி பணம் பெற்றார்" என்ற குற்றச்சாட்டை 3 ஆண்டுகளான நிலையில் இப்போது எழுப்பி உள்ளார்.

    இது குறித்து சிறையில் இருந்தவாறு சுகேஷ் சந்திரசேகர், டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கு ஒரு கடிதம் எழுதி, அந்த கடிதத்தை தனது வக்கீல் அசோக் சிங் மூலம் கொடுத்து அனுப்பி உள்ளார் என தகவல்கள் வெளியாகி புதிய சர்ச்சை வெடித்து உள்ளது.

    இதுபற்றி டெல்லியில் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், "குண்டர் வீட்டில் குண்டர் நடமாட்டம் நடந்துள்ளதாக செய்திகள் மூலம் தெரியவந்துள்ளது. அந்த குண்டரின் பெயர் சுகேஷ் சந்திரசேகர். அவரை ஏமாற்றியவர் ஆம் ஆத்மி கட்சி தலைவர் சத்யேந்திர ஜெயின். இவர் மிரட்டி பணம் பறித்துள்ளார். இது ஆம் ஆத்மி கட்சி கடுமையான ஊழல் கட்சி என காட்டுகிறது" என சாடினார்.

    இதற்கு ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதில் அளிக்கையில், "மோர்பி பாலம் அறுந்து விழுந்த விபத்தில் இருந்து கவனத்தை திசை திருப்பும் செயல் இது" என தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறும்போது, "பஞ்சாப் தேர்தலுக்கு முன்பாக குமார் பிஷ்வாஸ் மீது குற்றச்சாட்டு கூறினார்கள். குஜராத்தில் இப்போது பா.ஜ.க. மோசமான நிலையில் உள்ளது. இப்போது சுகேஷ் கதையை உருவாக்கி உள்ளனர்" என குறிப்பிட்டார்.

    • டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி வழக்கு.
    • இரண்டு நடிகைகளை டெல்லி போலீசார் திகார் ஜெயிலுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். அவருடன் தொடர்பு வைத்து இருந்ததாக இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது.


    ஜாக்குலின் பெர்னாண்டஸ்

    சமீபத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் ஜாக்குலின் பெயரையும் குற்றவாளிகளோடு சேர்த்து இருந்தது. மேலும், மற்றொரு இந்தி நடிகையான நோரா பதேஹிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    இதற்கிடையே சுகேஷ் சந்திரசேகரை டெல்லி திகார் ஜெயிலுக்கே சென்று 4 நடிகைகள் சந்தித்ததாக அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டது. நிக்கி தம்போலி, சாஹத் கன்னா, சோபியா சிங், அருஷா பட்டீல் ஆகிய நடிகைகளை சுகேஷின் உதவியாளர் பிங்கி இரானி, திகார் ஜெயிலுக்கு அழைத்து சென்று சுகேஷ் சந்திரசேகரை சந்திக்க வைத்து உள்ளார்.


    நோரா பதேஹி

    சுகேஷ் சந்திரசேகர் தனது பெயரை ஒவ்வொரு நடிகையிடமும் வெவ்வேறாக கூறியுள்ளார். அந்த நடிகைகளுக்கு பணம், பரிசு பொருட்களை வழங்கி உள்ளார். திகார் ஜெயிலில் சுகேஷ் சந்திரசேகருக்கு சிறை அதிகாரிகள் பல்வேறு உதவிகளை செய்துள்ளனர் என்றும் அங்கு அவர் சொகுசாக இருந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தற்போது அமலாக்கத்துறை அளித்துள்ள தகவல்களின் அடிப்படையில் சுகேஷ் சந்திர சேகரை ஜெயிலில் சந்தித்து பேசிய 4 நடிகைகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நடிகைகள் நிக்கி தம்போலி, சோபியா சிங் ஆகிய 2 பேரை டெல்லி போலீசார் திகார் ஜெயிலுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.


     நிக்கி தம்போலி

    சுகேஷ் சந்திர சேகரை ஜெயிலில் சந்தித்த போது என்னென்ன நடந்தது, சிறை அதிகாரிகள் எப்படி உதவி செய்தனர். எந்த அறையில் சுகேஷ் சந்திரசேகரை சந்தித்தனர் என்பதை நடிகைகள் போலீசாரிடம் கூறியுள்ளனர்.

    இது தொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது, விசாரணையின் ஒரு பகுதியாக சுகேஷ் சந்திர சேகருடனான நடிகைகளின் சந்திப்புகளை மீண்டும் உருவாக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நடிகைகள் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதன் மூலம் இந்த மோசடி எவ்வாறு நடந்தது என்பது பற்றி எங்களுக்கு தெளிவான புரிதல் கிடைத்து உள்ளது.


    சோபியா சிங்

    சிறையில் தொலைக்காட்சி, சோபா, தரை விரிப்பு மற்றும் பல்வேறு வசதிகளுடன் கூடிய அலுவலகத்தை சுகேஷ் சந்திரசேகர் வைத்திருந்து உள்ளார். இதில் சிறை பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டுள்ளது. சுகேசை சந்திக்க வரும் பார்வையாளர்களின் சொகுசு கார்கள் சிறைக்குள் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களுக்கு பாதுகாப்பு சோதனைகள் செய்யப்படவில்லை.

    சிறை அதிகாரிகளுக்கு சுகேஷ் கோடிக்கணக்கில் செலவு செய்து உள்ளார். சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததால் அவருக்கு எந்த தடையும் விதிக்கவில்லை. சுகேஷ் சந்திரசேகருக்கு உதவியதில் ஒவ்வொரு சிறை அதிகாரிகளின் பங்கு குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது. சுகேஷ் சந்திரசேகரை சிறைக்குள் பலர் சந்தித்துள்ளனர். ஆனாலும் எங்கள் விசாரணைக்கு தொடர்புடையவர்களை மட்டுமே வரவழைக்கிறோம் என்றார். சுகேஷ் சந்திரசேகர் தற்போது மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    • ரூ.200 கோடி மோசடி வழக்கில் டெல்லி போலீஸார் மூன்றாவது முறையாக ஜாக்குலினுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர்.
    • தற்போது அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். அவருடன் தொடர்பு வைத்து இருந்ததாக இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது. சமீபத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் ஜாக்குலின் பெயரையும் குற்றவாளிகளோடு சேர்த்து இருந்தது. சுகேஷிடம் இருந்து ஜாக்குலின் ரூ.7.12 கோடியும், அமெரிக்காவில் உள்ள அவரது சகோதரி ரூ.1.26 கோடியும், ஆஸ்திரேலியாவில் உள்ள அவரது சகோதரன் ரூ.15 லட்சத்தையும் பெற்றுள்ளனர் என்று குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தனர்.

     

    ஜாக்குலின் பெர்னாண்டஸ்

    ஜாக்குலின் பெர்னாண்டஸ்

    ஜாக்குலின் பெர்னான்டசுக்கு எதிராக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு ஆகஸ்ட் 29-ம் தேதி, செப்டம்பர் 12-ம் தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பியது. ஆனால் இரண்டு சம்மனுக்கும் ஜாக்குலின் ஆஜராகவில்லை. ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டி இருப்பதால் ஆஜராக இயலாது என்று ஜாக்குலின் போலீசுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட போலீசார் விசாரணையை தள்ளி வைத்து, இன்னொரு தேதியில் ஆஜராக மீண்டும் புதிய சம்மன் அனுப்பப்படும் என்று போலீசார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து செப்டம்பர் 14-ம் தேதி காலை 11 மணிக்கு விசாரணைக்கு டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் ஆஜராகியிருந்தார்.

     

    ஜாக்குலின் பெர்னாண்டஸ்

    ஜாக்குலின் பெர்னாண்டஸ்

    இந்நிலையில் நடிகை ஜாக்குலின் பெர்னான்டசுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • அக்சய்குமார் சொல்லியும் சுகேஷ் சந்திரசேகருடனான தொடர்பை ஜாக்குலின் விடவில்லை.
    • அவரிடம் வங்கி கணக்குகள், அவற்றின் பரிவர்த்தனை விவரங்களை போலீசார் கேட்டுள்ளனர்.

    புதுடெல்லி :

    மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகரை விட்டு விலகுமாறு நடிகர் சல்மான்கான் சொல்லியும் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ரூ.200 கோடி மோசடி வழக்கில் ஜாக்குலின் நேற்று மீண்டும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் விசாரணைக்கு ஆஜர் ஆனார்.

    டெல்லியில் தொழில் அதிபர் மனைவியிடம் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடி மோசடி செய்த வழக்கில் இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீதும் குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது. மோசடி பணத்தை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு சுகேஷ் சந்திரசேகர் அதிகமாக செலவழித்தாக கூறப்படுகிறது. வேறு சில நடிகைகளும் ஆதாயம் பெற்று இருந்ததாக கூறப்பட்டாலும் அவர்களில் பலர் வழக்கின் சாட்சிகளாக மாறிவிட்டனர்.

    ஆனால் சுகேஷ் சந்திரசேகர் மீதான நல்ல அபிப்ராயத்தில் அவரை ஜாக்குலின் பெர்னாண்டஸ் விட்டுக்கொடுக்கவே இல்லை என கூறப்படுகிறது. நடிகர்கள் சல்மான்கான், அக்சய்குமார் உள்ளிட்டோர் சொல்லியும் சுகேஷ் சந்திரசேகருடனான தொடர்பை ஜாக்குலின் விடவில்லை. இதனால் அவர் அமலாக்க விசாரணையிலும், பொருளாதார குற்றப்பிரிவு விசாரணையிலும் சிக்கிக்கொண்டு தவிப்பதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

    வழக்கு தொடர்பாக கடந்த புதன்கிழமை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். இவரை சுகேஷ் சந்திரசேகரிடம் அறிமுகப்படுத்திய பிங்கி இரானியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது இருவரது வாக்குமூலங்களும் முரண்பட்டன. இந்த நிலையில் ஜாக்குலின் பெர்னாண்டசை போலீசார் மீண்டும் விசாரணைக்கு அழைத்தனர்.

    அதன்பேரில் நேற்று அவர் விசாரணைக்காக ஆஜர் ஆனார். காலை 11 மணிக்கு போலீசார் அவரை வரச்சொல்லி இருந்தனர். அதையடுத்து ஜாக்குலினின் வக்கீல்கள் நேற்று முன்தினம் இரவே டெல்லியில் முகாமிட்டனர். இதனால் காலை 11 மணிக்கு ஜாக்குலின் ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிற்பகல் 2 மணி அளவிலேயே அவர் விசாரணைக்காக வந்தார்.

    அவரிடம் வங்கி கணக்குகள், அவற்றின் பரிவர்த்தனை விவரங்களை போலீசார் கேட்டுள்ளனர். பெற்றோரின் வங்கி பரிவர்த்தனைகளும் கேட்கப்பட்டுள்ளன. அவற்றை சமர்ப்பித்து, போலீசார் கேட்ட கேள்விகளுக்கும் ஜாக்குலின் பதில் அளித்துள்ளார்.

    மணிக்கணக்கில் விசாரணை தொடர்ந்தது. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை இந்த விசாரணையின் இறுதியிலேயே அறிய முடியும் என போலீசார் தெரிவித்தனர்.

    • குற்றப்பத்திரிகையில் நிகிதா தம்போலி, சாகத் கன்னா, சோபியா சிங் மற்றும் அருஷா பாட்டீல் ஆகிய மேலும் 4 நடிகைகள் இடம்பெற்று இருக்கிறார்கள்.
    • நடிகைகளை பிங்கி இரானி, திகார் சிறைக்கு அழைத்து சென்று சுகேஷ் சந்திரசேகருக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்.

    புதுடெல்லி:

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் கமிஷனால் முடக்கப்பட்ட அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட வழக்கில் பெங்களூருவைச் சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். இவர் மீது பல மோசடி வழக்குகள் உள்ளன. டெல்லி திகார் சிறையில் இவர் அடைக்கப்பட்டார். சிறையில் இருக்கும்போது மற்றொரு மோசடி வழக்கிலும் சிக்கினார்.

    தொழில் அதிபர் ஒருவருக்கு ஜாமீன் எடுத்து தருவதாகக்கூறி, தொழில் அதிபரின் மனைவியிடம் ரூ.200 கோடியை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதில் சுகேஷ் சந்திரசேகரின் மனைவி லீனா மரியபால், சுகேசின் உதவியாளர் பிங்கி இரானி உள்ளிட்டோரும் கைதாகினர்.

    மோசடி பணத்தில், சுகேஷ் சந்திரசேகர் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாக கண்டறியப்பட்டது. பிரபல நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்பட பல நடிகைகளுடன் தன் உதவியாளர் பிங்கி இரானி மூலம் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டு உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார். இதற்காக நடிகைகளுக்கு பணத்தை வாரி இறைத்துள்ளார்.

    அவர் செய்த குற்றங்கள் தொடர்பாக அமலாக்க பிரிவு அதிகாரிகளும், டெல்லி குற்றப்பிரிவு போலீசாரும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்திருந்தனர். அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். டெல்லி போலீசார் இதுகுறித்த விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இதன் அடிப்படையில் ஜாக்குலின் பெர்னாண்டசிடம் நேற்று முன்தினம் 8 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. அதைப்போல பிங்கி இரானியிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். இவர்கள் 2 பேரின் வாக்குமூலங்களிலும் முரண்பாடுகள் இருப்பதாக தெரிகிறது.

    இதனால் பிங்கி இரானியை போலீசார் நேற்றும் விசாரணைக்கு அழைத்தனர். ஜாக்குலின் பெர்னாண்டசை தேவைப்பட்டால் அழைப்பதாகவும், அதுவரை டெல்லியிலேயே தங்கி இருக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    இதற்கிடையே நேற்று பிங்கி இரானியிடம் மட்டுமின்றி, வழக்கில் தொடர்புடைய மற்றொரு நடிகையான நோரா பதேகியிடமும் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. தனித்தனியாகவும், இருவரையும் ஒன்றாக வைத்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து உள்ளனர்.

    அப்போது சுகேஷ் சந்திரசேகரின் குற்றச்செயல்கள் அதுகுறித்த பதிவுகள் எதுவும் தனக்கு தெரியாது என நோரா பதேகி கூறியுள்ளார். இவரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த வழக்கில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை, டெல்லி போலீசாருக்கு விசாரணையை இலகுவாக்கி உள்ளது. அந்த குற்றப்பத்திரிகையில் நிகிதா தம்போலி, சாகத் கன்னா, சோபியா சிங் மற்றும் அருஷா பாட்டீல் ஆகிய மேலும் 4 நடிகைகள் இடம்பெற்று இருக்கிறார்கள்.

    இவர்கள் ஒவ்வொருவரிடமும் சுகேஷ் சந்திரசேகரை பற்றி பிங்கி இரானி ஒவ்வொரு விதமாக கூறியிருக்கிறார். நிகிதா தம்போலியிடம் 'தென்னிந்திய சினிமா தயாரிப்பாளர், அவரது பெயர் சேகர்' என்றும், சோபியா சிங்கிடம் சினிமா தயாரிப்பாளர் சேகர் ரெட்டி என்றும், அருஷாவிடம் வேறு பெயரையும் தெரிவித்துள்ளார்.

    சாகத் கன்னாவை பிங்கி இரானி தொடர்பு கொண்டபோது சுகேஷ் சந்திரசேகரை சாகத் கன்னா, 'கூகுளில்' தேடியிருக்கிறார். அதில் சுகேசின் மோசடி விவரங்கள் வந்துள்ளன.

    இதுபற்றி கேட்டபோது 'அது அவர் இல்லை, அவரது பெயர் சுகேஷ் சந்திரசேகர ரெட்டி' என கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அவர் பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றின் உரிமையாளர் என்றும் தெரிவித்துள்ளார்.

    பின்னர் சாகத் கன்னா, சுகேஷ் சந்திரசேகருடன் பழகும்போது, சுகேஷ் சந்திரசேகர் தன்னை தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஒருவரின் உறவினர் என்று சொல்லியிருக்கிறார். இந்த தகவல்கள் எல்லாம் அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் உள்ளன.

    இந்த நடிகைகளை பிங்கி இரானி, திகார் சிறைக்கு அழைத்து சென்று சுகேஷ் சந்திரசேகருக்கு அறிமுகப்படுத்தி உள்ளார். அதன்பிறகு அவர்கள் தனியாகவே சுகேஷ் சந்திரசேகரை சிறைக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது பல லட்சம் ரூபாயை சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து அவர்கள் பெற்றதாகவும், இதில் பிங்கி இரானியும் ஆதாயம் அடைந்ததாகவும் தெரிகிறது.

    இதனால் மேற்கண்ட 4 நடிகைகளிடமும் டெல்லி போலீசார் விசாரணை நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    • டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு ஆகஸ்ட் 29-ம் தேதி, செப்டம்பர் 12-ம் தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகும் படி ஜாக்குலின் பெர்னான்டசுக்கு சம்மன்.
    • டெல்லி போலீஸார் மூன்றாவது முறையாக ஜாக்குலினுக்கு நேற்று சம்மன் அனுப்பியிருந்தனர்.

    டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். அவருடன் தொடர்பு வைத்து இருந்ததாக இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது. சமீபத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் ஜாக்குலின் பெயரையும் குற்றவாளிகளோடு சேர்த்து இருந்தது. சுகேஷிடம் இருந்து ஜாக்குலின் ரூ.7.12 கோடியும், அமெரிக்காவில் உள்ள அவரது சகோதரி ரூ.1.26 கோடியும், ஆஸ்திரேலியாவில் உள்ள அவரது சகோதரன் ரூ.15 லட்சத்தையும் பெற்றுள்ளனர் என்று குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தனர்.

     

    ஜாக்குலின் பெர்னாண்டஸ்

    ஜாக்குலின் பெர்னாண்டஸ்

    ஜாக்குலின் பெர்னான்டசுக்கு எதிராக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு ஆகஸ்ட் 29-ம் தேதி, செப்டம்பர் 12-ம் தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பியது. ஆனால் இரண்டு சம்மனுக்கும் ஜாக்குலின் ஆஜராகவில்லை. ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டி இருப்பதால் ஆஜராக இயலாது என்று ஜாக்குலின் போலீசுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட போலீசார் விசாரணையை தள்ளி வைத்து, இன்னொரு தேதியில் ஆஜராக மீண்டும் புதிய சம்மன் அனுப்பப்படும் என்று போலீசார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து இன்று (14.09.2022) காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகும் படி டெல்லி போலீஸார் மூன்றாவது முறையாக ஜாக்குலினுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர்.

    இந்நிலையில் பண மோசடி வழக்கு தொடர்பாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் இன்று ஆஜரானார். 

    ×