என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
கெஜ்ரிவாலுக்கும், சுகேஷ் சந்திரசேகருக்கும் உண்மை கண்டறியும் சோதனை: காங்கிரஸ் வலியுறுத்தல்
- சுகேஷ் சந்திரசேகர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
- காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அஜோய்குமார் முதல் கோரிக்கையை வைத்துள்ளார்.
புதுடெல்லி :
இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் ஆம் ஆத்மி கட்சி மீதும், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சுகாதார மந்திரி சத்யேந்தர் ஜெயின் மீதும் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. தனக்கு கட்சி பதவி கிடைக்கும் என்பதற்காக கெஜ்ரிவாலிடம் ரூ.50 கோடி கொடுத்ததாக அவர் தெரிவித்த புகார் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில் இந்த புகார் குறித்த உண்மை நிலையை அறிய வேண்டும் என்பதில் பிற அரசியல் கட்சி தலைவர்கள் ஆர்வமாக உள்ளனர்.
அந்த வகையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அஜோய்குமார் அதற்கான முதல் கோரிக்கையை வைத்துள்ளார். ஒரு முதல்-மந்திரிக்கு குறிப்பிட்ட தொகையை வழங்கியதை ஒருவர் தெளிவாக ஒப்புக்கொள்வது இதுவே முதல்முறை என்று கூறியுள்ள அவர், எனவே அரவிந்த் கெஜ்ரிவால், சத்யேந்தர் ஜெயின் மற்றும் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று கேட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்