search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறையில் அடைப்பு"

    • கடந்த 24-ந் தேதி உடல்நிலை ்பாதிக்கப்பட்டதால் சேலம் அக்ரகாரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
    • மர்ம நபர் நீ குளித்ததை நான் வீடியோ எடுத்து வைத்திருக்கிறேன், நான் சொல்லும் இடத்திற்கு வர வேண்டும், இல்லா விட்டால் வெளியில் பரப்பி விடுவேன் என கூறி மிரட்டினார்.

    சேலம்:

    சேலம் பெரிய வீராணத்தை சேர்ந்தவர் 45 வயது தொழிலாளி. கடந்த 24-ந் தேதி உடல்நிலை ்பாதிக்கப்பட்டதால் சேலம் அக்ரகாரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    ஆபாச வீடியோ

    அந்த நபர் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் இருந்த போது அவரது மனைவி அருகில் இருந்து கவனித்து கொண்டார். அப்போது அந்த பெண் அங்குள்ள குளியல் அறையில் குளித்துள்ளார்,

    இந்த நிலையில் கணவருக்கு சிகிச்சை முடிந்து அந்த பெண் வீடு திரும்பிய நிலையில் கடந்த 27-ந் தேதி அந்த பெண்ணின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது.

    அதில் பேசிய மர்ம நபர் நீ குளித்ததை நான் வீடியோ எடுத்து வைத்திருக்கிறேன், நான் சொல்லும் இடத்திற்கு வர வேண்டும், இல்லா விட்டால் வெளியில் பரப்பி விடுவேன் என கூறி மிரட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்ட பெண் சேலம் டவுன் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் அந்த செல்போன் எண்ணை வைத்து விசாரித்தனர். அப்போது சிக்கிய நபர் நான் பேசவில்லை என்றும், எனது செல்போனில் இருந்து வேறு நபர் பேசியதாகவும் கூறினார்.

    ஆஸ்பத்திரி ஊழியர்

    தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திய போது, ஆஸ்பத்திரியில் 8 ஆண்டுகளாக வார்டு பாயாக வேலை செய்து வந்த கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி. காலனியை சேர்ந்த விவேகானந்தன் (32) என்பவர் மற்றொருவர் செல்போனை வாங்கி பேசியது தெரிய வந்தது . இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவரிடம் விசாரித்த போது ஆஸ்பத்திரி பதிவேட்டில் இருந்து அந்த பெண்ணின் செல்போன் எண்ணை எடுத்து அவரிடம் உல்லாசம் அனுபவிக்கும் நோக்கில் வேறு ஒருவர் செல்போனில் இருந்து பேசி மிரட்டியதாக கூறி உள்ளார்.

    சிறையில் அடைப்பு

    தொடர்ந்து இது போல வேறு யாரையும் ஆபாச படம் எடுத்து மிரட்டினாரா ? என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இதற்கிடையே விவேகானந்தனை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் ஆஸ்பத்திரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வழக்கமாக வரும் காட்டுப்பன்றி ஒன்று நேற்று இரவு எதிர்பாராத விதமாக கவுரனின் விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தது.
    • தந்தை மற்றும் மகன் இருவரும் இணைந்து இறந்த காட்டு பன்றியை சமைக்க முடிவு செய்தனர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே தீத்தாரஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கவுரன் (வயது58) . விவசாயி. இவரது மகன் ராம்குமார் (32).

    இந்த நிலையில் இவர்கள் இருவரும் தங்களது விவசாய நிலத்தில் விளை பயிர்களை காட்டு விலங்குகளிலிருந்து காப்பாற்ற மின்சாரத்தை பயன்படுத்தி வயல்வெளி முழுவதும் மின்கம்பி மூலம் மின்சாரம் பாய்ச்சி வந்தனர்.

    வழக்கமாக வரும் காட்டுப்பன்றி ஒன்று நேற்று இரவு எதிர்பாராத விதமாக கவுரனின் விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தது.

    இதையடுத்து தந்தை மற்றும் மகன் இருவரும் இணைந்து இறந்த காட்டு பன்றியை சமைக்க முடிவு செய்த நிலையில் பாலக்கோடு வனத்துறைக்கு பொதுமக்கள் ரகசிய தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாலக்கோடு வனத்துறையினர், இருவரையும் பிடித்து விசாரித்ததில் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.

    இது குறித்து போலீசார் தந்தை மகன் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    • இ.பி. காலனி யைச் சேர்ந்தவர் செல்ல துரை (வயது 50). இவர் அங்குள்ள பொய்யேரி கரையில் டீக்கடை நடத்தி வருகிறார்.
    • உங்கள் வீட்டில் சோதனை செய்ய வேண்டும் என கூறி சோதனை செய்தனர். அப்போது பீரோவில் இருந்த 34 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் இ.பி. காலனி யைச் சேர்ந்தவர் செல்ல துரை (வயது 50). இவர் அங்குள்ள பொய்யேரி கரையில் டீக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது வீட்டிற்கு சென்ற 3 பேர் சென்னை குற்றப் பிரிவு போலீசில் இருந்து வந்துள்ளோம். 3 ஆண்டுக்கு முன் அரசால் தடை செய் யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக உங்கள் மீது வழக்கு உள்ளது.

    உங்களை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கைது செய்தால் குண்டர் சட்டம் பாயும். உங்கள் வீட்டில் சோதனை செய்ய வேண்டும் என கூறி சோதனை செய்தனர். அப்போது பீரோவில் இருந்த 34 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டனர்.

    மேலும் செல்லத்துரை வைத்திருந்த மொபைல் போனை பறித்து ரூ.3.25 லட்சம் வங்கியில் இருப் பதை தெரிந்து கொண்ட னர். தொடர்ந்து 3 காசோலை எடுத்துக் கொண்டு பரமத்தி சாலை யில் உள்ள தனியார் வங் கிக்கு அழைத்து சென்றனர்.

    காசோலையை பயன் படுத்தி, செல்லதுரையை ரூ.3 லட்சம் எடுக்க வைத்து பறித்துக் கொண்டனர். ஒரு காசோலையில் ரூ.10 ஆயி ரம் எழுதி மிரட்டி கையெ ழுத்து போட்டு வாங்கி சென்றனர். இதுகுறித்து செல்லத்துரை யாரிடமும் புகார் கொடுக்கவில்லை.

    இதனிடையே சென்னையில் இருந்து நாமக்கல்லுக்கு வந்த செல்லதுரை மகள், தந்தை மொபைல் போனை பார்த்து வங்கியில் இருந்து ரூ. 3 லட்சம் எடுத்தது குறித்து கேட்டார். அப்போது 3 பேர் வந்து மிரட்டி பணத்தை பறித்து சென்றதை தெரிவித்தார்.

    அதிர்ச்சி அடைந்த செல்லதுரை மகள் வங்கியை தொடர்பு கொண்டு காசோலை யாரா வது கொண்டு வந்தால் தகவல் தெரிவிக்கும்படி கூறினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சம்பந்தப்பட்ட வங்கியின் காசோலை பயன்படுத்தி பணம் எடுக்க மர்ம நபர் வந்ததால் செல்லதுரைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நாமக்கல் போலீசில் அவர் புகார் தெரிவித்தார்.

    வங்கிக்கு சென்ற போலீசார், பணம் எடுக்க வந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் திருச்செங்கோடு அடுத்த இலுப்புலியை சேர்ந்த மாதேஸ்வரன் (35) என்பது தெரியவந்தது. அவர் அளித்த தகவல்படி திருச்செங்கோட்டை சேர்ந்த சபரிநாதன் (35), சேலம் கோரிமேட்டைச் சேர்ந்த இலியாஸ் (31) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    சபரிநாதன் மீது கொலை வழக்கு, 3 கொள்ளை வழக்கு உட்பட 9 வழக்குகள் உள்ளன. இலியாஸ் மீது 2 கொலை வழக்கு, கொள்ளை வழக்குகள் நிறுவையில் உள்ளது. 3 பேரையும் கைது செய்து ரூ.1.65 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அவர்களிடம் தொடர்ந்து விசாரித்த போலீசார், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் இதேபோல சபரிநாதன் உட்பட 3 பேரும் பல இடங்களில் கைவரிசை காட்டியதும், தற்போது போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்துள்ளது.

    அது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வரும் போலீசார், அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர். அப்போது மேலும் பல தகவல்கள் வெளிவரும் என்பதால் இந்த வழக்கில் பரபரப்பு நிலவி வருகிறது.

    • 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்தது.
    • இதுவரை மொத்தம் ரூ. 7 லட்சத்து 85 ஆயிரம் பறிமுதல் செய்ய ப்பட்டு உள்ளது.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்துள்ள ஈங்கூரில் உள்ள தனியார் இரும்பு தொழிற்சாலை அலுவலகத்தில் இருந்து மற்றொரு அலுவலகத்துக்கு காரில் கொண்டு சென்ற ரூ.23 லட்சத்தை ஒரு கும்பல் கொ ள்ளையடித்து சென்றது.

    இதை யடுத்து கொள்ளைய ர்களை பிடிக்க அமைக்கப்ப ட்ட தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்க ளில் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது இந்த கொ ள்ளை சம்ப வத்தில் இதே கம்பெனியில் வேலை ப்பார்த்த ஊழியர் மற்றும் முன்னாள் ஊழியருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக போலீசார் பலரை ைகது செய்தனர். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தலைமறை வாக இருந்த புதுக்கோ ட்டை மாவட்டம் புலியூர் பகுதியை சேர்ந்த செல்வம் (24), விக்னேஷ் (22) ஆகிய 2 பேரை போலீசார் தேடிவ ந்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை கோர்ட்டில் சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள் புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைக்க ப்பட்டனர். இதையடுத்து சென்னிமலை போலீசார் அங்கு விரைந்து சென்று 2 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த புதுக்கோட்டை கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து அவர்களை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் சென்னிமலை போலீசார் பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விசாரணை நடத்தினர்.

    போலீசார் அவர்கள் 2 பேரையும் புதுக்கோட்டைக்கு அழைத்து சென்றும் விசாரணை நடத்தினர். பின்னர் 3 நாள் விசாரணை முடிந்ததும் மீண்டும் கோ ர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் புதுக்கோட்டை மாவட்ட சிறையில்அடைக்க பட்டனர்.

    இது குறித்து போலீசார் கூறியதாவது-

    இந்த வழக்கில் ஏற்கனவே கைதான சிலரிடம் இருந்து ரூ. 5லட்சத்து 55 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது மேலும் ரூ. 2 லட்சத்து 30 ஆயிரம் பறிமுதல் செய்ய ப்பட்டு உள்ளது. இதுவரை மொத்தம் ரூ. 7 லட்சத்து 85 ஆயிரம் பறிமுதல் செய்ய ப்பட்டு உள்ளது.

    இந்த வழக்கில் தலைமறை வாக உள்ள தர்மதுரை என்பவரை தொடர்ந்து தேடிவருகிறோம். அவர் பிடிபட்டதால் தான் மீதி பணமும் பறிமுதல் செய்யப்படும்.

    இவ்வாறு போலீசார் கூறினர்.

    • ராஜசேகர் (வயது 28). சம்பவத்தன்று இவரை முன்விரோதம் காரணமாக அடித்து கொலை செய்து, உடலில் கல்லை கட்டி மலையடி குட்டையில் மர்ம நபர்கள் வீசி சென்றனர்.
    • 5 பேர் நேற்று திருச்செங்கோடு டவுன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் முன்பு சரணடைந்தனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு மலையடி குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 28). சம்பவத்தன்று இவரை முன்விரோதம் காரணமாக அடித்து கொலை செய்து, உடலில் கல்லை கட்டி மலையடி குட்டையில் மர்ம நபர்கள் வீசி சென்றனர்.

    இந்த கொலையில் தொடர்புடைய திருச்செங்கோடு பச்சாகோயில் மேடு பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (25 ), மலையடிகுட்டை பகுதியை சேர்ந்த பூவரசன் (23), பிரவீன் ராஜ் (27), விக்னேஷ் (27), பெரியசாமி (25) ஆகிய 5 பேர் நேற்று திருச்செங்கோடு டவுன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் முன்பு சரணடைந்தனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில், கடந்த ஆண்டு திருச்செங்கோடு மலையடி குட்டையில் விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக பேசிக் கொண்டிருந்தபோது ராஜசேகருக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ராஜசேகரை கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து 5 ேபர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, திருச்செங்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்பாபு முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து 5 பேரையும் ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து 5 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப் பட்டனர்.

    • காரில் தடை செய்யப்பட்ட பான் மசாலா - குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
    • 2 கார்கள், ரூ.2.29 லட்சம் மதிப்பிலான 237 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்ய ப்பட்டது.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் கடத்தி கொண்டு செல்லப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து பெருந்துறை போலீசார் மேட்டுப்புதூர்-கள்ளியம்புதூர் சாலை பிரிவில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர்.அப்போது அவ்வழியாக 2 கார்கள் வந்தன. போலீசாரை கண்டதும் காரில் இருந்த வர்கள் தப்பியோடி விட்டனர்.

    இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனை செய்தனர். அப்போது காரில் தடை செய்யப்பட்ட பான் மசாலா - குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் காரில் வந்தவர்கள் பெருந்துறை மடத்துபாளையம் தெற்கு தோட்டத்தை சேர்ந்த ராஜ்குமார்(31), கொங்கு நகர் தாஷ்கண்ட் வீதியை சேர்ந்த தினேஷ்குமார் (31) ஆகியோர் என்பதும், பெருந்துறையைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் பெங்களூருவில் இருந்து கார்கள் மூலம் தினேஷ் குமார் வீட்டுக்கு புகையிலைப் பொருட்களை அனுப்பி வைத்ததும் தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் தினேஷ்குமார் வீட்டுக்கு விரைந்து சென்ற னர். போலீசாரை பார்த்த தும் அங்கிருந்த அவரது தாயார் சிவகாமி (52) என்ப வர் தப்பி ஓட முயன்றார். அவரைப் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அவரது வீட்டை சோதனையிட்ட போது அங்கும் புகையிலை பொருட்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    பின்னர் சிவகாமியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, அவர் புகையிலை பொருட்கள் கடத்தலுக்கு உதவியாக இருந்ததாக தெரிவித்தார். இதையடுத்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்தப்பட்டு கோவை பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    மேலும் 2 கார்கள், ரூ.2.29 லட்சம் மதிப்பிலான 237 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்ய ப்பட்டது.

    இந்த கடத்தலில் மூளையாக செயல்பட்ட சிவகாமி யின் மகன் தினேஷ் குமார் மற்றும் ராஜ்குமார், லட்சு மணன் ஆகியோரை போலீ சார் வலைவீசி தேடி வருகி ன்றனர். இவர்கள் பிடிபட்டால் தான் இந்த கடத்தல் கும்பல் பின்னணியில் வேறு யார் உள்ளார்கள் என தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    • முட்டைக்கோஸ் லோடு ஏற்றி வந்த சரக்கு வாக னத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
    • ஆன்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக கடத்தி செல்வது தெரிய வந்தது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பகுதி யில் குட்கா மறறும் போதை பொருட்கள் கடத்திச் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் புளியம்பட்டி அடுத்து நால்ரோடு டானா புதூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக முட்டைக்கோஸ் லோடு ஏற்றி வந்த சரக்கு வாக னத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் முட்டைக்கோஸ் மூட்டை க்குள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக இருந்ததும் அதை கடத்திச் செல்வது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த போதை பொருட்கள் மற்றும் அதை ஏற்றி வந்த சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகரை சேர்ந்த முபீஸ் (20), தாளவாடி பயஸ் பாஷா (30), சத்திய மங்கலம் சஞ்சய் ராஜ் (30) என்பது தெரிய வந்தது.

    இவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்ஸ் குட்கா உள்ளிட்ட புகை யிலை போதை பொரு ட்களை கர்நாடகா மாநிலத்தில் இருந்து விற்பனைக்காக கொண்டு வந்தது தெரிய வந்தது. இந்த போதை பொருட்களின் மதிப்பு 2.50 லட்சம் இருக்கும் என போலீசார் தெரி வித்தனர்.

    இதையடுத்து போதை பொருட்களை கடத்தி வந்த 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை போலீ சார் கைது செய்தனர். இதை தொடர்ந்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • நிறுவனங்களை நம்பவைத்து சிம் கார்டுகளை பெற்றுள்ளது தெரிய வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பரிதியை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த சிம்கார்டு விற்கும் முகவர் இளம்பரிதி (33) என்பவர் போலியாக ஆவணம் தயாரித்து சிம் கார்டுகளை விற்பனை செய்வ தாக ஈரோடு சைபர் கிரைம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடை த்தது. இதனை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசுதா தலைமை யிலான போலீசார் இளம்பரிதியை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் ஆதாயம் அடையும் வகையில், ஒரு சிலரின் புகைப்படத்தை பல்வேறு நபர்களின் அடை யாள ஆவணங்களுக்கு பயன்படுத்தி போலியான ஆவணம் தயார் செய்தும், ஆள்மாறாட்டம் செய்தும் சம்பந்தப்பட்ட தொலை தொடர்பு நிறுவ னங்களுக்கு உண்மையான ஆவணம் போல் ஆன்லைனில் அனுப்பி அந்த நிறுவனங்களை நம்பவைத்து சிம் கார்டுகளை பெற்றுள்ளது தெரிய வந்தது.

    இதனைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பரிதியை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த ப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்ப ட்டார்.

    இந்த நிலையில் கைதான இளம்பரிதியிடம் இருந்து போலி ஆவணங்கள் மூலம் விற்கப்பட்ட சிம்கார்டுகளை வாங்கியவர்கள் யார்? யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்ற னர். மேலும் இவர் எத்தனை பேருக்கு போலி ஆவணம் மூலம் சிம்கார்டு கொடுத்து உள்ளார். அந்த சிம்கார்டு பெற்றவர்கள் குற்ற பின்னணி யில் உள்ளவர்களா? என்றும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இது குறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஜவகர் கூறியதாவது:

    சிம் கார்டுகளை விற்ப னை செய்யு ம் முக வர்கள் இதுபோன்று போலியான ஆவ ணங்களை வைத்து சிம் கார்டுகளை ஆக்டிவேட் செய்து விற்பனை செய்தால் சம்பந்தப்ப ட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ப்படும்.

    சிம் கார்டு வாங்கும்போது பொதுமக்கள் தங்களது பெயரில் உள்ள சிம்கார்டு மட்டும்தான் ஆக்டிவேட் செய்கிறார்களா? என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் ஆன்லைன் மோசடி மூலம் பணம் இழப்பு ஏற்பட்டால் உடனடியாக சைபர் கிராம் உதவி எண் 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரி வித்தால் இழந்த பணத்தை மீட்க அதிக வாய்ப்பு உள்ளது.

    அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து அல்லது தெரியாத செல்போன் எண்ணில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி எந்த விபரங்களையும் அப்டேட் செய்ய வேண்டாம். வங்கிகளில் இருந்து தொலை பேசி மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் எந்த தகவலையும் கேட்க மாட்டார்கள். எனவே பொதுமக்கள் மிகவும் விழிப்பு டன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • மனோகரன் ரூ. 2 ஆயிரம் லஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்டார்.
    • 2015-ம் ஆண்டு மனோகரனை குற்றவாளி என தீர்ப்பளித்தது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகராட்சி ஆணையராக கடந்த 2002-ம் ஆண்டு பணிபுரிந்த மனோகரன் பண்ருட்டி தனபால் தெருவை சேர்ந்த செந்தில்குமாரிடம் பண்ரு ட்டி நகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையத்தில் உள்ள நகராட்சி நடுநிலை ப்பள்ளியில் மேல்தளம் அமைக்கும் பணியை முடிந்து அதற்குண்டான காசோலை வழங்குவதற்கு ரூ. 2 ஆயிரம் லஞ்சம் பெற்ற போது கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

    இவ்வழக்கை விசாரணை செய்த கடலூர் முதன்மை நீதித்துறை நடுவர் நீதிபன்றம் கடந்த 2015-ம் ஆண்டு மனோகரனை குற்றவாளி என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பினை எதிர்த்து மனோகரன் 2015-ம் ஆண்டு சென்னைஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கின் விசாரணை முடிக்கப்பட்டு கடந்த பிப்ரவரி 9-ந் தேதி மனோகரன் தாக்கல் செய்த மனுவினை தள்ளுபடி செய்து கடலூர் முதன்மை நீதித்துறை நடுவர் நீதிமன்றம், அளித்த தீர்ப்பு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் 1 1/2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணையும், ரூ.4, ஆயிரம் அபராதமும் விதிக்கபட்டது. இந்த தீர்ப்பின்படி கடலூர் ஊழல் தடுப்பு பிரிவினர் மனோகரளை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • சந்தோஷை சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்து விட்டு தப்பியது.
    • சரணடைந்த இருவரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    ஈரோடு,

    ஈரோடு வீரப்பன்சத்திரம் ஜான்சி நகரை சேர்ந்தவர் சந்தோஷ் என்கிற சம்திங் சந்தோஷ் (29). இவர் மீது கொலை முயற்சி, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இந்நிலையில் கடந்த மாதம் 30-ந் தேதி ஈரோடு சூளை அருகே மதுபான பாரில் மது அருந்தி விட்டு வெளியே வந்தபோது அங்கு வந்த ஒரு கும்பல் சந்தோஷை சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்து விட்டு தப்பியது.

    இந்த படுகொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட வீரப்பன்சத்திரம் போலீசார் இதில் தொடர்புடைய ரியாஜ் சித்திக்(34), மனோஜ் குமார்(37), சதீஷ்குமார்(30) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    இதனிடையே இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட முகமது அலி ஜின்னா (38) மற்றும் மணிகண்டன் (32) ஆகிய 2 பேர் சில தினங்களுக்கு முன்பாக குமாரபாளையம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

    இந்நிலையில் சரணடைந்த இருவரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இது குறித்து போலீசார் கூறியதாவது:-

    கொலை செய்யப்பட்ட சந்தோஷை தனியார் நிதிநிறுவனம் ஒன்று, கடனில் வாகனம் வாங்கி விட்டு தவணை செலுத்தாதவர்களிடம் வாகனங்களை பறிமுதல் செய்யும் பணியில் ஈடுபடுத்தி உள்ளது. அவ்வாறு குமரன் என்பவரின் காரை பறிமுதல் செய்ய சந்தோஷ் சென்ற போது, குமரன் தனது காரை காப்பாற்றி கொள்ள அம்ஜத்கான் என்பவர் மூலம் முகமது அலி ஜின்னாவின் உதவியை நாடி உள்ளார்.

    எனினும் அதையும் மீறி சந்தோஷ், குமரனின் காரை பறிமுதல் செய்து நிதிநிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளார். இதனால் சந்தோஷ் மற்றும் ஜின்னா இடையே, யார் பெரிய ஆள் என்பதில் போட்டியும் தகராறும் ஏற்பட்டு கொலையில் முடிந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்நிலையில் போலீஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து முகமது அலி ஜின்னா, மணிகண்டன் ஆகியோர் மீண்டும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்  இந்த வழக்கில் தொடர்புடைய அம்ஜத்கானை போலீசார் தேடி வருகின்றனர்.

    • பஸ்சை வழிமறித்த 2 பேர் அரசு பஸ்ஸின் கண்ணாடியை உடைத்தனர்.
    • டிரைவரிடம் தகராறில் ஈடுபட்ட ரவி, பன்னீர்செல்வம் தனியார் பஸ் ஊழியர்கள் என தெரியவந்தது.

    கள்ளக்குறிச்சி:

    திருப்பதியில் இருந்து செங்கோட்டை நோக்கி நேற்று இரவு அரசு பஸ் ஒன்று திருக்கோவிலூர் வழியாக சென்றது. இந்நிலையில் திருக்கோவிலூர் - உளுந்தூர்பேட்டை செட்டித்தாங்கல் பகுதி அருகே வந்தது. அப்போது அதே பகுதியில் தனியார் பெட்ரோல் பங்க் அருகில் பஸ்சை வழிமறித்த 2 பேர் பஸ் டிரைவரிடம் தகராறு செய்ததுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் அரசு பஸ்ஸின் கண்ணாடியையும் உடைத்தனர். இது குறித்து அரசு பஸ் டிரைவர் செல்வம் (வயது 44) கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் விரைந்து சென்று அரசு பஸ் டிரைவரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த மற்றும் அரசு பஸ்ஸின் கண்ணாடியை உடைத்த காட்டுஎடையார் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவி (34) மற்றும் பணப்பாடி கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்த அய்யனார் மகன் பன்னீர்செல்வம் (25) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் திருக்கோவிலூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் அரசு பஸ்சை வழிமறித்து, கண்ணாடியை உடை த்து டிரைவரிடம் தகரா றில் ஈடுபட்ட ரவி, பன்னீர்செல்வம் தனியார் பஸ் ஊழியர்கள் என தெரியவந்தது. உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் திருக்கோவிலூர் கோர்டடில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கைதான உதவி பேராசிரியர் சையது இப்ராகிம் நேற்று சேலம் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
    • கைதான சையது இப்ராகிம், அரசு பணியாளர் என்பதால் அவரை சஸ்பெண்டு செய்வதற்கான நடவடிக்கைகள் கல்லூரி நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதியர் தங்களது 27 வயது மகளுடன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரம்-ஹூப்ளி ரெயிலில் எஸ்.3 முன்பதிவு பெட்டியில் பயணம் மேற்கொண்ட னர்.

    நேற்று அதிகாலை 5.30 மணிக்கு ரெயில், ராசிபுரம் வந்தபோது அதே பெட்டியில் பயணம் செய்த சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த முகமது உசேன் மகன் சையது இப்ராகிம் (வயது 57), என்பவர் அந்த இளம்பெண்ணை சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. அதிர்ச்சி அடைந்த அப்பெண் கூச்சலிடவே, பெற்றோர் உள்பட அனைவரும் சேர்ந்து சையது இப்ராகிமை பிடித்து சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    மேலும் அந்த இளம்பெண், ரெயில்வே போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சையது இப்ராகிமை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இவர், சேலம் அரசு கலை கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார் என்பது தெரிய வந்தது.

    கைதான உதவி பேராசிரியர் சையது இப்ராகிம் நேற்று சேலம் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து நீதிபதி, அவரை 15 நாள் காவலில் சேலம் மத்திய ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து போலீசார், சையது இப்ராகிமை அழைத்துச்சென்று நேற்று இரவு சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    கைதான சையது இப்ராகிம், அரசு பணியாளர் என்பதால் அவரை சஸ்பெண்டு செய்வதற்கான நடவடிக்கைகள் கல்லூரி நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அவர் இன்னும் ஓரிரு நாளில் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என தெரிகிறது.

    ஓடும் ரெயிலில் பெண்ணிடம் அரசு கல்லூரி உதவி பேராசிரியர் சில்மிஷம் செய்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×