search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைதான பெண்"

    • காரில் தடை செய்யப்பட்ட பான் மசாலா - குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
    • 2 கார்கள், ரூ.2.29 லட்சம் மதிப்பிலான 237 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்ய ப்பட்டது.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் கடத்தி கொண்டு செல்லப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து பெருந்துறை போலீசார் மேட்டுப்புதூர்-கள்ளியம்புதூர் சாலை பிரிவில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர்.அப்போது அவ்வழியாக 2 கார்கள் வந்தன. போலீசாரை கண்டதும் காரில் இருந்த வர்கள் தப்பியோடி விட்டனர்.

    இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனை செய்தனர். அப்போது காரில் தடை செய்யப்பட்ட பான் மசாலா - குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் காரில் வந்தவர்கள் பெருந்துறை மடத்துபாளையம் தெற்கு தோட்டத்தை சேர்ந்த ராஜ்குமார்(31), கொங்கு நகர் தாஷ்கண்ட் வீதியை சேர்ந்த தினேஷ்குமார் (31) ஆகியோர் என்பதும், பெருந்துறையைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் பெங்களூருவில் இருந்து கார்கள் மூலம் தினேஷ் குமார் வீட்டுக்கு புகையிலைப் பொருட்களை அனுப்பி வைத்ததும் தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் தினேஷ்குமார் வீட்டுக்கு விரைந்து சென்ற னர். போலீசாரை பார்த்த தும் அங்கிருந்த அவரது தாயார் சிவகாமி (52) என்ப வர் தப்பி ஓட முயன்றார். அவரைப் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அவரது வீட்டை சோதனையிட்ட போது அங்கும் புகையிலை பொருட்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    பின்னர் சிவகாமியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, அவர் புகையிலை பொருட்கள் கடத்தலுக்கு உதவியாக இருந்ததாக தெரிவித்தார். இதையடுத்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்தப்பட்டு கோவை பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    மேலும் 2 கார்கள், ரூ.2.29 லட்சம் மதிப்பிலான 237 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்ய ப்பட்டது.

    இந்த கடத்தலில் மூளையாக செயல்பட்ட சிவகாமி யின் மகன் தினேஷ் குமார் மற்றும் ராஜ்குமார், லட்சு மணன் ஆகியோரை போலீ சார் வலைவீசி தேடி வருகி ன்றனர். இவர்கள் பிடிபட்டால் தான் இந்த கடத்தல் கும்பல் பின்னணியில் வேறு யார் உள்ளார்கள் என தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    ×