search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறையில் அடைப்பு"

    • கண்ணன் அவரது வயதான பெற்றோரை கவனித்துக் கொள்வதற்காக திருவாரூரை சேர்ந்த கனிமொழி (27) என்ற பெண்ணை வேலைக்கு அமர்த்தியுள்ளார்.
    • இந்த நிலையில் கண்ணனின் தந்தை லோகநாதன் வீட்டிலிருந்த 12 பவுன் தங்க நகையை காணவில்லை.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள தண்ணீர்பந்தல் காட்டை சேர்ந்தவர் கண்ணன் (52). இவர் அந்தப் பகுதியில் சேகோ பேக்டரி வைத்து நடத்தி வருகிறார்.

    வயதான பெற்றோர்

    கண்ணன் அவரது வயதான பெற்றோரை கவனித்துக் கொள்வதற்காக திருவாரூரை சேர்ந்த கனிமொழி (27) என்ற பெண்ணை வேலைக்கு அமர்த்தியுள்ளார். கனிமொழி அவரது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

    இந்த நிலையில் கண்ணனின் தந்தை லோகநாதன் வீட்டிலிருந்த 12 பவுன் தங்க நகையை காணவில்லை. இதனால் கனிமொழி மீது சந்தேகம் அடைந்த கண்ணன் நாமகிரிப்பேட்டை போலீசில் இதுபற்றி புகார் அளித்தார். அதன் பேரில் நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    கள்ளக்காதலன்

    இதில் கனிமொழி நகையை திருடி அவரது கள்ளக்காதலன் மோகன் என்பவரிடம் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொடுத்து வைத்திருப்பது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் தஞ்சாவூரில் இருந்த மோகனை பிடித்து விசாரணை நடத்தி அவரிடம் இருந்து 12 பவுன் நகைகளை மீட்டனர்.

    தொடர்ந்து கனிமொழி மற்றும் அவரது காதலன் மோகன் ஆகிய இருவரையும் கைது செய்து ராசிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

    • ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து விபசாரம் நடப்பதாக சேலம் மாவட்ட ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி. அமல அட்மின்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ்மோகன் மற்றும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு வருடந்தோரும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

    விபசார புகார்

    ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து விபசாரம் நடப்பதாக சேலம் மாவட்ட ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி. அமல அட்மின்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் தலைமையில் ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ்மோகன் மற்றும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    ஏற்காட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் சொகுசு பங்களாக்களில் அதிரடி தேடுதல் வேட்டை நடைபெற்றது. இதில் ஏற்காடு பக்கோடா பாயிண்ட் செல்லும் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் சோதனை செய்ததில் மூன்று இளம் பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை போலீசார் மீட்டனர்.

    2 பேர் கைது

    மேலும் இது சம்பந்தமாக அவர்களிடம் டி.எஸ்.பி. அமல அட்மின் மற்றும் இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் மோகன் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு மேலும் சம்பந்தப்பட்ட கட்டிடத்துக்கு டி.எஸ்பி முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

    இந்த ரிசார்ட்டை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த ஏற்காட்டை சேர்ந்த கார்த்திக் (35) மற்றும் அந்த ரிசார்ட் மேலாளர் ரகுநாத் (20) ஆகியோைர கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்கள் 3 பேரையும் சேலம் கோர்ட் வளாக த்தில் உள்ள அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    எச்சரிக்கை

    ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என டி.எஸ்.பி. அமல அட்மின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

    • வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
    • மர்ம நபர் ஒருவர் பெண் குரலில் பேசி, தான் எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டி வலசு பகுதியில் இருப்ப தாகவும், தன்னை வந்து சந்திக்கும்படியும் கூறியுள்ளார்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டி சந்தைப் பேட்டை அருகே உள்ள வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் அவரது செல்போன் எண்ணிற்கு சம்பவத்தன்று இரவு தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் பெண் குரலில் பேசி, தான் எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டி வலசு பகுதியில் இருப்ப தாகவும், தன்னை வந்து சந்திக்கும்படியும் கூறியுள்ளார்.

    செல்போன் பறிப்பு

    அதை உண்மை என நம்பிய அந்த வாலிபர் சம்பந்தப்பட்ட நபர் சொன்ன இடத்திற்கு சென்ற போது அங்கு இருளில் மறைந்திருந்த மேலும் 2 பேர் ஒன்று சேர்ந்து வாலிபரை கல்லால் தாக்கி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் அவர் அணிந்திருந்த வெள்ளி நகைகளை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.

    படுகாயம் அடைந்த வாலிபர் அவ்வழியாக வந்த வாகனத்தில் உதவி கேட்டு, எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். தொடர்ந்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த எடப்பாடி போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    போலீசாரின் விசாரணை யில் வாலிபரை தாக்கி, அவரிடமிருந்து நகை மற்றும் செல்போனை பறித்து சென்றதும், எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டிவலசு, காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (22), திருச்சி, காந்தி பூ மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த அஜித் குமார் (21) மேலும் 17வயது சிறுவன் ஆகியோர் என்பதும் அவர்களில் 17 வயது சிறுவன் தான் வாலிபரை செல்போனில் பேசி வரவழைத்து நகை, செல்போனை பறித்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த எடப்பாடி போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • ஏத்தாப்பூர் அபிநவம் பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் (23) என்பவர் தொடர்பு கொண்டு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி யுள்ளார்.
    • மேலும் இதற்காக ரூ.7 லட்சம் பணம் பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் கல்வராயன்மலை அருகே கரியக்கோயில் அடுத்த வேலம்பட்டு மலை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி செவத்தான். இவருடைய மகன் மணி (28).

    அரசு வேலை

    பட்டதாரியான இவரை ஏத்தாப்பூர் அபிநவம் பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் (23) என்பவர் தொடர்பு கொண்டு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி யுள்ளார். மேலும் இதற்காக ரூ.7 லட்சம் பணம் பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    ஓராண்டு கடந்தும் வேலை வாங்கி தராததால் சந்தேகமடைந்த மணி தனது பணத்தை திருப்பிக்

    கொடுக்குமாறு சதீஸ்குமாரி டம் கேட்டுள்ளார். இதில் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே மணிக்கும், அவருடைய பெரியப்பா மகனான ராமச்சந்திரன் (28) என்பவருக்கும் முன்விரோதம் இருப்பதை அறி0ந்த சதீஸ்குமார் இவ ருடன் கூட்டு சேர்ந்து மணியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக நண்பரான சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவரையும் சதீஸ்குமார் வரவழைத்துள்ளார்.

    அரிவாள் வெட்டு

    திட்டமிட்டபடி நேற்று முன்தினம் சதீஸ்குமார் தனது காரில் வேலம்பட்டு கிராமத்திலுள்ள மணியின் வீட்டிற்கு சென்னை வாலி

    பரை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த மணியை சென்னை வாலிபர் அரிவாளால் வெட்டினார்.

    மணியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது தாயார் கரியாள் என்பவருக்கும் வெட்டு விழுந்துள்ளது. இவர்களது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    காரை விரட்டி பிடித்தனர்

    மேலும் இதுகுறித்து தகவலறிந்த சுற்றுப்புற கிராம மக்கள் சதீஸ்குமார் சென்ற காரை விரட்டிப் பிடித்தனர். அப்போது சென்னையை சேர்ந்த வாலிபர் தப்பியோடி தலைமறைவானார். பிடிபட்ட சதீஸ்குமாரை கரியக்கோயில் போலீசில் ஒப்படைத்தனர்.

    இவரிடம் விசாரணை நடத்திய கருமந்துறை இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையிலான போலீசார், சதீஸ்குமாரையும் அவருடன் சேர்ந்து கூட்டு சதியில் ஈடுபட்டதாக மணியின் சகோதரர் ராமச்சந்திரன் என்பவரையும் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஆத்தூர் சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய சென்னை வாலிபரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். 

    • கணவர் கடந்த 3 மாதத்திற்க்கு முன்பு இறந்து விட்டார்.
    • தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதில் கண், காது, கழுத்து பகுதியில் பலத்த காயம் அடைந்தார்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம் மாரண்ட அள்ளி அருகே தொட்டபாவளி கிராமத்தை சேர்ந்தவர் முனியம்மாள் (வயது 68). இவருக்கு 2 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். இவரது கணவர் கடந்த 3 மாதத்திற்க்கு முன்பு இறந்து விட்டார்.

    இந்நிலையில் நேற்று முனியம்மாளின் மூத்த மகன் விவசாயி சுப்ரமணி என்பவர் தாய் முனியம்மாள் நிலத்தில், இந்த நிலம் எனக்கு சொந்தமானது என கூறி தனது மாடுகளை கட்டியுள்ளார். இதனை தட்டி கேட்ட மூதாட்டி முனியம்மாவை சுப்பிரமணி தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதில் கண், காது, கழுத்து பகுதியில் பலத்த காயம் அடைந்தார்.

    உடனே முனியம்மாளை உறவினர்கள் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் மாரண்ட அள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்ரமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றவரை பிடித்து விசாரித்ததில் அதே பகுதியை சேர்ந்த பழனி (வயது 50) என்பதும், அவர் நாட்டு வெடிகளை தயாரிப்பதும் தெரிய வந்தது
    • வீட்டை சோதனை செய்ததில் நாட்டு வெடி தயாரிக்க தேவையான கரிமருந்து, பட்டாசு திரி உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டது.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம், மாரண்ட அள்ளி பகுதியில் சட்ட விரோதமாக வெடி மருந்து தயாரிப்பதாக மாரண்ட அள்ளி இன்ஸ்பெக்டருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம், சப்- இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம், மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது மாரண்டஅள்ளி அருகே சீங்காடு பகுதியில் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றவரை பிடித்து விசாரித்ததில் அதே பகுதியை சேர்ந்த பழனி (வயது 50) என்பதும் , அவர் நாட்டு வெடிகளை தயாரிப்பதும் தெரிய வந்தது,

    அவரது வீட்டை சோதனை செய்ததில் நாட்டு வெடி தயாரிக்க தேவையான கரிமருந்து, பட்டாசு திரி உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டது.

    இவற்றை பறிமுதல் செய்த போலீசார் பழனியை கைது செய்து தருமபுரி சிறையில் அடைத்தனர்.

    • திருட்டு நடைபெற்ற பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும் பார்வையிட்டனர்.
    • திருடிய ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் சிவதர்ஷினி (வயது23). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது ஸ்கூட்டரை அரசு ஆஸ்பத்தி ரியில் உள்ள பிரசவ வார்டு அருகே நிறுத்தி விட்டு பணிக்கு சென்றார்.

    பணியை முடித்துவிட்டு மீண்டும் திரும்பி வந்தபோது அவருடைய ஸ்கூட்டர் மாயமாகி இருந்தது. மர்ம நபர்கள் அவருடைய ஸ்கூட்டரை திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிவ தர்ஷினி இது பற்றி தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இது தொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்்பெக்டர் விஜய சங்கர் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    திருட்டு நடைபெற்ற பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும் பார்வையிட்டனர்.

    அப்போது வேலூரைச் சேர்ந்த ஷகில் (36), வாணியம் பாடியை சேர்ந்த அஸ்கர் அலி (27) ஆகியோர் அந்த ஸ்கூட்டரை திருடி இருப்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக போலீசார் இந்த 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் திருடிய ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர்.

    • அங்கு சென்ற சோமசேகர், மாதேஷின் மனைவியை கேலி-கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
    • நீதிமன்ற த்தில் ஆஜர்படுத்தி ஒசூர் சிறையில் அடைத்தனர்.

    தேன்கனிக்கோட்டை,  

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே, சந்தனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சோமசேகர் (வயது21). கூலித்தொழிலாளி. இவரது தாய்மாமன் மாதேஷ் (34). இவரது மனைவி, நேற்று முன்தினம் அங்குள்ள கடையில் தயிர் வாங்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது, அங்கு சென்ற சோமசேகர், மாதேஷின் மனைவியை கேலி-கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை மாதேஷ் தட்டிக்கேட்டதால், அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர், கைக லப்பாக மாறியது. இதில், ஆத்திரமடைந்த மாதேஷ், கத்தியால் குத்தி யதில் வயிற்றில் காயமடைந்த சோமசேகர், ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

    இதை கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில், தேன்க னிக்கோ ட்டை போலீசார் வழக்கு ப்பதிந்து, மாதேஷை கைது செய்தனர்.

    என் மனைவியை பொது இடத்தில் கேலி-கிண்டல் செய்ததால் சோமசேகரை தட்டிகேட்டேன். இதனால் இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அதனால் ஆத்திரத்தில் சோமசேகரை கத்தியால் வயிற்று பகுதியில் குத்திவிட்டேன் என பரபரப்பு வாக்குமூலம் அளித்தாக போலீசார் கூறினர். இதையடுத்து நீதிமன்ற த்தில் ஆஜர்படுத்தி ஒசூர் சிறையில் அடைத்தனர்.

    • நேற்று திடீரென 12 பேர் கொண்ட கும்பல், ஆனந்த குமாரின் அலுவலகத்துக்குள் புகுந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
    • கத்தியை காட்டி மிரட்டி அவரை காரில் கடத்தி சென்றதுடன், அலுவலகத்தில் இருந்த, 70 மொபைல் போன்கள், 5 லேப்டாப்புக்களையும் தூக்கி சென்றுள்ளனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், லளிகம் அடுத்த தம்மனம்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது31). இவர், தருமபுரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே யு-டியூப் சானல் அலுவலகம் நடத்தி வருகிறார்.

    நேற்று திடீரென 12 பேர் கொண்ட கும்பல், ஆனந்த குமாரின் அலுவலகத்துக்குள் புகுந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    மேலும் கத்தியை காட்டி மிரட்டி அவரை காரில் கடத்தி சென்றதுடன், அலுவலகத்தில் இருந்த, 70 மொபைல் போன்கள், 5 லேப்டாப்புக்களையும் தூக்கி சென்றுள்ளனர்.

    இதுகுறித்து, ஆனந்த குமார் அலுவலகத்தில் பணியாற்றிய தருமபுரியை சேர்ந்த பிரேம்குமார் என்பவர், தருமபுரி டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    இதைனை அடுத்து, தருமபுரி எஸ்.பி. ஸ்டீபன்ஜேசுபாதம், தருமபுரி டி.எஸ்.பி. செந்திகுமார், தருமபுரி டவுன் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார், ஆனந்த குமாரை கடத்தி சென்றவர்களை தேடிவந்தனர்.

    இந்த நிலையில், தருமபுரி அடுத்த குண்டல்பட்டியில் ஆனந்தகுமாரை கடத்தி சென்ற 12 பேர் கொண்ட கும்பலை போலீசார் ஒரு மணி நேரத்தில் மடக்கி பிடித்தனர்.

    பின்னர் விசாரணை மேற்கொண்டதில் ஆனந்தகுமாரை கடத்திய சின்னச்சாமி யு–டியூப் சானல் நடத்தி வந்தது தெரியவந்தது.

    மேலும், ஆனந்தகுமார் தங்களது யுடியூப் சானலில் அதிக பார்வையாளர்கள் உள்ளது போல் பொய்யான தகவலை பதிவிட்டுள்ளதாகவும், இதனால், தங்களது சானலை யுடியூப் நிறுவனம் தடை செய்துள்ளது.

    இதனால், அவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதற்கு ஆனந்தகுமார் தான் காரணம் என அவரை கடத்தி சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து கடத்தலுக்கு முக்கிய காரணமாக இருந்த பழைய தருமபுரியை சேர்ந்த சின்னச்சாமி (38), இவருடைய கூட்டாளிகளான அதகபாடியை சேர்ந்த சீராளன் (30), கோடியூரை சேர்ந்த சுந்தரம் (30), சுரேஷ் (39), எ.ஜெட்டிஹள்ளியை சேர்ந்த முருகன் (26), ராமு (30), மல்லிக்குட்டையை சேர்ந்த சதீஷ் (35), பெரியசாமி (27), கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சந்திரன் (29), தருமபுரியை சேர்ந்த தினேஷ்குமார் (23), சோளப்பட்டியை சேர்ந்த மணி (25) உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மாருதி கார், 6 பைக்குகள் மற்றும் ஆனந்தகுமார் அலுவலகத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்ட 70 மொபைல் போன்கள், 5 லேப்டாப்புக்களை பறிமுதல் செய்தனர். பின்னர் 12 பேரையும் தருமபுரி சிறையில் அடைத்தனர்.

    • விஜயலட்சுமி வீட்டில் துப்பட்டாவால் கழுத்து இறுக்கிய நிலையில் பிண மாக கிடந்தார்.
    • இதுகுறித்து செல்வம் திருச்செங்கோடு டவுன் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பண்ணக்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வம் (57). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி விஜயலட்சுமி (33). இவர்களுக்கு 17 வயதில் மகனும், 12 வயதில் மகளும் உள்ளனர்.

    பிணமாக கிடந்தார்

    கடந்த 7-ந் தேதி மாலை விஜயலட்சுமி வீட்டில் துப்பட்டாவால் கழுத்து இறுக்கிய நிலையில் பிண மாக கிடந்தார். இதுகுறித்து செல்வம் திருச்செங்கோடு டவுன் போலீசாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விஜயலட்சுமி உடலை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விஜய லட்சுமி தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    சாவில் சந்தேகம்

    இதனிடையே பிரேத பரிசோ தனைக்கு பிறகு விஜயலட்சுமி உடல் மறு நாள் உறவினர்களி டம் ஒப்ப டைக்கப்பட்டது. அப்போது விஜயலட்சுமி யின் முகத்தில் காயங்கள் இருந்ததாக கூறப்ப டுகிறது. இதனால் அவரது உறவி னர்கள் விஜயலட்சுமி யின் சாவில் சந்தேகம் இருப்ப தாக போலீசாரிடம் தெரி வித்தனர். இதை தொடர்ந்து திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு இமய வர்மன், டவுன் இன்ஸ்பெக்டர் மகேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீ சார் நேரில் சென்று விஜய லட்சுமியின் குடும்பத்தாரி டம் விசாரணை நடத்தினர்.

    கிடுக்கிப்படி விசாரணை

    அப்போது விஜயலட்சுமி யின் கணவர் செல்வத்திடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் செல்வத்திடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    அதன் விவரம் வருமாறு:-கடந்த 18 வருடங்களுக்கு முன்பு செல்வம் தனியார் மினி பஸ்சில் டிரைவராக பணி யாற்றி உள்ளார். அப்போது விஜயலட்சுமி ஒரு கடையில் ஊழியராக வேலை செய்துள்ளார். வேலைக்கு செல்வதற்காக மினிபஸ்சில் தினமும் வந்து சென்றபோது, செல்வத் திற்கும் விஜயலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    24 வயது வித்தியாசம்

    இதையடுத்து வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்க ளுக்குள் 24 வயது வித்தி யாசம் உள்ளது. முதலில் இரு வரும் மகிழ்ச்சியாக வாழ்ந்துள்ளனர். பின்னர் வயது வித்தி யாசம் காரண மாக இருவ ருக்குள்ளும் பிரச்சனைகள் ஏற்பட்டது. மேலும் செல்வம் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இத னால் தினமும் குடித்துவிட்டு வந்து விஜயலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று மாலையும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த செல்வம் விஜயலட்சுமியை துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

    தற்கொலை நாடகம்

    இதையடுத்து விஜய லட்சுமி உடலை மின்விசிறி யில் தூக்கில் மாட்ட முயற்சி செய்துள்ளார்.ஆனால் முடியா ததால், துப்பட்டா கழுத்தில் சுற்றப்பட்ட நிலையில் விஜய லட்சுமி உடலை வைத்துக் கொண்டு உறவினர்க ளிடம் மனைவி தற்கொலை செய்து கொண்டதாக கூறி கதறி அழுது நாடகமாடி உள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதை யடுத்து தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார் மனை வியை கொலை செய்த ஆட்டோ டிரைவர் செல்வத்தை கைது செய்தனர்.

    அவரது வாக்கு மூலத்தில் மனைவி மீது ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை செய்து விட்டதாக ஒப்புக்கொ ண்டார். இதை யடுத்து போலீ சார் அவரை திருச்செங்கோ டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • ஓமலூரில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 43 வயது நிரம்பிய லாரி டிரைவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
    • இந்த நிலையில் மூத்த மகளான 17 வயது சிறுமி ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 43 வயது நிரம்பிய லாரி டிரைவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் மனைவிக்கு கண் பார்வையில் கோளாறு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மூத்த மகளான 17 வயது சிறுமி ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் தனது தந்தை தான் 6-ம் வகுப்பு படிக்கும் போதில் இருந்து தனக்கு பாலியல் தொல்லை ெகாடுத்து வருகிறார். இது பற்றி தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் தெரிவித்தேன். போலீசார் எனது தந்தையை அழைத்து எச்சரித்து அனுப்பினார்கள். அப்போது எனது தந்தை இனிமேல் இது பற்றி வெளியே சொன்னால் என்னையும் எனது அம்மாவையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டினார். இதனால் நான் பயந்து எனது சித்தி வீட்டுக்கு சென்றேன். அங்கேயும் வந்து எங்களை அடித்து விரட்டினார். எனவே எனது தந்தை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் போச்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த லாரி டிரைவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • ரூ.10 லட்சம் கொடுத்தால் ரூ.13 லட்சம் தருவதாக கூறினர்.
    • பெட்டியை பார்த்தபோது போலி ரூபாய் நோட்டுகள் என்பது தெரிய வந்தது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே ராமியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது31). டிராவல்ஸ் அதிபர்.

    இவரிடம் செல்போனில் தொடர்பு கொண்ட ஒரு கும்பல் ரூ.10 லட்சம் கொடுத்தால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அடங்கிய ரூ.13 லட்சம் தருவதாக கூறினர். இதை நம்பிய அவர் அந்த கும்பலிடம் ரூ.10 லட்சத்ைத கொடுத்தார்.

    பின்னர் அவர்கள் கொடுத்த பெட்டியை பார்த்தபோது அவை அனைத்தும் போலி ரூபாய் நோட்டுகள் என்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பென்னாகரம் அருகே சீலநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த அ.ம.மு.க. பிரமுகர் கிருஷ்ணமூர்த்தி (35), கோபாலம்பட்டி நடூரை சேர்ந்த ராஜேந்திரன் (45) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்தை மீட்கப்பட்டது. இதில் தொடர்புடைய சிலரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் தலைமறைவாக இருந்த பென்னாகரம் கோடுப்பட்டியை சேர்ந்த செல்வராஜ் (35), ஊத்தங்கரை நந்திபுதூர் கிராமத்தை சேர்ந்த ஹரிபாபு (38) ஆகிய 2 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

    இவர்களிடம் இருந்து ரூ.7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கைதான அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர்.

    ×