search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெடிமருந்துகள்"

    • போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றவரை பிடித்து விசாரித்ததில் அதே பகுதியை சேர்ந்த பழனி (வயது 50) என்பதும், அவர் நாட்டு வெடிகளை தயாரிப்பதும் தெரிய வந்தது
    • வீட்டை சோதனை செய்ததில் நாட்டு வெடி தயாரிக்க தேவையான கரிமருந்து, பட்டாசு திரி உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டது.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம், மாரண்ட அள்ளி பகுதியில் சட்ட விரோதமாக வெடி மருந்து தயாரிப்பதாக மாரண்ட அள்ளி இன்ஸ்பெக்டருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம், சப்- இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம், மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது மாரண்டஅள்ளி அருகே சீங்காடு பகுதியில் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றவரை பிடித்து விசாரித்ததில் அதே பகுதியை சேர்ந்த பழனி (வயது 50) என்பதும் , அவர் நாட்டு வெடிகளை தயாரிப்பதும் தெரிய வந்தது,

    அவரது வீட்டை சோதனை செய்ததில் நாட்டு வெடி தயாரிக்க தேவையான கரிமருந்து, பட்டாசு திரி உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டது.

    இவற்றை பறிமுதல் செய்த போலீசார் பழனியை கைது செய்து தருமபுரி சிறையில் அடைத்தனர்.

    ×