search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதல் மனைவியை கொன்ற ஆட்டோ டிரைவர் சிறையில் அடைப்பு
    X

    ஆட்டோ டிரைவர் செல்வம்.

    காதல் மனைவியை கொன்ற ஆட்டோ டிரைவர் சிறையில் அடைப்பு

    • விஜயலட்சுமி வீட்டில் துப்பட்டாவால் கழுத்து இறுக்கிய நிலையில் பிண மாக கிடந்தார்.
    • இதுகுறித்து செல்வம் திருச்செங்கோடு டவுன் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பண்ணக்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வம் (57). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி விஜயலட்சுமி (33). இவர்களுக்கு 17 வயதில் மகனும், 12 வயதில் மகளும் உள்ளனர்.

    பிணமாக கிடந்தார்

    கடந்த 7-ந் தேதி மாலை விஜயலட்சுமி வீட்டில் துப்பட்டாவால் கழுத்து இறுக்கிய நிலையில் பிண மாக கிடந்தார். இதுகுறித்து செல்வம் திருச்செங்கோடு டவுன் போலீசாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விஜயலட்சுமி உடலை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விஜய லட்சுமி தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    சாவில் சந்தேகம்

    இதனிடையே பிரேத பரிசோ தனைக்கு பிறகு விஜயலட்சுமி உடல் மறு நாள் உறவினர்களி டம் ஒப்ப டைக்கப்பட்டது. அப்போது விஜயலட்சுமி யின் முகத்தில் காயங்கள் இருந்ததாக கூறப்ப டுகிறது. இதனால் அவரது உறவி னர்கள் விஜயலட்சுமி யின் சாவில் சந்தேகம் இருப்ப தாக போலீசாரிடம் தெரி வித்தனர். இதை தொடர்ந்து திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு இமய வர்மன், டவுன் இன்ஸ்பெக்டர் மகேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீ சார் நேரில் சென்று விஜய லட்சுமியின் குடும்பத்தாரி டம் விசாரணை நடத்தினர்.

    கிடுக்கிப்படி விசாரணை

    அப்போது விஜயலட்சுமி யின் கணவர் செல்வத்திடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் செல்வத்திடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    அதன் விவரம் வருமாறு:-கடந்த 18 வருடங்களுக்கு முன்பு செல்வம் தனியார் மினி பஸ்சில் டிரைவராக பணி யாற்றி உள்ளார். அப்போது விஜயலட்சுமி ஒரு கடையில் ஊழியராக வேலை செய்துள்ளார். வேலைக்கு செல்வதற்காக மினிபஸ்சில் தினமும் வந்து சென்றபோது, செல்வத் திற்கும் விஜயலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    24 வயது வித்தியாசம்

    இதையடுத்து வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்க ளுக்குள் 24 வயது வித்தி யாசம் உள்ளது. முதலில் இரு வரும் மகிழ்ச்சியாக வாழ்ந்துள்ளனர். பின்னர் வயது வித்தி யாசம் காரண மாக இருவ ருக்குள்ளும் பிரச்சனைகள் ஏற்பட்டது. மேலும் செல்வம் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இத னால் தினமும் குடித்துவிட்டு வந்து விஜயலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று மாலையும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த செல்வம் விஜயலட்சுமியை துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

    தற்கொலை நாடகம்

    இதையடுத்து விஜய லட்சுமி உடலை மின்விசிறி யில் தூக்கில் மாட்ட முயற்சி செய்துள்ளார்.ஆனால் முடியா ததால், துப்பட்டா கழுத்தில் சுற்றப்பட்ட நிலையில் விஜய லட்சுமி உடலை வைத்துக் கொண்டு உறவினர்க ளிடம் மனைவி தற்கொலை செய்து கொண்டதாக கூறி கதறி அழுது நாடகமாடி உள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதை யடுத்து தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார் மனை வியை கொலை செய்த ஆட்டோ டிரைவர் செல்வத்தை கைது செய்தனர்.

    அவரது வாக்கு மூலத்தில் மனைவி மீது ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை செய்து விட்டதாக ஒப்புக்கொ ண்டார். இதை யடுத்து போலீ சார் அவரை திருச்செங்கோ டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×