search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாய்-மகனை வெட்டி கொல்ல முயற்சிகைதான 2 வாலிபர்கள் சிறையில் அடைப்பு
    X

    தாய்-மகனை வெட்டி கொல்ல முயற்சிகைதான 2 வாலிபர்கள் சிறையில் அடைப்பு

    • ஏத்தாப்பூர் அபிநவம் பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் (23) என்பவர் தொடர்பு கொண்டு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி யுள்ளார்.
    • மேலும் இதற்காக ரூ.7 லட்சம் பணம் பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் கல்வராயன்மலை அருகே கரியக்கோயில் அடுத்த வேலம்பட்டு மலை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி செவத்தான். இவருடைய மகன் மணி (28).

    அரசு வேலை

    பட்டதாரியான இவரை ஏத்தாப்பூர் அபிநவம் பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் (23) என்பவர் தொடர்பு கொண்டு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி யுள்ளார். மேலும் இதற்காக ரூ.7 லட்சம் பணம் பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    ஓராண்டு கடந்தும் வேலை வாங்கி தராததால் சந்தேகமடைந்த மணி தனது பணத்தை திருப்பிக்

    கொடுக்குமாறு சதீஸ்குமாரி டம் கேட்டுள்ளார். இதில் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே மணிக்கும், அவருடைய பெரியப்பா மகனான ராமச்சந்திரன் (28) என்பவருக்கும் முன்விரோதம் இருப்பதை அறி0ந்த சதீஸ்குமார் இவ ருடன் கூட்டு சேர்ந்து மணியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக நண்பரான சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவரையும் சதீஸ்குமார் வரவழைத்துள்ளார்.

    அரிவாள் வெட்டு

    திட்டமிட்டபடி நேற்று முன்தினம் சதீஸ்குமார் தனது காரில் வேலம்பட்டு கிராமத்திலுள்ள மணியின் வீட்டிற்கு சென்னை வாலி

    பரை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த மணியை சென்னை வாலிபர் அரிவாளால் வெட்டினார்.

    மணியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது தாயார் கரியாள் என்பவருக்கும் வெட்டு விழுந்துள்ளது. இவர்களது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    காரை விரட்டி பிடித்தனர்

    மேலும் இதுகுறித்து தகவலறிந்த சுற்றுப்புற கிராம மக்கள் சதீஸ்குமார் சென்ற காரை விரட்டிப் பிடித்தனர். அப்போது சென்னையை சேர்ந்த வாலிபர் தப்பியோடி தலைமறைவானார். பிடிபட்ட சதீஸ்குமாரை கரியக்கோயில் போலீசில் ஒப்படைத்தனர்.

    இவரிடம் விசாரணை நடத்திய கருமந்துறை இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையிலான போலீசார், சதீஸ்குமாரையும் அவருடன் சேர்ந்து கூட்டு சதியில் ஈடுபட்டதாக மணியின் சகோதரர் ராமச்சந்திரன் என்பவரையும் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஆத்தூர் சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய சென்னை வாலிபரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

    Next Story
    ×