என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பணம் மோசடி செய்த வழக்கில் கைதான 2 பேர் சிறையில் அடைப்பு
- ரூ.10 லட்சம் கொடுத்தால் ரூ.13 லட்சம் தருவதாக கூறினர்.
- பெட்டியை பார்த்தபோது போலி ரூபாய் நோட்டுகள் என்பது தெரிய வந்தது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே ராமியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது31). டிராவல்ஸ் அதிபர்.
இவரிடம் செல்போனில் தொடர்பு கொண்ட ஒரு கும்பல் ரூ.10 லட்சம் கொடுத்தால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அடங்கிய ரூ.13 லட்சம் தருவதாக கூறினர். இதை நம்பிய அவர் அந்த கும்பலிடம் ரூ.10 லட்சத்ைத கொடுத்தார்.
பின்னர் அவர்கள் கொடுத்த பெட்டியை பார்த்தபோது அவை அனைத்தும் போலி ரூபாய் நோட்டுகள் என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பென்னாகரம் அருகே சீலநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த அ.ம.மு.க. பிரமுகர் கிருஷ்ணமூர்த்தி (35), கோபாலம்பட்டி நடூரை சேர்ந்த ராஜேந்திரன் (45) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்தை மீட்கப்பட்டது. இதில் தொடர்புடைய சிலரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த பென்னாகரம் கோடுப்பட்டியை சேர்ந்த செல்வராஜ் (35), ஊத்தங்கரை நந்திபுதூர் கிராமத்தை சேர்ந்த ஹரிபாபு (38) ஆகிய 2 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து ரூ.7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கைதான அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்