search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபசார வழக்கில் கைதான 2 பேர் சிறையில் அடைப்பு
    X

    விபசார வழக்கில் கைதான 2 பேர் சிறையில் அடைப்பு

    • ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து விபசாரம் நடப்பதாக சேலம் மாவட்ட ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி. அமல அட்மின்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ்மோகன் மற்றும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு வருடந்தோரும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

    விபசார புகார்

    ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து விபசாரம் நடப்பதாக சேலம் மாவட்ட ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி. அமல அட்மின்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் தலைமையில் ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ்மோகன் மற்றும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    ஏற்காட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் சொகுசு பங்களாக்களில் அதிரடி தேடுதல் வேட்டை நடைபெற்றது. இதில் ஏற்காடு பக்கோடா பாயிண்ட் செல்லும் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் சோதனை செய்ததில் மூன்று இளம் பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை போலீசார் மீட்டனர்.

    2 பேர் கைது

    மேலும் இது சம்பந்தமாக அவர்களிடம் டி.எஸ்.பி. அமல அட்மின் மற்றும் இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் மோகன் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு மேலும் சம்பந்தப்பட்ட கட்டிடத்துக்கு டி.எஸ்பி முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

    இந்த ரிசார்ட்டை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த ஏற்காட்டை சேர்ந்த கார்த்திக் (35) மற்றும் அந்த ரிசார்ட் மேலாளர் ரகுநாத் (20) ஆகியோைர கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்கள் 3 பேரையும் சேலம் கோர்ட் வளாக த்தில் உள்ள அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    எச்சரிக்கை

    ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என டி.எஸ்.பி. அமல அட்மின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    Next Story
    ×