என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நகை திருடிய வேலைக்கார பெண் கள்ளக்காதலனுடன் சிறையில் அடைப்பு
- கண்ணன் அவரது வயதான பெற்றோரை கவனித்துக் கொள்வதற்காக திருவாரூரை சேர்ந்த கனிமொழி (27) என்ற பெண்ணை வேலைக்கு அமர்த்தியுள்ளார்.
- இந்த நிலையில் கண்ணனின் தந்தை லோகநாதன் வீட்டிலிருந்த 12 பவுன் தங்க நகையை காணவில்லை.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள தண்ணீர்பந்தல் காட்டை சேர்ந்தவர் கண்ணன் (52). இவர் அந்தப் பகுதியில் சேகோ பேக்டரி வைத்து நடத்தி வருகிறார்.
வயதான பெற்றோர்
கண்ணன் அவரது வயதான பெற்றோரை கவனித்துக் கொள்வதற்காக திருவாரூரை சேர்ந்த கனிமொழி (27) என்ற பெண்ணை வேலைக்கு அமர்த்தியுள்ளார். கனிமொழி அவரது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் கண்ணனின் தந்தை லோகநாதன் வீட்டிலிருந்த 12 பவுன் தங்க நகையை காணவில்லை. இதனால் கனிமொழி மீது சந்தேகம் அடைந்த கண்ணன் நாமகிரிப்பேட்டை போலீசில் இதுபற்றி புகார் அளித்தார். அதன் பேரில் நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
கள்ளக்காதலன்
இதில் கனிமொழி நகையை திருடி அவரது கள்ளக்காதலன் மோகன் என்பவரிடம் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொடுத்து வைத்திருப்பது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் தஞ்சாவூரில் இருந்த மோகனை பிடித்து விசாரணை நடத்தி அவரிடம் இருந்து 12 பவுன் நகைகளை மீட்டனர்.
தொடர்ந்து கனிமொழி மற்றும் அவரது காதலன் மோகன் ஆகிய இருவரையும் கைது செய்து ராசிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்