என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் சிறையில் அடைப்பு
    X

    தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் சிறையில் அடைப்பு

    • கடந்த 24-ந் தேதி உடல்நிலை ்பாதிக்கப்பட்டதால் சேலம் அக்ரகாரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
    • மர்ம நபர் நீ குளித்ததை நான் வீடியோ எடுத்து வைத்திருக்கிறேன், நான் சொல்லும் இடத்திற்கு வர வேண்டும், இல்லா விட்டால் வெளியில் பரப்பி விடுவேன் என கூறி மிரட்டினார்.

    சேலம்:

    சேலம் பெரிய வீராணத்தை சேர்ந்தவர் 45 வயது தொழிலாளி. கடந்த 24-ந் தேதி உடல்நிலை ்பாதிக்கப்பட்டதால் சேலம் அக்ரகாரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    ஆபாச வீடியோ

    அந்த நபர் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் இருந்த போது அவரது மனைவி அருகில் இருந்து கவனித்து கொண்டார். அப்போது அந்த பெண் அங்குள்ள குளியல் அறையில் குளித்துள்ளார்,

    இந்த நிலையில் கணவருக்கு சிகிச்சை முடிந்து அந்த பெண் வீடு திரும்பிய நிலையில் கடந்த 27-ந் தேதி அந்த பெண்ணின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது.

    அதில் பேசிய மர்ம நபர் நீ குளித்ததை நான் வீடியோ எடுத்து வைத்திருக்கிறேன், நான் சொல்லும் இடத்திற்கு வர வேண்டும், இல்லா விட்டால் வெளியில் பரப்பி விடுவேன் என கூறி மிரட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்ட பெண் சேலம் டவுன் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் அந்த செல்போன் எண்ணை வைத்து விசாரித்தனர். அப்போது சிக்கிய நபர் நான் பேசவில்லை என்றும், எனது செல்போனில் இருந்து வேறு நபர் பேசியதாகவும் கூறினார்.

    ஆஸ்பத்திரி ஊழியர்

    தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திய போது, ஆஸ்பத்திரியில் 8 ஆண்டுகளாக வார்டு பாயாக வேலை செய்து வந்த கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி. காலனியை சேர்ந்த விவேகானந்தன் (32) என்பவர் மற்றொருவர் செல்போனை வாங்கி பேசியது தெரிய வந்தது . இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவரிடம் விசாரித்த போது ஆஸ்பத்திரி பதிவேட்டில் இருந்து அந்த பெண்ணின் செல்போன் எண்ணை எடுத்து அவரிடம் உல்லாசம் அனுபவிக்கும் நோக்கில் வேறு ஒருவர் செல்போனில் இருந்து பேசி மிரட்டியதாக கூறி உள்ளார்.

    சிறையில் அடைப்பு

    தொடர்ந்து இது போல வேறு யாரையும் ஆபாச படம் எடுத்து மிரட்டினாரா ? என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இதற்கிடையே விவேகானந்தனை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் ஆஸ்பத்திரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×