search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாரல் மழை"

    • தஞ்சை மாவட்டத்தில் நாளுக்கு நாள் சுட்டெரித்து வந்த வெப்பத்தால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
    • அக்னி நட்சத்திரம் முடிந்தும் தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வந்தது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாகவே கோடை வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தாலும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்தன. தஞ்சை மாவட்டத்தில் நாளுக்கு நாள் சுட்டெரித்து வந்த வெப்பத்தால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர்.

    அக்னி நட்சத்திரம் முடிந்தும் தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வந்தது. இரவிலும் வெப்பத்தின் தாக்கம் நீடித்ததால் பொதுமக்கள் தூங்க முடியாமல் சிரமப்பட்டனர். இந்த நிலையில் இன்று தஞ்சையில் காலை முதலே வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காட்சியளித்த வண்ணம் உள்ளது.

    அவ்வப்போது லேசான சாரல் மழை பொழிந்தது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. மிதமான குளிர்ச்சியான சூழல் நிலவு வருகிறது. எனவே இதுபோல் அடுத்து வரும் நாட்களிலும் வெப்பத்தின் தாக்கம் குறையுமா ? என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • மரகிளைகள் கிழக்கு கடற்கரை சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • வெயிலின் தாக்கம் குறைந்து மரக்காணம் பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம் மரக்காணம் அருகே உள்ள கீழ்புத்துப்பட்டு, கூனிமேடு, ஆலப்பாக்கம், முறுக்கேறி, பிரம்மதேசம், எண்டியூர், கந்தாடு ஆகிய பகுதிகளில் நேற்று நள்ளிரவு சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் மின்கம்பம், மாமரங்கள், பலாமரங்கள், தைல மரங்கள் போன்றவைகள் மின் வயரில் விழுந்து சேதமானது. இதனால் மின்சாரம் அடியோடு நிறுத்தப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 30 கிராம மக்கள் மின்சாரம் இன்றி இரவு முழுவதும் அவதிக்குள்ளாகினர். ஊரணி கிராம சாலை முழுவதும் மா மரங்கள் விழுந்து மின்கம்பம் உடைந்து போக்குவரத்து அடியோடு துண்டி க்கப்பட்டுள்ளது.

    கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கழி குப்பம் கிராமத்தில் மர கிளைகள் கிழக்கு கடற்கரை சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போக்குவரத்து போலீசார், மரக்காணம் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் தலைமையிலான ஊழியர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் மர கிளை களை அப்புறப்ப டுத்தினார்கள். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், மரக்காணம் பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து மரக்காணம் பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

    • மேற்கு மாவட்ட பகுதிகளில் மட்டும் மழை பெய்து வந்தது
    • பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளுக்கு 34 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்தது. வெப்பத்தின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர். மேற்கு மாவட்ட பகுதிகளில் மட்டும் மழை பெய்து வந்தது. கிழக்கு மாவட்ட பகுதிகளில் மழை பெய்யவில்லை. தொடர்ந்து கண்ணாமூச்சி காட்டி வந்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை சீதோசண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. வானத்தில் கரு மேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. வடசேரி, கோணம், பார்வதிபுரம், வெட்டூர்ணிமடம் மற்றும் புறநகர் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் லேசான சாரல் மழை பெய்து வரு கிறது.

    அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் நீர்மட்டம் 34.96 அடியாகவும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 36.30 அடியாகவும் உள்ளது. பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளுக்கு வினாடிக்கு தலா 34 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    திற்பரப்பு அருவி பகுதியிலும் சாரல் மழை பெய்தது. விடுமுறை தினமான இன்று அருவியில் குளிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர்

    • ேமகம் மந்தமாக காணப்படுவதால் வெப்பம் குறைந்தது
    • நிலத்தடி நீர் அதிகரிக்க வாய்ப்பு

    வேலூர்:

    வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் மலைக்கிராம பகுதிகளில் நேற்று சாரல் மழை பெய்தது.

    ஜவ்வாது மலையின் அடிவாரத்தில் உள்ள ஆலங்காயம் மற்றும் நாட்றம்பள்ளி பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது.இந்த மழை கடந்த வாரம் முதல் அதிகரித்து வரும் வெப்பத்தில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளித்தது.

    ஆலங்காயம் தாலுக்காவில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மழை பெய்துள்ளது. இந்த பருவத்துக்கான விதைப்பு பணிகளை துவங்கியுள்ள விவசாயிகள், மழையால் பயனடைந்தனர். ஆலங்காயம், நாட்றம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நெல், கரும்பு, வாழை மற்றும் சோளம் உள்ளிட்ட முக்கியப் பயிர்கள் பயிடப்பட்டுள்ளன.

    இதுபோன்ற மழையால், இப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகளுக்கு முக்கிய ஆதாரமாக உள்ள நிலத்தடி நீரை அதிகரிக்க செய்ய உதவுகிறது. பாலாற்றின் நீர் பாசனத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.

    அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, ஜோலார்பேட்டை ஆகிய பகுதிகளில் பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. முந்தைய வடகிழக்கு பருவமழையின் போது மழை குறைவாக இருந்ததால், இதுபோன்ற மழை பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் கருதுகின்றனர்.

    இந்த கோடையில் வறண்ட பகுதிகளில் ஏற்படும் குடிநீர் நெருக்கடியை நிவர்த்தி செய்வதில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    தற்போது, வேலூர் மாநகராட்சி, 11 நகராட்சிகள் மற்றும் வேலூர் மாவட்டத்தில் உள்ள 944 கிராமங்கள் மற்றும் முக்கிய நகரங்களான வாலாஜா, ஆற்காடு, திமிரி மற்றும் ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்ப டுகிறது. இத்திட்டத்திற்காக பாலாற்றின் குறுக்கே குழாய்கள் அமைக்கப்பட்டன.

    தற்போது, தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம், இத்திட்டத்தை செயல்ப டுத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் குழாய்களில் பழுது நீக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

    இத்தகைய திடீர் மழை அதிகப்படியான ஆவியாதலை குறைக்க உதவும் என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மாலை 6 மணியளவில் பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசாக மழை பெய்ய துவங்கியது.
    • திருப்பூர் மாநகர் பகுதியிலும் நேற்றிரவு லேசான தூரலுடன் மழை பெய்தது.

    பல்லடம்:

    பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. மாலை 6 மணியளவில் பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசாக மழை பெய்ய துவங்கியது. தொடர்ந்து தூரல் மழையாக பெய்துகொண்டே இருந்தது. தொடர்ந்து மழை பெய்ததாலும், அதனால் ஏற்பட்ட குளிராலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றனர்.இதேப்போல் திருப்பூர் மாநகர் பகுதியிலும் நேற்றிரவு லேசான தூரலுடன் மழை பெய்தது.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை பெய்தது.
    • இதனால் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே ஆழ் கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் விசைப்படகு மீனவர்களின் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் அதனைத் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடைந்தது.

    இதன் காரணமாக ராமநாதபுரம் பகுதியில் இன்று காலை முதல் கடலோர பகுதியில் கருமேகம் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. ராமநாதபுரம், கீழக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பெய்த மழையால் வெயிலின் தாக்கம் முழுமை யாக குறைந்து குளுமையான சூழல் காணப்பட்டது.

    இன்று காலை பெய்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வீடுகளில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கீழக்கரையில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கின.

    போக்குவரத்து மிகுந்த முக்கிய ரோடு, தெருக்கள் சேதமடைந்து குண்டும் குழியுமாகி தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்ற னர். தொடர்ந்து பெய்து வரும் மழையால் சாலை யோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் வாட்ஸ்-அப்பில் பள்ளி விடுமுறை என தவறான தகவல் பரப்பப்பட்டதால் பெற்றோர்கள் பெரும் குழப்பம் அடைந்தனர். மாவட்ட கலெக்டர் இதுகுறித்து விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் நள்ளிரவு முதல் மழை பெய்ந்து கொண்டு உள்ளது. கடலில் பலத்த காற்று வீசியதாலும், புயல் சின்னம் உருவானதாலும் மீன் துறை மூலம் வழங்கப்படும் டோக்கன் வழங்காததால் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.

    இதனால் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே ஆழ் கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் விசைப்படகு மீனவர்களின் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. மேலும் தொடர் மழை காரணமாக வழக்கமான தொழில் பாதிக்கப்பட்டது. தொண்டி வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் இரவிலிருந்து காலை வரை மழை அளவு 22 மில்லிமீட்டராக பதிவானது.

    • மதுரையில் சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவ-மாணவிகள் சாரல் மழையை ரசித்த படி நனைந்து சென்றனர்.

    மதுரை

    தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக வெயில் அதிகமாக காணப்பட்டது. மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்க ளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.

    அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மதுரை மாவட்டத்திலும் இந்த தாக்கம் இன்று காணப்பட்டது அதிகாலை முதல் கருமேகங்கள் வானில் சூழ்ந்து சூரியனை மறைத்ததுடன் வாட்டி வதைத்த வெயிலுக்கும் இன்று 'குட்பை' சொல்லும் வகையில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.

    மதுரை நகரில் விமான நிலையம், பெரியார் பஸ் நிலையம், காளவாசல், காமராஜர் சாலை, தெப்பக்குளம், அவனியாபுரம், தமுக்கம், மாட்டுத்தாவணி உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    திடீர் மழை காரணமாக சில நாட்களாக இருந்த வெப்பமும் தணிந்து குளுமையான காலநிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவ-மாணவிகள் சாரல் மழையை ரசித்த படி நனைந்து சென்றனர்.

    • வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது
    • விவசாயிகள் மகிழ்ச்சி

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பனப்பாக்கம் காவேரிப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    இந்த நிலையில் காலை 10:30 மணிக்கு மேல் லேசான சாரல் மழை பெய்து வருகிறது தமிழக வானிலை ஆராய்ச்சி மையம் ஏற்கனவே அறிவித்தபடி வரும் இரண்டு நாட்களில் 8 மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    திடீரென பெய்து வரும் சாரல் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • பேச்சிப்பாறை அணை பகுதியில் 3.6 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது.
    • பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 539 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 20 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவிலும் மந்தமான வானிலையே நிலவி மழைக்கான அறிகுறிகள் தென்பட்டன.

    இதைத் தொடர்ந்து இரவில் பல இடங்களில் சாரல் மழை பெய்தது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள், சாமிதோப்பு, ஆரல்வாய்மொழி, தோவாளை, மார்த் தாண்டம், குழித்துறை உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. மேலும் மலையோர பகுதி கள் மற்றும் அணை களின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது.

    இந்த மழை பேச்சிப்பாறை அணை பகுதியில் 3.6 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது. மேலும் தக்கலை-4.2, கோழிப்போர்விளை-3.2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது. மழை காரணமாக சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி கிடந்தது.

    இதற்கிடையே பேச்சிப்பாறை அணைக்கு வினா டிக்கு 539 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 20 கன அடி தண்ணீரும் வந்துகொண்டிருக்கிறது. அதே சமயம் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 537 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 525 கன அடி தண்ணீரும் பாசனத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று காலையிலும் வெயில் அடிக்கவில்லை. வானில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது.

    • அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    • காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக குமரி மாவட்டத்தில் 2 நாட்கள் மழை பெய்யும்

    நாகர்கோவில்:

    தெற்கு வங்க கடல் பகுதியில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக குமரி மாவட்டத்தில் 2 நாட்கள் மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    ஆனால் கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்தது. இந்த நிலையில் நேற்று சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இரவும் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது.

    நாகர்கோவிலில் இன்று அதிகாலையில் லேசான மழை பெய்தது. அதன் பிறகு வானம் மப்பும் மந்தாரமு மாகவே காணப்பட்டது. கீரிப்பாறை, தடிக்காரன் கோணம், மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல், அஞ்சு கிராமம், சுசீந்திரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளி லும் லேசான சாரல் மழை பெய்தது.

    பேச்சிபாறை, பெருஞ் சாணி அணைப் பகுதிகளி லும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.பெருஞ்சாணியில் அதிக பட்சமாக 3.8மி.மி மழை பெய்து உள்ளது. திற்பரப்பு அருவியில் சாரல் மழை பெய்து வரு வதால் அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.

    பேச்சிபாறை, பெருஞ் சாணி அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால், அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதி காரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.70அடியாக இருந்தது.அணைக்கு 721 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 788 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.பெருஞ்சானி அணை நீர்மட்டம் 73.70அடியாக உள்ளது.அணைக்கு 126 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 225 கன அடி தண்ணீர் வெளியேற்ற ப்படுகிறது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 21 அடியை எட்டி உள்ளது. நீர்மட்டம் உயர்ந்து வருவதையடுத்து பொது மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • காலை முதல் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வந்தது.
    • இன்றும் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.

    தருமபுரி,

    தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழத்த தாழ்வு மண்டலமானது "மாண்டஸ்" புயலாக வலுவடைந்து தென்கிழக்கு சென்னையிலிருந்து சுமார் 550 கி.மீ. தொலைவில் நிலைகொண்டு நேற்று நள்ளிரவு கரையை கடந்தது.

    இதன் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் நேற்று காலை முதல் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வந்தது. இன்றும் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    தருமபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பாரப்பட்டி, மொரப்பூர், கடத்தூர், தருமபுரி, பென்னாகரம், காரிமங்கலம், பாலக்கோடு, அதியமான்கோட்டை உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் இன்று காலை வரை பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டினம், பர்கூர், மத்தூர், ஊத்தங்கரை, ஓசூர், சூளகிரி, ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை உள்பட பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில், தொடர் மழை காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (சனிக்கிழமை) விடுமுறை அளிக்கப்படுகிறது என்று கூறப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று (சனிக்கிழமை) 2-வது நாளாக விடுமுறை அறிவித்து கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார்.

    • சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
    • சேலம் மாவட்டத்தில் நேற்று காலையில் அவ்வப்போது சாரல் மழை பெய்தது.

    சேலம்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த

    29-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் நேற்று காலையில் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. பின்னர் இரவு தொடங்கி விடிய, விடிய மழை பெய்தது. இதனால் அடிக்கடி மின் தடை ஏற்பட்டது.

    இன்று காலையிலும் சாரல் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் சில இடங்களில் சாலைகளில் மழைநீருடன், சாக்கடை நீரும் ஓடியது. சேலம் மாவட்டத்தில் தம்மம்பட்டி, மேட்டூர், எடப்பாடி, கடையாம்பட்டி, ஏற்காடு, சங்ககிரி, ஆத்தூர், வீரகனூர், கரிய கோவில், ஆனைமடுவு ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. தொடர் மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைத்தனர்.

    மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    வீரகனூர் -24, ஏற்காடு-19.8, ஆத்தூர்- 19, தம்மம்பட்டி-17, கரிய கோவில்- 14, கெங்கவல்லி - 13, கடையாம்பட்டி-11, பெத்தநாயக்கன்பா ளையம்-8, சேலம்- 7.3, ஆனைமடுவு - 7, மேட்டூர்- 5.4, ஓமலூர்- 5, சங்ககிரி - 4.3, எடப்பாடி-4 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 104.20 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. 

    ×