search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாரல் மழை"

    • சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையால் குளிர்ச்சியால் சூழல்.
    • கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட சென்னையில் ஏராளமான பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், சென்னையில் கடந்த 4 மணி நேரத்திற்கும் மேலாக மிதமாக மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், சூளைமேடு, தாம்பரம், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட சென்னையில் ஏராளமான பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    ஏற்கனவே குளுமையான சூழல் உள்ள நிலையில், சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையால் மேலும் குளிர்ச்சியான நிலை ஏற்பட்டுள்ளது.

    இதைதொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று இரவு முதல் நாளை காலை 8.30 வரையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • மதிய வேளையில்கூட முகப்புவிளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் செல்லும்நிலை ஏற்பட்டுள்ளது.
    • வழக்கமாக டிசம்பர் மாதத்தில் இறுதியில் காணப்படும் வெப்பநிலை தற்போது நிலவி வருகிறது.

    கொடைக்கானல்:

    தமிழகத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதன் தாக்கமாக தேனி, திண்டுக்கல் மாவட்டத்திலும் 2 நாட்கள் கனமழை பெய்தது. அதன்பிறகு மழை குறைந்து விட்டுவிட்டு சாரல்மழையாக பெய்து வருகிறது. குறிப்பாக கொடைக்கானலில் நேற்று காலை முதலே அடர்ந்த பனிமூட்டமும், சாரல்மழையும் பெய்து வருகிறது.

    இதனால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக சூரிய ஒளியே இல்லாத அளவிற்கு நகர்முழுவதும் பனிமூட்டம் நிலவி வருகிறது. மலைச்சாலையில் எதிரில் நடந்து வருபவர்களும், வாகனங்களும் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் உள்ளது. இதனால் மாலை, இரவு நேரங்களை போல மதிய வேளையில்கூட முகப்புவிளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் செல்லும்நிலை ஏற்பட்டுள்ளது.

    பனிப்பொழிவால் கொடைக்கானலில் சாலையோர வியாபாரிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான கடைகள் அடைக்கப்ப்டடு வஉள்ளது. முக்கிய வீதிகளில் உள்ள கடைகளும் பகுதியளவு மட்டுமே திறந்துள்ளது. ஏரிச்சாலையில் வியாபாரிகள் தீ மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர். நகரில் சராசரி வெப்பநிலை 25 டிகிரி செல்சியசுக்கு குறைவாக உள்ளது. வழக்கமாக டிசம்பர் மாதத்தில் இறுதியில் காணப்படும் வெப்பநிலை தற்போது நிலவி வருகிறது.

    இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் அன்றாடம் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். திண்டுக்கல் நகரிலும் கடந்த 2 நாட்களாக கொடைக்கானலை போன்ற சூழலே நிலவி வருகிறது. கடும் பனிமூட்டம் மற்றும் சாரல்மழையால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை சுமார் 2.30 மணிக்கு மேல் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
    • இந்நிலையில் தார் சாலை வழியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள், பொது மக்கள் நனைந்து கொண்டு அவதிப்பட்டு சென்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர், பொத்தனூர் பாண்டமங்கலம் வெங்கரை, பரமத்தி, மணியனூர், கந்தம்பாளையம், பெருங்குறிச்சி, குப்பிக்கா பாளையம், சுள்ளிப்பா ளையம், சோளசிராமணி, சிறுநல்லிக்கோவில், திடுமல், தி.கவுண்டம்பாளையம், கபிலக்குறிச்சி, பெரிய சோளி பாளையம், ஆனங்கூர், பாகம்பாளையம், சின்ன மருதூர், பெரிய மருதூர், சின்ன சோளி பாளையம், குமாரசாமி பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை சுமார் 2.30 மணிக்கு மேல் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. தொடர்ந்து விடிய விடிய சாரல் மழை பெய்தது.

    இந்நிலையில் தார் சாலை வழியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள், பொது மக்கள் நனைந்து கொண்டு அவதிப்பட்டு சென்றனர். அதேபோல் சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த கட்டில் கடைகள், சிற்றுண்டி கடைகள், பூக்கடைகள் பழக்கடைகள், பலகார கடைகள், துணிக்கடைகள், மண்பாண்டம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பல்வேறு கடைக்காரர்கள் வியா பாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். மழையின் காரணமாக வெப்ப சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான நிலை ஏற்பட்டுள்ளது.

    • குளச்சலில் 18.6 மில்லி மீட்டர் பதிவு
    • குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் முழு வதும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    குளச்சலில் நேற்று இரவு ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 18.6 மில்லி மீட்டர் மழை பதிவா கியுள்ளது. பூதப்பாண்டி, இரணியல், குருந்தன்கோடு, சுசீந்திரம், சாமிதோப்பு, ஆரல்வாய்மொழி மற்றும் அதன்புறநகர் பகுதிகளிலும் இன்று அதிகாலையில் சாரல் மழை பெய்தது.

    நாகர்கோவிலில் காலை யிலிருந்து விட்டு விட்டு சாரல் மழை பெய்து வரு கிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. அவ்வவ் போது ஒரு சில இடங்களில் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியில் சாரல் மழை நீடித்து வருவதால் அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது.

    அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி, சிற்றாறு அணை பகுதிகளிலும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், கோதையாறு மற்றும் குற்றியாறு பகுதிகளி லும் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை களின் நீர்மட்டமும் வெகு வாக உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 21.74 அடியாக இருந்தது. அணைக்கு 564 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 439 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 42.25 அடியாக உள்ளது. அணைக்கு 214 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    மாவட்டம் முழுவதும் விட்டு விட்டு பெய்து வரும் சாரல் மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாசன குளங்களும் நிரம்பி வருகிறது. இதனால் விவ சாயிகள் கும்பப்பூ சாகுபடி பணியில் தீவிரமாக ஈடு பட்டுள்ளனர். பறக்கை, தெங்கம்புதூர், சுசீந்திரம், தக்கலை பகுதிகளில் நாற்று பாவும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு சில இடங்களில் விதைப்பு பணி யிலும் விவசாயிகள் ஈடு பட்டுள்ளனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
    • அதனைத் தொடர்ந்து மழை சற்று வேகமாக பெய்ய ஆரம்பித்தது. இரவு முழுவதும் மழை பெய்து கொண்டிருந்தது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, பரமத்தி, ஒத்தக்கடை, கந்தம்பாளையம், நல்லூர், மணியனூர் ,பெருங்குறிச்சி, குப்பிக்காபாளையம், சுள்ளிப் பாளையம், சோளசிராமணி, ஜமீன் இளம்பள்ளி, குரும்பல மகாதேவி, கொத்தமங்கலம், சிறுநல்லிகோவில், திடுமல், தி.கவுண்டம்பாளையம், பெரியசோளிபாளையம், கபிலக்குறிச்சி, இருக்கூர், வடகரை யாத்தூர், கு.அய்யம்பா ளையம், பிலிக்கல்பாளையம், சேளூர், கொந்தளம், கோப்ப ணம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.

    அதனைத் தொடர்ந்து மழை சற்று வேகமாக பெய்ய ஆரம்பித்தது. இரவு முழுவதும் மழை பெய்து கொண்டிருந்தது. இதன் காரணமாக தார் சாலை வழியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நனைந்து கொண்டு அவதிப்பட்டு சென்றனர் .அதேபோல் சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த கட்டில் கடைகள், சிற்றுண்டி கடைகள், பூக்கடைகள் பழக்கடைகள் ,பலகார கடைகள், துணிக்கடைகள், மண்பாண்டம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பல்வேறு கடைக்காரர்கள் மழையின் காரணமாக வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.

    தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மழையின் காரணமாக வெப்ப சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டது. கடும் வெயிலின் காரணமாக பயிர்கள் வாடிய நிலையில் இருத்தது. மழையின் காரணமாக பயிர்கள் துளிர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மழையின் காரணமாக வியாபாரிகள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

    • மாணவ-மாணவிகள் குடைபிடித்து சென்றனர்
    • பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், அலுவலகம் செல்வோர் பாதிக்கப்பட்டனர்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக காலை நேரங்களில் சாரல் மழை பெய்வதால் ரம்யமான சூழல் நிலவி வருகிறது. பகல் நேரங்களிலும் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது.

    இன்று காலையும் மாவட்டத்தின் பல பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இந்த நிலையில் நாகர்கோவில், சாமிதோப்பு, சுசீந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 7 மணி முதல் விட்டு விட்டு மழை பெய்தது. தொடர்ந்து சாரல் மழை நீடித்தே வந்தது.

    அதேநேரம் களியக்காவிளை, நித்திரவிளை, களியல், கடையால் மற்றும் மலையோரப் பகுதிகளில் ஓரளவு மிதமான மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், அலுவலகம் செல்வோர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் மழையின் நனைந்த படியே சென்றனர். சிலர் குடை பிடித்தபடி சென்றனர்.

    மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு 471 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 181 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

    • நேற்று இரவு 9 மணிக்கு மேல் தருமபுரி மாவட்டத்தில் திடீர் மழை பொழிய துவங்கியது.
    • கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது.

    தருமபுரி,

    வட தமிழக கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ் நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடு துறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 13 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    இதனால் நேற்று காலை முதல் கடும் வெப்பம் நிலவிய நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு மேல் தருமபுரி மாவட்டத்தில் திடீர் மழை பொழிய துவங்கியது. இரவு முழுவதும் சாரல் மழை பெய்துள்ளது. இதனால் கடும் குளிர் நிலவியது. முதியவர்கள் வீட்டில் தூங்க முடியாமல் அவதிப் பட்டனர். இந்த மழையால் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    தருமபுரி, காரிமங்கலம், அரூர், பாப்பி ரெட்டிப்பட்டி, பென்னாகரம், இருமத்தூர், பாலக்கோடு உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது.இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது.

    தருமபுரியில் 25 மில்லி மீட்டர் மழையும், பாலக் கோடு 22.4 மில்லி மீட்டர், பென்னாகரம் 9 மில்லி மீட்டர், ஒகேனக்கல் 5 மில்லி மீட்டர், அரூர் 5 மில்லி மீட்டர், என மாவட்டத்தில் மொத்தம் 66.4 மில்லி மீட்டரும் சராசரி 7.38 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் பொது மக்களும், விவசாயி களும் மகிழ்ச்சி அடைந்துள் ளனர்.

    • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
    • காலையில் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மாலையில் சாரல் மழை பெய்து வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. காலையில் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மாலையில் சாரல் மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் மேட்டூர், ஆத்தூர், ஏற்காடு, கரியகோவில், எடப்பாடி ஆகிய பகுதிகளில் நேற்று மழை பெய்தது. ஏற்காடு பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. இந்த மழையினால் சாலைகளில் சாக்கடை நீருடன் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இந்த தொடர் மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:- ஆனைமடுவு - 12, மேட்டூர் - 10, ஏற்காடு - 6.4, கரியகோவில்- 2, ஆத்தூர்- 1.8, பெத்தநாயக்கன்பாளையம்-1.5, எடப்பாடி-1.2,சேலம் - 1, ஓமலூர்-1 சேலம் மாவட்டத்தில் மொத்தம் 35.50 பதிவாகி உள்ளது.

    • பலத்த காற்று காரணமாக கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    • மின் தடை ஏற்படுவதால் உள்ளூர் மக்கள் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு சாரல் மழை பெய்து வந்த நிலையில் தற்போது வெப்பத்தின் தாக்கம் அடியோடு குறைந்து மேக மூட்டமான வானிலை நிலவி வருகிறது. தொடர்ந்து குளிச்சியான காற்று மற்றும் சாரல் மழை பெய்து வருகிறது.

    இதனால் பெரும்பாலான சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. குறைந்த அளவு சுற்றுலா பயணிகள் வந்துள்ள போதிலும் அவர்கள் குளிர்ச்சியான சூழலை சைக்கிளில் சென்று ரசித்து வருகின்றனர். சாரல் மழை காரணமாக பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். காலையில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும் அவதியடைந்துள்ளனர்.

    கொடைக்கானல், மேல்மலை, கீழ் மலை கிராமங்களான மன்னவனூர், கிளாவரை, பேத்துப்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது.

    அவ்வப்போது மின் தடை ஏற்படுவதால் உள்ளூர் மக்கள் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். பலத்த காற்று காரணமாக கொடைக்கானல் ஏரியில் படகு சவாரியும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ஆங்காங்கே மரங்கள் விழுந்து வருவதால் அதனை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வழக்கமாக வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

    ஆனால் தற்போது குறைந்த அளவு சுற்றுலா பயணிகள் வந்ததாலும் அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரம்யமான அழகை ரசித்து செல்கின்றனர்.

    இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • அணைகளின் நீர்மட்டமும் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது.
    • நேற்று மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து கண்ணாமூச்சி காட்டி வருகிறது. போது மான அளவு மழை பெய்யா ததால் பாசன குளங்களில் நீர்மட்டம் குறைவாகவே உள்ளது. அணைகளின் நீர்மட்டமும் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது.

    கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் அடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். வெப்பத்தின் தாக்கம் காரணமாக குழந்தைகள், பெரியவர்கள் பரிதவிப்பிற்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் நேற்று மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது. இன்று காலையில் நாகர்கோவிலில் லேசான சாரல் மழை தூறியது. மயிலாடி, குழித்துறை, முள்ளங்கினா விளை பகுதிகளிலும் மழை பெய்தது.

    பேச்சிப்பாறை அணை பகுதியில் ஒரு மணி நேரமாக மழை பெய்து கொண்டே இருந்தது. அங்கு அதிகபட்ச மாக 8.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தடிக்காரன் கோணம், கீரிப்பாறை, குலசேகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது அதிகாலையில் மழை பெய்தாலும் அதன் பிறகு சுட்டெரிக்கும் வெயில் அடித்தது. பேச்சிபாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 33.22 அடியாக இருந்தது. அணைக்கு 309 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 687 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 26.20 அடியாக உள்ளது. அணைக்கு 180 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பேச்சிப்பாறை பெருஞ் சாணி அணையில் இருந்து 937 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் தோவாளை, அனந்தனார், நாஞ்சில் நாடு புத்தனார் சானல்களில் ஷிப்ட் முறையில் வெளி யேற்றப்பட்டு வருகிறது. விவசாயிகள் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை நம்பி சாகுபடி பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    • பவானி நகர் பகுதியில் இன்று காலை முதல் சாரல் மழை பெய்தது.
    • குளிர் காற்று வீசியதால் பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து நிம்மதி அடைந்தனர்.

    பவானி:

    பவானி நகர் பகுதியில் இன்று காலை முதல் சாரல் மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் நனைந்தபடியே நடந்து சென்றனர்.

    அதேபோல் காலை சுமார் 7 மணி முதல் சாரல் மழை பெய்து கொண்டு இருந்ததால் கிராம பகுதியில் இருந்து நகர பகுதிக்கு பல்வேறு பணிகளுக்கு செல்லும் பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் தங்கள் மோட்டார் சைக்கிளில் நனைந்தபடியே சென்றனர்.

    கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் இன்று காலை முதல் சாரல் மழை பெய்து குளிர் காற்று வீசியதால் பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து நிம்மதி அடைந்தனர்.

    • காலை பெய்ய தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது
    • கடலில் ராட்சத அலைகள் எழும்பின. 15 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பியது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து கண்ணாமூச்சி காட்டி வந்தது. வெப்பத்தின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர்.

    இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நாகர்கோவிலில் காலை பெய்ய தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. தொடர்ந்து சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசியது. தக்கலை, குழித்துறை, அஞ்சுகிராமம், சுசீந்திரம், தடிக்காரன்கோணம், கீரிப்பாறை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் பரவலாக சாரல் மழை பெய்தது.

    ஏற்கனவே விவசாயிகள் மழையை எதிர்நோக்கி உள்ள நிலையில் தற்பொழுது மழை பெய்திருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பருவமழை கை கொடுக்குமா? என்ற நிலையில் விவசாயிகள் உள்ளனர். பாசன குளங்கள் வறண்டு காணப்படுகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டமும் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. பேச்சிப்பாறை அணையிலும் குறைவான அளவில் தண்ணீர் உள்ளது.

    எனவே பருவமழை கை கொடுத்தால் மட்டுமே கன்னி பூ சாகுபடி பணியை முழுமையாக செய்து முடிக்க முடியும் என்ற நிலையில் விவசாயிகள் உள்ளனர்.

    அரபிக்கடல் பகுதியில் இன்று காலை முதலே சூறைக்காற்று வீசியதால் கடல் சீற்றமாக காணப்பட்டது. கன்னியாகுமரி கோவளம் குளச்சல் பகுதிகளில் கடலில் ராட்சத அலைகள் எழும்பின. 15 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பியது.

    கடற்கரையையொட்டி உள்ள தூண்டில் வளைவுகள் மீது ராட்சத அலைகள் மோதியது. மார்த்தாண்டம் துறை வள்ளவிளை, தூத்தூர், இறையுமன் துறை பகுதியிலும் கடல் சீற்றமாக காணப்பட்டது. ஒரு சில மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    ×