search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சம்மன்"

    • கெஜ்ரிவால் நேற்று ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
    • ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்றும் ஆஜராகவில்லை.

    புதுடெல்லி:

    மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.

    இதற்கிடையே நேற்று ஆஜராக அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் நேற்றும் அவர் ஆஜராகவில்லை. 10 நாள் தியானத்துக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், மூன்றாவது முறையாக ஜனவரி 3-ம் தேதி ஆஜராகும்படி டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை இன்று மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

    • கெஜ்ரிவால் இன்று ஆஜராக அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி இருந்தது.
    • 10 நாள் தியானத்துக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. 

    இதற்கிடையே இன்று ஆஜராக அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி இருந்தது. இன்றும் அவர் ஆஜராகவில்லை. 10 நாள் தியானத்துக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறைக்கு பதில் அளித்துள்ளார்.

    அதில், "புதிய சம்மன் அரசியல் உள்நோக்கம் கொண்டது. சட்ட விரோதமானது. எனது வாழ்க்கை வெளிப்படை தன்மை மற்றும் நேர்மையாக இருக்கிறது. மறைக்க எதுவும் இல்லை. எந்த ஒரு சம்மனையும் சட்டபூர்வமாக சந்திக்க தயாராக உள்ளேன்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தீ விபத்து ஏற்பட்ட ரெயில் பெட்டியை தடயவியல் நிபுணர்கள் 2 முறை சோதனை நடத்தினர்.
    • சட்டவிரோதமாக சிலிண்டரில் கியாஸ் நிரப்பியுள்ளனர்.

    மதுரை:

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து சிறப்பு சுற்றுலா ரெயில் பெட்டி மூலம் 63 பயணிகள் கடந்த 17-ந்தேதி ஆன்மீக சுற்றுலா புறப்பட்டனர். கர்நாடகா, ஆந்திரா, கேரள மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கு சென்றுவிட்டு கடந்த 26-ந்தேதி அதிகாலை மதுரை வந்தனர்.

    அவர்கள் பயணித்த ரெயில் பெட்டி மதுரை ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் போடி லைனில் நிறுத்தப்பட்டிருந் தது. அதிகாலை 5.15 மணிக்கு அந்த ரெயில் பெட்டியில் டீ போடுவதற்காக கியாஸ் சிலிண்டரை பயன்படுத்திபோது பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    இதில் 9 பேர் பலியானார்கள். பலத்த காயம் அடைந்த 8 பேர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே தீ விபத்து ஏற்பட்ட ரெயில் பெட்டியை தடயவியல் நிபுணர்கள் 2 முறை சோதனை நடத்தினர். அப்போது அதில் வைக்கப்பட்டிருந்த எளிதில் தீப்பற்றக்கூடிய 2 சிலிண்டர்கள், விறகு, நிலக்கரி, மண்ணெண்ணை பாட்டில் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.

    இந்த சம்பவத்தில் முறையான விதிகளை பின்பற்றாமல் ஏற்பாடு செய்த லக்னோ சீதாப்பூரை சேர்ந்த பேசின் என்ற டிராவல்ஸ் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அதன் உரிமையாளரை கைது செய்யவும் தெற்கு ரெயில்வே பரிந்துரைத்துள்ளது.

    இந்நிலையில், டிராவல்ஸ் நிறுவன ஒருங்கிணைப்பாளரும், சுற்றுலா வழிகாட்டியுமான நரேந்திரகுமார், சமையல் பணியாளர் ஹர் தீப் சஹானி, சுற்றுலா உதவியாளர் தீபக், சமையல் உதவியாளர்கள் சத்ய பிரகாஷ் ரஸ்தோகி, கபம் கஸ்யப் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர் அவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில் பெங்களூருவில் இருந்து வந்திருந்த ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி மதுரையில் 2 நாட்கள் விசாரணை நடத்தினார். அப் போது ரெயில்வே பாதுகாப்பு படையினர், தமிழக ரெயில்வே போலீசார், வர்த்தக பிரிவை சேர்ந்தவர் கள், சுற்றுலா ரெயில் பெட்டியை சோதனை நடத்த வேண்டிய கேட்டரிங் ஆய்வாளர்கள், டிக்கெட் பரிசோதகர்கள், அதிகாரிகள், அலுவலர்களிடம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டார்.

    பின்னர் அவர் கூறுகையில், நாகர்கோவிலுக்கு இந்த சுற்றுலா ரெயில் சென்ற போது, அங்கு சட்டவிரோதமாக சிலிண்டரில் கியாஸ் நிரப்பியுள்ளனர். அப்போது முதலே அதில் கியாஸ் கசிவு இருந்துள்ளது. அதுவே விபத்துக்கு காரணமாக இருந்துள்ளது என்றார்.

    தொடர்ந்து பாதுகாப்பு விதிமுறைகளை கண்காணிக்க தவறியதாக அதிகாரிகள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    • இரு சமூகத்தை சேர்ந்த 80 பேருக்கு விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் மூலம் சம்மன் வழங்கப்பட்டு இருந்தது.
    • இரு தரப்புக்கும் சமரசம் ஏற்படாத சூழ்நிலையில் மீண்டும் இரு தரப்பினரிடையேயும் விசாரணை நடத்தப்படும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் தர்மராஜா, திரவுபதியம்மன் கோவில் உள்ளது.

    இங்கு பட்டியலின மக்கள் வழிபடக் கூடாது என மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு சமூக மக்களிடையே மோதல் நிலவி வருகிறது.

    இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சமரச பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

    இதையடுத்து சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் திரவுபதியம்மன் கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    இக்கோவில் பிரச்சினை தொடர்பாக இரு சமூகத்தை சேர்ந்த முக்கியஸ்தர்களும் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை எழுத்துப் பூர்வமாக அளிக்க நேற்று அழைக்கப்பட்டனர்.

    அதன்படி இரு சமூகத்தை சேர்ந்த 80 பேருக்கு விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் மூலம் சம்மன் வழங்கப்பட்டு இருந்தது.

    இந்த 80 பேரில் பட்டியலினத்தை சேர்ந்த 24 பேரும், மற்றொரு சமூகத்தை சேர்ந்த 38 பேரும் என 62 பேர் விழுப்புரத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் முன்னிலையில் நேரில் ஆஜர் ஆனார்கள்.

    இரு தரப்பினரையும் தனித்தனியாக அழைத்து கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் விசாரணை நடத்தி எழுத்துப் பூர்வமான விளக்கத்தை பெற்றுக் கொண்டார். சுமார் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.

    அப்போது தனி நபருக்கு சொந்தமான கோவில் என்பதால் பட்டியலின மக்களை கோவிலுக்குள் அனுமதிப்பது என்பது எங்களது தனிப்பட்ட விருப்பம். இது தொடர்பாக நாங்கள் நீதி மன்றத்தை நாட உள்ளதாக ஒரு தரப்பில் ஆஜரானவர்கள் விளக்கம் அளித்தனர்.

    இதே போல் கோவிலுக்குள் எங்களை அழைத்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கவும், எங்கள் உயிரை காப்பாற்றி கொள்ளவும் நாங்கள் ஊரை விட்டு வெளியேற தயாராக இருப்பதாக மறு தரப்பில் ஆஜரானவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

    இதனால் பேச்சு வார்த்தையில் இழுபறி நிலவியது. இரு தரப்புக்கும் சமரசம் ஏற்படாத சூழ்நிலையில் மீண்டும் இரு தரப்பினரிடையேயும் விசாரணை நடத்தப்படும். விசாரணை நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளர்.

    • வருகிற 20-ந் தேதி கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்க துறை சம்மன் அனுப்பி உள்ளது.
    • சிவகுமார் தனது சொத்து தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கொண்டு வரவேண்டும் என அமலாக்க துறையினர் கூறியுள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தேவசம் போர்டு மந்திரியாக இருந்த வர் சிவகுமார்.

    மந்திரி பதவியில் இருந்தபோது சிவகுமார் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்க துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் சிவகுமார் வருகிற 20-ந் தேதி கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்க துறை சம்மன் அனுப்பி உள்ளது.

    அப்போது சிவகுமார் தனது சொத்து தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கொண்டு வரவேண்டும் என அமலாக்க துறையினர் கூறியுள்ளனர்.

    இதே குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு சிவகுமாரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    நீதித்துறை குறித்து அவதூறாக பேசிய எச்.ராஜா அக்டோபர் 3-ம் தேதி ஆஜராக வேண்டும், இல்லை என்றால் வழக்கறிஞர் மூலம் விளக்கமளிக்க வேண்டும் என அரசு தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணன் உத்தரவிட்டுள்ளார். #HRaja #TNGovt
    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்ஹ்டு கொண்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நீதித்துறை மற்றும் காவல்துறை குறித்து கீழ்தரமாக பேசினார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலகா பரவிய நிலையில், அவர் மீது 8 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதற்கிடையே, அவர் மீது தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் சி.டி செல்வம் அமர்வு, 4 வாரங்களில் எச்.ராஜா நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.

    இந்நிலையில், எச்.ராஜா வரும் அக்டோபர் 3-ம் தேதி மாலை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய நராயணன் உத்தரவிட்டுள்ளார். நேரில் வரமுடியவில்லை என்றால், வழக்கறிஞர் மூலமாக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
    ×