search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொரோனா பாதிப்பு"

    • 40 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருந்தனர்.
    • இந்த நிலையில், நேற்று மேலும் 44 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 25-ந் தேதி 39 பேரும், நேற்று முன்தினம் 40 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், நேற்று மேலும் 44 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மாநகராட்சியில் 15 பேர், வீரபாண்டி, காடை யாம்பட்டியில் தலா 5 பேர், ஓமலூர், மேச்சேரி, பனமரத்துப்பட்டி பகுதியில் தலா 3 பேர், எடப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி பகுதியில் தலா 2 பேர், ஆத்தூர், கொங்கணாபுரம், நங்கவள்ளி, சங்ககிரி பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து கொரோனா அதிகரித்து வருவதால் பொதுமக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • 39 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிேசாதனையில் உறுதி செய்யப்பட்டது.
    • இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    சேலம், ஆக.26-

    சேலம் மாவட்டத்தில் நேற்று 39 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிேசாதனையில் உறுதி செய்யப்பட்டது. இதில் மாநகராட்சியில் 17 பேருக்கும், சேலம் சுகாதார மாவட்டத்தில் எடப்பாடி, காடையாம்பட்டி, ெகாங்கணாபுரம், மகுடஞ்சாவடி, மேச்சேரி, தாரமங்கலம், ஓமலூர், சேலம், சங்ககிரி பகுதிகளில் 17 பேருக்கும் ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் பனமரத்துப்பட்டி, தலைவாசல் பகுதியில் 3 பேருக்கும், நகராட்சியில் 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    • கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 156 ஆக உயர்ந்துள்ளது.
    • மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 330 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பை விட குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் நேற்று திடீரென மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்துள்ளது.

    நேற்று முன்தினம் தினசரி பாதிப்பு 49 ஆக இருந்த நிலையில் நேற்று திடீரென 59 ஆக அதிகரித்துள்ளது. இதனால் மாவ ட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 156 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் சிகிச்சையில் இருந்த 53 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 34 ஆயிரத்து O92 பேர் பாதிப்பில் இருந்து குண மடைந்து வீடு திரும்பியு ள்ளனர்.

    இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழ ந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 330 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது
    • தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 354 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். கடந்த சில நாட்களாக பாதிப்பை விட குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாவட்டத்தில் தினசரி பாதிப்பு திடீரென சற்று அதிகரித்துள்ளது.

    நேற்று முன்தினம் 46 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் நேற்று 55 ஆக உயர்ந்துள்ளது.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை

    1 லட்சத்து 34 ஆயிரத்து 833 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிகிச்சையில் இருந்த 62 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 1 லட்சத்து 33 ஆயிரத்து 745 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 354 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • பிரதமர் மோடி விழாவில் கலந்து கொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க உள்ளார்.
    • நேரு உள்விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 3 மணியில் இருந்தே நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.

    சென்னை:

    செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா இன்று மாலை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி விழாவில் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்க உள்ளார்.

    செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவை முன்னிட்டு நேரு உள்விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 3 மணியில் இருந்தே நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. மதியம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டதும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். சுமார் 900 கலைஞர்கள் பங்கேற்று இந்திய பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.

    இந்நிலையில் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்க உளள் கலைஞர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 4 நடன கலைஞர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    • ஒமைக்ரான் துணை வகை தொற்றால் அமெரிக்க அதிபர் பாதிக்கப்பட்டுள்ளார்.
    • அவரது இரத்த அழுத்தம், சுவாச விகிதம் சீராக உள்ளது.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடந்த வியாழக்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் ஜோ பைடன் ஒமைக்ரான் வைரஸ் துணை வகையை சேர்ந்த BA5 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது தனிப்பட்ட மருத்துவர் கெவின் ஓ கானர் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வகை கொரோனா வைரசால் தற்போது அமெரிக்காவில் 70 முதல் 80 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ளும் அமெரிக்க அதிபர், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருவதாக மருத்துவர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஜோ பைடனுக்கு, இருமல், தொண்டை புண் மற்றும் உடல் வலி இருந்தாலும் அவரது இரத்த அழுத்தம், சுவாச விகிதம், நுரையீரல் செயல்பாடு, உடல் வெப்ப நிலை சீராக உள்ளது. முழுமையாக கொரோனா தடுப்பூசிகளை பைடன் போட்டிருந்த நிலையில், இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது, தொடர்ந்து அவர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக மருத்துவர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் கடந்த 3 மாதமாக இல்லாத அளவாக ஒரே நாளில் 60 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 330 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களாக தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. பிற மாவட்டங்களில் தினசரி பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஈரோட்டில் கடந்த 3 நாட்களாக தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் கடந்த 3 மாதமாக இல்லாத அளவாக ஒரே நாளில் 60 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 33 ஆயிரத்து 657 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிகிச்சையில் இருந்த 41 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 593 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 330 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மாவட்டத்தில் மெல்ல மெல்ல கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என சுகாதாரத் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • மாவட்டத்தில் கடந்த 3 மாதமாக இல்லாத அளவாக 53 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் கடந்த 3 மாதமாக இல்லாத அளவாக 53 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 33 ஆயிரத்து 597 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் சிகிச்சையில் இருந்த 29 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 552 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 311 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மாவட்டத்தில் மெல்ல மெல்ல கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

    • முன் எச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
    • சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    தொற்று கண்டறியப்படும் பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ்நிலை யங்கள், மார்க்கெட், பஜார் உள்ளிட்டவற்றில் சிறப்பு மருத்துவ முகாம் மூலம் சளிமாதிரி சேகரிக்கப்படுகின்றன.

    வேலூர் மாவட்டத்தில் நேற்று செய்யப்பட்ட பரிசோத னையின் முடிவில் 11 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அவர்கள் அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது.
    • மைக்ரோ கன்டெய்ன்மென்ட் பகுதி களாக மாற்றப்பட்டுள்ளன.

    கோவை மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 100-க்கும் மேல் அதிகரித்து வந்தது.

    இதனை கட்டுப்ப டுத்த மாவட்ட சுகாதாரத்து றையினர் சார்பில் பரிசோத னையை அதிகரித்தல் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், கோவை மாவட் டம் குரும்ப பாளையம் பகுதி யில் உள்ள ஒரே வீதியில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு, ஆர்.எஸ்.புரத்தில் ஒரே வீட்டில் 3 பேருக்கு கொரோ னா நோய் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

    இதே போன்று வடவள்ளி, தொண்டா முத்துார், பேரூர் செட்டிப் பாளையம் உள்ளிட்ட 9 இடங்கள் மைக்ரோ கன்டெய்ன்மென்ட் பகுதிக ளாக அமைக் கப்பட்டு ள்ளன.

    இப் பகுதிகளில் தூய்மை பணி யாளர்களை கொண்டு கிருமி நாசினி தெளிப்பது, பாதிக் கப்பட்டோரை கண்காணிப்பது போன்ற பணிகள் மேற்கொண்டு வரு கின்றனர்.

    இது குறித்து சுகா தாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் தற்போது 9 இடங் களை மைக்ரோ கன் டெய்ன ்மென்ட் பகுதி களாக மாற்றப்பட்டுள்ளன. ஒரு வீட்டில் 3 பேருக்கு மேல் நோய் பாதிப்பு இருந்தால் வீட்டை மட்டும் மைக்ரோ கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தொடர்ந்து ஒரு வீதியில் பாதிக்கு மேல் எண் ணிக்கை அதிகம் இருந்தால் வீதி முழுவதும் கட்டுப்பாட்டு பகுதியாக மாற் றப்படும். இந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்படும்.

    பாதிக் கப்பட்ட நபர்களுடன் தொடர்பு டைய வர்களுக்கு கொ ரோனா பரிசோதனை மேற ்கொள்ளப்படுகிறது. மக்கள் அனைவரும் வழிகாட்டு நெறி முறைகளை கட்டாயம் கடைப் பிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5,912-ல் இருந்து 6,677-ஆக உயர்ந்துள்ளது.
    • சென்னையில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 616-ல் இருந்து 607-ஆக குறைந்தது.

    தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் தலைத்தூக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

    அதன்படி ஒருநாள் கொரோனா பாதிப்பு நேற்று 1,359-ல் இருந்து இன்று 1,382-ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5,912-ல் இருந்து 6,677-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 617 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    சென்னையில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 616-ல் இருந்து 607-ஆக குறைந்தது. அதன்படி, செங்கல்பட்டில் 240, கோவையில் 89, திருவள்ளூரில் 83, காஞ்சிபுரத்தில் 66, தூத்துக்குடியில் 60 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

    • கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பல மாவட்டங்களில் முககவசம் கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
    • கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 322 பேர் குணம் அடைந்துள்ளனர்.

    தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு நிலவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் புதிதாக 737 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் புதிதாக 383 பேருக்கும், செங்கல்பட்டில் 128 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

    கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 4366 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 322- பேர் குணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 700 ஐ தாண்டியுள்ளதால் பல மாவட்ட நிர்வாகங்கள் முககவசம் கட்டாயம் என அறிவித்துள்ளன.

    ×