search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "corona cases"

    • சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் கடந்த 3 மாதமாக இல்லாத அளவாக ஒரே நாளில் 60 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 330 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களாக தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. பிற மாவட்டங்களில் தினசரி பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஈரோட்டில் கடந்த 3 நாட்களாக தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் கடந்த 3 மாதமாக இல்லாத அளவாக ஒரே நாளில் 60 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 33 ஆயிரத்து 657 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிகிச்சையில் இருந்த 41 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 593 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 330 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மாவட்டத்தில் மெல்ல மெல்ல கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என சுகாதாரத் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • கடந்த ஒரு வாரமாக பாதிப்பு சற்று அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது.
    • புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் மாநகர பகுதியில் மட்டும் 36 பேர் அடங்குவர்.

    நெல்லை:

    தமிழகத்தின் பல்வேறு மாவட் டங்களில் கொரோனா பாதிப்பு நாள் தோறும் உயர்ந்து வருகிறது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் கடந்த மாத தொடக்கத்தில் ஒற்றை இலக்கத்தில் இருந்த தினசரி பாதிப்பு படிப்படியாக அதிகரித்து 50-ஐ கடந்தது.

    கடந்த ஒரு வாரமாக பாதிப்பு சற்று அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் பாதிப்பு 93-ஆக இருந்தது. நேற்று 73-ஆக சரிந்தது.

    புதிய பாதிப்பு

    இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் இன்று புதிதாக 110 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதில் அரசு மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற சோதனையில் மட்டும் 90 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

    தனியார் மருத்துவ மனைகள் மற்றும் ஆய்வகங்களில் நடத்த ப்பட்ட பரிசோதனையில் 20 பேர் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

    மாநகரில் அதிகம்

    புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் மாநகர பகுதியில் மட்டும் 36 பேர் அடங்குவர். நாங்குநேரியில் 21 பேர், வள்ளியூரில் 14 பேர், அம்பை, ராதாபுரத்தில் தலா 10 பேர், மானூரில் 7 பேர், களக்காட்டில் 6 பேர், பாளையில் 4 பேர், பாப்பாக்குடியில் 2 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

    இவர்களில் பெரும் பாலானோர் வீட்டு தனிமையில் சிகிச்ைச பெற்று வரும் நிலையில், ஒரு சிலர் மட்டும் ஆஸ்பத்திரியில் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கும் தொற்று பாதிப்பு தீவிரமாக இல்லை. எனினும் அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

    • நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    • தொடர்ந்து மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    அந்த வகையில் இன்று மாவட்டத்தில் மாதிரிகள் எடுக்கப்பட்டதில் புதிதாக 68 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அதிகபட்சமாக மாநகர பகுதியில் 14 பேரும், அம்பையில் 12 பேரும், சேரன்மகாதேவியில் 11 பேரும், களக்காடு, பாப்பாக்குடியில் தலா 7 பேரும், நாங்குநேரி. ராதாபுரத்தில் தலா 6 பேரும், மானூர், பாளையில் தலா 2 பேரும், வள்ளியூரில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தொடர்ந்து மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    அதேபோல் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    • நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் 2 மருத்துவ மாணவிகள், மருத்துவ கல்லூரி டீன் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு ஊழியருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • இவர்கள் அனைவரும் வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.

    நேற்று 52 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது.

    நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் 70 பேருக்கும், தனியார் ஆஸ்பத்திரியில் 13 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் 2 மருத்துவ மாணவிகள், மருத்துவ கல்லூரி டீன் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு ஊழியர் ஆகியோர் இதில் அடங்குவர்.

    இவர்கள் அனைவரும் வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதால் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    அரசின் உத்தரவுப்படி பொது இடங்களில் நடமாடும் பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அபராதம் விதிக்கும் நடைமுறையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே அனைத்து பள்ளிகளிலும் மாணவ- மாணவிகள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி இன்று நெல்லை மாவட்ட பள்ளிகளில் மாணவ- மாணவிகள் முக கவசம் அணிந்து சென்றனர்.

    ×