search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Medical students"

    • அடுக்கம்பாறை அரசு மருத்துவகல்லூரியில் விழா நடந்தது
    • குழந்தை கடத்தல் தொடர்பாக துறை ரீதியாக நடவடிக்கை

    வேலூர்:

    அரசு மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. இதில் கலந்து கொள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேலூர் வந்தார்.

    அவருக்கு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், அணைக்கட்டு தாலுகா பொய்கை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புற நோயாளிகள் பிரிவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் விதமாக கல்வெட்டினை திறந்து வைத்தார்.

    இதனை தொடர்ந்து புற நோயாளிகள் பிரிவில் வைட்டல் பே தனிப்பிரிவு தொடங்கி வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களையும் பொருத்தினார்.

    பின்னர் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரியின் 13-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.

    இதனை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    அடுக்கம்பாறை ஆஸ்பத்திரியில் பலத்த பாதுகாப்பு இருக்கும் நிலையில் அறிமுகம் இல்லாத நபர் எப்படி உள்ளே நுழைந்து குழந்தையை கடத்தி சென்றார் என்பது குறித்து குழு அமைத்து டாக்டர்கள், பணியாளர்கள், உள்ளிட்ேடார் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க பாதுகாப்பு பலபடுத்தப்படும் என்றார்.

    • மருத்துவக் கல்லூரி டீன் முருகேசன் உடல் தானம் செய்த 3 பேரின் குடும்பத்துக்கு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
    • மாணவர்கள் கவனம் சிதறாமல் படிக்க வேண்டும் என்றார்.

    திருப்பூர் :

    திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரியில் உடற்கூறியல் துறை சார்பில் உடற்கூறியல் தினம் தொடர்பான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடந்தது. உடற்கூறியல் துறைத்தலைவர் ராஜேஸ்வரி வரவேற்றார்.மருத்துவக் கல்லூரி டீன் முருகேசன், உடல் தானம் செய்த 3 பேரின் குடும்பத்துக்கு, சான்றிதழ் வழங்கி கவுரவித்த பின் பேசியதாவது:-மருத்துவக் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைப்பதற்கு மாணவர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். மாண வர்கள் நல்லொழுக்கத்துடன் இருந்து, நம் கல்லூரிக்கு பெருமை தேடித்தர வேண்டும். மாணவர்கள் இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்.அடுத்த ஆண்டு மாணவர்கள் வந்தாலும், நம் கல்லூரியில் ராகிங் என்ற பேச்சுக்கே இடம் கொடுக்க கூடாது. உடற்கூறு துறையில் தெரிந்து கொள்ள வேண்டியவை நிறைய உள்ளது. மாணவர்கள் கவனம் சிதறாமல் படிக்க வேண்டும் என்றார்.

    தொடர்ந்து, உடற்கூறு தினம் எனும் தலைப்பில், மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கான ஓவியம், கற்பனை திறனை வெளிப்படுத்தும் போட்டிகள் நடத்தப்பட்டது.மனித உடல் பாகங்களை வரைந்து அவை எவ்வாறு இயங்குகிறது, இதயம், நுரையீரல், மூளை செயல்பாடுகள் குறித்து மாணவர்கள் பங்கேற்றவர்களுக்கு எடுத்துரைத்தனர்.பொது மருத்துவத்துறை இணை பேராசிரியர் செண்பகஸ்ரீ, அறுவைசிகிச்சை துறை பேராசிரியர் உமா ஆகியோர் மாணவர்களின் ஓவியம், படைப்புகளை ஆய்வு செய்து, சிறப்பு படைப்புகளை தேர்வு செய்தனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக உடற்கூறியல் துறை அரங்கத்தை டீன் முருகேசன் திறந்து வைத்தார்.

    • உக்ரைன் - ரஷியா போர் காரணமாக சுமார் 20,000 மாணவர்கள் இந்தியா திரும்பினர்
    • உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் இருந்து உக்ரைன் சென்று மருத்துவ படிப்பு படித்து வந்த மாணவ, மாணவிகள் உக்ரைன் - ரஷியா போர் காரணமாக தாயகம் திரும்பிவிட்டனர். உக்ரைன் - ரஷியா போர் காரணமாக தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள சுமார் 20,000 மாணவர்கள் இந்தியா திரும்பி இருந்தார்கள். அவர்களின் எதிர்காலம் பாதிக்கக்கூடாது, அவர்கள் தங்கள் கல்வியை இங்கேயே தொடர வழிவகை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு பல தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதுதொடர்பான சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மத்திய அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இந்திய பல்கலைக்கழகங்களில் படிப்பை தொடர வழிவகை செய்வதற்கு, இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில் இடமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை முதன்மை மருத்துவ பல்கலைக்கழகங்களில் சேர்க்க முடியாது. அதிகப்படியான கட்டணத்தை உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களால் செலுத்தவும் முடியாது. அவர்களை இங்குள்ள பல்கலைக்கழங்களில் அனுமதித்தால் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது என்றும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • போர் காரணமாக உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியானது.
    • இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் சமீபத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

    சென்னை:

    உக்ரைன்-ரஷியா போர் காரணமாக, உக்ரைனில் இருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியா திரும்பினர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவ மாணவர்கள். போர் காரணமாக அந்த மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியானது. அவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சேர்க்க வேண்டும் என்றும் மத்திய அரசை பல்வேறு மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.

    இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவீன் பவார், உக்ரைனிலிருந்து வந்த மாணவர்களை இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க விதிகளில் இடமில்லை. உக்ரைன் மட்டுமல்ல, வெளிநாடுகளில் இருந்து இங்கு வரும் மாணவர்கள் இந்தியாவில் சேர முடியாது. இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களை, இந்தியாவில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ப்பதற்கான முடிவுக்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளிக்கவில்லை. அதேசமயம் இந்தியாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள பிற கல்லூரிகளில் மருத்துவம் படிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை இந்திய வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது என தெரிவித்தார்.

    இந்நிலையில், உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

    • போர் காரணமாக உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியானது.
    • மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் பதில் அளித்தார்

    புதுடெல்லி:

    உக்ரைன்-ரஷியா போர் காரணமாக, உக்ரைனில் இருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியா திரும்பினர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவ மாணவர்கள். போர் காரணமாக அந்த மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியானது. அவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சேர்க்க வேண்டும் என்றும் மத்திய அரசை பல்வேறு மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.

    இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர்களை, குறிப்பாக உக்ரைனில் இருந்து வந்த மாணவர்களை இங்குள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கும் மாநில அரசின் முடிவுக்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் வழங்கவில்லையா எனவும், வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர்களை இங்கு உள்ள மருத்துவக் கல்லுரிகளில் சேர்ப்பதற்கு மத்திய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்து வருகிறதா? எனவும் மக்களவை உறுப்பினர்கள் கவிதா மலோத் உள்ளிட்ட எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார், உக்ரைனிலிருந்து வந்த மாணவர்களை இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க விதிகளில் இடமில்லை என்றார். உக்ரைன் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்து இங்கு வரும் மாணவர்கள் இந்தியாவில் சேர முடியாது என்றார்.

    'இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களை, இந்தியாவில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ப்பதற்கான முடிவுக்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளிக்கவில்லை. அதேசமயம் இந்தியாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள பிற கல்லூரிகளில் மருத்துவம் படிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை இந்திய வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது' என்றும் மத்திய இணையமைச்சர் தெரிவித்தார்.

    • நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் 2 மருத்துவ மாணவிகள், மருத்துவ கல்லூரி டீன் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு ஊழியருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • இவர்கள் அனைவரும் வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.

    நேற்று 52 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது.

    நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் 70 பேருக்கும், தனியார் ஆஸ்பத்திரியில் 13 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் 2 மருத்துவ மாணவிகள், மருத்துவ கல்லூரி டீன் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு ஊழியர் ஆகியோர் இதில் அடங்குவர்.

    இவர்கள் அனைவரும் வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதால் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    அரசின் உத்தரவுப்படி பொது இடங்களில் நடமாடும் பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அபராதம் விதிக்கும் நடைமுறையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே அனைத்து பள்ளிகளிலும் மாணவ- மாணவிகள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி இன்று நெல்லை மாவட்ட பள்ளிகளில் மாணவ- மாணவிகள் முக கவசம் அணிந்து சென்றனர்.

    • கொரோனா தொற்று உறுதியான நிலையில் 11 மருத்துவ மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • மொத்தம் 277 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

    இதையடுத்து, முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் பொது மக்களுக்கு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில்,  சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

    மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11 மருத்துவ மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மொத்தம் 277 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்ட நிலையில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கொரோனா தொற்று உறுதியான மாணவர்கள் அவர்கள் தங்கும் விடுதியிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, தொடர்ந்து கண்காணித்து வருவதாக மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் யஷ்வந்த் மதநிக்கர் தெரிவித்துள்ளார்.
    தர்வாத்:

    நாடு முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. இருப்பினும், மூன்றாம் அலைக்கு வாய்ப்பு உள்ளதால், பொது மக்கள் கூட்டம் சேரும் இடங்களில் தனி நபர் இடைவெளி, கட்டாயம் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றும்படி அரசு அறிவுறுத்தி வருகிறது.

    ஆனால், பெரும்பாலான மக்கள் பொது இடங்களில் நெறிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு அலட்சியமாக சுற்றி வருகின்றனர். இதனால், கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கர்நாடக மாநிலம் தர்வாத் மாவட்டத்தில் உள்ள எஸ்டிஎம் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படிக்கும் 66 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவ மாணவர்கள் கல்லூரி வளாகத்திலேயே ஒன்றுகூடி விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். பின்னர், சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களில் சிலருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

    தொடர்ந்து, அவர்களுடன் இருந்த மற்ற மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மாணவர்கள் அனைவரும் ஏற்கனவே 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்துக் கொண்டுள்ளனர்.

    இதையடுத்து, மாணவர்களை அவர்கள் தங்கும் விடுதியிலேயே தனிமைப்படுத்தி தொடர்ந்து கண்காணித்து வருவதாக மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் யஷ்வந்த் மதநிக்கர் தெரிவித்துள்ளார். மேலும், கல்லூரி வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டு, வெளியாட்கள் கல்லூரிக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படியுங்கள்..  தெலுங்கானா சபாநாயகர் போச்சரம் ஸ்ரீநிவாஸ் ரெட்டிக்கு கொரோனா தொற்று
    மருத்துவ மாணவர்கள் கல்வி கட்டண உயர்வுக்கு புதுவை தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் வாழும் ஏழை, எளிய, அடித்தளத்து மாணவர்கள் மருத்துவம் பயில வேண்டும் என்ற நோக்கில், தி.மு.க. ஆட்சியில் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க கொள்கை முடிவெடுக்கப்பட்டது.

    மேலும், மாணவர் சேர்க்கையில் 50 சதவீத இடங்கள் அரசு பங்காக அளிக்க வேண்டும் என்ற உடன் படிக்கையின்படி தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி ஒதுக்கீடு முழுமையாக பெறப்பட்டு மாணவர்கள் பலன் பெற்றனர்.

    ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு பிறகு வந்த ஆட்சியாளர்கள் 50 சதவீதம் என்ற மாணவர் சேர்க்கை உடன்பாட்டை கைவிட்டு விட்டனர். இதனால், அரசு ஒதுக்கீடு 25 சதவீதத்திற்கும் குறைந்து இன்றைக்கு கேவலமான நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளனர். இதற்காக மறைமுகமாக தனியார் கல்லூரி நிர்வாகத்திடம் பலன் பெற்று மாணவர்களை வஞ்சித்துள்ளனர்.

    ஆரம்பத்தில் சில ஆயிரமாக இருந்த கல்வி கட்டணம் இன்று பல லட்சங்களை தாண்டியுள்ளது. சென்டாக் மூலம் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையாக ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்படுகிறது. மறுபுறம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கல்விக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களை வகுப்புக்களை புறக்கணித்து போராடுகின்ற நிலைமைக்கு இந்த அரசு தள்ளி உள்ளது.

    இத்துடன் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களையும் இந்த அரசு விட்டு வைக்கவில்லை. சென்ற கல்வி ஆண்டில் (2017-18) ஓய்வு பெற்ற நீதியரசர் ராஜேஸ்வரன் தலைமையிலான கட்டண நிர்ணயக் குழு கல்வி கட்டணமாக ரூ. 12 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. இவ்வாண்டு (2018-19) நீதியரசர் ஆதிநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட கட்டணக் குழு வருகின்ற ஆண்டுகளுக்கான கட்டணமாக ரூ. 16 லட்சம் நிர்ணயித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

    கடந்த கல்வியாண்டு முதல் இந்த அறிவிப்பு அமலாகும் என்றும் அறிவித்துள்ளது இது முரண்பாடானதாகும். சென்ற ஆண்டு கட்டணக்குழு எடுத்த நிலைபாட்டிற்கு விரோதமாக இவ்வாண்டு குழுவின் முடிவு அமைந்துள்ளது. இது மாணவர்களுக்கு சுமையை ஏற்றுவதாகவும், தனியார் கல்லூரிகளுக்கு சாதகமான அம்சமாகவும் அமைந்துள்ளது.

    சிறிய மாநிலமான புதுவையில் இத்தனை தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டதின் அடிப்படை காரணம் புதுவையில் அதிக மருத்துவர்களை குறைந்த செலவில் உருவாக்க வேண்டும் என்ற நோக்கமே ஆகும். ஆனால் தொடர்ந்து மருத்துவ மாணவர்களின் பிரச்சினை பூதாகரமாக மாறி வருகிறது. தனியார் நிறுவனங்களும், அரசியல்வாதிகளும், உயர் அதிகாரிகளும் ஒன்று சேர்ந்து பணம் கறக்கும் கருவியாக இந்த மருத்துவக் கல்வியை மாற்றி அமைத்து இருப்பதும், இதனால் மாணவர்கள் வஞ்சிக்கப்படுவதும், இந்த ஆட்சிக்கு துணை நிற்கின்ற தி.மு.க.வால் ஏற்றுக்கொள்ள முடியாது.

    ஆகவே முதல்வர் தலையிட்டு இதுபற்றிய முழுமையான ஆய்வை மேற்கொண்டு மருத்துவ மாணவர்களின் நியாயமான கோரிக்கைக்கு தீர்வு காணவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இதே நிலை தொடருமானால் மக்களையும், மாணவர்களையும் ஒருங்கிணைத்து மக்கள் விரோத போக்கை எதிர்த்து போராடுவோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.


    ×