search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "distraction"

    • சோர்வு பலவிதங்களில் வெளிப்படும்.
    • ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகளை சாப்பிட வேண்டும்.

    இளம் வயதினர் வாரத்தில் ஏதாவதொரு நாளில் சோர்வாக காட்சி அளிப்பது தவறல்ல. மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ கடினமான செயல்களை செய்யும்போது சோர்வு ஏற்படுவது தவிர்க்க முடியாதது. ஆனால் ஒருசிலர் எப்போதும் சோர்வாகவே காணப்படுவார்கள். மதிய வேளையை நெருங்கினால் அவர்களிடத்தில் தூக்கமும் எட்டிப்பார்க்கும். அப்படி எப்போதும் சோர்வுடன் காட்சி அளிப்பது நல்லதல்ல. அது ஒருசில உடல்நல குறைபாடுகளையும் ஏற்படுத்திவிடும். சோர்வு பலவிதங்களில் வெளிப்படும். ஒரு சில அறிகுறிகள் மூலம் எத்தகைய சோர்வு என்பதை கண்டறிந்து போக்கிவிடலாம்.

    * சிலர் எந்தவொரு விஷயத்தையும் ஈடுபாட்டோடு செய்யும் மனநிலையில் இருக்க மாட்டார்கள். தான் பலவீனமாக இருப்பதாக எண்ணிக்கொள்வார்கள். உடலில் இரும்பு சத்து குறைவாக இருப்பது இதற்கு காரணமாக அமையும். செல்களுக்கு போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்றாலும் உடல் பலவீனமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். பச்சை இலை காய்கறிகள், இறைச்சி வகைகள், பயறு வகைகள், நீர்ச்சத்து அதிகம் கொண்ட பழங்கள், நட்ஸ் வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் சோர்வை போக்கிவிடலாம்.

    * பகலில் சோம்பலாக இருப்பதாக உணர்ந்தால் நிறைய பேர் காபி குடிப்பார்கள். அது உடனடி உற்சாகத்தை தரும். ஆனால் சில மணி நேரங்கள் மட்டுமே அந்த உற்சாக நிலை நீடிக்கும். அதிக அளவு சர்க்கரை கலந்த பானங்களை குடிக்கும்போது அவை ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைக்கும். அதனால் உடனடியாக புத்துணர்ச்சி கிடைக்கும்.

    சில நிமிடங்களில் அது குறைந்து மீண்டும் சோர்வு எட்டிப்பார்க்க தொடங்கி விடும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீரற்று இருப்பது நல்லதல்ல. இதனை தவிர்க்க குறிப்பிட்ட இடைவெளியில் ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகளை சாப்பிட வேண்டும். நார்ச்சத்து, புரதம் அதிகம் கொண்ட உணவு பதார்த்தங்களை சாப்பிடலாம்.

    * எந்தவித நெருக்கடியும் இன்றி இயல்பாக இருந்தாலும் மனம் நிம்மதியற்று இருக்கும். நாள் முழுவதும் காபின் கலந்த பானங்களை பருகுபவர்களுக்கு இந்த பிரச்சினை எட்டிப்பார்க்கும். காபின் அதிகமாக உட்கொள்ளும்போது அது உடலையும், மனதையும் எதிர்மறையாக பாதிக்கச் செய்யும். அதற்கு பதிலாக மூலிகை டீ வகைகளை பருகி வரலாம்.

    * கவனச்சிதறல், ஆர்வமின்மை போன்ற காரணங்களாலும் சோர்வு உண்டாகும். அது அன்றாட செயல் பாடுகளை நேரடியாக பாதிக்கும். மூளையின் செயல்பாடும் தடைபடும். அதனால் சோர்வு உண்டாகும். வைட்டமின் பி குறைபாடு அதற்கு காரணமாக இருக்கலாம். மது அருந்துவதாலும் இத்தகைய பாதிப்பு நேரும். புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

    * காலை உணவை சாப்பிடாமல் நீண்ட நேரம் வெறும் வயிற்றுடன் இருந்தால் வளர்சிதை மாற்றம் பாதிப்படையும். மந்தமான உணர்வு எட்டிப்பார்க்கும். அது சோர்வுக்கு வழிவகுக்கும். முழு தானியங்கள், பச்சை இலை காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    • மருத்துவக் கல்லூரி டீன் முருகேசன் உடல் தானம் செய்த 3 பேரின் குடும்பத்துக்கு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
    • மாணவர்கள் கவனம் சிதறாமல் படிக்க வேண்டும் என்றார்.

    திருப்பூர் :

    திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரியில் உடற்கூறியல் துறை சார்பில் உடற்கூறியல் தினம் தொடர்பான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடந்தது. உடற்கூறியல் துறைத்தலைவர் ராஜேஸ்வரி வரவேற்றார்.மருத்துவக் கல்லூரி டீன் முருகேசன், உடல் தானம் செய்த 3 பேரின் குடும்பத்துக்கு, சான்றிதழ் வழங்கி கவுரவித்த பின் பேசியதாவது:-மருத்துவக் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைப்பதற்கு மாணவர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். மாண வர்கள் நல்லொழுக்கத்துடன் இருந்து, நம் கல்லூரிக்கு பெருமை தேடித்தர வேண்டும். மாணவர்கள் இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்.அடுத்த ஆண்டு மாணவர்கள் வந்தாலும், நம் கல்லூரியில் ராகிங் என்ற பேச்சுக்கே இடம் கொடுக்க கூடாது. உடற்கூறு துறையில் தெரிந்து கொள்ள வேண்டியவை நிறைய உள்ளது. மாணவர்கள் கவனம் சிதறாமல் படிக்க வேண்டும் என்றார்.

    தொடர்ந்து, உடற்கூறு தினம் எனும் தலைப்பில், மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கான ஓவியம், கற்பனை திறனை வெளிப்படுத்தும் போட்டிகள் நடத்தப்பட்டது.மனித உடல் பாகங்களை வரைந்து அவை எவ்வாறு இயங்குகிறது, இதயம், நுரையீரல், மூளை செயல்பாடுகள் குறித்து மாணவர்கள் பங்கேற்றவர்களுக்கு எடுத்துரைத்தனர்.பொது மருத்துவத்துறை இணை பேராசிரியர் செண்பகஸ்ரீ, அறுவைசிகிச்சை துறை பேராசிரியர் உமா ஆகியோர் மாணவர்களின் ஓவியம், படைப்புகளை ஆய்வு செய்து, சிறப்பு படைப்புகளை தேர்வு செய்தனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக உடற்கூறியல் துறை அரங்கத்தை டீன் முருகேசன் திறந்து வைத்தார்.

    ×