search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dean"

    • மருத்துவக் கல்லூரி டீன் முருகேசன் உடல் தானம் செய்த 3 பேரின் குடும்பத்துக்கு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
    • மாணவர்கள் கவனம் சிதறாமல் படிக்க வேண்டும் என்றார்.

    திருப்பூர் :

    திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரியில் உடற்கூறியல் துறை சார்பில் உடற்கூறியல் தினம் தொடர்பான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடந்தது. உடற்கூறியல் துறைத்தலைவர் ராஜேஸ்வரி வரவேற்றார்.மருத்துவக் கல்லூரி டீன் முருகேசன், உடல் தானம் செய்த 3 பேரின் குடும்பத்துக்கு, சான்றிதழ் வழங்கி கவுரவித்த பின் பேசியதாவது:-மருத்துவக் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைப்பதற்கு மாணவர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். மாண வர்கள் நல்லொழுக்கத்துடன் இருந்து, நம் கல்லூரிக்கு பெருமை தேடித்தர வேண்டும். மாணவர்கள் இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்.அடுத்த ஆண்டு மாணவர்கள் வந்தாலும், நம் கல்லூரியில் ராகிங் என்ற பேச்சுக்கே இடம் கொடுக்க கூடாது. உடற்கூறு துறையில் தெரிந்து கொள்ள வேண்டியவை நிறைய உள்ளது. மாணவர்கள் கவனம் சிதறாமல் படிக்க வேண்டும் என்றார்.

    தொடர்ந்து, உடற்கூறு தினம் எனும் தலைப்பில், மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கான ஓவியம், கற்பனை திறனை வெளிப்படுத்தும் போட்டிகள் நடத்தப்பட்டது.மனித உடல் பாகங்களை வரைந்து அவை எவ்வாறு இயங்குகிறது, இதயம், நுரையீரல், மூளை செயல்பாடுகள் குறித்து மாணவர்கள் பங்கேற்றவர்களுக்கு எடுத்துரைத்தனர்.பொது மருத்துவத்துறை இணை பேராசிரியர் செண்பகஸ்ரீ, அறுவைசிகிச்சை துறை பேராசிரியர் உமா ஆகியோர் மாணவர்களின் ஓவியம், படைப்புகளை ஆய்வு செய்து, சிறப்பு படைப்புகளை தேர்வு செய்தனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக உடற்கூறியல் துறை அரங்கத்தை டீன் முருகேசன் திறந்து வைத்தார்.

    • செப்டம்பர் 10ந் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக ஐ.நா சபை அறிவித்தது.
    • தற்கொலை செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது.

    திருப்பூர் :

    உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக கல்லூரி நுழைவாயிலில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமை தாங்கினார். மாணவ செயலர் பூபதிராஜா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் முருகேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் கூறுகையில் , செப்டம்பர் 10 ந் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக ஐ.நா சபை அறிவித்தது, இந்தாண்டின் மையக்கருத்தாக "செயல்பாடுகள் மூலம் நம்பிக்கையை உருவாக்குதல்" உள்ளது. தற்போது எந்த பிரச்சனையாக இருந்தாலும் சர்வ சாதாரணமாக தற்கொலை செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. வீட்டில் உள்ளவர்கள் பேசினாலும், அறிவுரைகள் சொன்னாலும், காதல் தோல்வி, தேர்வில் தோல்வி, கடன் பிரச்சனை இப்படி எண்ணற்ற காரணங்களை முன்வைத்து தற்கொலை முடிவுகளை இளைஞர்கள் எடுக்கிறார்கள், அரிது அரிது மானிடனாக பிறப்பது அரிது, இன்பம் இருக்கும் இடத்தில் துன்பங்களும் இருக்கும் .அதை ஆராயந்து வாழ வேண்டுமே தவிர தற்கொலை தீர்வாகாது. இப்படியான தற்கொலைகளை தடுக்க வேண்டும் என்பதே உலக தற்கொலை தடுப்பு தினத்தின் நோக்கம் ஆகும்.

    முடிந்த அளவிற்கு தனிமையில் இருந்து வெளியே வர வேண்டும். பிரச்சனைகளை மனதிற்குள் கொண்டு செல்லக்கூடாது. மாணவர்கள் பெற்றோரிடம் மனம் விட்டு பேசவேண்டும்.தற்கொலை எண்ணங்களை தடுக்கவும், தற்கொலை முயற்சி செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து, அவர்களை மீண்டும் இந்த முயற்சியில் ஈடுபடாமல் தடுத்து மாற்றுப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். வாழ்க்கை என்பது நமக்கு கிடைத்த வரம். அதை அனுபவித்து வாழ வேண்டும் என்றார்.

    மருத்துவ கல்லூரி கண்காணிப்பாளர் மருத்துவர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில் ,பள்ளி கல்லூரிகளில் ஆலோசனை குழுக்களை ஏற்படுத்தி அதன் மூலம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கலாம் என்றார். பிறகு மாணவ செயலர்கள் அருள்குமார், பூபாலன், அரவிந்தன் ஆகியோர் தலைமையில் மாணவ மாணவிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் தற்கொலை தடுப்பு ரிப்பன் அணிவிக்கப்பட்டது.தற்கொலை தடுப்பு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    வாழ்க்கை என்பது வாழ்வதற்கே, வெற்றி தோல்வி இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை என்ற உறுதிமொழியை எடுத்து விழிப்புணர்வினை ஏற்படுத்தினர். இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    ×