search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rise again"

    • பாலிதீன் பைகள் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளது.
    • சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    ராமநாதபுரம்

    தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடை விதித்து கடந்த 2016-ம் ஆண்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பல முறை வாரச்சந்தை, வணிக நிறுவனங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பிளாஸ்டிக் பைகள் மற்றும் கப்புகள் பயன்படுத்துவதற்கு தடை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    தற்போது அதிகாரிகள் நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டதால் மீண்டும் பாலிதீன் பைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. ராமநாதபுரம், கீழக்கரை, தேவிபட்டினம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில இறைச்சிக் கடை களிலும், மீன் கடைகளிலும், ராமநாதபுரம் வாரச் சந்தையிலும் பாலிதீன் பைகளை வியாபாரிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர்.

    ஒரு முறை பயன்படுத்தி விட்டு குப்பையில் வீசி எறியப்படும் பாலிதீன் பைகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் இவற்றை பறிமுதல் செய்ய செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. வாரச்சந்தை நடைபெறும் புதன்கிழமை அன்று ஆயிரக்கணக்கான மக்களுக்கு பாலிதீன் பைகளில் வியாபாரிகள் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

    இது தவிர மீன், கோழி, ஆட்டிறைச்சி கடைகளில் பாலிதீன் பைகளில் இறைச்சி வழங்கப்படுகிறது. எனவே சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பாலிதீன் பைகளில் பொருட்கள் வழங்குவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.

    சுற்றுச்சூழல், நிலத்தடி நீருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்களை பயன்படுத்தபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அதற்கு பதிலாக மஞ்சள் பை, சணல் பைகளை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    • கடந்த ஒரு வாரமாக பாதிப்பு சற்று அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது.
    • புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் மாநகர பகுதியில் மட்டும் 36 பேர் அடங்குவர்.

    நெல்லை:

    தமிழகத்தின் பல்வேறு மாவட் டங்களில் கொரோனா பாதிப்பு நாள் தோறும் உயர்ந்து வருகிறது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் கடந்த மாத தொடக்கத்தில் ஒற்றை இலக்கத்தில் இருந்த தினசரி பாதிப்பு படிப்படியாக அதிகரித்து 50-ஐ கடந்தது.

    கடந்த ஒரு வாரமாக பாதிப்பு சற்று அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் பாதிப்பு 93-ஆக இருந்தது. நேற்று 73-ஆக சரிந்தது.

    புதிய பாதிப்பு

    இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் இன்று புதிதாக 110 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதில் அரசு மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற சோதனையில் மட்டும் 90 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

    தனியார் மருத்துவ மனைகள் மற்றும் ஆய்வகங்களில் நடத்த ப்பட்ட பரிசோதனையில் 20 பேர் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

    மாநகரில் அதிகம்

    புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் மாநகர பகுதியில் மட்டும் 36 பேர் அடங்குவர். நாங்குநேரியில் 21 பேர், வள்ளியூரில் 14 பேர், அம்பை, ராதாபுரத்தில் தலா 10 பேர், மானூரில் 7 பேர், களக்காட்டில் 6 பேர், பாளையில் 4 பேர், பாப்பாக்குடியில் 2 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

    இவர்களில் பெரும் பாலானோர் வீட்டு தனிமையில் சிகிச்ைச பெற்று வரும் நிலையில், ஒரு சிலர் மட்டும் ஆஸ்பத்திரியில் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கும் தொற்று பாதிப்பு தீவிரமாக இல்லை. எனினும் அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

    ×