search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளங்கள்"

    • உடன்குடி பகுதியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் புதியதாக 10 -க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் ஊரணிகளை உருவாக்கினர்.
    • முருங்கை, கடலைஉட்பட பல்வேறு பயிர்கள் புதியதாக நடவு செய்யப்பட்டு விவசாய பணி நடக்கிறது.

    உடன்குடி:

    உடன்குடி வட்டார பகுதியில் சடையனேரி, தாங்கை, தருவை ஆகிய 3 குளங்கள் பழமையான குளங்கள் ஆகும். இந்த 3 குளங்களை தவிர விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் புதியதாக அய்யனார் குளம், மாநாட்சி குளம், தண்டுபத்து குளம் என சுமார் 10 -க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் ஊரணிகளை கடந்த ஆண்டு உருவாக்கினர். கடந்த ஆண்டு இதேநாளில் அனைத்து குளங்களும் முழுமையாக நிரம்பி கருமேனிஆறு வழியாக மணப்பாடு கடலுக்கு மழைநீர் சென்றது. இதனால் இப்பகுதியில் உள்ள அனைத்து விவசாய நிலங்கள் பாதுகாக்கப்பட்டது, கடல் நீர் மட்டம் விவசாய நிலங்களில் ஊடுருவாமல் தடுக்கப்பட்டது.

    இந்த ஆண்டு பருவ மழையும் பெய்யவில்லை. சடையனேரி கால்வாயில் தண்ணீரும் வரவில்லை. இதனால் அனைத்து குளங்கள்.குட்டைகள். ஊரணி, கருமேனி ஆறு என எல்லாமே தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. மழை வரும், குளங்கள் நிரம்பும் என்ற நம்பிக்கையில் தென்னை, வாழை, முருங்கை, கடலைஉட்பட பல்வேறு பயிர்கள் புதியதாக நடவு செய்யப்பட்டு விவசாய பணி நடக்கிறது. இந்த ஆண்டு இனி மழை வருமா?என்பது கேள்விக்குறியாகி விட்டது. நாளுக்கு நாள் பனிப்பொழிவு அதிகரித்துக் கொண்டே வருகிறது, மாலை 4 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை பனிப்பொழிவு கடுமையாக உள்ளது. மழை வர வேண்டும், அல்லது கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு வந்து நிரப்ப வேண்டும், இப்படி செய்யாவிட்டால் அனைத்து விவசாயமும் முழுமையாக அழிந்துவிடும் என்ற பெரும் கவலையில் விவசாயிகள் உள்ளனர்.

    • உடன்குடி சுற்றுப்புற பகுதி குளங்களுக்கு நீர் வழங்கும் நீராதாரமாக விளங்குவது சடையநேரி கால்வாய் ஆகும்.
    • கடந்த ஆண்டு அனைத்து குளங்களும் முழுமையாக நிரம்பி காணப்பட்டது.

    உடன்குடி:

    உடன்குடி வட்டார பகுதி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியிலும் உள்ள குளங்களுக்கு நீர் வழங்கும் நீராதாரமாக விளங்குவது சடையநேரி கால்வாய் ஆகும். அந்த வகையில் தாங்கைக்குளம், அய்யனார்குளம், நரிக்குளம், தண்டுபத்துகுளம், மானாட்சிகுளம், குண்டாங்கரைகுளம், சிறுகுளம், இடையர்குளம், கல்லாநேரி, புல்லாநேரி தேரிகுண்டாங்கரை உள்பட 15 குளங்களுக்கு நீராதாரமாக தண்ணீர் வழங்குவது சடையனேரி கால்வாய் ஆகும்.

    கடந்த ஆண்டு இதே நாளில் அனைத்து குளங்களும் முழுமையாக நிரம்பி கருமேனிஆற்றின் வழியாக மணப்பாடு கடலுக்கு தண்ணீர் சென்று கொண்டிருந்தது. இந்த ஆண்டு எல்லா குளங்களும் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. தண்ணீருக்காக ஏங்குகிறது, இந்த ஆண்டு கடந்த ஆண்டை போல் அனைத்து குளங்களும் முழுமையாக நிரம்புமா? விவசாய நிலங்களில் கடல் நீர் மட்டம் புகுந்து விடாமல் தடுக்கப்படுமா? புதியதாக பயிரிடப்பட்டவிவசாய பயிர்கள் காப்பாற்றப்படுமா? என்று விவசாயிகளும், பொதுமக்களும் கவலை அடைந்து உள்ளனர். மேலும்சடையனேரி கால்வாயை நிரந்தர நீர்பெறும் ரெகுலர் பாசன கால்வாயாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • திசையன்விளை பகுதியில் மழை சரியாக பெய்யாததால் இங்குள்ள குளங்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.
    • கோடை வெயிலால் ஆழ்துளை கிணறு மூலம் கிடைத்த தண்ணீரும் வற்றிவிட்டது.

    திசையன்விளை:

    திசையன்விளை பகுதியில் பருவகால மழை சரியாக பெய்யாததால் இங்குள்ள முதலாளிகுளம், எருமைகுளம், செங்குளம், குருவி சுட்டான்குளம், சுகாதியாகுளம் உள்பட அனைத்து குளங்களும் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.

    இதுவரை பெய்த மழையால் ஒரு அடி ஆழம் கூட நனையவில்லை. இப்பகுதியில் சென்ற ஆண்டும் கால மழை சரியாக பெய்யவில்லை. விவசாயிகள் தங்கள் பயிர்களை காப்பாற்ற 400 முதல் 600 அடி ஆழம் வரை ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதில் கிடைத்த தண்ணீரில் சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயம் செய்து வந்தனர்.

    கோடை வெயிலால் ஆழ்துளை கிணறு மூலம் கிடைத்த தண்ணீரும் வற்றிவிட்டது. இதனால் தென்னை மற்றும் முருங்கை விவசாயிகள் தண்ணீரின்றி அவதிபட்டனர். இந்த ஆண்டாவது நல்ல மழை பெய்யும் பயிர்களை காப்பாற்றிவிடலாம் என நம்பிக்கையில் இருந்தனர்.

    இந்த ஆண்டும் இதுவரை மழை சரியாக பெய்யாததால் சென்ற ஆண்டு நிலைதான் இந்த ஆண்டும் ஏற்பட்டுவிடுமோ என்று கவலை அடைந்துள்ளனர். இப்பகுதியில் கடந்த 4 நாட்களாக மழை இல்லை இன்று காலையிலும் வெயில் அடிக்கிறது.

    • விவசாயிகள் உபரி நீரை குளங்களில் தேக்கி வைப்பதும் உண்டு.
    • விளைநிலங்களில், சாகுபடிக்கு ஆதாரமாகவும் இக்குளங்கள் உள்ளன.

    உடுமலை :

    உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில் 118 குளம், குட்டைகளும், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 74,மடத்துக்குளம் ஒன்றியத்தில், 25க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன.இதில், கால்வாய் மற்றும் சிற்றாறுகள் வாயிலாக, நீர் வரத்து கிடைக்கும் குளங்கள், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படுகின்றன.பிற குளங்கள், சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.

    இக்குளங்களுக்கு பருவமழை காலத்தில் மட்டும் நீர்வரத்து இருக்கும்.பி.ஏ.பி., பாசனப்பகுதிகளில், விவசாயிகள் உபரி நீரை குளங்களில் தேக்கி வைப்பதும் உண்டு. சுற்றுப்பகுதி விளைநிலங்களின் நிலத்தடி நீர் மட்டத்துக்கும், கிணற்றுப்பாசனத்தின் வாயிலாக பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில், சாகுபடிக்கு ஆதாரமாகவும் இக்குளங்கள் உள்ளன.இந்நிலையில் குறிப்பிட்ட இடைவெளியில் தூர்வாராதது, ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால், நீர் வழிப்பாதை மறைந்து போய் மழைக்காலத்தில், கூட குளங்களுக்கு நீர் வரத்து கிடைக்காத நிலை இருந்தது.

    நீண்ட கால இடைவெளிக்குப்பிறகு மத்திய அரசின், 'ஜல் சக்தி அபியான்', திட்டத்தில், குளம் மற்றும் நீர் வழிப்பாதைகளை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டது.மேலும் குறிப்பிட்ட சில குளங்களில், மாநில அரசு நிதி பங்களிப்புடன், துார்வாருதல், மதகுகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், அதன்பிறகு மழைக்காலத்தில், பெரும்பாலான குளங்கள் நிரம்பின.பிறகு, கடந்த ஓராண்டுக்கும் மேலாக எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

    இதனால், பெரும்பாலான குளங்களுக்கான நீர் வழிப்பாதை புதர் மண்டிக்காணப்படுகிறது. சமீபத்தில் உடுமலை பகுதியில் தொடர் மழை பெய்தும் பெரும்பாலான குளங்களுக்கு நீர் வரத்து கிடைக்கவில்லை.வடகிழக்கு பருவமழை சீசனில், இக்குளங்கள் நிரம்பும் வகையில், உடனடியாக நீர் வழிப்பாதைகளை சீரமைக்கவும், குளங்களின் கரைகளை வலுப்படுத்தி, மழை நீரை சேகரிக்கவும், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட நிதியின் கீழ் இப்பணிகளை, ஒன்றிய, ஊராட்சி நிர்வாகங்கள் வாயிலாக மேற்கொள்ள உத்தரவிட்டால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணிகளை முடிக்க முடியும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    • 4 நாட்களில் குளம் முழுமையாக நிரம்பியது.
    • மாணிக்காபுரம் குளத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே நொய்யல் ஆற்றின் மூலம் நீர் நிரம்பும் வகையில் சுமார் 320 ஏக்கர் பரப்பில் 16 அடிக்கு தண்ணீர் தேங்கும் வகையில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கத்தாங்கன்னி குளம் அமைந்துள்ளது. கடந்த 2 ஆண்டுக்கு முன் பொதுப் பணித்துறை சார்பில் குளம் முழுவதும் இருந்த சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு பெய்த பருவ மழையினால், நொய்யல் ஆற்றின் மூலம் நீர் நிரம்பும் வகையில் அமைந்துள்ள கத்தாங்கன்னி குளத்துக்கு பொதுப்பணித்துறையினர் நொய்யல் ஆற்று நீரைத் திறந்து விட்டனர்.

    4 நாட்களில் குளம் முழுமையாக நிரம்பியது. இதனை அடுத்து பாசனத்துக்கு திறந்து விட்டது போக மீதம் சுமார் 3 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தது.இந்நிலையில் கடந்த கோடையின் போது குளம் வற்றும் நிலைக்கு சென்றது‌. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கன மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு காவிரிக்கு சென்றது.

    நொய்யலில் செல்லும் மழை நீரை குளத்துக்கு திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து கத்தாங்கன்னி தடுப்பணையில் இருந்து வெள்ள நீர் கடந்த வெள்ளி அன்று குளத்துக்கு திறந்து விடப்பட்டது. ஒரு அடிக்கு மட்டுமே நீர் இருந்த கத்தாங்கன்னி குளத்துக்கு கடந்த சில நாட்களாக நொய்யல் வெள்ள நீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக குளத்தில் சுமார் 7அடிக்கு மேல் தண்ணீர் மட்டம் உயர்ந்துள்ளது.

    இதே போல் நொய்யல் ஆற்றின் வடகரையில் ஊத்துக்குளி அருகே உள்ள அணைப்பாளையத்தில் 12 அடிக்கு தண்ணீர் தேங்கும் வகையில் 56 ஏக்கர் பரப்பளவில் அணைப்பாளையம் குளம் அமைந்துள்ளது. இக்குளத்தினை அப்பகுதி விவசாயிகள் ஒன்றிணைந்து சீமை கருவேல மரங்களை அகற்றி கரைகளை பலப்படுத்தி வைத்திருந்தனர்‌. தற்போது இந்த குளத்துக்கும் நொய்யல் ஆற்றில் இருந்து வெள்ள நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது குளத்தில் 2 அடிக்கு தண்ணீர் மட்டம் உயர்ந்துள்ளது.

    குளத்துக்கு நீர் வரும் பாதையில் ஆகாயத்தாமரை மற்றும் திருப்பூர் நகரின் பிளாஸ்டிக் குப்பைகள் அடைத்து கொண்டதால்,தண்ணீர் வாய்க்கால் உபரி போக்கி வழியாக, குளத்துக்கு திறந்து விடப்பட்ட நீரில் பெரும் பகுதி மீண்டும் நொய்யலுக்கே செல்வதால் குளத்துக்கு நீர் வரத்து குறைவாக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். குப்பைகளை அகற்றி குளம் முழுமையாக நிரம்ப அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல் மாணிக்காபுரம் குளத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து நொய்யல் ஆற்றில் வெள்ள நீர் வந்தால் 4 நாட்களில், ஆற்றின் மூலம் நீர் பெறும் குளங்கள் அனைத்தும் நிரம்பும். அதே நேரத்தில் நொய்யலில் வெள்ளம் வரும்போது அதை பயன்படுத்தி கடந்த காலங்களில் சாய நீரை ஆற்றில் திறந்து விட்ட சம்பவங்களும் நடைபெற்றதால்,மாசுகட்டுப்பாட்டு துறையினர் சாய கழிவு நீர் நொய்யலில் திறந்து விடாமல் இருப்பதை உறுதி செய்ய தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு குளங்கள் நிறைய உதவி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வாசுதேவநல்லூர் யூனியனுக்கு உட்பட்ட நான்கு ஊராட்சி குளங்களை ஆழப்படுத்த ரூபாய் 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.

    சிவகிரி:

    அம்ரித் சரோவர் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்தும் நோக்கில் தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 81 குளங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    அதில் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தென்மலை, உள்ளார் தளவாய்புரம், திருமலாபுரம் என்ற அருளாட்சி, சுப்பிரமணியபுரம் ஆகிய ஊராட்சி குளங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் நோக்கம் தூய்மையான குடிநீர் வழங்குவதாகும். வாசுதேவநல்லூர் யூனியனுக்கு உட்பட்ட நான்கு ஊராட்சி குளங்களை ஆழப்படுத்த ரூபாய் 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குளங்களை ஆழப்படுத்தும் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருப்பசாமி, ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் உதவி பொறியாளர்கள் மார்கோனி, அருள் நாராயணன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மனோகரன், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதுபோன்று வாசுதேவநல்லூர் ஒன்றியம் திருமலாபுரம் என்ற அருளாட்சியில் ரூ. 2.78 லட்சம் மதிப்பீட்டில் இந்திரா காலனி மயானத்தில் நடைபெற்று வரும் தண்ணீர் வசதி, ஆழ்துளை கிணறுடன் கூடிய தொட்டி பணி மற்றும் மின்மோட்டார் அமைக்கும் பணிகளையும் மற்றும் அப்பகுதியில் நடைபெற்று வரும் வாறுகால் பணிகளையும் வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் ஆய்வு செய்தார். இதில் ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், உள்ளார் மணிகண்டன், விக்கி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பல ஆயிரம் ஏக்கர் விவசாய சாகுபடிக்கான நிலத்தடி நீர் மட்ட ஆதாரமாகவும் இக்குளங்கள் உள்ளன.
    • தளி கால்வாய் வழியாக அரசாணை அடிப்படையில் குளங்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

    உடுமலை :

    உடுமலை ஏழு குள பாசன திட்டத்துக்குட்பட்ட குளங்கள் வாயிலாக நேரடியாக 2,643 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. பல ஆயிரம் ஏக்கர் விவசாய சாகுபடிக்கான நிலத்தடி நீர் மட்ட ஆதாரமாகவும், இக்குளங்கள் உள்ளன.திருமூர்த்தி அணையில் இருந்து தளி கால்வாய் வழியாக அரசாணை அடிப்படையில் குளங்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

    இந்தாண்டு கோடை கால மழை மற்றும் தென்மேற்கு பருவமழை தீவிரமடையாததால் குளங்களின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.அவ்வகையில் 6 குளங்களில், மொத்த நீர் இருப்பில் 50 சதவீதத்தை விட குறைந்துள்ளது. ஒரு குளத்தில் மட்டும் 50 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.செங்குளம் 74.84 ஏக்கர், நீர்மட்ட உயரம் 10 அடி, 12.74 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவும் கொண்டதாகும்.

    தற்போதைய நிலவரப்படி 3.20 அடி நீர்மட்டம், மட்டுமே உள்ளது. மொத்தமுள்ள கொள்ளளவில் 22 சதவீத நீர் இருப்பே தற்போது உள்ளது. ஒட்டுக்குளம் 90 ஏக்கர் பரப்பளவில் 10 அடி நீர்மட்ட உயரம், 14.11 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவு உடையதாகும்.

    குளத்தில் 53.86 சதவீத நீர்இருப்பு உள்ளது.பெரியகுளத்தில் 37.13 சதவீதம், செட்டிக்குளம் 34.55, கரிசல் குளம் 16.78, தினைக்குளம் 36.79, வளையபாளையம் குளத்தில் 48.39 சதவீத நீர் இருப்பே உள்ளது. 6 குளங்களில், 50 சதவீதத்துக்கும் குறைவாக நீர் இருப்பு சரிந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    தென்மேற்கு பருவமழை காலத்தில் குளங்களுக்கு குறைந்தளவே நீர்வரத்து இருக்கும். பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு, மழையின்மை உள்ளிட்ட காரணங்களால், நீர்மட்டம் வேகமாக குறைந்து விட்டது.பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசன காலம் துவங்கும் முன் குளங்களுக்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்தால் பயனுள்ளதாக இருக்கும்.மேலும் குளங்களுக்கான வரத்து கால்வாய்களை தூர்வாரி நீர் திருட்டை தடுக்க வேண்டும். மேலும், குளங்களின் முழு கொள்ளளவில் தண்ணீர் நிரம்புகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    உடுமலை சுற்றுப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை சீசன், ஜூன் மாதத்தில் துவங்குவது வழக்கம். இந்தாண்டு கோடை காலத்தில் பெய்த மழையால், மானாவாரி சாகுபடிக்கான விதைப்பை விவசாயிகள் மேற்கொண்டனர்.ஆனால் தென்மேற்கு பருவமழை குறித்த நேரத்தில் துவங்காமல் வறண்ட வானிலை நிலவியது. இதனால் மானாவாரி சாகுபடியில் பயிர்கள் பாதித்தது. பருவமழையை அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்திருந்தனர்.இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பரவலாக பருவமழை பெய்யத்துவங்கியுள்ளது. மழையின் தாக்கத்தால், குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இருப்பினும், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தீவிரமடையவில்லை.அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில், விரைவில் மழை தீவிரமடையும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

    ×