என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உடன்குடி வட்டார பகுதியில் வறண்டு காணப்படும் 15 குளங்கள்- இந்த ஆண்டு தண்ணீர் வருமா? விவசாயிகள் ஏக்கம்
- உடன்குடி சுற்றுப்புற பகுதி குளங்களுக்கு நீர் வழங்கும் நீராதாரமாக விளங்குவது சடையநேரி கால்வாய் ஆகும்.
- கடந்த ஆண்டு அனைத்து குளங்களும் முழுமையாக நிரம்பி காணப்பட்டது.
உடன்குடி:
உடன்குடி வட்டார பகுதி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியிலும் உள்ள குளங்களுக்கு நீர் வழங்கும் நீராதாரமாக விளங்குவது சடையநேரி கால்வாய் ஆகும். அந்த வகையில் தாங்கைக்குளம், அய்யனார்குளம், நரிக்குளம், தண்டுபத்துகுளம், மானாட்சிகுளம், குண்டாங்கரைகுளம், சிறுகுளம், இடையர்குளம், கல்லாநேரி, புல்லாநேரி தேரிகுண்டாங்கரை உள்பட 15 குளங்களுக்கு நீராதாரமாக தண்ணீர் வழங்குவது சடையனேரி கால்வாய் ஆகும்.
கடந்த ஆண்டு இதே நாளில் அனைத்து குளங்களும் முழுமையாக நிரம்பி கருமேனிஆற்றின் வழியாக மணப்பாடு கடலுக்கு தண்ணீர் சென்று கொண்டிருந்தது. இந்த ஆண்டு எல்லா குளங்களும் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. தண்ணீருக்காக ஏங்குகிறது, இந்த ஆண்டு கடந்த ஆண்டை போல் அனைத்து குளங்களும் முழுமையாக நிரம்புமா? விவசாய நிலங்களில் கடல் நீர் மட்டம் புகுந்து விடாமல் தடுக்கப்படுமா? புதியதாக பயிரிடப்பட்டவிவசாய பயிர்கள் காப்பாற்றப்படுமா? என்று விவசாயிகளும், பொதுமக்களும் கவலை அடைந்து உள்ளனர். மேலும்சடையனேரி கால்வாயை நிரந்தர நீர்பெறும் ரெகுலர் பாசன கால்வாயாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்