search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குண்டு வெடிப்பு"

    • சுமார் 150 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    • ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பின் முக்கிய கமாண்டர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கை

    பெஷாவர்:

    பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பலத்த பாதுகாப்பு மிக்க பகுதியில் உள்ள மசூதியில் இன்று வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. பிற்பகல் தொழுகையின்போது தற்கொலைப்படை தீவிரவாதி இந்த தாக்குதலை நிகழ்த்தி உள்ளான். இதில் பலர் தூக்கி வீசப்பட்டனர். மசூதியின் ஒரு பகுதி கடுமையாக சேதமடைந்தது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக 17 பேர் உயிரிழந்த நிலையில், நேரம் செல்லச் செல்ல உயிரிழப்பு அதிகரித்தது. இரவு நிலவரப்படி பலி எண்ணிக்கை 46 ஆக உயர்ந்தது. சுமார் 150 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

    உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் போலீஸ்காரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் அந்த அமைப்பின் முக்கிய கமாண்டர் உமர் காலித் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அவனது சகோதரன் கூறியிருக்கிறான்.

    • பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியதில் மசூதியின் ஒரு பகுதி பயங்கர சேதமடைந்தது.
    • மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 80 பேர் படுகாயமடைந்தனர்.

    பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியதில் மசூதியின் ஒரு பகுதி பயங்கர சேதமடைந்தது.

    இந்நிலையில், மக்களிடையே பீதியை ஏற்படுத்துவதற்காக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

    மேலும் மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

    • மேற்கு சிங்பும் மாவட்டத்தின் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் ஒழிப்பு வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
    • மத்திய ஆயுதப்படையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் காயம் அடைந்தார்.

    சைபாசா:

    ஜார்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பும் மாவட்டத்தின் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் ஒழிப்பு வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அன்ஜன்பேடா கிராம வனப்பகுதியில் அவர்கள் தேடுதல் வேட்டை நடத்தியபோது பயங்கரவாதிகள் புதைத்து வைத்திருந்த நவீன வெடிகுண்டு ஒன்று வெடித்து சிதறியது.

    இதில் மத்திய ஆயுதப்படையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் காயம் அடைந்தார். உடனடியாக அவர் ராஞ்சியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். காயம் அடைந்தவர், 197-வது பட்டாலியன் பிரிவில் பணியாற்றிய இன்சார் அலி என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் மேலும் சில வெடிகுண்டுகள் கைப்பற்றட்டதாகவும், அவை செயலிழக்க வைக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    இதேபோல கோயில்கேரா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட வனப்பகுதியில் நேற்று முன்தினம், 13 வயது சிறுவன் ஒருவன் நவீன வெடிபொருள் வெடித்ததில் படுகாயமடைந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உகாண்டாவின் பயங்கரவாத குழுவான நேச ஜனநாயக படைகளால் (ஏ.டி.எப்.) தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம்.
    • பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்த போதிலும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

    கம்பாலா:

    உகாண்டா நாட்டின் எல்லையில் உள்ள கிழக்கு காங்கோ பகுதியில் காசின்டி நகரில் ஸ்பாக் தேவாலயம் உள்ளது. இங்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பொதுமக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அங்கு திடீரென பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

    குண்டு வெடித்த சத்தம் கேட்டு அருகில் குடியிருப்பில் இருந்தவர்கள் வந்து பார்த்து மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் மீட்பு படையினருடன் இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர்.

    அவர்களை ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து கிழக்கு காங்கோவின் பாதுகாப்பு அதிகாரியான அப்பல்லோ முவானம்போகா கூறும் போது, தேவாலயத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    உகாண்டாவின் பயங்கரவாத குழுவான நேச ஜனநாயக படைகளால் (ஏ.டி.எப்.) இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்த போதிலும் இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

    இதன் பின்னணியில் ஏ.டி.எப். குழு தான் ஈடுபட்டு இருக்கும் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.

    ஆனாலும் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

    குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து உகாண்டா ராணுவம் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தி தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

    • கிராமத்தில் பாதுகாப்பு படையினர் நடவடிக்கையை ஏராளமானோர் திரண்டு நின்று பார்த்தனர்.
    • குண்டு வெடிப்பு நடந்த வீட்டுக்கு அருகே மற்றொரு வீட்டில் இருந்து வெடிக்காத சக்தி வாய்ந்த குண்டு ஒன்றை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்து கைப்பற்றினார்கள்.

    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் டங்ரி கிராமத்தில் நேற்று பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

    இதையடுத்து அந்த கிராமத்தை முற்றுகையிட்டு பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். வேறு பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கிறார்களா? என்று சோதனை நடத்தப்பட்டது.

    பரபரப்பு நிலவிய அந்த கிராமத்தில் பாதுகாப்பு படையினர் நடவடிக்கையை ஏராளமானோர் திரண்டு நின்று பார்த்தனர். அந்த சமயத்தில் ஒரு வீட்டில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.

    இதைத் தொடர்ந்து அலறல் சத்தம் எழுந்தது. அந்த வீட்டில் இருந்து படுகாயங்களுடன் 5 பேர் மீட்கப்பட்டனர்.

    காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ஒரு குழந்தை பலியானது. காயம் அடைந்தவர்களில் மற்றொருவர் கவலைக்கிடமாக உள்ளார்.

    இதற்கிைடயே குண்டு வெடிப்பு நடந்த வீட்டுக்கு அருகே மற்றொரு வீட்டில் இருந்து வெடிக்காத சக்தி வாய்ந்த குண்டு ஒன்றை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்து கைப்பற்றினார்கள். தொடர்ந்துஅந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

    • கட்டிடத்தில் வசித்த 20 முதல் 30 பேரை அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றினார்கள்.
    • குண்டு வெடிப்புக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இங்கிலாந்து, பிரான்ஸ் இடையே உள்ளது ஜெர்சி தீவு உள்ளது. இந்த தீவின் தலைநகர் செயின்ட் ஹெலியரில் உள்ள துறைமுகம் அருகே அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

    இந்த அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென்று குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

    இந்த குண்டு வெடிப்பில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசாரும் மீட்பு படையினரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    அந்த கட்டிடத்தில் வசித்த 20 முதல் 30 பேரை அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றினார்கள். மேலும் 12 பேரை காணவில்லை. அவர்களை மீட்பு படையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தபோது அந்த வழியாக நடந்து சென்ற 2 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    குண்டு வெடிப்புக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • மாநிலத்தில் வெடிகுண்டு தயாரிக்கும் தொழில் மட்டுமே செழித்து வருவதாக பாஜக விமர்சனம்.
    • மம்தா பானர்ஜி பதில் அளிக்க மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

    மேதினிபூர்:

    மேற்கு வங்க மாநிலம் புர்பா மேதினிபூர் மாவட்டத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் பானர்ஜியின் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பகுதி அருகே உள்ள பூபதிநகரில் ஒரு வீட்டில் குண்டு வெடித்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    ஓலை கூரையுடன் கூடிய அந்த வீடு முற்றிலும் சேதமடைந்ததாகவும், அங்கிருந்து மூன்று உடல்கள் மீட்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் மேலும் சிலர் காயமடைந்துள்ள நிலையில் குண்டு வெடிப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என தகவல்கள் தெரிவித்துள்ளன.

    இந்த சம்பவம் குறித்து விமர்சித்துள்ள பாஜக தேசிய துணைத் தலைவர் திலீப் கோஷ், மாநிலத்தில் வெடிகுண்டு தயாரிக்கும் தொழில் மட்டுமே செழித்து வருவதாகவும், இந்த சம்பவத்திற்கு திரிணாமுல் காங்கிரஸே பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி அமைதியாக இருப்பது ஏன் என்றும், அவர் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சுஜன் சக்ரவர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

    • குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை.
    • இந்த தாக்குதலை பாலஸ்தீன போராளிகள் நடத்தியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

    ஜெருசலேம்

    இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக பகைமை நிலவி வருகிறது. சர்ச்சைக்குரிய மேற்குகரை பகுதி மற்றும் ஜெருசலேம் நகரம் யாருக்கு சொந்தம் என்பதில் இருநாடுகளுக்கு இடையில் மோதல் நீடிக்கிறது. எனினும் அந்த 2 பகுதிகளும் தற்போது இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ளது.

    இந்த விவகாரத்தில் பாலஸ்தீனத்தை சேர்ந்த போராளிகள் மேற்குகரை பகுதி மற்றும் ஜெருசலேம் நகரில் இஸ்ரேலியர்களை குறிவைத்து கத்திக்குத்து, துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

    அப்படி தாக்குதல்களில் ஈடுபடும் பாலஸ்தீனர்களை இஸ்ரேல் வீரர்கள் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்று விடுகின்றனர்.

    அதுமட்டும் இன்றி மேற்குகரை பகுதியில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம்களில் பதுங்கியிருக்கும் போராளிகளை பிடிப்பதற்காக நடத்தப்படும் தேடுதல் வேட்டையின்போது அப்பாவி பாலஸ்தீனர்கள் சுட்டுக்கொல்லப்படுகின்றனர்.

    கடந்த சில மாதங்களாக இந்த மோதல் தீவிரமடைந்து வருகிறது. இதனால் மேற்குக்கரை மற்றும் ஜெருசலேமில் பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.

    இந்த நிலையில் ஜெருசலேம் நகரின் நுழைவுவாயிலில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் நேற்று காலை வழக்கம் போல் மக்கள் பலர் பஸ்சுக்காக காத்துக் கொண்டிருந்தனர். அப்போது பஸ் நிறுத்தத்தில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது.

    பீதியடைந்த மக்கள் உயிர் பயத்தில் நாலாபுறமும் சிதறி ஓடினர். குண்டு வெடிப்பில் சிக்கி 17 பேர் பலத்த காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    அவர்கள் குண்டு வெடிப்பு நடந்த பஸ் நிறுத்தத்துக்கு செல்லக்கூடிய சாலையை மூடி அந்த பகுதி முழுவதையும் தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

    அதை தொடர்ந்து குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சுகள் மூலம் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனிடையே ஜெருசலேம் நகரின் நுழைவுவாயிலில் குண்டு வெடித்த சிறிது நேரத்தில் அந்த நகரின் வடக்கு பகுதியில் ரமோட் என்கிற இடத்தில் உள்ள மற்றொரு பஸ் நிறுத்தத்தில் அடுத்த குண்டு வெடித்தது.

    இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார். மேலும் 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களும் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்கு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். 2 குண்டு வெடிப்புகளிலும் காயமடைந்த 21 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த இரட்டை குண்டு வெடிப்பு ஜெருசலேம் நகரை உலுக்கியது. குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை. அதே சமயம் இந்த தாக்குதலை பாலஸ்தீன போராளிகள் நடத்தியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

    இந்த ஆண்டு மேற்குக்கரை மற்றும் ஜெருசலேமில் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்களில் 19 இஸ்ரேலியர்களும், 130-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாகர்கோவிலில் பிடிபட்ட அஜிம் ரகுமானிடம், மாவட்ட போலீசார் தீவிர விசாரணை
    • தேசிய விசாரணை முகமை (என்.ஐ.ஏ.) மற்றும் ‘ரா’ உள்ளிட்ட உளவுத்துறையினரும் கேரளாவில் முகாமிட்டு விசாரணை

    நாகர்கோவில்:

    கோவை கார் குண்டு வெடிப்பை தொடர்ந்து, கர்நாடக மாநிலம் மங்களூரூவில் உள்ள நாகுரி பகுதியில் ஆட்டோவில் குண்டு வெடித்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மங்களூரூவில் ஆட்டோவில் வெடித்தது குக்கர் வெடிகுண்டு என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் தற்செயலாக நடந்தது இல்லை. திட்டமிட்ட நாச வேைல என்பதும் கண்டறியப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து தேசிய விசாரணை முகமை மற்றும் உளவுத்துறையினரும் விசாரணையில் இறங்கினர். இதில் வெடி விபத்துக்கு உள்ளான ஆட்டோவில் படுகாயத்துடன் மீட்கப்பட்டவன் ஷாரிக் என்ற முகமது ஷாரிக் (வயது 24) என்பதும், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புயைவன் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    தொடர்ந்து ஷாரிக் பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. அவனது செல்போனை ஆய்வு செய்ததில், நாகர்கோ வில், கேரளா உள்ளிட்ட பல இடங்களுக்கு பேசியிருப்பது தெரிய வந்தது.

    இது தொடர்பாக விசா ரணை நடத்த மங்களூரூ போலீசார் நாகர்கோவில், கேரளா பகுதிகளுக்கு விரைந்தனர். அப்போது ஷாரிக், கேரளா செல்லும் போது நாகர்கோவில் வழியாக ரெயிலில் சென்றது தெரியவந்தது. இதனால் நாகர்கோவிலில் அவனுக்கு யாருடனாவது தொடர்பு இருக்கலாமா? என போலீ சார் விசாரணை நடத்தினர்.

    அப்போது நாகர்கோவில் கோட்டார் பகுதியில் உள்ள ஒரு செல்போனுக்கு ஷாரிக் பேசியது கண்டு பிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அந்த செல்போன் எண் யாருடையது என்பது தொடர்பாக குமரி மாவட்ட போலீசார் துணையுடன் மங்களூரூ போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது துரித உணவகத்தில் வேலை பார்க்கும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அஜிம் ரகுமான் (22) என்பவர் தான் அந்த செல்போன் எண் வைத்திருப்பவர் என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு போலீசார், அவரை பிடித்தனர்.தொடர்ந்து அவரை ரகசிய இடம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் நாகர்கோவிலில் பிடிபட்ட அஜிம் ரகுமானிடம், குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மேற்பார்வையில் மாவட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சுமார் 30 மணி நேரம் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு விசாரணை நடத்த ப்பட்டது.

    அப்போது அஜிம் ரகு மான், தான் வேலை பார்த்த கடை முதலாளி மனைவியின் செல்போ னுக்கு ஒரு அழைப்பு வந்ததாகவும், அவருக்கு மொழி புரியாத தால், செல்போனை தன்னிடம் கொடுத்த தாகவும் கூறினார்.

    மேலும் அந்த போனை வாங்கி தான் பேசுவதற்குள் 'லைன்' துண்டிக்கப்பட்ட தால், தனது செல்போனில் இருந்து அந்த எண்ணை திரும்ப அழைத்ததாகவும் அப்போது யாரும் பேசவில்லை என்றும் போலீசாரிடம் கூறியுள்ளார். அவரது தகவலின் படி குறிப்பிட்ட கடை உரிமையாளரின் மனைவியையும் போலீசார் அழைத்து விசாரித்தனர்.

    அவரும், அஜிம் ரகுமான் கூறிய தகவலையே தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து 30 மணி நேரத்துக்கு பிறகு அஜிம் ரகுமானை விடுவித்த போலீசார், விசாரணைக்கு தேவைப்பட்டால் மீண்டும் அழைப்போம், வேறு எங்கும் செல்லக் கூடாது என கூறி உள்ளனர்.

    இதற்கிடையில் கேரள மாநிலம் ஆலுவா பகுதியில் உள்ள ஒரு முகவரிக்கு ஷாரிக் பெயருக்கு பார்சல் அனுப்பப்பட்டு இருந்ததாகவும் அதனை வாங்கத் தான் ஷாரிக், நாகர்கோவில் வழியாக கேரளா சென்றதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக மங்களூரூ போலீசார் கேரளா விரைந்தனர். இதற்கிடையில் தேசிய விசாரணை முகமை (என்.ஐ.ஏ.) மற்றும் 'ரா' உள்ளிட்ட உளவுத்துறை யினரும் கேரளாவில் முகா மிட்டு விசாரணையை தொடங்கினர்.

    இதில் கேரள மாநிலத்தில் எர்ணாகுளம், ஆலுவா உள்ளிட்ட பகுதிகளுக்கு ஷாரிக் சென்றிருப்பது தெரிய வந்தது. அவன் எதற்காக கேரளா வந்தான்? யாருடன் பேசி னான்? அவனுக்கு முகவரி கொடுத்து உதவியது யார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • ஆலமரத்தின் அடியில் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
    • குண்டு வெடிப்பில் கார்கள் பைக்குகள் மற்றும் போலீஸ் நிலைய கதவு ஜன்னல் மற்றும் சுவர்கள் சேதம் அடைந்தன.

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கெங்காதர நல்லூரில் காவல் நிலையம் இயங்கி வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியில் பாறைகளை உடைக்க பயன்படுத்தும் மருந்து பொருட்களை உரிமம் இல்லாமல் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் அங்கிருந்து 713 கிலோ எடையுள்ள வெடி தயாரிக்கும் பொருட்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். அதன் பின்னர் வெடிபொருட்களை போலீசார் அழித்துவிட்டனர். மீதமிருந்த 250 கிராம் எடையுள்ள வெடிபொருட்களை காவல் நிலைய வளாகத்தில் உள்ள ஆலமரத்தின் அடியில் பள்ளம் தோண்டி புதைத்து அதன் மீது கான்கிரீட் அமைத்து இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 3.45 மணிக்கு ஆலமரத்தின் அடியில் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்கள் பைக்குகள் மற்றும் காவல் நிலைய கதவு ஜன்னல் மற்றும் சுவர்கள் சேதம் அடைந்தன.

    அதிர்ஷ்டவசமாக அப்போது பணியில் இருந்த போலீசார் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

    இதுகுறித்து தகவல் அறிந்த சித்தூர் டி.எஸ்.பி. சுதாகர் ரெட்டி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், "இந்த வெடிகுண்டு விபத்து காரணமாக போலீசாருக்கோ பொதுமக்களுக்கோ எந்த காயமும் ஏற்படவில்லை.

    வெடிகுண்டு விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வெடிபொருட்களை மரத்துக்கு அடியில் புதைத்து வைத்த போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

    சமூக விரோதிகள் யாராவது சதி செயலில் ஈடுபட்டார்களா? அல்லது எதேச்சையாக நடந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • சம்பவ இடத்தில் போலீஸ் குழுக்கள் இருப்பதாகவும், விசாரணை நடந்து வருவதாகவும் தாகூர் கூறினார்.

    ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள மசூதி அருகே இன்று குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதில் பலர் உயிரிழந்திருப்பதை போலீஸார் உறுதிப்படுத்தி உள்ளனர்.

    நகரின் முக்கிய இடத்தில் குண்டுவெடிப்பு நடந்த சில நிமிடங்களுக்குப் பிறகு துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது. தொடர்ந்து, கரும்புகை வானுயரத்தில் எழுந்தது.

    காபூல் காவல்துறைத் தலைமையின் செய்தித் தொடர்பாளர் காலித் சத்ரான் கூறுகையில், " காபூலில் உள்ள மசூதி அருகில் குண்டு வெடித்தது. இதில் பலர் சிக்கி உயிரிழந்துள்ளனர். ஆனால் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய எண்ணிக்கை குறித்து தகவல் தெரியவில்லை.

    மசூதிக்கு அருகில் உள்ள பிரதான சாலையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக உள்துறை அமைச்சர் அப்துல் நஃபி தாகூர் தெரிவித்தார். குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார். சம்பவ இடத்தில் போலீஸ் குழுக்கள் இருப்பதாகவும், விசாரணை நடந்து வருவதாகவும் தாகூர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பல்கலைக்கழகத்தின் ஹோம்ஸ் ஹால் அருகே பார்சல் ஒன்று வெடித்து சிதறியது.
    • அருங்காட்சியகம் அருகே மர்ம பார்சல் ஒன்று கண்டறியப்பட்டது.

    அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழக வளாகத்தில் மர்ம பொருள் ஒன்று வெடித்தது. பல்கலைக்கழகத்தின் ஹோம்ஸ் ஹால் அருகே பார்சல் ஒன்று வெடித்து சிதறியது.

    இதனால் குண்டு வெடித்ததாக பெரும் பரபரப்பு நிலவியது. வெடி சத்தம் கேட்டு மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள். மர்ம பொருள் வெடித்ததில் பல்கலைக்கழக ஊழியர் ஒருவர் காயம் அடைந்தார்.

    உடனே பல்கலைக்கழகத்துக்கு எப்.பி.ஐ அதிகாரிகள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்தனர். வெடித்து சிதறிய மர்ம பொருளை ஆய்வு செய்தனர்.

    இதற்கிடையே அப்பகுதியில் உள்ள அருங்காட்சியகம் அருகே மர்ம பார்சல் ஒன்று கண்டறியப்பட்டது. அதை வெடிகுண்டு நிபுணர்கள் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் இந்த விவகாரத்தில் உண்மையில் குண்டு வெடித்ததா அல்லது வேறு காரணமா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ×