search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குட்கா பறிமுதல்"

    • கடலூர் மாவட்டத்தில் குட்கா மற்றும் கஞ்சா விற்பனை செய்த பெண் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீ சார் பறிமுதல் செய்து வழக்கு பதிவுசெய்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு, தீவிர சோதனை பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், புதுநகர், முதுநகர், காடாம் புலியூர் ஆகிய பகுதிகளில் 240 கிராம் கஞ்சாவும், மங்க லம்பேட்டை, கருவேப்பி லங்குறிச்சி, புதுப்பே ட்டை, ஸ்ரீமுஷ்ணம், நெல்லிக்கு ப்பம், ஆலடி ஆகிய பகுதி களில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீ சார் பறிமுதல் செய்து வழக்கு பதிவுசெய்தனர். இதில் கடலூர் திருப்பாதிரி ப்புலியூர் சூர்யா (26), சிதம்பரம் நடராஜன் (41), கடலூர் புதுப்பாளையம் சீனிவாசன் (22), பணிக்கன் குப்பம் நவீன் (21), கடலூர் முதுநகர் சிவானந்தபுரம் ராகுல் (21), ஆகியோரை கஞ்சா வழக்கிலும், மங்கலம் பேட்டையை சேர்ந்த அக்பர் அலி (51), சிவகலை (34) என்ற பெண், கருவேப்பி லங்குறிச்சி காசிநாதன் (55), பண்ருட்டி ஏழுமலை (61), ஸ்ரீமுஷ்ணம் ராஜதுரை (61), நெல்லிக்குப்பம் கணபதி (50), விருத்தாச்சலம் வீரா ரெட்டி குப்பம் பீட்டர்நாயகம் (64) ஆகியோரை தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ததாக போலீசார் கைது செய்தனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • போலீசார் திருவள்ளூர் சத்தியமூர்த்தி தெருவில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
    • ஒரு வீட்டில் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை பதுக்கி விற்பது தெரிந்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி, சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் மற்றும் போலீசார் திருவள்ளூர் சத்தியமூர்த்தி தெருவில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை பதுக்கி விற்பது தெரிந்தது.

    இதையடுத்து அங்கிருந்த தமிம் அன்சாரி என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

    • 200 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இப்ராகிம் என்ற வாலிபரை கைது செய்தனர்.
    • பெங்களூருவில் இருந்து குட்கா பொருட்களை பார்சல் மூலம் கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை ஏழு கிணறு வீராசாமி தெருவில் அறையை வாடகைக்கு எடுத்து குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து துறைமுகம் உதவி கமிஷன் வீரகுமார், முத்தியால் பேட்டை இன்ஸ்பெக்டர் முகமது சபியுல்லா, சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திகா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் சோதனை நடத்தினர். இதில் 200 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் இப்ராகிம் என்ற வாலிபரை கைது செய்தனர்.

    அவரது கூட்டாளிகளான துரை, டேவிட் ஆகிய 2 பேரை தேடி வருகிறார்கள். இவர்கள் பெங்களூருவில் இருந்து குட்கா பொருட்களை பார்சல் மூலம் கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் இருப்பவர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

    • இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.
    • கண்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்திய போலீசார் சோதனை செய்தபோது அதில் எந்த பொருட்களும் இல்லாமல் காலியாக இருந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்கும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்பேரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    வீரவநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து மூட்டை மூட்டையாக குட்கா உள்ளிட்ட பொருட்கள் கடத்தி கொண்டு வரப்பட்டு கடைகளுக்கு சப்ளை செய்யப்படுவதாக வீரவநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் நேற்று நள்ளிரவில் போலீசார் அப்பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தினர். பின்னர் கண்டெய்னரை திறந்து சோதனை செய்தபோது அதில் எந்த பொருட்களும் இல்லாமல் காலியாக இருந்தது.

    பின்னர் அதனை ஓட்டி வந்த டிரைவரிடம் விசாரித்தபோது, கரூர் மாவட்டம் சமத்துவபுரத்தை சேர்ந்த சிவக்குமார்(வயது 46) என்பது தெரியவந்தது. ஆனாலும் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், கண்டெய்னரை மீண்டும் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அதில் கதவு போன்ற அமைப்பு இருந்தது.

    உடனே போலீசார் அதனை திறந்து பார்த்தபோது அதற்குள் ஒரு கண்டெய்னர் இருந்ததும், அதில் மூட்டை மூட்டையாக புகையிலை உள்ளிட்டவை பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் சிவக்குமாரை கைது செய்தனர். மேலும் லாரி, 600 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிவக்குமாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புகையிலை பொருட்களை எங்கிருந்து ஏற்றி வந்தார்? இங்கு யாருக்கு சப்ளை செய்வதற்காக கொண்டு வந்தார்? இதில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? என்பது குறித்து போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 140 கிலோ சிக்கியது
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் அரசால் தடை செய்யபட்ட குட்கா பான்மசாலா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யபட்டு வருவதாக மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தன.

    மேலும் இது சம்மந்தமாக ஆரணி டி.எஸ்.பி ரவிசந்திரன் தலைமையில் தனிப்படை அமைத்து அரசால் தடைசெய்யபட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யபடுகிறதா என போலீசார் கடைகளில் சோதனை நடத்தினர்.

    மேலும் ஆரணி அருகே முள்ளண்டிரம் கிராமத்தை சேர்ந்த மரகதம்மாள் என்பவரின் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 7லட்சம் மதிப்பிலான 16 மூட்டையில் 140 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மரக தம்மாளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் சோதனையில் சிக்கியது
    • 5 பேர் கைது

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் போதை பொருட்களை ஒழிப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் ஆங்காங்கே தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    நேற்று ஆம்பூர் டவுன் பகுதியில் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனின் தனிப்படை போலீசார் கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை செய்தனர். அப்போது ஆம்பூர் கே எம் நகர் பகுதியில் குட்கா பொருட்களை பதுக்கி விற்பனை செய்த 5 கடைகளில் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இது தொடர்பாக 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    • யார் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சக்தி கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கையாக தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது கடைகள் மற்றும் சாலை ஓரங்களில் விற்பனை செய்யப்படும் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், திட்டக்குடி, சேத்தியாத்தோப்பு, சிதம்பரம் ஆகிய உட்கோட்டத்தில் போலீசார் திடீரென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது நெல்லிக்குப்பம், கடலூர் புதுநகர், முதுநகர், விருத்தாச்சலம் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் மாவட்ட முழுவதும் விற்பனை செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ஒரே நாளில் மாவட்ட முழுவதும் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாக 9 பெண்கள் உட்பட 40 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 30 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்தனர். மேலும் மாவட்டம் முழுவதும் இது போன்ற நடவடிக்கையில் யார் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சக்தி கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • வாலிபர்கள் 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்
    • பெரியநாயக்கன்பாளையம் முழுவதும் தீவிர ரோந்து சென்றனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை பெரிய நாயக்கன் பாளையம் போலீசாருக்கு அந்த பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் தாமோதரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுக நயினார், ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் வீரமணி, பாலசுப்பிரமணி, கோகுலகண்ணன், தனிபிரிவு போலீஸ் கங்காதரவிஜயகுமார் ஆகியோர் பெரிய நாயக்கன் பாளையம் முழுவதும் தீவிர ரோந்து சென்றனர்.

    அப்போது குப்பிச்சிபாளையம் அருகே உள்ள வளம் மீட்பு பூங்கா குப்பை கிடங்கு அருகே ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 2 கார்கள் இருந்தது. இதனை பார்த்த போலீசார் அதன் அருகே சென்று அங்கிருந்த 3 வாலிபர்களிடம் விசாரித்தனர்.

    அவர்கள் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அங்கிருந்த காரை பரிசோதனை செய்தனர். அதில் காரில் மூட்டை மூட்டையாக ரூ. 5 லட்சம் மதிப்பிலான 544 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணையில் அவர்கள் மேட்டுப்பாளையம் பழைய சந்தை ரோட்டை சேர்ந்த முகமது யூசப் (வயது 31), தாசாம்பாளையம் பகுதியை சேர்ந்த தாஜிதின் (42), கருமமேடு தாமஸ் (33) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இதில் தாஜிதின் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 டன் குட்கா கடத்தி வந்த கும்பலில் இருந்து தப்பிய முக்கிய குற்றவாளி என்பதும், இவர்கள் குட்காவை வடநாட்டில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து மேட்டுப்பாளையம், காரமடை, பெரிய நாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனைக்கு கொடுத்து வந்ததும் தெரிவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

    • கைப்பற்றப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். கைதான 5பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
    • கைதான இம்ரான்கான் நண்பர் மூலம் பெங்களூரில் இருந்து குட்கா மற்றும் புகையிலை பொருட்களை மொத்தமாக வாங்கி ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    இந்த நிலையில் துணைக் கண்காணிப்பாளர் கணேஷ்குமார் உத்தரவின் பேரில் தேவகோட்டை உட்கோட்டத்தில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேவகோட்டை நகரில் காவல்துறை ஆய்வாளர் சரவணன் தலைமையில் போலீசார் பெட்டிக்கடை முதல் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் வரை அனைத்து கடைகளிலும் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பவர்களை கைது செய்து வருகிறார். இவர்களுக்கு மொத்த விற்பனை செய்யும் வியாபாரிகளை சில நாட்களாக போலீசார் விசாரணை நடத்தினர்.

    தேவகோட்டை நகரில் பெட்டிக்கடையில் சில்லறை விற்பனை செய்து வந்த ரகுநாதபுரம் மேற்கு தெருவைச் சேர்ந்த ராமு மகன் முருகன் (36), கல்லூரி நகர் இடையன்வயல் பகுதியை சேர்ந்த நெல்லியப்பன் மகன் செந்தில் (47) இருவரையும் பிடித்து இன்ஸ்பெக்டர் சரவணன் விசாரணை நடத்தினார். அப்போது தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை மொத்த விற்பனை செய்தவர்கள் பற்றிய விபரம் தெரிய வந்தது.

    இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் பரகத்தெருவை சேர்ந்த அன்வர் மகன் செய்யது இம்ரான் கான் (29), பெத்த தேவன்கோட்டை கருப்பையா மகன் வாசு (50), மேட்டு கற்களத்தூர் பாலுசாமி மகன் கார்த்தியராசு ஆகியோரை மடக்கி பிடித்தனர்.

    மேலும் இவர்கள் குடோனில் பதுக்கி வைத்திருந்த 400 கிலோ குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களையும், ஆட்டோ மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

    கைப்பற்றப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். கைதான 5பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    கைதான இம்ரான்கான் நண்பர் மூலம் பெங்களூரில் இருந்து குட்கா மற்றும் புகையிலை பொருட்களை மொத்தமாக வாங்கி ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    • 5 கிலோ கஞ்சாவை போலீசார் பிடித்தனர்.
    • லாரியை சோதனையிட்டபோது குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது.

     சூலூர்,

    சூலூர் அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து கோவை நோக்கி வந்த லாரி ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனை அடுத்து கருமத்தம்பட்டி பிருந்தாவன் நகர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுப ட்ட னர். அப்போது அவ்வழியாக வந்த லாரி ஒன்றை போலீசார் சோதனை யிட்டனர்.

    அப்போது லாரி டிரைவர் கீழே இறங்கி ஓட முயற்சித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் டிரைவரை துரத்தி பிடித்து விசாரித்தனர். மேலும் லாரியை சோதனை யிட்டபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    விசாரணையில் டிரைவர் கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த பழனிசாமி என்பது தெரியவந்தது. கடந்த 2 ஆண்டுகளாக டிராவல்ஸ் நிறுவ னத்தில் டிரைவராக பணியாற்றி உள்ளார். தற்போது பணத்துக்கு ஆசைப்பட்டு அவர் பெங்களூருவில் இருந்து கோவைக்கு குட்கா பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து ஈஸ்வரவனை போலீசார் சூலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். அவர் கடத்தி வந்த 120 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

    சூலூர் அருகே பாரதிபுரத்தில் வசிப்பவர் செல்வம்.இவர் அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு குட்கா சப்ளை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சூலூர் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் போலீசார் பாரதிபுரம் பகுதியில் ரகசிய சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது காரில் செல்வம் (35) குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவர் கடத்தி வந்த 100 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சூலூர் அருகே தென்ன ம்பாளையம் சாலையில் பொத்தியாம் பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சூலூர் போலீசார் சப்-இன்ஸ்பெ க்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் பொத்தியாம் பாளையம் பகுதியில் தீவிர வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது ஒரு இளைஞர் இருசக்கர வாகனத்தில் வேகமாக அவ்வழியே வந்தார். அவரை நிறுத்தி சோதனை செய்தபோது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த 5 கிலோ கஞ்சா வை போலீசார் பிடித்தனர். விசாரணையில அவர் வாக ரையாம் பாளையம் பகுதி யைச் சேர்ந்த ஸ்ரீதரன் (19) என தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். 

    • விழுப்புரம் அருகே குடோனில் பதுக்கிய ரூ. 5 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது
    • விழுப்புரம் மகாத்மா காந்தி சாலையில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான குடோனில் சோதனை செய்தனர்.

    விழுப்புரம், அக்.9-

    விழுப்புரம் மற்றும் விழுப்புரத்தை சுற்றி குட்கா பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களை கொண்டு செல்வோரைப் பிடிக்க விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. உமாசங்கர் (பொறுப்பு) தலைமை யிலான போலீசார் மற்றும் தனிப்படை பிரிவு போலீசார் அமைக்கப்பட்டு தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது விழுப்புரம் மகாத்மா காந்தி சாலையில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான குடோனில் சோதனை செய்தனர்.

    அதில் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 500 கிலோ எடை கொண்ட குட்கா பான் மசாலா உள்ளிட்ட போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் இதற்கு காரணமான விழுப்புரம் கே. கே. ரோடு மாந்தோப்பு தெருவை சேர்ந்த பிரவீன்குமார் (வயது 23), கீழ்பெரும்பாக்கம் மீனாட்சி ரைஸ் மில் தெருவை சேர்ந்த சுல்தான் மைதீன் ஆகிய 2 பேரை பேரை கைது செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி தலைமையிலான போலீசார் மணிகட்டி பொட்டல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • கைது செய்யப்பட்டவர்கள் வேறு எங்கெல்லாம் குட்கா புகையிலை சப்ளை செய்தார்கள் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    என்.ஜி.ஓ. காலனி:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா குட்கா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கஞ்சா, குட்கா விற்பனையை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2 வாரங்களில் மட்டும் 25-க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகளும், குட்கா வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி தலைமையிலான போலீசார் நேற்று மணிகட்டி பொட்டல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.

    சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த மூட்டைகளை சோதனை செய்தனர். அப்போது அதில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை இருந்தது. இதையடுத்து போலீசார் மோட்டார் சைக்கிளில் இருந்த 70 கிலோ குட்கா புகையிலையை பறிமுதல் செய்தனர். பிடிபட்டவர்களிடமிருந்து ரூ.42 ஆயிரம் பணமும் சிக்கியது.

    இதை தொடர்ந்து 3 பேரையும் சுசீந்திரம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பிடிபட்டவர்கள் பனச்ச மூட்டை சேர்ந்த அபு முகமது (வயது 44), மணிக்கட்டி பொட்டலை சேர்ந்த பெரியசாமி (28), குஞ்சன்விளையைச் சேர்ந்த சுதாகர் (29) என்பது தெரிய வந்தது.

    இவர்களிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அபு முகமது, பெரியசாமி, சுதாகர், ஆகிய மூன்று பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விசாரணையில் இவர்கள் கேரளாவில் இருந்து குட்கா புகையிலை கொண்டு வந்து குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சப்ளை செய்தது தெரிய வந்துள்ளது.

    கைது செய்யப்பட்டவர்கள் வேறு எங்கெல்லாம் குட்கா புகையிலை சப்ளை செய்தார்கள் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ×