என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவள்ளூரில் வீட்டில் குட்கா பதுக்கி விற்றவர் கைது
- போலீசார் திருவள்ளூர் சத்தியமூர்த்தி தெருவில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
- ஒரு வீட்டில் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை பதுக்கி விற்பது தெரிந்தது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி, சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் மற்றும் போலீசார் திருவள்ளூர் சத்தியமூர்த்தி தெருவில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை பதுக்கி விற்பது தெரிந்தது.
இதையடுத்து அங்கிருந்த தமிம் அன்சாரி என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story






