search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடைகளில் விற்பனை செய்த ரூ.1 லட்சம் குட்கா பறிமுதல்
    X

    கடைகளில் விற்பனை செய்த ரூ.1 லட்சம் குட்கா பறிமுதல்

    • போலீசார் சோதனையில் சிக்கியது
    • 5 பேர் கைது

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் போதை பொருட்களை ஒழிப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் ஆங்காங்கே தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    நேற்று ஆம்பூர் டவுன் பகுதியில் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனின் தனிப்படை போலீசார் கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை செய்தனர். அப்போது ஆம்பூர் கே எம் நகர் பகுதியில் குட்கா பொருட்களை பதுக்கி விற்பனை செய்த 5 கடைகளில் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இது தொடர்பாக 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×