search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராமம்"

    • திருக்காட்டுப்பள்ளி சுற்று வட்டார கிராமங்களுக்கு சென்று பிரச்சார பணிகளில் ஈடுபடும்.
    • பூதலூரில் பிரச்சார வாகனம் மேற்கொள்ளப்பட்டது.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் இருந்து அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு பிரச்சார வாகனம் துவக்க விழா பூதலூர் வட்டாரத்தில் பூதலூர் வட்டார கல்வி அலுவலர்கள் ரமாபிரபா, கோமதி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி தலைவர் மெய்யழகன், பேரூராட்சி செயல் அலுவலர் நெடுஞ்செழியன், பேரூராட்சி துணைத் தலைவர் ரமணி, பேரூராட்சி கவுன்சிலர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

    தமிழக அரசு பள்ளிகளில் உள்ள வசதிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் மற்றும் இட ஒதுக்கீடு பயன்பாடுகள் ஆகியவற்றை விளக்கும் பிரச்சார வாகனம் திருக்காட்டுப்பள்ளி சுற்று வட்டார கிராமங்களுக்கு சென்று பிரச்சார பணிகளில் ஈடுபடும். திருக்காட்டுப்பள்ளி தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் முருகானந்தம் வரவேற்று, நன்றி கூறினார்.

    இதேபோல பூதலூரில் பிரச்சார வாகனம் பிரச்சாரம் மேற்கொண்டது.

    • ஜி-20 உச்சிமாநாடு விழிப்புணர்வு என முப்பெரும் விழா நடைபெற்றது.
    • 22 கிராமங்களை சேர்ந்த 35 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ. 2.75 கோடி கடனுதவி.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கருப்பூர் கவ்டெசி தொண்டு நிறுவன த்தில் டாக்டர் அம்பேத்கரின் 132 -ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடனுதவி வழங்கும் விழா ஜி20 உச்சிமாநாடு விழிப்புணர்வு என முப்பெரும் விழா நடைபெற்றது.

    வருகை தந்த அனைவரையும் கவ்டெசி தொண்டு நிறுவன தலைவர் மாவடியான் வரவேற்றார்.மதுரை பேராசிரியர் சீனிவாசன் தலைமை தாங்கி தஞ்சாவூர், கரந்தை, திருச்சென்னம்பூண்டி, பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, மைக்கேல்பட்டி, மாத்தூர் உள்ளிட்ட 22- கிராமங்களைச் சார்ந்த 35 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ2.75 கோடி வங்கி மதிப்பிலான கடனு தவிகளை வழங்கி பேசினார்.

    விழாவில் பூண்டி வெங்கடேசன், பூதலூர், தங்க.கென்னடி, திருப்பூந்துருத்தி சிவக்குமார், ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

    விழா நிகழ்ச்சியை கவ்டெசி நிறுவன செயலாளர் கருணாமூர்த்தி தொகுத்து வழங்கினார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கவ்டெசி நிறுவன பணியாளர்கள் கோமதி, சுபாஷினி, கனேஷ்வரி, ஆர்த்தி, ரூபன் ஆகியோர் செய்திருந்தனர்.

    விழா நிறைவில் வினோபாஜி உழவர் உற்பத்தியாளர் நிறுவன முதன்மை செயல் அலுவலர் பாஸ்கர் நன்றி கூறினார்.

    • முகாமில், 3000-க்கும் மேற்பட்டோர் மின் இணைப்பை ஆதாருடன் எவ்வித கட்டணம் இல்லாமல் இணைத்து கொண்டனர்.
    • வரும் வாரத்தில் விடுபட்டுள்ள கிராமங்களில் முகாம் நடைபெறும்.

    பூதலூர்:

    செங்கிப்பட்டி-பூதலூர் சாலையில் புதுப்பட்டியில் இயங்கி வரும் ரம்யா சத்தியநாதன் பாலிடெக்னிக் மற்றும் கல்வியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் வழியாக மூலமாக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முகாம் பூதலூர் வட்டத்தில் உள்ள 20 கிராமங்களில் நடைபெற்றது. இம்முகாமில் கிராம மக்கள் 3000-க்கும் மேற்பட்டோர் தங்கள் மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் எவ்வித கட்டணம் இல்லாமல் இணைத்து கொண்டனர்.

    முகாமில் கல்லூரியின் தலைவர் பொறியாளர் சத்தியநாதன், கல்லூரியின் செயலர்.ஜெனட் ரம்யா, பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர்.குமரன், பாலிடெக்னிக் கல்லூரியின் துணை முதல்வர் மோகன், கல்வியியல் கல்லூரியின் முதல்வர் அறிவுமணி, கல்வியியல் கல்லூரியின் துணை முதல்வர் கருப்பையா, பேராசிரியர்கள், கல்லூரியின் மாணவ, மாணவிகள் ஆகியோர் முகாம் சிறப்புற நடைபெற உதவி புரிந்தனர்.அனைத்து ஊர்களிலும் உள்ள பஞ்சாயத்து தலைவ ர்கள் முன்னிலையில் முகாம் தொடங்கிநடந்தது.

    வரும் வாரத்திலும் விடுபட்டு உள்ள கிராமங்களில்முகாம் நடைபெறும் என்று தெரிவித்தனர்.

    • 32 மீனவ கிராமங்களில் 1000 நாட்டு படகுகள் உள்ளது.
    • நாட்டுப்படகு மீனவர்கள் 5000 பேர் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    பேராவூரணி:

    வங்கக்கடலில் உருவாகி யுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என தஞ்சை மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர்சிவகுமார் எச்சரிக்கை விடுத்தார்.

    இதனை தொடர்ந்து 3 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    துறைமு கத்தில் பாதுகா ப்பாக படகுகள் நிறுத்தி வைக்கப்ப ட்டுள்ளன.

    மல்லிபட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் பகுதிகளில் சுமார் 146 விசைப்படகுகள் உள்ளன.

    கொள்ளுக்காடு புதுப்பட்டினம், மல்லிப ட்டினம், பிள்ளையார் திடல், சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, காரங்குடா, மந்திரிபட்டினம், செம்பியன் மாதேவிபட்டினம், அண்ணாநகர் புது தெரு, கணேசபுரம் உள்ளிட்ட 32 மீனவ கிராமங்களில் 1000 நாட்டுப் படகுகள் உள்ளது.

    விசைப்படகு மீனவர்கள் திங்கள், புதன், சனிக்கிழமைகளில் மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர்.

    மற்ற நாட்களில் நாட்டுப் படகு மீனவர்கள் மீன் பிடித்து தொழில் செய்து வந்தனர்.

    இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று சனிக்கிழமை 3 -வது நாளாக விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் 5000 பேர் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    • அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தில் கிராமங்களில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டன.
    • மைதானங்கள் பராமரிப்புக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    திருப்பூர் :

    தமிழகத்தில் கிராமப்புறங்களில் மாணவா்கள் இளைஞா்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தவும், உடற்பயிற்சிகள் செய்வதற்கான ஆா்வத்தை ஏற்படுத்தவும் கடந்த 2006ஆம் ஆண்டுதி.மு.க. ஆட்சிக் காலத்தில் அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தில் கிராமங்களில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டு அடிப்படை உடற்பயிற்சிகள் செய்வதற்கான உபகரணங்கள், கபடி, வாலிபால் விளையாடுவதற்கான கட்டமைப்பு மற்றும் குழந்தைகளுக்கான சறுக்கு, ஊஞ்சல் உள்ளிட்ட உபகரணங்கள் அமைக்கப்பட்டன.

    இந்த விளையாட்டு சாதனங்கள் ஊராட்சி நிா்வாகத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டன. மைதானங்கள் பராமரிப்புக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னா் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மைதானங்கள் பராமரிக்கப்படவில்லை.

    பின்னா் கடந்த 2020ம் ஆண்டில் அம்மா விளையாட்டு மேம்பாட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் கிராமம்தோறும் ஊரக வளா்ச்சித் துறை மற்றும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மைதானங்கள் மேம்பாடு செய்யப்பட்டது.

    தற்போது, அனைத்து கிராமங்களிலும் மைதானங்கள் பயன்பாடு இல்லாமல் புதா் மண்டி காட்சியளிக்கிறது. மேலும் விளையாட்டு பயிற்சி உபகரணங்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறிவிட்டன. ஆக்கிரமிப்பால் பல இடங்களில் மைதானமே இல்லாத நிலை உள்ளது. தற்போது, விளையாட்டில் சாதிக்க நினைப்பவா்களுக்கு கிராமங்களில் எவ்வித வசதியும் இல்லை. எனவே கிராமப்புற மைதானங்களை பராமரித்து உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்க வேண்டும். இதற்கு சிறப்புக் குழு அமைத்து மைதானம், உபகரணங்கள் பராமரிப்பை குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். கிராமம்வாரியாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தி இளைஞா்களை ஊக்குவிக்க வேண்டும். இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    • கொடிப்பங்கு கிராமத்தில் புதிய படித்துறையை கட்டியுள்ளனர்.
    • 15-வது நிதிக்குழு மானியத்தில் இரட்டை ஊரணியில் 2 படித்துறை கட்டியுள்ளனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே திருவாடானை பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட கொடிப்பங்கு கிராமமானது, கொடிப் பங்கு, நாரேந்தல், கருத்தப்பத்தை, செங்காலன் வயல், சவேரியார்பட்டினம், மண்மலக்கரை, ராஜாக்க வயல், சிறுதவயல், அகரவயல், வேளாங்குடி, விளக்கனேந்தல் ஆகிய 11 குக்கிராமங்கள் உள்ளன.

    இந்த பகுதி மக்களின் தேவைக்கு போதிய நிதி வழங்குமாறு பஞ்சாயத்து தலைவர் சாந்தி ரவிச்சந்திரன் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

    இந்த நிலையில் தற்போதைய நிதியைக் கொண்டு மக்களின் அத்தியாவசிய தேவையை நிறைவேற்றும் வகையில், 15-வது நிதிக்குழு மானியத்தில் இரட்டை ஊரணியில் 2 படித்துறை கட்டியுள்ளனர். மழை காலங்களில் இந்த ஊரணிக்குள் பொதுமக்கள் இறங்கும் ேபாது தவறி விழுந்த நிலையில் இதுவரை படித்துறை இல்லாத இந்த ஊரணிக்கு 2 படித்துறை கட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், கிராமங்களில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
    • 2020ல் அம்மா விளையாட்டு மேம்பாட்டுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    பல்லடம் :

    தமிழகத்தில் கிராமபுறங்களில் மாணவர்கள், இளைஞர்கள் விளையாட்டுத்திறனை மேம்படுத்தவும்,உடற்பயிற்சிகள் செய்வதற்கான ஆர்வம் ஏற்படுத்தவும், கடந்த 2006 தி.மு.க., ஆட்சிக்காலத்தில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், கிராமங்களில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டு, அடிப்படை உடற்பயிற்சிகள் செய்வதற்கான உபகரணங்கள், கபடி, வாலிபால் விளையாடுவதற்கான கட்டமைப்பு மற்றும் குழந்தைகளுக்கான சறுக்கு, ஊஞ்சல் உள்ளிட்ட உபகரணங்கள் அமைக்கப்பட்டது.

    மேலும் பல்வேறு விளையாட்டு சாதனங்களும், ஊராட்சி நிர்வாகத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது. மைதானங்கள் பராமரிப்புக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இந்த திட்டம் சில ஆண்டுகள் செயல்பாட்டில் இருந்தது. அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில், மைதானங்கள் பராமரிப்பு குறித்து சில ஆண்டுகள் கண்டுகொள்ளப்படவில்லை. பின்னர் கடந்த, 2020ல் அம்மா விளையாட்டு மேம்பாட்டுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், கிராமம்தோறும் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மைதானங்கள் மேம்பாடு செய்யப்பட்டது.

    தற்போது அனைத்து கிராமங்களிலும் மைதானங்கள் பயன்பாடு இல்லாமல் புதர் மண்டி மாயமாகி வருகிறது.

    மேலும் விளையாட்டு, பயிற்சி உபகரணங்கள், துருப்பிடித்து, பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி விட்டது. ஆக்கிரமிப்பால் பல இடங்களில் மைதானமே இல்லாத நிலை உள்ளது. தற்போது கிராமப்புற இளைஞர்களிடமும், விளையாட்டு ஆர்வம் வெகுவாக குறைந்து விட்டது. பெருந்தொற்று காலத்துக்குப்பிறகு, மொபைல்போனில் மூழ்கி, அடிப்படை உடற்பயிற்சிக்கு கூட இளைஞர்களும், மாணவர்களும், முக்கியத்துவம் அளிப்பதில்லை.அதே போல், விளையாட்டில், சாதிக்க நினைப்பவர்களுக்கும், கிராமங்களில், எவ்வித வசதியும் இல்லை. எனவே, கிராமப்புற மைதானங்களை பராமரித்து, உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்க வேண்டும். சிறப்புக்குழு அமைத்து, மைதானம், உபகரணங்கள் பராமரிப்பை ஒப்படைக்க வேண்டும்.கிராமம் வாரியாக விளையாட்டு போட்டிகள் நடத்தி இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும். இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • பொங்கலூர் ஊராட்சி தேவனாம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 3,000-க்கு மேற்பட்டோர் வாசித்து வருகின்றனர்.
    • நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஊராட்சி தேவனாம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ஐயப்பா நகர், அம்மன் நகர், என்.என்.புதூர், புதுப்பாளையம், காட்டுப்பாளையம் மற்றும் சின்னக்காட்டு பாளையம் பகுதிகளில் சுமார் 3,000-க்கு மேற்பட்டோர் வாசித்து வருகின்றனர். இங்கு விவசாயம், கால்நடை வளர்ப்பு, கறிக்கோழி பண்ணைகள், விசைத்தறிக்கூடங்கள் உள்ளன. இப்பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் பல்லடம், திருப்பூர், கோவை ஆகிய வெளியூர்களுக்கு சென்று பயின்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டதால் மக்கள் தங்கள் கையில் வைத்துள்ள செல்போன்களை காட்சி பொருளாகவும் விளையாட்டு பொருளாகவும் மட்டுமே வைத்திருக்கும் நிலை உள்ளது. இதன் காரணமாக அவசர உதவி எண்கள் காவல்துறை எண் 100, 108 ஆம்புலன்ஸ் சேவை தீயணைப்புத்துறை சேவை 101 ஆகியவற்றை பெற முடியாமலும் ஸ்மார்ட் கார்டு எனப்படும் குடும்ப அட்டையை கொண்டு கணினி மயமாக்கப்பட்ட நியாய விலை கடைகளில் குடும்பங்களுக்கு தேவையான மாதாந்திர அரிசி, கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவற்றை பெற முடியாமலும் அங்குள்ள தபால் நிலையத்தில் இணையதள சேவை முடங்கி இருப்பதால் விரைவு தபால் மற்றும் மத்திய மாநில அரசுகள் வழங்கும் 100 நாள் வேலை திட்டம் பணப்பரிவர்த்தனை ஆகியவற்றை மேற்கொள்ள முடியாமலும் மூன்றாண்டுகளுக்கும் மேலாக கிராமவாசிகள் தவித்து வருகின்றனர். மேலும் கடந்த இருமுறை கொரோனா தொற்று காலகட்டங்களில் இணைய வழி கல்வி சேவையை கல்வித்துறை அமல்படுத்திய போது இப்பகுதிகளை சேர்ந்த மாணவ மாணவியர் தங்களிடம் செல்போன்கள் இருந்தும் நெட்வொர்க் கிடைக்காத காரணத்தால் இணையவழிக் கல்வி சேவையில் பங்கு பெற முடியவில்லை. இதன் காரணமாக வெளியூர்களில் உள்ள உறவினர் வீடுகள் மற்றும் வாடகைக்கு வீடு பிடித்து தங்கி கல்வி பயின்று வந்துள்ளனர். இதே நிலை தற்போது வரை தொடர்வதாகவும் அப்பகுதியினர் வேதனை யுடன் கூறுகின்றனர். இந்நிலையில் வம்சம் திரைப்படத்தில் செல்போன் டவர் கிடைக்காததால் மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டு 'ஹலோ' என பேசுவது போல இன்றளவும் மாணவர்கள் பலரும் அப்பகுதியில் உள்ள உயரமான மரங்களின் மீது ஏறி அமர்ந்து கொண்டு பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியைகளுடன் பேசும் அவல நிலையும் தொடர்கதையாக நீடிக்கிறது. இதனிடையே அப்பகுதியைச் சேர்ந்த சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் சிலர் பாரத பிரதமர்,முதல்வர் முதல் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வரை பலமுறை புகார்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை என கூறப்படும் நிலையில் அப்பகுதி மக்களின் அவதியும் தொடர்கிறது. மேலும் பிரதான தொழிலான விவசாயத்தில் பலரும் ஈடுபட்டுள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகளின் வேளாண் கடன், பயிர் கடன் உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும் தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டு இருப்பதால் பெற முடியாமல் விவசாயிகளின் அவதியும் தொடர்வதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.

    மேலும் இணைய சேவை கிடைக்காமல் ஐ.டி., கம்பெனிகளில் வேலை செய்பவர்கள் பிராட் பேன்ட் மற்றும் 20 உயரத்தில் கம்பி அமைத்து அதில் டாங்கிள் பொருத்தி இணையதள பணிகளை செய்வதாகவும் கூறுகின்றனர். எனவே உடனடியாக மத்திய மாநில அரசுகள் தேவனம்பா ளையம் கிராமத்தில் தொலைத்தொடர்பு சேவையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும், தொடர்ந்து காலதாமதப்படுத்தினால் தங்களுக்கு மத்திய,மாநில அரசுகள் வழங்கிய குடும்ப அட்டை வாக்காளர் அட்டை ஆதார் அட்டை களை திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் திரும்ப ஒப்படைத்து விட்டு அங்கேயே குடியேறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    • எங்கள் கிராமத்தில் வேலை இல்லாமல் அவதிப்பட்டோம்.
    • உள்ளூர் விவசாய தொழிலாளர்கள் வேலையிழந்து பாதிக்கும்படும் அபாயநிலை உள்ளது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, ஆலங்குடி அருகே பிராந்தை கிராமத்தில் தற்போது சம்பா நடவு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    இப்பகுதியில் நாற்று நடும் பணி உள்பட விவசாய பணிக்காக மேற்கு வங்காளம் மாநிலத்தில் இருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு விவசாய பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    உள்ளூர் பகுதியில் ஆள்பற்றாகுறை, கூலி உயர்வு போன்ற காரணமாக நாற்று நடும்பணி உள்பட விவசாய பணிக்கு மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து 15 தொழிலாளர்கள் வரவழக்கப்பட்டு விவசாயிகள் இப்பகுதியில் சம்பா விவசாய பணிகளை செய்து வருகின்றனர்.

    வடமாநில தொழிலாளர்கள் வருகை காரணமாக விவசாய நடவு செலவு 30 சதவீதம் வரை குறைவதாக தெரிவித்தனர்.

    வடமாநில தொழிலாளர்கள் வருகை காரணமாக உள்ளூர் விவசாய தொழிலாளர்கள் வேலையிழந்து பாதிக்கும்படும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து வடமாநில தொழிலாளர் கூறும்போது:-

    எங்கள் கிராமத்தில் வேலை இல்லாததால் அவதிப்பட்டோம்.

    அதனால் இங்கே வந்து வேலை செய்கிறோம்.

    கடந்த 15 நாட்களாக வேலை செய்கிறோம்.

    இன்னும் இங்கு ஒரு மாதம் வேலை இருக்கு. அதன் பரிறகு சொந்த ஊருக்கு கிளம்பி விடுவோம் என்றனர்.

    • வேளாண் பட்டப்படிப்பு இறுதி ஆண்டு பயின்று வரும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • மாணவிகள் மரக்கன்றுகள் மற்றும் நெல் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கினர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே சோதியக்குடி கிராமத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புல மாணவிகள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ் தொடக்கவிழா நடைபெற்றது.

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புலத்தில் வேளாண் பட்டப்படிப்பு இறுதிஆண்டு பயின்று வரும், மாணவ-மாணவிகள் வேளாண் தொழிலில் நேரடி அனுபவம் பெரும் பொருட்டு கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    அதன்படி புத்தூர் அருகேயுள்ள சோதியக்குடி கிராமத்தில் தங்கிபயிற்சிபெறும் திட்டம் தொடக்கவிழா ஊராட்சி மன்ற தலைவர் கே.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.

    அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் டி.ஜெயசீலன் மற்றும் மணிவண்ணன் சிறப்புறையாற்றினர். தொடர்ந்து மாணவிகள் மரக்கன்றுகள், நெல் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கினர்.

    விழாவில் ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன், விவசாயிகள் சக்திவேல், பிரதாமசந்திரன், மகாலிங்கம் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    வேளாண் புல இறுதியாண்டு பயிலும் 16 மாணவிகள் 75 நாட்கள் அக்கிராமத்தில் தங்கி வேளாண் பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என நேரடி அனுபவங்களை தெரிந்து கொள்ள உள்ளனர்.

    • மலைகளை உடைத்து அவைகளை அரைத்து மணல் போல் விற்பனை செய்கின்றனர்.
    • கிராமங்களில் கிடைக்கும் மணல்களை எடுத்து வேதாரண்யம் பகுதிகளில் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் வண்டுவாஞ்சேரி, தாணிக்கோட்டகம், மணக்காடு, கரியாப்பட்டினம், செட்டிபுலம், செம்போடை, புஷ்பவனம், பெரியகுத்தகை, நெய்விளக்கு ஆகிய கிராம ங்களில் சிமெண்ட்டுடன் கலக்கும் வகையிலான பெருமணல்கள் உள்ளன.

    இவைகளையே, அப்பகுதி மக்கள் காலங்காலமாக பயன்படுத்தி வந்தனர். ஒரு டிராக்டர் ரூ.1500-க்கு கிடைத்து வந்தது.

    ஆனால் தற்போது இவைகளை பயன்படுத்தக்கூடாது, எடுத்தால் வழக்கு போடப்படுகிறது என அறிவிப்பு வந்தது.

    இதனால் பல கிலோ மீட்டர் தூரம் சென்று மலைகளை உடைத்து அவைகளை அரைத்து மணல் போல் விற்பனை செய்கின்றனர்.

    அவைகள் விலையும் அதிகமாகும்.எனவே, கிராமங்களில் கிடைக்கும் மணல்களை எடுத்து வேதாரண்யம் பகுதிகளில் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தால் அப்பகுதி மக்களுக்கு மிகுந்த நன்மை அளிப்பதாக இருக்கும்.

    மேலும், மணல் எடுக்கும் இடங்களில் மழைநீர் தேங்கி நிலத்தடி நீர்மட்டம் உயருமே தவிர வேறு எந்த பாதிப்பும் இருக்காது.

    எனவே, மணல் எடுக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர் இளம்பாரதி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    • ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வந்தார்
    • நாளை (16-ம் தேதி) அவர் பணிக்கு சேர வேண்டும். இந்நிலையில் இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது.

    கன்னியாகுமரி :

    கருங்கல் அருகே உள்ள உதயமார்த்தாண்டம் பிச்சவிளையை சேர்ந்தவர் சரவணன் (வயது 32).

    இவர் ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வந்தார். இவர் தனது திருமணத்திற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி விடுப்பில் ஊருக்கு வந்துள்ளார். கடந்த 21-ம் தேதி அவருக்கு திருமணம் நடைபெற்று உள்ளது. நாளை (16-ம் தேதி) அவர் பணிக்கு சேர வேண்டும். இந்நிலையில் இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது.

    இதுகுறித்து அவரது உறவினர்கள் கருங்கல் போலீசிற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு சென்ற கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருமணம் ஆன ஒரே மாதத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர் மாரடைப்பால் இறந்த சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    ×