search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "step"

    • கொடிப்பங்கு கிராமத்தில் புதிய படித்துறையை கட்டியுள்ளனர்.
    • 15-வது நிதிக்குழு மானியத்தில் இரட்டை ஊரணியில் 2 படித்துறை கட்டியுள்ளனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே திருவாடானை பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட கொடிப்பங்கு கிராமமானது, கொடிப் பங்கு, நாரேந்தல், கருத்தப்பத்தை, செங்காலன் வயல், சவேரியார்பட்டினம், மண்மலக்கரை, ராஜாக்க வயல், சிறுதவயல், அகரவயல், வேளாங்குடி, விளக்கனேந்தல் ஆகிய 11 குக்கிராமங்கள் உள்ளன.

    இந்த பகுதி மக்களின் தேவைக்கு போதிய நிதி வழங்குமாறு பஞ்சாயத்து தலைவர் சாந்தி ரவிச்சந்திரன் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

    இந்த நிலையில் தற்போதைய நிதியைக் கொண்டு மக்களின் அத்தியாவசிய தேவையை நிறைவேற்றும் வகையில், 15-வது நிதிக்குழு மானியத்தில் இரட்டை ஊரணியில் 2 படித்துறை கட்டியுள்ளனர். மழை காலங்களில் இந்த ஊரணிக்குள் பொதுமக்கள் இறங்கும் ேபாது தவறி விழுந்த நிலையில் இதுவரை படித்துறை இல்லாத இந்த ஊரணிக்கு 2 படித்துறை கட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுக்கடை அருகே தூங்குவதற்காக மாடிக்கு சென்ற தொழிலாளி திடீரென கால் தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த அடிப்பட்ட அவர் பரிதாபமாக இறந்தார்.
    நாகர்கோவில்:

    புதுக்கடையை அடுத்த மேலகளப்பாறை பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 48). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். பின்னர் தூங்குவதற்காக மாடிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். மாடி படி ஏறியபோது திடீர் என்று கால் தடுமாறி படிக்கட்டில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த படுகாயம் ஏற்பட்டது. 

    உறவினர்கள் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு  வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று ஜார்ஜ் பரிதாபமாக  இறந்தார்.

    இதுகுறித்து புதுக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ் பெக்டர் பென்சாம், சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட்ஜெயின் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×