search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாய பணியில் ஈடுபடும் வடமாநில தொழிலாளர்கள்
    X

    நாற்றுநடும் பணியில் ஈடுபட்டுள்ள வடமாநில தொழிலாளர்கள்.

    விவசாய பணியில் ஈடுபடும் வடமாநில தொழிலாளர்கள்

    • எங்கள் கிராமத்தில் வேலை இல்லாமல் அவதிப்பட்டோம்.
    • உள்ளூர் விவசாய தொழிலாளர்கள் வேலையிழந்து பாதிக்கும்படும் அபாயநிலை உள்ளது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, ஆலங்குடி அருகே பிராந்தை கிராமத்தில் தற்போது சம்பா நடவு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    இப்பகுதியில் நாற்று நடும் பணி உள்பட விவசாய பணிக்காக மேற்கு வங்காளம் மாநிலத்தில் இருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு விவசாய பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    உள்ளூர் பகுதியில் ஆள்பற்றாகுறை, கூலி உயர்வு போன்ற காரணமாக நாற்று நடும்பணி உள்பட விவசாய பணிக்கு மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து 15 தொழிலாளர்கள் வரவழக்கப்பட்டு விவசாயிகள் இப்பகுதியில் சம்பா விவசாய பணிகளை செய்து வருகின்றனர்.

    வடமாநில தொழிலாளர்கள் வருகை காரணமாக விவசாய நடவு செலவு 30 சதவீதம் வரை குறைவதாக தெரிவித்தனர்.

    வடமாநில தொழிலாளர்கள் வருகை காரணமாக உள்ளூர் விவசாய தொழிலாளர்கள் வேலையிழந்து பாதிக்கும்படும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து வடமாநில தொழிலாளர் கூறும்போது:-

    எங்கள் கிராமத்தில் வேலை இல்லாததால் அவதிப்பட்டோம்.

    அதனால் இங்கே வந்து வேலை செய்கிறோம்.

    கடந்த 15 நாட்களாக வேலை செய்கிறோம்.

    இன்னும் இங்கு ஒரு மாதம் வேலை இருக்கு. அதன் பரிறகு சொந்த ஊருக்கு கிளம்பி விடுவோம் என்றனர்.

    Next Story
    ×