search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலை உணவு திட்டம்"

    • கீழக்கரையில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
    • நகராட்சி கமிஷனர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் காலை உணவு விரிவாக்க திட்டம் புதிய கட்டிடத்தில் தொடங்கப்பட்டது. நகர் மன்ற தலைவர் செஹானஸ் ஆபிதா திட்டத்தை தொடங்கி வைத்தார். மறவர் தெரு, முத்துச்சாமிபுரம் ஆகிய பகுதிகளில் அமைந்திருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளிலும் காலை உணவு விரிவாக்க திட்டத்தை செஹானஸ் ஆபிதா தொடங்கி வைத்தார்.

    நகராட்சி கமிஷனர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். இதில் கவுன்சிலர்கள் பாதுஷா, சக்கினா பேகம், காயத்ரி, ஜெயலெட்சுமி, சூர்ய கலா, சித்திக், பைரோஸ் பாத்திமா, சேக் உசேன், பவித்ரா, கீழக்கரை நகர் தி.மு.க செயலாளர் பஷீர் அகமது, துணை செயலாளர் ஜெய்னுதீன், பொருளாளர் சித்திக், நகராட்சி சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா, பொறியாளர் அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேவகோட்டையில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
    • நகர்மன்ற தலைவர் மாணவர்களுக்கு உணவுகள் பரிமாறப்பட்டு மாணவருக்கு ஊட்டி விட்டு உணவு அருந்தினார்.

    தேவகோட்டை

    தேவகோட்டை நகராட்சியில் 6 நகராட்சி பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் மாணவ மாணவிகள் 167 பேர் பயின்று வருகின்றனர். இங்கு முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தை நகர்மன்றத்தலைவர் சுந்தரலிங்கம் தொடங்கி வைத்தார்.16-வது நகர்மன்ற தொடக்கப் பள்ளியில் நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், நகர்மன்ற துணைத்தலைவர் ரமேஷ், ஆணையாளர் பார்கவி ஆகியோர் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். நகர்மன்ற தலைவர் மாணவர்களுக்கு உணவுகள் பரிமாறப்பட்டு மாணவ- மாணவிகளுடன் அமர்ந்து அருகில் உள்ள மாணவருக்கு ஊட்டி விட்டு உணவு அருந்தினார்.

    • திருப்புவனம் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
    • 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய மேற்கு ஆரம்பப் பள்ளி மற்றும் தெற்கு ஆரம்பப் பள்ளியில் தமிழக முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை பேரூராட்சி மன்ற தலைவர் சேங்கைமாறன் தொடங்கி வைத்தார். 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராஜ், வட்டார கல்வி அலுவலர்கள் லதா, பால் பாண்டி, நகர் தி.மு.க. செயலாளர் நாகூர்கனி, பேரூராட்சி மன்ற துணை சேர்மன் ரகமத்துல்லாகான், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மாரிதாசன், கண்ணன், வேல்பாண்டி, பாலகிருஷ்ணன், ராம லட்சுமி பாலகிருஷ்ணன், பத்மாவதி முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ஒன்றிய குழு தலைவர் தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சின்னதாம்பல் செருவு ஊராட்சியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் அரசின் காலை உணவு திட்டம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜே.ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வி.பிரியா வடிவேலு, ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.குமாரி சவுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய குழு தலைவர் சித்ரா ஜனார்த்தனன் கலந்து கொண்டு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் ஆத்மா திட்ட தலைவர் புகலூர் கே.ஜனார்த்தனன், ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் டி லலிதா டேவிட் மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ராஜமார்த்தாண்டன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முத்தரசி, பாரதிராஜா, வயலட் மகேந்திரன், கோவிந்தராஜ் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் ஆசிரியர்கள் குண்டல பள்ளி ஏ.எஸ்.ராஜி சிவகுமார் ஊராட்சி செயலாளர் சி அனிதா ஃபுல் படம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அரசு ஆரம்பப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் ஜக்கனாரை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரவேணு மூன்றோடு கேசலடா பகுதியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    அவர்களுக்கு தமிழக அரசின் காலை உணவு திட்டம் வழங்கப்பட்டது. ஊராட்சி ஒன்றிய தலைவர் சுமதி மற்றும் வார்டு உறுப்பினர் மனோகரன் மற்றும் பள்ளி நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுகளை வழங்கினர்.

    • அம்மாபட்டி அரசு பள்ளியில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை மணிமாறன் தொடங்கி வைத்தார்.
    • அரசு பள்ளி மாணவர்களின் நலன் காக்கும் அரசாக தமிழக அரசு திகழ்ந்து வருகிறது என்றார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள அம்மாபட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் காலை உணவு விரிவாக்க திட்டம் தொடங்கி வைக்கப் பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் குமரேசன் தலைமை வகித்தார். துணை தலைமை யாசிரியர் பாண்டி வரவேற்றார்.

    மதுரை தெற்குமாவட்ட தி.மு.க. செயலாளர் சேடபட்டி மணிமாறன் திட்டத்தை தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு உணவு பரிமாறினார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், அரசு பள்ளி மாணவ, மாணவிகள் தற்போது படிப்பு முடித்து பெரிய பதவிகளுக்கு வருகின்றனர். மாண வர்களின் மருத்துவ படிப்புக்கு தடையாக உள்ள நீட் தேர்வினை ரத்து செய்ய தமிழக முதல்வர் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார். அரசு பள்ளி மாணவர்களின் நலன் காக்கும் அரசாக தமிழக அரசு திகழ்ந்து வருகிறது என்றார். முடிவில் ஆசிரியர் காசிமாயன் நன்றி கூறினார்.

    திருமங்கலம் ஒன்றிய செயலாளர்கள் தனபாண்டி யன், ஆலம்பட்டி சண்முகம், மாவட்ட கவுன்சிலர் ஜெய ராஜ், ஒன்றிய துணை செயலாளர் முத்துபாண்டி, தகவல் தொழில்நுட்ப மதுரை மண்டல அமைப்பா ளர் பாசபிரபு, திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத்தலைவர் ஆதவன் அதியமான், நகரப் பொரு ளாளர் சின்னச்சாமி, நகராட்சி கவுன்சிலர் திருக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • காலை உணவு விரிவாக்க திட்டத்தை நகர்மன்றத்தலைவர் தொடங்கி வைத்தார்.
    • நகராட்சி ஆணையாளர் நித்யா முன்னிலை வகித்தார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் நகராட்சியில் செங்குளம் அரசு கள்ளர் தொடக்கப் பள்ளி, முகமதுஷாபுரம் தொடக்கப்பள்ளி, வேங்கட சமுத்திரம் தொடக்கப் பள்ளி, தெற்குதெரு பள்ளி, சத்திரம் தொடக்கப்பள்ளி மற்றும் முஸ்லீம் பெண்கள் பள்ளி ஆகிய 6 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் 209 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளிகளில் காலை உணவு விரிவாக்கத் திட்டம் தொடங்கப்பட்டது. திருமங்கலம் செங்குளம் அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையாளர் நித்யா முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் ஆதவன் அதியமான், நகரப்பொருளாளர் சின்னச்சாமி, கவுன்சிலா்கள் திருக்குமார், ரம்ஜான் பேகம் ஜாகீர் உசேன், அமுதா சரவணன், நகராட்சி பொறியாளர் ரத்தினவேல், சுகாதார அலுவலர் சண்முகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சோழவந்தான் பேட்டை அரசு நிலைப்பள்ளியில் முதல் அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
    • பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம், சோழவந்தான் பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. பேரூராட்சி 1-வது வார்டு கவுன்சிலர் ஈஸ்வரி ஸ்டாலின் தலைமை வகித்து தொடங்கி வைத்து மாணவ மாணவியருக்கு உணவுகளை பரிமாறினார். பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் லலிதா பேபி வரவேற்றார். சமுதாய வள பயிற்றுனர் செல்வி, வரி தண்டலர்கள் வெங்கடேசன் கண்ணதாசன், பள்ளி மேலாண்மை குழு ரமேஷ், பேரூராட்சி பணியாளர்கள் வேணுகோபால், கவுதம் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காலை உணவு விரிவாக்க திட்டத்தை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • கிளை செயலாளர்கள் சின்னதம்பி, அமுதரசன், சீதாராமன், வைரவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் சேத்தூர் பேரூராட்சி யிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன், ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

    அதனைத்தொடர்ந்து சொக்கநாதன்புத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப் பட்ட உயர்தர (ஸ்மார்ட்) வகுப்பறையை இருவரும் தொடங்கி வைத்தனர்.

    விழாவில் தலைமை ஆசிரியர் லட்சுமி, சேத்தூர் சேர்மன் பாலசுப்பிர மணியன், ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்த குமார், ராமமூர்த்தி செயல் அலுவலர் சந்திராகலா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், துணை சேர்மன்கள் துரை கற்பக ராஜ், காளீஸ்வரி, மாரிச் செல்வம், ஒன்றிய துணை செயலாளர் குமார், கிளை செயலாளர்கள் சின்னதம்பி, அமுதரசன், சீதாராமன், வைரவன், மகளிரணி சொர்ணம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கொடைரோடு அருகேயுள்ள பள்ளபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்ட தொடக்க விழா நடைபெற்றது.
    • சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு காலை உணவுகளை வழங்கி பேசினார்.

    கொடைரோடு:

    கொடைரோடு அருகேயுள்ள பள்ளபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. நிலக்கோட்டை தெற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.பள்ளித் தலைமை ஆசிரியை ஆனந்தகுமாரி வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு காலை உணவுகளை வழங்கி பேசினார். மேலும் பள்ளபட்டி, மெட்டூர், ஊத்துப்பட்டி பகுதியில் நேர, முழு நேர ரேசன் கடைகளை வேலுச்சாமி எம்.பி திறந்து வைத்தார். இந்த விழாவில் நிலக்கோட்டை தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் சவுந்திரபாண்டியன், ஒன்றிய அவைத் தலைவர் அழகர்சாமி, ஒன்றிய கவுன்சிலர் லலிதாமணிகண்டன், பள்ளபட்டி ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சதீஸ்குமார், ஒன்றிய துணைச் செயலாளர்கள் நெடுமாறன், வெள்ளிமலை,தி.மு.க. நிர்வாகிகள் கணேசன், ராஜேந்திரன், கருப்பு, பாண்டி மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. நிர்வாகிகள்,பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் செயல்படுத்தபட்டது.

    மங்கலம்:

    முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட சின்னப்புத்தூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அக்ரஹாரப்புதூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மங்கலம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, எம்.செட்டிபாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பின்னர் பள்ளிக்குழந்தைகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் தம்பணன், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜானகி எபிசியண்ட்மணி, மாவட்ட பிரதிநிதி ரவிச்சந்திரன், ஒன்றிய பிரதிநிதி அப்துல்பாரி, திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது ஜீனைத், மங்கலம் ஊராட்சி மன்ற 9-வது வார்டு உறுப்பினர் முகமது இத்ரீஸ், முன்னாள் மாணவரணி துணை அமைப்பாளர் சுரேஷ், மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களான ரபிதீன், ஜன்னத்துல்பிரதௌஸ், அர்ஜூனன், மசூதாபேகம் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள்,பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேரடி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் அதற்கான திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.
    • பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு திட்டத்தை துவக்கி வைத்தார்.

    பொன்னேரி:

    தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தமிழகம் முழுவதும் தொடங்கி வைத்ததையொட்டி அதன் தொடர்ச்சியாக மீஞ்சூர் தேரடி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் அதற்கான திட்டம் தொடக்க விழா நடை பெற்றது.

    இதில் பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு திட்டத்தை துவக்கி வைத்தார் இதில் கூடுதல் ஆட்சியர், சுபபுத்திரா சப் கலெக்டர் ஐஸ்வர்யா வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர், பேரூராட்சித் தலைவர் ருக்குமணி மோகன்ராஜ், துணைத் தலைவர் அலெக்சாண்டர், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் ராஜ், நகர செயலாளர் தமிழ் உதயன், முன்னாள் பேரூர் தலைவர் சுப்பிரமணி, காங்கிரஸ் வட்டாரத் தலைவர் புருஷோத்தமன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோன்று அத்திப்பட்டு ஊராட்சியில் சேர்மன் ரவி சிறுளப்பாக்கம் ஊராட்சி பெரிய வெப்பத்தூர் துவக்க பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் உஷா கணேசன், வல்லூரில் தலைவர் உஷா ஜெயகுமார், சீமாபுரம் ஊராட்சியில் தலைவர் நர்மதா யோகேஷ் குமார், தடப் பெரும்பாக்கம் ஊராட்சியில் தலைவர் பாபு, நந்தியம்பாக்கம் ஊராட்சியில் தலைவர் கலாவதி நாகராஜன், ஆகியோர் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தனர்.

    ×