search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரவேணுவில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்கம்
    X

    அரவேணுவில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்கம்

    அரசு ஆரம்பப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் ஜக்கனாரை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரவேணு மூன்றோடு கேசலடா பகுதியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    அவர்களுக்கு தமிழக அரசின் காலை உணவு திட்டம் வழங்கப்பட்டது. ஊராட்சி ஒன்றிய தலைவர் சுமதி மற்றும் வார்டு உறுப்பினர் மனோகரன் மற்றும் பள்ளி நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுகளை வழங்கினர்.

    Next Story
    ×