பேரணாம்பட்டில் காலை உணவு திட்டம்

ஒன்றிய குழு தலைவர் தொடங்கி வைத்தார் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
பேரணாம்பட்டில் காலை உணவு திட்டம்
Published on

பேரணாம்பட்டு:

பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சின்னதாம்பல் செருவு ஊராட்சியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் அரசின் காலை உணவு திட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜே.ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வி.பிரியா வடிவேலு, ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.குமாரி சவுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய குழு தலைவர் சித்ரா ஜனார்த்தனன் கலந்து கொண்டு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில் ஆத்மா திட்ட தலைவர் புகலூர் கே.ஜனார்த்தனன், ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் டி லலிதா டேவிட் மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ராஜமார்த்தாண்டன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முத்தரசி, பாரதிராஜா, வயலட் மகேந்திரன், கோவிந்தராஜ் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் ஆசிரியர்கள் குண்டல பள்ளி ஏ.எஸ்.ராஜி சிவகுமார் ஊராட்சி செயலாளர் சி அனிதா ஃபுல் படம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com