search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காய்கறி"

    • எஸ்.புதூரில் காய்கறி, மிளகாய் உற்பத்தியாளர்களுக்கான கருத்தரங்கை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • தொழில்நுட்ப ரீதியாக சந்தைப்படுத்துவதற்கான முறைகளை அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் காய்கறி மற்றும் மிளகாய் உழவர் உற்பத்தியாளர்களுக்கான கருத்தரங்கு நடந்தது. இதை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியப்பகுதியில் காய்கறி மற்றும் பப்பாளி பழங்கள் வெகுவாக விளைகின்றன. அதனை முறையாக தொழில்நுட்ப ரீதியாக சந்தைப்படுத்துவதற்கான முறைகளை அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    விவசாயிகளுக்கு பய னுள்ள வகையில், பல்வேறு தொழில் நுட்பங்கள் குறித்து, திறன்மிக்க வல்லுநர்களை கொண்டு இந்த கருத்தரங்கில் எடுத்துரைக்கப்படவுள்ளது. இதனை முறையாக பயன்படுத்திக் கொண்டு மற்ற விவசாயிகளுக்கும் இது குறித்து எடுத்துரைத்து பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் பேசினார்.

    இந்த கருத்தரங்கில் பல்வேறு வகையான விதைகளை விவசாயி களுக்கு கலெக்டர் வழங்கினார். இதில் டாக்டர்கள் செந்தில்குமார், சங்கர், துணை இயக்குநர்(வேளாண் வணிகம்) தமிழ்செல்வி, போஸ், மண்டல ஒருங்கி ணைப்பாளர் (விதைகள்) ஜீவானந்தம், வேளாண்மை அலுவலர்கள் காளிமுத்து, கனிமொழி மரகதம், புவனேசுவரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறி விலை கடும் வீழ்ச்சியானது
    • இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்

    திருச்சி:

    திருச்சி மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களின் காய்கறி தேவைகளை பூர்த்தி செய்வதில் திருச்சியில் அமைந்துள்ள காந்தி மார்க்கெட் பெரும் பங்காற்றி வருகிறது. இங்கு மாநகர மக்கள் அதிக அளவு சென்று காய்கறிகள் வாங்குகின்றனர். அதேபோன்று வியாபாரிகளும் காந்தி மார்க்கெட் மொத்த வியாபாரிகளிடம் கொள்முதல் செய்கிறார்கள். இந்த நிலையில் கடந்த இரு மாதங்களாக மலிவு விலையில் காய்கறிகள் கிடைப்பதால் பொதுமக்களும், இல்லத்தரசிகளும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதற்கிடையே இன்றைய தினம் மேலும் காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ சுரைக்காய் ரூ.3-க்கு விற்கப்பட்டது. அதேபோன்று கத்தரிக்காய் ரூ.7-க்கும், தக்காளி ரூ.8 முதல் ரூ.10-க்கும் சில்லறை விலையில் விற்கப்பட்டது.தக்காளி விலை வீழ்ச்சி தொடர்பாக தக்காளி மண்டி வியாபாரி ஹலீலுல் ரகுமான் கூறும் போது, ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி வி.கோட்டா பகுதிகளில் அதிக அளவு தக்காளி விளைச்சல் அடைந்துள்ளது.

    இன்னும் தக்காளி சீசன் 2 மாதத்திற்கு தொடர்ந்து இருக்கும். 27 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.200 மட்டுமே விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மழை பெய்து பயிர்கள் பாதிக்கப்பட்டால் மட்டுமே விலை உயரும் வாய்ப்பு உள்ளது. மழை பெய்யாவிட்டால் இன்னும் இரண்டு மாதங்களுக்கு இதே விலையை நீடிக்கும். தக்காளி விலைந்துள்ளதால் அங்குள்ள விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நிறைய விவசாயிகள் தக்காளி அறுவடையை நிறுத்தி விட்டார்கள்.

    சொந்த வாகனங்கள் வைத்திருப்பவர்கள் தொழிலாளர்கள் நலன் கருதி லோடு அனுப்புகிறார்கள் என்றார். காய்கறி வியாபாரி ரமேஷ் என்பவர் கூறும் போது, பெரும்பாலான காய்கறிகள் சராசரியாக கிலோ ரூ.19-க்கு கீழ்தான் இருக்கிறது. அவரக்காய் ரூ.50-க்கும், பீன்ஸ் ரூ.50-க்கும் அதிகபட்சமாக விற்கப்படுகிறது. கேரட் ரூ.15, பீட்ரூட் ரூ.15, சவ்சவ் ரூ.12 விலைக்கு விற்கப்படுகிறது. முட்டைக்கோஸ் விலையும் இன்று வீழ்ச்சிடைந்துள்ளது. 90 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை முட்டைக்கோஸ் ரூ.300 மட்டுமே விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை வீழ்ச்சியால் இல்லத்தரசிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


    • மீன், காய்கறி வியாபாரிகள் ரோட்டோரத்தில் கடை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தனர்
    • வியாபாரிகளுக்கு 2 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் மேயர் மகேஷ் அதிரடி ஆய்வு மேற் கொண்டு வருகிறார்.

    ராமன் புதூர் பகுதியில் ரோட்டோரத்தில் மீன் வியாபாரம் நடைபெறு வதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாகவும் அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேயர் மகேசுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து இன்று காலை மேயர் மகேஷ் ராமன் புதூர் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த பகுதியில் மீன், காய்கறி வியாபாரிகள் ரோட்டோரத்தில் கடை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். மீன், காய்கறி வியாபாரி களிடம் மேயர் மகேஷ் பேசினார். அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய வேண்டும். ரோட்டோரத்தில் போக்குவரத்து இடையூறாக கடை அமைத்து வியாபாரம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

    இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளை கொண்ட குழு அமைத்து ஆய்வு செய்யவும் கூறினார். இதைத்தொடர்ந்து ராமன்புதூர் பகுதியில் கழிவு நீர் ஓடை உடைந்து மோசமான நிலையில் காணப்பட்டது. அதை உடனே சீரமைக்க மேயர் மகேஷ் உத்தரவிட்டார்.

    இது குறித்து மேயர் மகேஷ் கூறியதாவது:-

    முன்மாதிரியான மாநகராட்சியாக...

    நாகர்கோவில் மாநகராட்சி யை முன்மாதிரியான மாநக ராட்சியாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள் ளப்பட்டு வருகிறது. சாலை மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. போக்கு வரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் பல்வேறு சாலைகளில் இருவழிப்பாதை யாக மாற்றவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

    இந்த நிலையில் ராமன் புதூர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டோரங்களில் கடைகள் இருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது ரோட்டோர கடை வியாபாரியிடம் தனியார் பணம் வசூல் செய்ததை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    மீன், காய்கறி வியாபாரிகள் அதற்கான ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே மீன் வியா பாரம் செய்ய வேண்டும். ரோட்டோரத்தில் மீன், காய்கறி வியாபாரம் செய்தால் பாரபட்ச மின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வியாபாரிகளுக்கு 2 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் முதல் ரோட்டோரத்தில் கடை அமைத்தால் கடைகள் அகற்றப்படுவதுடன் பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக் கப்படும். இதற்கு வியா பாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது நகர்நல அதிகாரி ராம்குமார், சுகாதார ஆய்வாளர்கள் ராஜேஷ், ராஜா, கவுன்சிலர் தினகர், மண்டல தலைவர் ஜவகர், தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.வராத தால் என்ன செய்வதென தெரியாமல் போலீசார் தவித்து வருகின்றனர்.

    • விவசாயம் செழிக்க வேண்டி விளைச்சலில் ஒரு பகுதியை காணிக்கையாக வழங்கின்றனர்.
    • 5 டன் காய்கறிகள், பழங்கள், 108 மூலிகை பொருட்கள் கொண்டு சிறப்பு கேள்வி நடத்தினர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கைநல்லூரில் நூற்றாண்டு பழமைவாய்ந்த ஸ்ரீ செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் தெற்கு பொய்கை நல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் விவசாயம் செழிக்க வேண்டி விளைச்சலில் ஒரு பகுதி பொருட்களை விவசாயிகள் காணிக்கையாக வழங்குவது வழக்கம்.

    இந்நிலையில் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளையக்கூடிய கத்திரிக்காய், மாங்காய், வெண்டைக்காய், பாகற்காய், கீரை பனங்கிழங்கு, எலுமிச்சை, நார்த்தங்காய் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகளை வழங்கினர்.

    இதைத் தொடர்ந்து ராட்சத யாககுண்டம் அமைத்து சுமார் 5 டன் காய்கறிகள் பழங்கள், 108 மூலிகை பொருட்கள் 2000 லிட்டர் நெய் கொண்டு 10க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் யாக கேள்வி நடத்தினர்.

    அதை தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது

    தொடர்ந்து தங்கள் கிராமத்தில் விளைவிக்கக் கூடிய காய்கறிகள் திருவாரூர் கும்பகோணம் காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், காய்கறி விவசாயம் செழிக்க வேண்டியும் இயற்கையிடமிருந்து விவசாயத்தை பாதுகாக்க வேண்டிய தொடர்ந்து 10வது ஆண்டாக இந்த காய்கறி சண்டிஹோமம் நடத்தப்படுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
    • பயனாளிகளுக்கு 75 சதவீத மானியத்தில் காய்கறி விதைகள் வழங்கல்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகா, வடக்கு பட்டம் கிராமத்தில் நடைபெற்ற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட சிறப்பு முகாமில் திருவாரூர் வேளாண்மை இணை இயக்குனர் ஆசீர் கனகராஜன் கலந்துகொண்டு திட்டத்தின் சிறப்புகள் குறித்து கூறினார்.

    இதில், வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) விஜயலட்சுமி, வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன் ஆகியோர் கலந்துகொண்டு திட்டம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்து கூறினர்.

    தொடர்ந்து, பயனாளிகளுக்கு முழு மானியத்தில் தென்னங்கன்றுகள், 50 சதவீத மானியத்தில் உயிர் உரங்கள், துத்தநாக சல்பேட், 75 சதவீத மானியத்தில் காய்கறி விதைகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நிர்மல்ராஜ் வழங்கினார்.

    இதில் வேளாண்மை துணை இயக்குனர் ஏழுமலை, வேளாண்மை அலுவலர் மகேந்திரன், தோட்டக்கலை துணை இயக்குனர் வெங்கட்ராமன் மற்றும் வேளாண் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

    • சிறிய கடை வைத்திருப்பவர்களில் சிலர் வெளியே கொட்டி வைத்து வியாபாரம் செய்வதாக கூறப்படுகிறது.
    • வெளியே காய்கறி வியாபாரம் செய்வதால் பொதுமக்களுக்கு இடையூறு.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அரண்மனை வளாகத்தில் காமராஜர் காய்கனி மார்க்கெட் கடந்த 60 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

    இந்த மார்க்கெட்டில் இருந்த கட்டிடங்களை இடித்து விட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக மார்க்கெட் கட்டப்பட்டது.

    ரூ.20.26 கோடி செலவில் 4.1 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தில் 87 பெரிய கடைகளும், 201 சிறிய கடைகளும் கட்டப்பட்டன.

    கடந்த மாதம் 22-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் காமராஜர் மார்க்கெட்டை திறந்து வைத்தார்.

    நேற்று முன்தினம் முதல் கடைகள் அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்தன. தொடர்ந்து காய்கறி வியாபாரம் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் மார்க்கெட்டில் சிறிய கடை வைத்திருப்பவர்களில் சிலர் காய்கறிகளை கடைக்குள் வைத்து வியாபாரம் செய்யாமல் வெளியே கொட்டி வைத்து வியாபாரம் செய்வதாக கூறப்படுகிறது.

    இதனால் மற்ற பெரிய கடைகளில் வியாபாரம் செய்பவர்கள், தங்களது வியாபாரம் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

    இதுபோல் வெளியே காய்கறி வியாபாரம் செய்வதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.

    எனவே இதுபோன்ற செயல்களில் சிறிய கடை வியாபாரிகள் சிலர் ஈடுபடுவதை தடுக்க வேண்டும்.

    இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சந்தையில் திருநங்கைகளுக்கு கடைகள் வழங்குவது இதுவே முதல் முறை.
    • வாடகை மூலம் மாநகராட்சி நிா்வாகத்துக்கு ஆண்டுக்கு ரூ. 3.50 கோடி வருவாய் கிடைக்கும் என்றாா்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் அரண்மனை வளாகம் அருகேயுள்ள காமராஜா் காய்கனி சந்தையில் இருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் 4.1 ஏக்கா் பரப்பளவில் ரூ. 20.26 கோடியில் புதிதாகக் கடைகள் கட்டப்பட்டன. இதில், 201 சிறிய கடைகள், 87 பெரிய கடைகள் கட்டப்பட்டுள்ளன.

    புதுப்பிக்கப்பட்ட இச்சந்தையைத் கடந்த மாதம் 22-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தாா்.

    ஆனால், பொது ஏலத்தில் கடைகள் எடுத்த வியாபாரிகளுக்கு சாவி வழங்கப்படாமல் இருந்தது.

    இதனிடையே, இச்சந்தையில் ஏற்கெனவே கடை நடத்தியவா்கள், தங்களுக்கும் கடை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனா். இதுதொடா்பாக பழைய வியாபாரிகளிடம் மேயரும், மாநகராட்சி ஆணையரும் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

    இதைத்தொடா்ந்து, மாநகராட்சி அலுவலகத்தில் பொது ஏலத்தில் கடைகள் எடுத்த புதிய மற்றும் பழைய வியாபாரிகளுக்கு சாவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், வியாபாரிகளிடம் மேயா் சண். ராமநாதன் சாவியை ஒப்படைத்தாா்.

    அப்போது, மாநகராட்சி ஆணையா் சரவணகுமாா் உடனிருந்தாா்.பின்னா், மேயர் சண்.ராமநாதன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

    தஞ்சாவூா் காமராஜா் சந்தையில் பொது ஏலத்தில் கடைகள் வியாபாரிகளுக்கும், இரு கடைகள் எடுத்த திருங்கைகளுக்கும் சாவி வழங்கப்பட்டது.

    சந்தையில் திருநங்கைகளுக்கு கடைகள் வழங்குவது இதுவே முதல் முறை.இச்சந்தையின் கடைகள் வாடகை மூலம் மாநகராட்சி நிா்வாகத்துக்கு ஆண்டுக்கு ரூ. 3.50 கோடி வருவாய் கிடைக்கும் என்றாா்.

    • பச்சை காய்கறிகளின் விலை திடீரென அதிகரித்து உள்ளது.
    • விலை பல மடங்கு அதிகரித்து இருப்பது இல்லத்தரசிகளை கவலை அடைய செய்துள்ளது.

    போரூர்:

    மாண்டஸ் புயல் மழை காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேற்று முன்தினம் பொருட்கள் வாங்க வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறி கடைக்காரர்களின் வருகை பாதியாக குறைந்தது.

    இதனால் பச்சை காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. மேலும் விற்பனை ஆகாமல் 500 டன் வரை காய்கறிகள் தேக்கம் அடைந்தன.

    இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் காய்கறி உற்பத்தி நடைபெற்று வரும் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக விவசாய தொழிலாளர்கள் தோட்டத்திற்கு வேலைக்கு செல்லவில்லை.

    இதனால் கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறி வரத்து குறைந்துவிட்டது. இன்று தக்காளி 39 லாரிகள், வெங்காயம் 50 லாரிகள் என மொத்தம் 350 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்தன. வரத்து குறைவு காரணமாக கத்தரிக்காய், அவரைக்காய், பீன்ஸ், கேரட் உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் விலை திடீரென அதிகரித்து உள்ளது. மொத்த விற்பனை கடைகளில் நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.13-க்கு விற்ற தக்காளி இன்று விலை அதிகரித்து ரூ.22-க்கும், ஒரு கிலோ ரூ.10க்கு வாங்கி செல்ல யாரும் ஆர்வம் காட்டாத பீன்ஸ் மற்றும் உஜாலா கத்தரிக்காய் ஆகிய காய்கறிகள் இன்று பல மடங்கு அதிகரித்து ஒரு கிலோ ரூ.70-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் ஒரு கிலோ ரூ100-க்கு விற்ற முருங்கைக்காய் ரூ.150-க்கும், கிலோ ரூ.30-க்கு விற்ற ஊட்டி கேரட் ரூ.45-க்கும், கிலோ ரூ.20-க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.40-க்கும், கிலோ ரூ.20-க்கு விற்ற அவரைக்காய் ரூ.60-க்கும், கிலோ ரூ.7-க்கு விற்ற முட்டை கோஸ் ரூ.15-க்கும், ஒரு கிலோ ரூ.15-க்கு விற்ற வெள்ளரிக்காய் ரூ.30-க்கும், ரூ.10க்கு விற்ற காலிஃபிளவர் ஒன்று ரூ.40-க்கும் விற்கப்பட்டு வருகிறது.

    சில்லரை விற்பனை கடைகளில் பச்சை காய்கறிகளின் விலை மேலும் பல மடங்கு அதிகரித்து இருப்பது இல்லத்தரசிகளை கவலை அடைய செய்துள்ளது.

    இதையடுத்து தக்காளி மொத்த வியாபாரி ஜாபர் அலி சேட் கூறும்போது :-

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று 39 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது. தினசரி 60 லாரிகள் வரை தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம்.

    கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் உற்பத்தியான தக்காளியை அறுவடை செய்ய விவசாய தொழிலாளர்கள் யாரும் தோட்டத்திற்கு வேலைக்கு செல்லவில்லை இதனால் வரத்து குறைந்து விலை அதிகரித்து உள்ளது. இனி வரும் நாட்களில் மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டால் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இன்றைய காய்கறிகள் மொத்த விற்பனை விலை விபரம் (கிலோவில்) வருமாறு:- தக்காளி-ரூ22, ஊட்டி கேரட்-ரூ45, ஊட்டி பீட்ரூட்-ரூ45, நைஸ் கொத்தவரங்காய்-ரூ70.

    • தொடர் மழை காரணமாக காய்கறி வரத்து குறைந்துள்ளது.
    • தக்காளி கிலோ ரூ.10 முதல் 15, முள்ளங்கி ரூ.14-16வரையிலும் விற்பனையானது.

    உடுமலை :

    உடுமலை உழவர் சந்தைக்கு தொடர் மழை காரணமாக காய்கறி வரத்து குறைந்துள்ளது. தக்காளி விலை குறைந்தும் சின்ன வெங்காயம் விலை உயர்ந்தும் காணப்பட்டது.

    தக்காளி கிலோ ரூ.10 முதல் 15 வரையிலும், உருளை ரூ. 45 முதல் 50 வரையிலும் ,சின்ன வெங்காயம்ரூ. 54 -90, கத்தரிக்காய் ரூ.30 -36, வெண்டைக்காய் ரூ.20 -24 ,முருங்கை ரூ.35-48 ,பீர்க்கங்காய் ரூ.20- 38 ,சுரைக்காய் ரூ.10 -15 ,புடலங்காய் ரூ.20 -24, பாகற்காய் ரூ.35 -40, தேங்காய் ரூ. 25- 30 ,முள்ளங்கி ரூ. 14-16 ,பீன்ஸ் ரூ.46- 48, அவரைக்காய் ரூ.50 -55 ,கேரட் ரூ. 60- 65க்கும் விற்பனையானது.

    • கோதுமை ரவா, காய்கறி கிச்சடி மற்றும் கூடுதலாக ரவா கேசரி வழங்கப்பட்டு வருகிறது.
    • உணவு தயாரிக்கப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் உரிய நேரத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இந்த முன்னோடி திட்டம் குறித்து தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:-

    தஞ்சாவூர் மாநகராட்சியில் 8 தொடக்கப்பள்ளியில் பயிலும் 375 மாணவ- மாணவியர்களுக்கு திங்கட்கிழமை தோறும் சேமியா, உப்புமா மற்றும் காய்கறி சாம்பார் , செவ்வாய்க்கிழமை தோறும் கோதுமை ரவா, காய்கறி கிச்சடி, புதன்கிழமை தோறும் வெண் பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார், வியாழக்கிழமை தோறும் அரிசி உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை தோறும் ரவா காய்கறி கிச்சடி மற்றும் கூடுதலாக சேமியா கேசரியும், வழங்கப்பட்டு வருகிறது.

    இதேபோன்று கும்பகோணம் மாநகராட்சியில் 13 தொடக்கப் பள்ளியில் பயிலும் 1067 மாணவ -மாணவியர்களுக்கும் திங்கட்கிழமை தோறும் ரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், செவ்வாய்க்கிழமை தோறும் ரவா காய்கறி கிச்சடி, புதன்கிழமை தோறும் வெண் பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார், வியாழக்கிழமை தோறும் கோதுமை ரவை உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை தோறும் கோதுமை ரவா, காய்கறி கிச்சடி மற்றும் கூடுதலாக ரவா கேசரி வழங்கப்பட்டு வருகிறது. ஆக மொத்தம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 21 மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 1442 மாணவ -மாணவியர்கள் இத்திட்டம் மூலம் பயன்பெறுகின்றனர்.

    தஞ்சாவூர் மாநகராட்சி பள்ளிகளுக்கான ஒருங்கிணைப்பு மையம் கூட்டுறவு மாநகராட்சி தொடக்கப்பள்ளியிலும், கும்பகோணம் மாநகராட்சி காலனி பள்ளிகளுக்கான ஒருங்கிணைப்பு மையம் கோபுசிவகுருநான் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ஒருங்கிணைப்பு மையங்களில் உள்ள சமையல் கூடங்களில் உணவு தயாரிக்கப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் உரிய நேரத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

    மாணவ-மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல், ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செய ல்படுத்தப்பட்டுவருகிறது. இவ்வாறு அவர் கூறறினார்.

    இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற தஞ்சாவூர் மாவட்ட–த்தை சேர்ந்த மாணவி ஓவியதிலகம் கூறும்போது :-

    நான் தஞ்சாவூர் கூட்டுறவு காலனி மாநகராட்சி துவக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருகிறேன். நானும் என் நண்பர்க–ளும் தினமும் பள்ளியில் வழங்கப்படுகின்ற காலை உணவினை விரும்பி சாப்பிடுகின்றோம். சில சமயங்களில் காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வருகின்ற சூழ்நிலை தற்பொழுது முழுவதுமாக மாறிவிட்டது. தினமும் காலையில் வழங்கப்படுகின்ற சூடான உணவு வகைகள் எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இத்தகைய காலை உணவு திட்டத்தினை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என்றார்.

    தஞ்சையை சேர்ந்த மாணவன் கதிரேசனின் பெற்றோர் கூறும்போது, எனது மகன் தஞ்சை ராஜப்பாநகர் மாநகராட்சி தொடக்க பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். நான் தினமும் கூலி வேலைக்கு சென்று வருகிறேன். சில நேரங்களில் வேலைக்கு கால தாமதம் ஆகி விடும் என்பதால் சமைக்க முடிவ–தில்லை. குழந்தைகள் பழைய உணவினை சாப்பிட்டு பள்ளிக்கு வந்து கொண்டிருந்தனர். இப்போது முதல்-அமைச்சர் மு.க.–ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை அறிமுகப்ப–டுத்திய பின்னர் என் குழந்தைகள் தினமும் காலை உணவை பள்ளியில் சூடாக சாப்பிடு–கின்றனர். இது என்னை போன்ற பெற்றோருக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அவருக்கு நன்றி என்றார்.

    • 13 அடி உயரம், 23 அடி சுற்றளவு உள்ள லிங்கம் தனித்தனி கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப்–பட்டுள்ளது.
    • மாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பெருவுடையாருக்கு மகா தீபாராதனை.

    தஞ்சாவூர்:

    உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்குவதோடு, தமிழர்களின் கட்டிடக்–கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    பெரியகோவிலில் கருவறையில் உள்ள பெருவுடையார் மிகப்பெரிய லிங்கத் திருமேனியாகும். 6 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட பீடமும், அதன்மேல் 13 அடி உயரம், 23 அடி சுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனித்தனி கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப்–கட்டு உள்ளது. இத்தகைய சிறப்பு மிக்க பெருவுடையாருக்கு ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி நாளை (திங்கட்கிழமை) ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து, பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டு, காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.

    பின்னர் மாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையினர் செய்து வருகின்றனர்.

    • தக்காளி கிலோ ரூ.50-க்கு விற்பனை
    • ஓணம் பண்டிகையையொட்டி வியாபாரிகள் குவிந்தனர்

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் அப்டா மார்க்கெட் மற்றும் கனக மூலம் சந்தை செயல்பட்டு வருகிறது.

    இங்கு ஓசூர், மேட்டுப்பா ளையம், பெங்களூர், மதுரை பகுதிகளில் இருந்து காய்கறி கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. மேலும் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நெல்லை மாவட் டத்தில் இருந்தும் விற்ப னைக்காக வருகிறது. கடந்த சில நாட்களாகவே காய்கறிகளின் விலை குறை வாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் தற்பொழுது காய்கறிகளின் விலை கிடு கிடுவென உயரத் தொடங்கியுள்ளது.

    ஓணம் பண்டிகை களைக் கட்டி உள்ள நிலையில் கேரள வியாபா ரிகள் ஏராளமானவர் குமரி மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்களில் காய்கறி களை வாங்கி செல்வதால் விலை அதிகரித்து வருகிறது.

    கடந்த சில நாட்களாக தக்காளி ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று தக்காளி விலை 5 மடங்கு உயர்ந்து கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்டது. இதேபோல் பீன்ஸ், கேரட், வெள்ளரிக்காய் விலையும் கடுமையான அளவு உயர்ந்துள்ளது.

    பீன்ஸ் ஒரு கிலோ ரூ.120-ம், கேரட் ரூ.300-ம், வெள்ளரிக்காய் ரூ.30-ம், மிளகாய் ரூ.80-ம், புடலைங்காய் ரூ.25-ம், சேனை ரூ.30-ம், பல்லாரி ரூ.30-ம், உருளைக்கிழங்கு கிலோ ரூ.40-ம், இளவக்காய் ரூ.20-ம், பீட்ரூட் ரூ.40-ம், கத்தரிக்காய் ரூ.70-ம், வழு தலங்காய் ரூ.60-ம், வெண்டைக்காய் ரூ.40-க்கும் விற்பனையானது.

    இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், கேரளா வில் ஓணம் பண்டிகை களை கட்டியுள்ளதையடுத்து அங்கிருந்து வியாபாரிகள் ஏராளமானோர் காய்கறி களை வாங்குவதற்காக குமரி மாவட்டத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். எனவே இன்னும் மூன்று நாட்களுக்கு காய்கறிகளின் விலை அதிகமாக தான் இருக்கும். ஓணம் பண்டிகை முடிந்த பிறகு விலை குறைய வாய்ப்பு உள்ளது. மேலும் இனிவரும் ஒரு வார காலத்திற்கு திருமண நிகழ்வுகளும் அதிகம் உள்ளதால் மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.

    ×