search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதலன் கைது"

    • எதிர்ப்பை மீறி அபிநயாவை திருமணம் செய்துகொள்வதாக பார்த்திபன் உறுதி அளித்துள்ளார்.
    • சாலையில் கிடந்த அபிநயாவை சாலையோர பள்ளத்தில் தூக்கி வீசிவிட்டு பார்த்திபன் அங்கிருந்து சென்றுள்ளார்.

    செந்துறை:

    பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகள் அபிநயா (23). தந்தை இறந்துவிட்ட நிலையில் குடும்பத்தை காப்பாற்றவும், வறுமை காரணமாகவும் இவர் தற்போது அரியலூரில் உள்ள ஒரு மளிகைக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் வேலைக்கு சென்ற அவர் நேற்று முன்தினம் மதியம் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி கடையில் இருந்து வீட்டுக்கு செல்வதாக கூறி புறப்பட்டுள்ளார். ஆனால் அபிநயா வீட்டுக்கு செல்லவில்லை.

    இதற்கிடையே நேற்று காலை உடையார்பாளையம் அருகே சாலையோரத்தில் அவர் உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அதிர்ச்சி தகவல் கிடைத்தது.

    தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் பார்த்திபன் (வயது 33). டிப்ளமோ படித்துள்ள இவர் அதே பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் காசாளராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அபிநயா தஞ்சாவூருக்கு வேலைக்கு சென்றுவந்தபோது, பார்த்திபனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் ஒருசில ஆண்டுகள் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இருவீட்டிலும் திருமணத்துக்கு எதிர்ப்பு இருந்து வந்துள்ளது.

    ஆனாலும் எதிர்ப்பை மீறி அபிநயாவை திருமணம் செய்துகொள்வதாக பார்த்திபன் உறுதி அளித்துள்ளார். இதனை நம்பிய அபிநயாவும் காதலனுடன் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளார்.

    இதற்கிடையே பார்த்திபனுக்கு அவரது பெற்றோர் வேறு இடத்தில் பெண் பார்த்து திருமணமும் நிச்சயித்தனர். அதன்படி பார்த்திபனுக்கு வருகிற 6-ந்தேதி பந்தநல்லூரில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதனை அறிந்த அபிநயா அதிர்ச்சி அடைந்தார். உடனே பார்த்திபனை செல்போனில் தொடர்பு கொண்ட அவர் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார்.

    இதையடுத்து நேற்று முன்தினம் இரவு உடையார்பாளையம் பகுதிக்கு தனது நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக வந்த பார்த்திபனை அபிநயா நேரில் சந்தித்துள்ளார். அப்போதும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    பின்னர் இருவரும் மோட்டார்சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே பொட்டக்கொல்லை திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புக்கட்டையில் மோதி விபத்து ஏற்பட்டதாகவும், பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

    இதில் பார்த்திபனுக்கு பின்னந்தலையிலும், அபிநயாவுக்கு உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. அந்த சமயம் விபத்து நடந்த பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது. உதவிக்கு யாரையும் அழைக்க முடியாத நிலையில் பார்த்திபன் மட்டும் அங்கிருந்து தனது மோட்டார்சைக்கிளை எடுத்துக்கொண்டு பந்தநல்லூர் சென்றுவிட்டார்.

    அத்துடன் சாலையில் கிடந்த அபிநயாவை சாலையோர பள்ளத்தில் தூக்கி வீசிவிட்டு பார்த்திபன் அங்கிருந்து சென்றுள்ளார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அபிநயாவை மீட்கவும், அவருக்கு சிகிச்சை அளிக்கவும் பார்த்திபன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து அபிநயா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்துள்ளார். மேற்கண்ட தகவலை பார்த்திபன் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின்பேரில் விரைந்து சென்ற உடையார்பாளையம் போலீசார் அபிநயாவின் உடலை கைப்பற்றி நடத்திய முதல்கட்ட விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் கிடைத்தன.

    உண்மையிலேயே விபத்தில் ஏற்பட்ட காயத்தால் தான் அபிநயா உயிரிழந்தாரா அல்லது தனது திருமணத்திற்கு பிரச்சனை வந்துவிடக்கூடாது என்பதற்காக காதலியை நேரில் வரவழைத்து அவரை கொலை செய்துவிட்டு பார்த்திபன் நாடகம் ஆடுகிறாரா? என்பது உள்ளிட்ட கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் சென்ற உடையார்பாளையம் போலீசார் விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடிய காதலியை காப்பாற்ற முயற்சி எடுக்காமல் சாலையோரம் வீசிச்சென்ற பார்த்திபனை கைது செய்தனர்.

    மேலும் விபத்தில் சிக்கியதாக கூறப்படும் வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்து உடையார்பாளையத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இந்த சம்பவம் உடையார்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கைது செய்யப்பட்ட அகிலன், சுரேஷ்குமார் ஆகியோரை போலீசார் ரகசியமான இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.
    • கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சாலவனூர் கிராமத்தில் 100 நாள் வேலையில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

    அங்கிருந்த சுடுகாட்டின் அருகில் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்ட போது ஒரு இளம்பெண்ணின் உடல் கிடைத்தது. இது தொடர்பான புகாரின் பேரில் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கவின்னா தலைமையிலான கஞ்சனூர் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், இது தொடர்பாக கஞ்சனூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் இறந்து போன இளம்பெண் யார்? அவரை கொலை செய்து புதைத்த மர்மகும்பல் யார்? என்பது குறித்து விசாரித்து வந்தனர். செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கும் இது தொடர்பாக தகவல் தெரிவித்தனர். குறிப்பாக 25 வயதிலிருந்து 30 வயதிற்குள் காணாமல் போனவர்கள் குறித்து தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியிருந்தனர்.

    கொன்று புதைக்கப்பட்ட பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று முன்தினம் வந்தது. இதில் அந்த பெண் 3 மாத கர்ப்பிணியாக உள்ளதாகவும், அந்த பெண்ணிற்கு 17 முதல் 19 வயதிற்குள் இருக்கலாம் என்ற தகவல் போலீசாருக்கு தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் விழுப்புரம்-திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள கண்டமானடியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி பிரியதர்ஷினி (வயது 17) என்பது தெரியவந்தது. அவரை கொன்று புதைத்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில். பிரியதர்ஷினியை கொன்றது விக்கிரவாண்டியை அடுத்த சித்தேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் மகன் அகிலன் (23) என்பது தெரியவந்தது.

    அவரை போலீசார் தேடி வந்தனர். அவர் சென்னையில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அகிலனை கைது செய்தனர். இவர் பேண்ட் வாத்திய குழுவில் டிரம்ஸ் வாசிக்கும் தொழில் செய்து வருகிறார். அவர் பிரியதர்ஷினியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த கொலைக்கு உடந்தையாக விக்கிரவாண்டியை அடுத்துள்ள கக்கனூர் கிராமம் கக்கன் வீதியில் வசிக்கும் ராஜாமணி மகன் சுரேஷ் குமார் (22) இருந்ததாக அகிலன் தெரிவித்தார். அவரையும் போலீசார் கைது செய்தனர்.

    போலீசாரின் விசாரணையில் அகிலன் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். அகிலன் உறவினர் வீடு விழுப்புரத்தை அடுத்த கப்பூரில் உள்ளது. அதே போல பிரியதர்ஷினி உறவினர் வீடும் கப்பூரில் உள்ளது.

    இவர்கள் இருவரும் அவரவர் உறவினர் வீட்டிற்கு வந்த போது பிரியதர்ஷினிக்கும், அகிலனுக்கும் காதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அகிலன் அடிக்கடி கண்டமானடி கிராமத்திற்கு வந்துள்ளார். அங்கு ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில் பிரியதர்ஷினியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இத்தகவல் அறிந்த பிரியதர்ஷினியின் பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனை பிரியதர்ஷினி கேட்காமல், தொடர்ந்து அகிலனுடன் பழகி வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    மேலும், தான் 3 மாத கர்ப்பிணியானதையும், தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படியும் அகிலனிடம் பிரியதர்ஷினி வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து சித்தேரிப்பட்டுக்கு வா, திருமணம் செய்து கொள்கிறேன் என்று பிரியதர்ஷினியை அழைத்து வந்து கொன்றுள்ளது தெரியவந்தது.

    கைது செய்யப்பட்ட அகிலன், சுரேஷ்குமார் ஆகியோரை ரகசியமான இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள். இக்கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கண்டமானடி, சித்தேரிப்பட்டு கிராமங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • உறவினர் வீட்டிற்கு வந்தபோது பிரிதர்ஷினிக்கும், அகிலனுக்கும் காதல் ஏற்பட்டது
    • பிரிதர்ஷினி தொடர்ந்து அகிலனுடன் பழகி வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சாலவனூர் கிராமத்தில் 100 நாள் வேலையில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

    அங்கிருந்த சுடுகாட்டின் அருகில் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டபோது ஒரு இளம்பெண்ணின் உடல் கிடைத்தது. இது தொடர்பான புகாரின் பேரில் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கவின்னா தலைமையிலான கஞ்சனூர் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலை செய்யப்பட்டவர் விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள கண்டமானடியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி பிரியதர்ஷினி (வயது 17) என்பது தெரியவந்தது. விசாரணையில் பிரியதர்ஷினியை கொன்றது விக்கிரவாண்டியை அடுத்த சித்தேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் மகன் அகிலன் (23) என்பது தெரிய வந்தது.

    அவரை போலீசார் தேடி வந்தனர். அவர் சென்னையில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அகிலனை கைது செய்தனர். இவர் பேண்ட் வாத்திய குழுவில் டிரம்ஸ் வாசிக்கும் தொழில் செய்து வருகிறார். அவர் பிரியதர்ஷினியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த கொலைக்கு உடந்தையாக விக்கிரவாண்டியை அடுத்துள்ள கக்கனூர் கிராமம் கக்கன் வீதியில் வசிக்கும் ராஜாமணி மகன் சுரேஷ் குமார் (22) இருந்ததாக அகிலன் தெரிவித்தார். அவரையும் போலீசார் கைது செய்தனர். அகிலன் உறவினர் வீடு விழுப்புரத்தை அடுத்த கப்பூரில் உள்ளது. அதே போல பிரியதர்ஷினி உறவினர் வீடும் கப்பூரில் உள்ளது.

    இருவரும் அவரவர் உறவினர் வீட்டிற்கு வந்தபோது பிரிதர்ஷினிக்கும், அகிலனுக்கும் காதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அகிலன் அடிக்கடி கண்டமானடி கிராமத்திற்கு வந்துள்ளார். அங்கு ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் பிரிதர்ஷினியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இத்தகவல் அறிந்த பிரியதர்ஷினியின் பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனை பிரிதர்ஷினி கேட்காமல், தொடர்ந்து அகிலனுடன் பழகி வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    மேலும், தான் 3 மாத கர்ப்பிணியானதையும், தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படியும் அகிலனிடம் பிரியதர்ஷினி வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து சித்தேரிப்பட்டுக்கு வா, திருமணம் செய்து கொள்கிறேன் என்று பிரியதர்ஷினியை அழைத்து வந்து கொன்று இருப்பது தெரிய வந்தது.

    • அர்ச்சனாவை விட்டு விட்டு சத்யராஜ் வேறு ஒரு பெண்ணுடன் பழகியுள்ளார்.
    • அர்ச்சனா வீடியோ காலில் சத்யராஜ் உடன் பேசிய படியே தற்கொலை செய்தார்.

    திருவாரூர்:

    மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகில் உள்ள மருதூரை சேர்ந்தவர் அர்ச்சனா (வயது 24). இவர் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்ப்பதற்காக அங்கு வீடு எடுத்து தங்கி வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி காலை வழக்கம் போல் அர்ச்சனா வீட்டிலிருந்து புறப்பட்டு தோழியுடன் அலுவலகத்திற்கு சென்றார்.

    மதிய உணவு இடைவேளைக்கு செல்லவேண்டிய நேரத்திற்கு அரைமணி நேரம் முன்னதாகவே தனக்கு வயிறு வலிப்பதாக கூறிவிட்டு அர்ச்சனா மட்டும் வீட்டிற்கு சென்றார். பின்னர் அவரது தோழி வீட்டிற்கு சென்று பார்த்த போது அங்கு அர்ச்சனா மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே நன்னிலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அர்ச்சனாவின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்து கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அவரது செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் அர்ச்சனா கடைசியான பேசிய வீடியோகாலை பார்த்தனர். அதில் அவர் நாகை மாவட்டம் பஞ்சநதிகுளம் வடகாட்டை சேர்ந்த சத்யராஜ் (வயது 26) என்பவருடன் பேசியது தெரிய வந்தது. இதையடுத்து சத்யராஜை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அர்ச்சனாவும் சத்யராசும் காதலித்து வந்துள்ளனர்.

    ஆனால் அர்ச்சனாவை விட்டு விட்டு சத்யராஜ் வேறு ஒரு பெண்ணுடன் பழகியுள்ளார். இதனால் அர்ச்சனா சத்யராஜ் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த மனவேதனையில் அர்ச்சனா தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். அர்ச்சனா வீடியோ காலில் சத்யராஜ் உடன் பேசிய படியே தற்கொலை செய்தார்.

    அந்த காட்சியை அவரது காதலன் பார்த்து ரசித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அர்ச்சனாவை தற்கொலைக்கு தூண்டியதாக சத்யராஜ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஹோம் தியேட்டர் மியூசிக் சிஸ்டத்தை ஆய்வு செய்த போது அதில் வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்டு இருந்தது தெரியவந்தது.
    • திருமணத்தின் போது யாரெல்லாம் பரிசு பொருட்கள் வழங்கினார்கள் என்று போலீசார் ஆய்வு செய்தனர்.

    ராய்ப்பூர்:

    சத்தீஷ்கர் மாநிலம் கபீர்தனம் மாவட்டம் ரெங்காகர் பகுதியை சேர்ந்தவர் ஹேமேந்திரா மெராவி (வயது 22). இவருக்கு கடந்த 1-ந்தேதி திருமணம் நடந்தது.

    திருமணத்தில் பல்வேறு பரிசு பொருட்கள் குவிந்தன. அதில் ஒன்று ஹோம் தியேட்டர் (ஸ்பீக்கர்) மியூசிக் சிஸ்டம். இதை புது மாப்பிள்ளை ஹேமேந்திரா மெராவியும் அவரது சகோதரர் ராஜ்குமாரும் இயக்க முயன்றார்.

    இதற்காக ஹோம் தியேட்டர் மியூசிக் சிஸ்டத்தை மின் இணைப்போடு இணைத்த போது அது வெடித்து சிதறியது. இதில் மணமகன், அவரது சகோதரர், 1½ வயது குழந்தை உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் புதுமாப்பிள்ளை ஹேமேந்திரா, அவரது சகோதரர் ராஜ்குமார் ஆகியோர் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஹோம் தியேட்டர் மியூசிக் சிஸ்டத்தை ஆய்வு செய்த போது அதில் வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து திருமணத்தின் போது யாரெல்லாம் பரிசு பொருட்கள் வழங்கினார்கள் என்று ஆய்வு செய்தனர். மணமகளின் முன்னாள் காதலன் சர்ஜூ மார்கம் ஹோம் தியேட்டர் மியூசிக் சிஸ்டத்தை பரிசாக வழங்கியது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    இது தொடர்பாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மனிஷா தாகூர் கூறியதாவது:-

    விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட சர்ஜூ தனது முன்னாள் காதலியை திருமணம் செய்து கொண்ட ஹேமேந்திரா மெராவி மீது கோபமாக இருந்ததை ஒப்புக்கொண்டார். எனவே அவர் வெடிப்பொருட்கள் நிரப்பிய ஹோம் தியேட்டரை பரிசாக கொடுத்து கொலை சம்பவத்தை நிகழ்த்தி இருக்கிறார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் தண்டு மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் சாக்கு மூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசியது.
    • செல்போன் மூலம் துப்பு துலக்கியபோது லோகேஷ் அடிக்கடி ஸ்வேதாவிடம் பேசியது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் போலீசார் லோகேஷை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நாயக்கன்காடு பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி மஞ்சுளாதேவி. இவர்களது மகள் ஸ்வேதா (21). இவர் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த 28-ந்தேதி வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற மாணவி மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் மாணவியை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து மாணவியின் தாய் மஞ்சுளாதேவி கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர்.

    இதற்கிடையே நேற்று முன்தினம் மாலை கோபிசெட்டிபாளையத்தில் இருந்து 20 கி.மீட்டர் தூரத்தில் உள்ள டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் தண்டு மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் சாக்கு மூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசியது.

    இதுபற்றி தெரியவந்ததும் பங்களாபுதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிணற்றில் மிதந்த சாக்கு மூட்டையை மீட்டனர். அப்போது அதில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பிணமாக கிடப்பது தெரிய வந்தது. போலீசாரின் விசாரணையில் பிணமாக கிடந்தது மாயமான கல்லூரி மாணவி ஸ்வேதா என்று தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாணவியின் பெற்றோரை வரவழைத்து உறுதி செய்தனர்.

    மேலும் மாணவியை தெரிந்த நபர்கள் யாரோ அழைத்து வந்து அவரை கொலை செய்து கிணற்றில் வீசி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் மாணவியின் உடலை பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே மாணவி சாவு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது மாணவியிடம் அடிக்கடி செல்போனில் பேசிய கொங்கர்பாளையம் தண்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த வைதேகி-வீறுச்சாமி ஆகியோரின் மகன் லோகேஷ் (23) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்தான் மாணவியின் உடலை கிணற்றில் சாக்கு மூட்டையில் கட்டி வீசியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். போலீசில் லோகேஷ் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    ஸ்வேதா கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும்போது நான் அதே கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்தேன். அப்போது எங்களுக்கிடையே காதல் ஏற்பட்டது. நான் தற்போது கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறேன்.

    நாங்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தோம். இதில் ஸ்வேதா கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து ஸ்வேதா என்னிடம் வீட்டுக்கு தெரிந்தால் விபரீதம் ஆகி விடும் என்று கூறி என்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். நானும் இந்த விஷயம் எங்கள் வீட்டிற்கு தெரிந்தால் பிரச்சினை ஆகி விடும் என்று கூறி ஸ்வேதாவை திருமணம் செய்து கொள்வதாக காலம் தாழ்த்தி வந்தேன்.

    ஸ்வேதா 4 மாத கர்ப்பிணியாக இருந்ததால் வீட்டில் வாந்தி எடுத்துள்ளார். இதனால் இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் பிரச்சினை ஆகி விடும் என்று கருவை கலைக்க முடிவு செய்தோம்.

    அதன்படி கடந்த 28-ந்தேதி காலை கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு ஸ்வேதா கோபிசெட்டிபாளையம் வந்தார். பின்னர் நாங்கள் 2 பேரும் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றோம். அங்கு ஸ்வேதாவை பரிசோதனை செய்த டாக்டர் 4 மாத கருவாக இருப்பதால் கருவை கலைக்க முடியாது என்று கூறி விட்டனர். இதைக்கேட்டு மனம் உடைந்த ஸ்வேதா என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பினார். இதையடுத்து நான் கோவையில் இருந்து கொங்கர்பாளையத்தில் உள்ள எனது பாட்டி வீட்டிற்கு ஸ்வேதாவை அழைத்து சென்றேன்.

    அப்போது மாலை 5 மணி அளவில் அவரது பெற்றோர் தொடர்பு கொண்டபோது ஸ்வேதா நான் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம் வந்து விட்டேன். வீட்டிற்கு வந்து விடுகிறேன் என்று கூறினார். அந்த நேரத்தில் ஸ்வேதாவிடம் உணவு வாங்கி கொண்டு வருவதாக கூறி விட்டு வெளியே சென்றேன்.

    பின்னர் மீண்டும் வந்தபோது ஸ்வேதா தனது துப்பட்டாவால் தூக்கு மாட்டி பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த நான் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பம் அடைந்தேன். இதுபற்றி வெளியே தெரிந்தால் போலீசார் என்னை கைது செய்து விடுவார்கள் என்று பயந்து ஒரு சாக்கு மூட்டையில் ஸ்வேதாவின் கை, கால்களை கட்டி இரவு 9 மணி அளவில் யாரும் இல்லாத நேரத்தில் கிணற்றில் வீசி விட்டு வந்து விட்டேன்.

    செல்போன் மூலம் துப்பு துலக்கியபோது நான் அடிக்கடி ஸ்வேதாவிடம் பேசியது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் போலீசார் என்னை கைது செய்தனர்.

    இவ்வாறு அவர் போலீசில் வாக்குமூலமாக அளித்துள்ளார்.

    இதையடுத்து போலீசார் லோகேஷை கோபிசெட்டிபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    • கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஆதேஷ் டேட்டிங் ஆப் மூலம் அர்ச்சனாவை சந்தித்துள்ளார்.
    • கடந்த 7 மாதங்களாக ஆதேஷ்- அர்ச்சனா இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் கணவன்-மனைவியாக வாழ்ந்துள்ளனர்.

    கோரமங்களா:

    இமாச்சலபிரதேசத்தை சேர்ந்தவர் ககனசக்தி அர்ச்சனா (வயது 28). இவர் விமான பணி பெண்ணாக வேலை பார்த்து வந்தார். இவரும், சாப்ட்வேர் என்ஜினீயர் ஆதேஷ் என்பவரும் திருமணம் செய்யாமல் கணவன்-மனைவி போல் வாழ்ந்துள்ளனர். இவர்கள் பெங்களூரு கோரமங்களா 8-வது பிளாக்கில் உள்ள ரேணுகா குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி இரவு ககனசக்தி அர்ச்சனாவுக்கும், ஆதேசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் ககனசக்தி அர்ச்சனா கோபித்து கொண்டு வெளியே சென்றார். பின்னர் அவர் குடியிருப்பின் 4-வது மாடிக்கு சென்றார். இந்த நிலையில் திடீரென்று அங்கிருந்து கீழே குதித்தார். இதில் ககனசக்தி அர்ச்சனா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசிகள் உடனடியாக கோரமங்களா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    பின்னர் அவர்கள் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோரமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே அர்ச்சனாவின் தாய் போலீசில் அளித்த புகாரில் தனது மகளை ஆதேஷ் 4-வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.

    கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஆதேஷ் டேட்டிங் ஆப் மூலம் அர்ச்சனாவை சந்தித்துள்ளார். கடந்த 7 மாதங்களாக அவர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் கணவன்-மனைவியாக வாழ்ந்துள்ளனர்.

    சம்பவத்தன்று, தம்பதியினர் திரைப்படம் பார்த்துவிட்டு வீடு திரும்பியதும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தகராறு முற்றியதில் ககனசக்தி அர்ச்சனாவை ஆதேஷ் மாடியில் இருந்து தள்ளி விட்டு கொலை செய்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஆதேசை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அப்தாப் பிரபலமான தாஜ் ஹோட்டலில் சமையல் பயிற்சி பெற்றவர் என்றும், சதையை எப்படி பாதுகாப்பது என்றும் அவருக்கு தெரியும்.
    • ஸ்ரத்தாவை கொலை செய்த பிறகு தரையை சுத்தம் செய்ய உலர்ந்த ஐஸ் மற்றும் ரசாயனங்களை அப்தாப் பயன்படுத்தி உள்ளார்.

    புதுடெல்லி:

    கடந்த ஆண்டு டெல்லியில் ஸ்ரத்தா என்ற இளம்பெண்ணை அவரது காதலன் அப்தாப் என்பவர் கொடூரமாக கொலை செய்து உடலை துண்டு, துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    தலையை துண்டித்து வீட்டில் உள்ள 300 லிட்டர் பிரிட்ஜில் வைத்திருந்த அவர், வீட்டில் நாற்றம் வராமல் இருப்பதற்காக நறுமணங்களை பயன்படுத்தி இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அப்தாபை போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து வாக்குமூலம் பெற்ற போலீசார் சுமார் 6,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

    அப்தாப்பிற்கும், ஸ்ரத்தாவிற்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்ததாலும், ஸ்ரத்தாவிடம் அப்தாப் அதிகளவில் பணம் கேட்ட பிரச்சினையிலும் கொலை நடந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் சம்பவத்தன்று ஸ்ரத்தாவை கழுத்தை நெரித்து கொலை செய்த அப்தாப் உடல் பாகங்களை கூறு போட்டு கொஞ்சம், கொஞ்சமாக அப்புறப்படுத்தி உள்ளார் என்பது போன்ற விபரங்களும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.

    இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக கூடுதல் தகவல்களை டெல்லி போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். அதில், அப்தாப் ஒரு பயிற்சி பெற்ற சமையல் கலைஞர். அவர் பிரபலமான தாஜ் ஹோட்டலில் சமையல் பயிற்சி பெற்றவர் என்றும், சதையை எப்படி பாதுகாப்பது என்று அவருக்கு தெரியும்.

    ஸ்ரத்தாவை கொலை செய்த பிறகு தரையை சுத்தம் செய்ய உலர்ந்த ஐஸ் மற்றும் ரசாயனங்களை பயன்படுத்தி உள்ளார். ஸ்ரத்தாவை கொலை செய்த ஒரு வாரத்தில் அப்தாப் வேறு ஒரு பெண்ணுடன் உறவில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஸ்ரத்தாவிற்கு முன்பு கொடுத்த மோதிரத்தை தனது புதிய காதலிக்கு அவர் பரிசளித்துள்ளார் என்ற விபரங்களையும் டெல்லி போலீசார் கோர்ட்டில் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே அப்தாப் உயர்கல்வி படிக்க விரும்புவதாகவும், இதற்காக கல்வி சான்றிதழ்களை பெறுவதற்கு அனுமதிக்க வேண்டும் என டெல்லி கோர்ட்டில் கோரிக்கை வைத்துள்ளார்.

    நான் காதலிக்கும் பெண்ணை நீ எப்படி நிச்சயம் செய்ய போவாய் என்று கூறி ஏழுமலையின்முதுகில் கத்தியால் குத்தி, உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன் என்றார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே புத்தந்தூர் காட்டு க்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 26) இவர் சம்பவத்தன்று புத்தந்தூர் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (24), என்பவர் நான் காதலிக்கும் பெண்ணை நீ எப்படி நிச்சயம் செய்ய போவாய் என்று கூறி ஏழுமலையின் முதுகில் கத்தியால் குத்தி, உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன் என்று கூறியதாக தெரிகிறது.

    இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர்.

    • பதஸ்வினி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த ஞானேஸ்வர் அவரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளினார்.
    • தன்னை யாராவது பிடிக்க வந்தால் கையை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், தக்கில பாடு பகுதியை சேர்ந்தவர் பதஸ்வினி (வயது 20). இவர் விஜயவாடாவில் உள்ள கல்லூரி விடுதியில் தங்கி பல் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து வந்தார்.

    குண்டூர் மாவட்டம் மாணிக்கொண்டாவை சேர்ந்தவர் ஞானேஸ்வர். சாப்ட்வேர் என்ஜினியரான இவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்தார். அப்போது பதஸ்வினியுடம், ஞானேஸ்வருக்கு பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக பழகி வந்தனர்.

    பின்னர் இவர்களது நட்பு காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் பதஸ்வினியின் பெற்றோருக்கு தெரியவந்தது. காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பதஸ்வினி, ஞானேஸ்வருடன் பழகுவதை தவிர்த்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கல்லூரி விடுதியில் இருந்து விடியூரில் உள்ள தனது பெண் நண்பர் வீட்டிற்கு வந்து இருந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஞானேஸ்வர் நேற்று இரவு விடியூருக்கு சென்று பதஸ்வினியை சந்தித்து பெற்றோருக்கு தெரியாமல் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என வற்புறுத்தினார். அதற்கு பதஸ்வினி மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த ஞானேஸ்வர் அவரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளினார்.

    பின்னர் தான் மறைத்து வைத்திருந்த அறுவை சிகிச்சை செய்யும் கத்தியை எடுத்து பதஸ்வினியின் கழுத்தை அறுத்தார். இதனால் அவரது கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. பதஸ்வினி வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது பதஸ்வினி ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஞானேஸ்வரை பிடிக்க முயற்சி செய்தனர். தன்னை யாராவது பிடிக்க வந்தால் கையை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார்.

    இருப்பினும் ஞானேஸ்வரை பிடித்து கொண்டு பதஸ்வினியை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் பதஸ்வினி பரிதாபமாக இருந்தார்.

    குண்டூர் போலீசார் ஞானேஸ்வரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்திற்கு மறுத்த காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • லிவிங் டுகெதர் முறையில் குடும்பம் நடத்தி வந்த ஷ்ரத்தா வாக்கர் காதலனால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
    • இந்த வழக்கில் போலீசார் அப்தாப்பை கடந்த 12-ம் தேதி கைது செய்து காவலில் எடுத்துள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லியில் லிவிங் டுகெதர் முறையில் குடும்பம் நடத்தி வந்த ஷ்ரத்தா வாக்கர் (28), என்ற பெண், காதலன் அப்தாப்பால் 35 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் மே மாதம் நிகழ்ந்துள்ளது. காதலியின் உடலை 35 துண்டுகளாக வெட்டி கூறுபோட்டுள்ளார். இதன்பின்னர், அவற்றை டெல்லியின் பல பகுதிகளில் வீசி சென்றுள்ளார். இந்த வழக்கில் போலீசார் அப்தாப்பை கடந்த 12-ம் தேதி கைது செய்து காவலில் எடுத்துள்ளது.

    இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பே அவன் கொலை செய்வான் என்றும், பல துண்டுகளாக வெட்டுவான் என்றும் ஷ்ரத்தா வாக்கர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 23-ம் தேதி மகாராஷ்டிராவின் நலசோப்ரா நகரில் துலிஞ்ச் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் வாக்கர் புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகாரில், அவன் இன்று என்னை மூச்சு திணறச்செய்து கொல்ல முயன்றான். என்னை பயமுறுத்துவதோடு, கொலை செய்து, பல துண்டுகளாக வீசி விடுவேன் என்று மிரட்டலும் விடுக்கிறான். 6 மாதங்களாக இது தொடருகிறது. என்னை தாக்கிக்கொண்டே இருக்கிறான். ஆனால், எனக்கு போலீசாரிடம் செல்ல தைரியம் இல்லை. ஏனெனில், என்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டக்கூடும் என தெரிவித்துள்ளார்.

    மேலும், அந்த புகாரில் அப்தாப்பின் பெற்றோருக்கும் கூட நாங்கள் ஒன்றாக வாழ்கிறோம் என தெரியும். என்னை தாக்குவதும், கொலை செய்ய முயற்சிப்பதும் கூட அவர்களுக்கு தெரியும் என்று தெரிவித்துள்ளார்.

    • பொருட்களை டெல்லிக்கு கொண்டு செல்ல 37 பெட்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
    • பணத்தை கொடுப்பது தொடர்பாக காதலர்கள் இடையே சண்டை நிகழ்ந்துள்ளது.

    டெல்லியில் லிவிங் டுகெதர் முறையில் குடும்பம் நடத்தி வந்த ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண், காதலன் அப்தாப்பால் 35 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை காவல்துறை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் சாட்சியங்களைத் தேடுவதற்காக மகாராஷ்டிரா, அரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு டெல்லி காவல்துறை குழுக்கள் விரைந்துள்ளன. 

    இந்நிலையில் டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த காதலர்கள், அதற்கு முன்பு மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து கடந்த ஜூன் மாதம் அப்தாப், டெல்லிக்கு உடமைகளை மாற்றி உள்ளார். இதற்காக 37 பெட்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    குட்லக் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் நிறுவனம் மூலம் மரச்சாமான்கள் மற்றும் பிற வீட்டு உபயோகப் பொருட்களை கொண்டு செல்வதற்காக ரூ.20,000 செலுத்தப்பட்டுள்ளது. முன்னதாக இந்த பணத்தை யார் கொடுப்பது என்பது தொடர்பாக இருவரும் சண்டை போட்டதாக அப்தாப் காவல்துறை விசாரணையில் தெரிவித்துள்ளார்.

    20 ஆயிரம் ரூபாய் யாருடைய வங்கி கணக்கில் இருந்து செலுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஷ்ரத்தாவும், அப்தாப்பும் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அப்தாப் குடும்ப உறுப்பினர்கள் வாக்குமூலத்தையும் போலீஸார் பதிவு செய்துள்ளனர்.

    மகாராஷ்டிராவை விட்டு வெளியேறிய பிறகு, காதலர்கள் இருவரும் இமாச்சலப் பிரதேசம் உட்பட பல இடங்களுக்குச் சென்றுள்ளனர். அந்த பயணங்களின் போது அவர்களுக்கு இடையே ஏதாவது தகராறு ஏற்பட்டதா, அதனால் இந்த கொலை நடைபெற்றதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×