search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பெங்களூரு விமான பணிப்பெண் மரணத்தில் திருப்பம்: காதலனே 4-வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொன்றது அம்பலம்
    X

    ககனசக்தி அர்ச்சனா- ஆதேஷ்


    பெங்களூரு விமான பணிப்பெண் மரணத்தில் திருப்பம்: காதலனே 4-வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொன்றது அம்பலம்

    • கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஆதேஷ் டேட்டிங் ஆப் மூலம் அர்ச்சனாவை சந்தித்துள்ளார்.
    • கடந்த 7 மாதங்களாக ஆதேஷ்- அர்ச்சனா இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் கணவன்-மனைவியாக வாழ்ந்துள்ளனர்.

    கோரமங்களா:

    இமாச்சலபிரதேசத்தை சேர்ந்தவர் ககனசக்தி அர்ச்சனா (வயது 28). இவர் விமான பணி பெண்ணாக வேலை பார்த்து வந்தார். இவரும், சாப்ட்வேர் என்ஜினீயர் ஆதேஷ் என்பவரும் திருமணம் செய்யாமல் கணவன்-மனைவி போல் வாழ்ந்துள்ளனர். இவர்கள் பெங்களூரு கோரமங்களா 8-வது பிளாக்கில் உள்ள ரேணுகா குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி இரவு ககனசக்தி அர்ச்சனாவுக்கும், ஆதேசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் ககனசக்தி அர்ச்சனா கோபித்து கொண்டு வெளியே சென்றார். பின்னர் அவர் குடியிருப்பின் 4-வது மாடிக்கு சென்றார். இந்த நிலையில் திடீரென்று அங்கிருந்து கீழே குதித்தார். இதில் ககனசக்தி அர்ச்சனா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசிகள் உடனடியாக கோரமங்களா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    பின்னர் அவர்கள் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோரமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே அர்ச்சனாவின் தாய் போலீசில் அளித்த புகாரில் தனது மகளை ஆதேஷ் 4-வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.

    கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஆதேஷ் டேட்டிங் ஆப் மூலம் அர்ச்சனாவை சந்தித்துள்ளார். கடந்த 7 மாதங்களாக அவர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் கணவன்-மனைவியாக வாழ்ந்துள்ளனர்.

    சம்பவத்தன்று, தம்பதியினர் திரைப்படம் பார்த்துவிட்டு வீடு திரும்பியதும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தகராறு முற்றியதில் ககனசக்தி அர்ச்சனாவை ஆதேஷ் மாடியில் இருந்து தள்ளி விட்டு கொலை செய்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஆதேசை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×