search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்வி உதவித்தொகை"

    • கல்வி உதவித்தொகை பெற பள்ளி மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூல மாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும், நேரடியாக விண்ணப்பிக்க கூடாது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம் (புதுமைப்பெண் திட்டம்) முதல்-அமைச்சரால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந்தேதி அன்று தொடங்கப்பட்டது. இதன் மூலம் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு/தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவி களுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது.

    தற்போது 2023-24-ம் கல்வியாண்டிற்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் சேர்க் கைக்கான வலைத்தளமா னது (www.pudhumaipenn.tn.gov.in) 4.9.2023 அன்று தொடங் கப்பட உள்ளது.

    இந்த வலைத்தளத்தில், மாணவிகள், அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக 4.9.2023 முதல் பதிவு செய்யலாம். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியான வர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூல மாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும், நேரடியாக விண்ணப்பிக்க கூடாது.

    இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் 4.9.2023 முதல் சிறப்பு முகாம்கள் நடைபெறும். மாணவிகள் தவறாமல் அவர்களுடைய ஆதார் அட்டை, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண், வங்கி கணக்கு எண் (ஆதாருடன் இணைக்கப்பட்டது), (மாற்றுச் சான்றிதழ்) சமர்ப்பிக்க வேண்டும்.மேல் படிப்பு மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் பயிலும் இத்திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த மாணவிகள் அனைவரும் தாங்கள் பயிலும் கல்லூரியில் உள்ள பொறுப்பு அலுவலர்கள் மூலம் தவறாமல் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பல்வேறு நாடுகளுக்குச் சென்று வாழும் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்க்கவும், உதவிகளைச் செய்யவும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
    • குடும்பத்திலுள்ள அவர்தம் மகன்/மகளுக்கு திருமண உதவித் தொகை மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

    சென்னை:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார் அதில் கூறியிருப்பதாவது:

    தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும், அவர்களுக்கு தமிழ்நாடுதான் தாய்வீடு. அவர்கள் மீது அன்பு செலுத்துவது மட்டுமல்ல, அரவணைப்பதும், பாதுகாப்பதும் தாய்த் தமிழ்நாட்டின் கடமையாகும். இப்படி பல்வேறு நாடுகளுக்குச் சென்று வாழும் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்க்கவும், உதவிகளைச் செய்யவும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த தமிழர்கள் வெளிநாட்டிற்குச் சென்று பணியாற்றி பணியின் போது இறக்க நேரிட்டால் அவர்கள் குடும்பத்திலுள்ள அவர்தம் மகன்/மகளுக்கு திருமண உதவித் தொகை மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள்.

    இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையின் சார்பில் அயல்நாடுகளுக்கு பணியின் பொருட்டு சென்று அங்கு பணியின்போது இறந்த குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த தமிழர்களின் குடும்பத்திலுள்ள மகன் / மகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிடும் வகையிலும், திருமணத்தின் பொருட்டு ஏற்படும் எதிர்பாராத கூடுதல் செலவினத்தால் அக்குடும்பத்தினர் கடனில் சிக்கித் தவிப்பதை தடுக்கும் பொருட்டும், அக்குடும்பத்திலுள்ள மகன் / மகளுக்கு திருமண உதவித் தொகையாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கிடவும்; அவர்தம் குடும்பத்திலுள்ள மகன்/ மகளுக்கு கல்வியில் சிறந்த எதிர்காலத்தினை உருவாக்கிடும் வகையிலும், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவர்களின் விகிதத்தை அதிகரிப்பதற்கும், கல்வியில் அவர்களின் ஆர்வத்தை அதிகரிப்பதற்கும் தொகையாக 12 ஆயிரம் ரூபாய் வழங்கிடவும் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

    மேற்குறிப்பிட்ட திருமண உதவித் தொகை மற்றும் கல்வி உதவித் தொகை பெற அயலகத் தமிழர் நலவாரியத்தில் பதிவு செய்திருந்தல் வேண்டும். திருமண உதவித் தொகை பெற திருமணத்தின் போது மணமகனுக்கு 21வயதும், மணமகளுக்கு 18 வயதும் நிறைவடைந்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும், பழங்குடியினர் 5-ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் இரண்டு நபர்களுக்கு மட்டும் திருமண உதவித் தொகை வழங்கப்படும்.

    கல்வி உதவித் தொகை பெற தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று அல்லது அயல்நாடுகளின் அதற்கு இணையான படிப்புகளில் தேர்ச்சி பெற்று 11-ஆம் மற்றும் 12-ஆம் வகுப்பு சேர்க்கை பெற்ற மாணவர்கள், மருத்துவக் கல்லூரி படிப்பு / பொறியியல் படிப்பு / வேளாண்மை பொறியியல் (Agri./Engg.) மற்றும் டிப்ளமோ படிப்பு, அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் மூலம் தொழிற்கல்வி படிப்புகள் பாலிடெக்னிக்குகள் (Polytechnic)/ தொழிற் பயிற்சி நிறுவனங்களில் சேர்க்கை (Admission) பெற்ற மாணவர்கள் மட்டுமே இக்கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள். ஒரு குடும்பத்தில் இரண்டு மாணவர்களுக்கு மேல் உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது.

    மேற்படி உதவித் தொகைகள் வழங்குவது தொடர்பான விரிவான நடைமுறை அயலகத் தமிழர் நல வாரியத்தால் வகுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
    • 16-ம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    2023-24 ம் நிதியாண்டில் நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர்மரபின பழங்குடியினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 3093 மாணவ, மாணவியர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் (மாணவ, மாணவியர்கள்) பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும். 9 மற்றும் 10 வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சம் ரூ.75 ஆயிரம் வரையிலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தேசிய தேர்வு முகமை நடத்தும் PM-YASASVI நுழைவுத் தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இத்தேர்விற்கு வருகிற ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதிக்குள் மேற்காணும் இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், வருகிற ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படும். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கல்வி உதவித்தொகை பெற்று பயனடைய கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.

    • கல்வி உதவித்தொகை திட்டத்தில் தகுதியான மாணவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து எழுத்துத் தேர்வின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெற்றுப் பயன் பெறலாம்.
    • முப்பதாயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்ப தாவது:-

    கல்வி உதவிதொகை

    மத்திய அரசின் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் தகுதியான மாணவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து எழுத்துத் தேர்வின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெற்றுப் பயன் பெறலாம்.

    2023-24 நிதி யாண்டில், நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபின பழங்குடியினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த முப்பதாயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    9-ம் வகுப்பு

    தமிழ்நாட்டைச் சேர்ந்த 3,093 மாணவ, மாணவிகளுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் (மாணவ, மாணவியர்கள்) பெற்றோர், அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருத்தல் வேண்டும். பள்ளிகளில் 9 அல்லது 11 - ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்க வேண்டும்.

    10-ந்தேதிக்குள்...

    9 மற்றும் 10 -ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையிலும் 11 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தேசியத் தேர்வு முகமை நடத்தும் நுழைவுத் தேர்வில் (YASASVI Entrance Test) தேர்ச்சி பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இத்தேர்விற்கு 10.08.2023 க்குள் https://yet.nta.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் 12.08.2023 முதல் 16.08.2023 தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படும்.

    எழுத்துத் தேர்வு

    எழுத்துத் தேர்வு 29.09.2023 -ம் தேதி நடைபெறும். விண்ணப்பத்துடன் கைப்பேசி எண், ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு எண், வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • தமிழகத்தை சேர்ந்த 3,093 மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கல்வி உதவித்தொகை

    2023-24 நிதியாண்டில் நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபின பழங்குடியினர் (ஓ.பி.சி., இ.பி.சி., டி.என்.டி.) ஆகிய பிரிவுகளை சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் தமிழகத்தை சேர்ந்த 3,093 மாணவ, மாணவிகளுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப் பட்டுள்ளது.

    இத்திட்டத்தில் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும்.

    ரூ. 1 லட்சம் வரை

    9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவ, மாணவி களுக்கு அதிகபட்சமாக ரூ. 75 ஆயிரம் வரையிலும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தேசிய தேர்வு முகமை நடத்தும் நுழைவுத் தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

    இத்தேர்விற்கு வருகிற 10-ந் தேதிக்குள் https://vet.nta.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப் பத்துடன் கைப்பேசி எண், ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு எண், வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் வருகிற 12-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படும்.

    இதற்கான எழுத்து தேர்வு செப்டம்பர் 29-ந் தேதி நடைபெறும்.

    இத்திட்டம் தொடர்பான முழுமையான விவரங்கள் https://yct.ntn.ac.in மற்றும் http://socinljustice.gov.in/schemes/ ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தேர்வுக்கு 10.8.2023-க்குள் https://yet.nta.ac.in என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    2023-24-ம் நிதி யாண்டில் நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர் மரபின பழங்குடியினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தை சேர்ந்த 3 ஆயிரத்து 93 மாணவ, மாணவிகளுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப் படும் என மத்திய அரசால் அறி விக்கப்பட்டு ள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருத்தல் வேண்டும். https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டு உள்ள பள்ளிகளில் 9 அல்லது 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும்.

    9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையிலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்ப டும். தேசிய தேர்வு முகமை நடத்தும் நுழைவுத் தேர்வில் பெற்ற தகுதியின் அடி ப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்த தேர்வுக்கு 10.8.2023-க்குள் https://yet.nta.ac.in என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 29-ந் தேதி நடைபெறும்.

    மேலும் விவரங்கள் https://hyet.nta.ac.inமற்றும் https://socialjustice.gov. ஆகிய இணையதள முகவரி களில் வெளியி டப் பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விழாவில் சங்கத்தின் அறங்காவலர் குழு தலைவர் சச்சிதானந்தம், ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட அறங்காவலர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
    • 56 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினர்.

    தருமபுரி,

    தருமபுரி ராகவேந்திரா சுவாமி பிருந்தாவனம் கோவிலில் திருவாலங்காடு இம்முடி அகோரதர்ம சிவாச்சாரியார் நெருஞ்சிப்பேட்டை ஆயிர வைசிய மடத்தின் சார்பாக கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

    இந்த விழாவுக்கு தமிழ்நாடு ஆயிர வைசிய சங்க மாநில தலைவர் வேந்தர் விநாயகா மிஷின்ஸ் டாக்டர் கணேசன், ஆயிர வைசியர் சங்கம் மாநில செயலாளரும், தர்மபுரி மாவட்ட கவுரவ ஆலோசகருமான டாக்டர் ஜெயராமன் ஆகியோர் தலைமையில் நடந்தது.

    விழாவில் சங்கத்தின் அறங்காவலர் குழு தலைவர் சச்சிதானந்தம், ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட அறங்காவலர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் தர்மபுரி மாவட்ட ஆயிர வைசியர் சங்கத்தின் கவுரவ தலைவர்கள் புருஷோத்தமன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டம் சுற்றியுள்ள ஆயிர வைசிய சமுதாயத்தை சேர்ந்த 56 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினர்.

    விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஆயிர வைசிய சங்கத்தின் சேலம் மாவட்ட பொறுப்பாளர்கள் ராமசாமி மற்றும் பாலு, ஓசூர் நகர தலைவர் ராமலிங்கம், பாப்பம்பாடி கிளை தலைவர் ஞானசேகரன், சேலம் மாவட்டம் பொறுப்பாளர் மற்றும் உறுப்பினர்கள், ஆத்தூர் தலைவர் மதிவதனன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் திருக்கைவேல் உள்பட நிர்வாக உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட அறங்காவலர் நெருஞ்சிப்பேட்டை ஆயிர வைசியர் மடம் தலைவர் மணிகண்டன், மாவட்ட செயலாளர்கள் சதீஷ் என்கின்ற அருணாச்சலம், மாவட்ட பொருளாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • இதில் ஊராட்சி மன்ற தலைவர் கலந்து கொண்டு தேனீக்கள் வளர்க்கும் 19 குடும்பங்களின் மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான உதவித் தொகையினை வழங்கி பேசினார்
    • இதில் தேனீ வளர்ப்பு குடும்பங்களை சேர்ந்த பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செந்துறை அருகே குடகிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் தேனீ வளர்க்கும் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது.

    இதற்கு சீட்ஸ் டிரஸ்ட் நிறுவன இயக்குநர் முத்துச்சாமி தலைமை தாங்கினார். தேவாங்கு பாதுகாப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்பாண்டி முன்னிலை வகித்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி அழகர்சாமி கலந்து கொண்டு தேனீக்கள் வளர்க்கும் 19 குடும்பங்களின் மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான உதவித் தொகையினை வழங்கி பேசினார். இதில் தேனீ வளர்ப்பு குடும்பங்களை சேர்ந்த பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • ரூ.1 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பில் கல்வி உதவி தொகையை ஐ.வி.டி.பி. நிறுவன தலைவரும், ராமன் மகசேசே விருது பெற்றவருமான குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்.
    • மாணவர்கள் கல்வியில் மென்மேலும் உயர்ந்து இந்த சமுதாயத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் கிருஷ்ணகிரியை தலைமையிடமாக கொண்டு கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்களை அமைத்து செயல்பட்டு வருகிறது. மேலும் கல்வி பணியிலும் சேவையாற்றி வருகிறது.

    அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் கெரிகேப்பள்ளியில் செயல்பட்டு வரும் நடுநிலைப்பள்ளியின் மாணவ, மாணவிகளின் நலன் கருதி அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரின் வேண்டுகோளுக்கு ஏற்ப ஒவ்வொரு வருடமும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் வழங்கி வருகிறது.

    இந்த வருடம் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் ரூ.32 ஆயிரத்து 900 மதிப்பில் ஸ்மார்ட் 43 இன்ஞ் டி.வி. மற்றும் மாணவர்களின் பயன்பாட்டிற்காக ரூ.1 லட்சத்து ஆயிரத்து 130 மதிப்பில் ஒலியமைப்பு என மொத்தம் ரூ.1 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பில் கல்வி உதவி தொகையை ஐ.வி.டி.பி. நிறுவன தலைவரும், ராமன் மகசேசே விருது பெற்றவருமான குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்.

    தொடர்ந்து பேசிய அவர், மாணவர்கள் கல்வியில் மென்மேலும் உயர்ந்து இந்த சமுதாயத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

    மேலும் இதுவரை ஐ.வி.டி.பி. நிறுவனத்தின் மூலம் இந்த பள்ளிக்கு ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான கல்வி உதவிகள் வழங்கப்பட்டு ள்ளதாக தெரிவித்தார்.

    • ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாணவ-மாணவிகள் கல்வியை தொடர உதவித் ெதாகை வழங்கி வருகிறது.
    • நேற்று முன்தினம் வரை 3 லட்சம் மாணவ- மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி–யினர் நலத்துறை சார்பில் மாணவ- மாணவிகள் கல்வியை தொடர உதவித் ெதாகை வழங்கி வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பிக்கும் நடைமுறை tnadtwscholarship.tn.gov.in. என்ற இணையதளம் வாயிலாக கடந்த ஜனவரி மாதம் 30-ந்தேதி ெதாடங்கியது.

    3 லட்சம் பேர்

    இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் வரை 3 லட்சம் மாணவ- மாண–விகள் விண்ணப்பித்துள்ள–னர். சேலம் மாவட்டத்தை சேர்ந்த பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவ- மாணவிகள் ஏராளமா–னோர் விண்ணப்–பித்துள்ளனர். விதிமுறைகளின்படி நடப்பு கல்வி ஆண்டு முதல் விண்ணப்பத்துடன் இணைக்–கப்பட்ட ஜாதி சான்று, வருமான சான்று, ஆதாருடன் இணைக்கப்பட்ட சேமிப்பு கணக்கு எண் ஆகிய அனைத்து ஆவணங்களும் இணைய வழியில் சரிபார்க்கப்படும்.

    இணையதளத்தில் கல்வி உதவித்தொகை பெற எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பது ெதாடர்பாக வீடியோ வெளியி–டப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க போதுமான கால அவகாசம் வழங்கப்–படும் என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பழங்குடியினர் இன மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்காக இணையதளம் திறக்கப்பட்டுள்ளது.
    • மாணவர்களின் ஆதார் அட்டை, வங்கி கணக்கு மற்றும் தொலைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    பழங்குடியினர் இன மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்காக இணையதளம் (https://tnadtwscholarship.tn.gov.in) திறக்கப்பட்டுள்ளது.

    அனைத்து வகை கல்லூரிகளில் படிக்கும் பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை இணையவழியில் விண்ணப்பிக்கப்பட்டதை சம்பந்தப்பட்ட கல்லூரி பொறுப்பு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். அதே போல் மாணவர்களின் ஆதார் அட்டை, வங்கி கணக்கு மற்றும் தொலைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
    • tn.adtwo.gov.in.index.php மூலம் கல்லூரிகள் தனது குறிப்புகளை பதிவு செய்ய வேண்டும்

    நாகர்கோவில்:

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை யின் சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி கள் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உத வித்தொகை வழங்குவது குறித்து துறை சார்ந்த அலு வலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    உதவித்தொகைவழங்கும் திட்டத்தில் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்திற்குள் இருக்கும் ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் அல்லது மதம் மாறிய ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கு அரசின் கல்வி உதவித் தொகை வழங்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குமரி மாவட்டத்திற்குட்பட்ட மாணவ-மாணவிகள் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை பெற 4 ஆயிரத்து 499 மாணவ- மாணவிகள் புதுப்பித்தலுக்கும், 2 ஆயிரத்து 150 மாணவ- மாணவிகள் புதிதாக விண்ணப்பிக்கவும், தகுதியுடையவர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.

    மத்திய, மாநில அரசுகளின் உதவித் தொகையை மாணவர்களுக்கு தங்கு தடையின்றி வழங்க விரைந்து நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். மேலும், போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்கும் கடந்த கால முறையில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி tn.adtwo.gov.in.index.php எனும் இணையத்தின் மூலம் கல்லூரிகள் முதலில் தனது குறிப்புகளை உரிய ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும். இப்பதிவேற்றத்திற்கு கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.எச்.இ. கோடு மிக அவசியம். பின்னர் மாணவர்கள் தங்கள் ஆதார் மூலம் சுய விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் நிறைவு பெற்றால் மட்டுமே மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை மத்திய, மாநில அரசுகளின் மூலம் பெற முடியும்.

    குமரி மாவட்டத்தில் உள்ள மொத்தம் 6 ஆயிரத்து 655 மாணவர்களில் இது வரை 339 பேர் மட்டுமே முழுமையாக பதிவு செய்துள்ளனர். இத்திட்டத்தை விரைவுபடுத்தி அனைத்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாண வர்கள் பயன்பெறும் வகையில் துறைசார்ந்த அலுவலர்கள் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் நாகராஜன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×