search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்வி உதவித்தொகை பெற பள்ளி மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
    X

    கல்வி உதவித்தொகை பெற பள்ளி மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

    • கல்வி உதவித்தொகை பெற பள்ளி மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூல மாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும், நேரடியாக விண்ணப்பிக்க கூடாது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம் (புதுமைப்பெண் திட்டம்) முதல்-அமைச்சரால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந்தேதி அன்று தொடங்கப்பட்டது. இதன் மூலம் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு/தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவி களுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது.

    தற்போது 2023-24-ம் கல்வியாண்டிற்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் சேர்க் கைக்கான வலைத்தளமா னது (www.pudhumaipenn.tn.gov.in) 4.9.2023 அன்று தொடங் கப்பட உள்ளது.

    இந்த வலைத்தளத்தில், மாணவிகள், அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக 4.9.2023 முதல் பதிவு செய்யலாம். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியான வர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூல மாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும், நேரடியாக விண்ணப்பிக்க கூடாது.

    இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் 4.9.2023 முதல் சிறப்பு முகாம்கள் நடைபெறும். மாணவிகள் தவறாமல் அவர்களுடைய ஆதார் அட்டை, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண், வங்கி கணக்கு எண் (ஆதாருடன் இணைக்கப்பட்டது), (மாற்றுச் சான்றிதழ்) சமர்ப்பிக்க வேண்டும்.மேல் படிப்பு மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் பயிலும் இத்திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த மாணவிகள் அனைவரும் தாங்கள் பயிலும் கல்லூரியில் உள்ள பொறுப்பு அலுவலர்கள் மூலம் தவறாமல் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×