search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prime Minister's Scholarship"

    • கல்வி உதவித்தொகை திட்டத்தில் தகுதியான மாணவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து எழுத்துத் தேர்வின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெற்றுப் பயன் பெறலாம்.
    • முப்பதாயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்ப தாவது:-

    கல்வி உதவிதொகை

    மத்திய அரசின் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் தகுதியான மாணவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து எழுத்துத் தேர்வின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெற்றுப் பயன் பெறலாம்.

    2023-24 நிதி யாண்டில், நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபின பழங்குடியினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த முப்பதாயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    9-ம் வகுப்பு

    தமிழ்நாட்டைச் சேர்ந்த 3,093 மாணவ, மாணவிகளுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் (மாணவ, மாணவியர்கள்) பெற்றோர், அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருத்தல் வேண்டும். பள்ளிகளில் 9 அல்லது 11 - ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்க வேண்டும்.

    10-ந்தேதிக்குள்...

    9 மற்றும் 10 -ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையிலும் 11 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தேசியத் தேர்வு முகமை நடத்தும் நுழைவுத் தேர்வில் (YASASVI Entrance Test) தேர்ச்சி பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இத்தேர்விற்கு 10.08.2023 க்குள் https://yet.nta.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் 12.08.2023 முதல் 16.08.2023 தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படும்.

    எழுத்துத் தேர்வு

    எழுத்துத் தேர்வு 29.09.2023 -ம் தேதி நடைபெறும். விண்ணப்பத்துடன் கைப்பேசி எண், ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு எண், வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • பிரதம மந்திரி இளம் சாதனையாளர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கான தேர்வு கடந்த செப்டம்பர் 25-ந் தேதி நடைபெற்றது.
    • தென்காசி புனித மிக்கேல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவிகள் 23 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தென்காசி:

    இந்தியா முழுவதும் தேசிய அளவில் மத்திய அரசால் நடத்தப்படும் பிரதம மந்திரி இளம் சாதனையாளர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கான தேர்வு கடந்த செப்டம்பர் 25-ந் தேதி நடைபெற்றது.

    தமிழ்நாடு அளவில் நடைபெற்ற இந்த தேர்வில் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த 26-ந் தேதி வெளியிடப்பட்டது.

    இந்த தேர்வில் 9-ம் வகுப்பு மாணவிகள் 164 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் தென்காசி புனித மிக்கேல் பெண்கள் மேல் நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் 33 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த மாணவிகளுக்கு 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.75 ஆயிரம் வீதம் 2 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.1½ லட்சம் மத்திய அரசால் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்.

    இதைப்போலவே தமிழ்நாடு அளவில் 11-ம் வகுப்பு மாணவிகள் மொத்தம் 232 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் தென்காசி புனித மிக்கேல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவிகள் 23 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு 11 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வீதம் 2 வருடங்களுக்கு மொத்தம் ரூ.2½ லட்சம் மத்திய அரசால் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.

    சாதனை படைத்த 56 மாணவிகள், பயிற்றுவித்த ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர், பள்ளியின் தாளாளர், அமலவை அருட் சகோதரிகள் மற்றும் அமலவை நிர்வாகத்தினர் அனைவருக்கும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் தென்காசி பகுதியை சார்ந்த சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் சாதனை படைத்த மாணவிகள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

    ×