search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடகிப்பட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
    X

    அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

    குடகிப்பட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

    • இதில் ஊராட்சி மன்ற தலைவர் கலந்து கொண்டு தேனீக்கள் வளர்க்கும் 19 குடும்பங்களின் மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான உதவித் தொகையினை வழங்கி பேசினார்
    • இதில் தேனீ வளர்ப்பு குடும்பங்களை சேர்ந்த பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செந்துறை அருகே குடகிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் தேனீ வளர்க்கும் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது.

    இதற்கு சீட்ஸ் டிரஸ்ட் நிறுவன இயக்குநர் முத்துச்சாமி தலைமை தாங்கினார். தேவாங்கு பாதுகாப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்பாண்டி முன்னிலை வகித்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி அழகர்சாமி கலந்து கொண்டு தேனீக்கள் வளர்க்கும் 19 குடும்பங்களின் மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான உதவித் தொகையினை வழங்கி பேசினார். இதில் தேனீ வளர்ப்பு குடும்பங்களை சேர்ந்த பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×