search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழங்குடியின மாணவர்கள்"

    • முதுமலை புலிகள் சரணாலயத்தில் பல்லுயிரின பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.
    • மாணவர்களிடம் களிமண்களை கொடுத்த வனத்துறை அதிகாரிகள், வனவிலங்குகளின் உருவத்தை வடிவமைக்கும்படி கூறினர்.

    மேட்டுப்பாளையம்,

    நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் சரணாலயம் உள்ளது. இங்கு உள்ள மசினகுடி, யானைப்பாடி ஆகிய காட்டுப்பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்களில் பலர் வனத்துறையில் வனவராக வேலை பார்த்து வருகின்றனர். இன்னும் சிலர் தெப்பக்காடு யானைகள் புத்துணர்வு முகாமில் பாகன்களாக உள்ளனர்.

    இதுதவிர வனவிலங்கு வேட்டை தடுப்பு, தீ பரவல் தடுப்பு மற்றும் பல்லுயிரின பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு குழுக்களில் பழங்குடியின மக்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    முதுமலை புலிகள் சரணாலயத்தில் பல்லுயிரின பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி பழங்குடியின மாணவர்களை அடர்வனத்திற்குள் சுற்றுலா அழைத்து செல்ல வனத்துறையினர் திட்டமிட்டனர்.

    அதன்படி மசினகுடி, ஆனைப்பட்டியை சேர்ந்த 40 பழங்குடியின மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, நேற்று அவர்கள் யானை சவாரி மூலம் புலிகள் காப்பகத்தில் உள்ள அடர்வனத்திற்குள் அழைத்து செல்லப்பட்டனர்.

    10 கி.மீ சுற்றளவுக்கு சென்ற மாணவ-மாணவிகள், காட்டுப்பகுதியில் சுற்றித்திரியும் மான்கள், யானை உள்பட பல்வேறு வனவிலங்குகளை நேரடியாக கண்டு களித்து உற்சாகம் அடைந்தனர்.

    இதனை தொடர்ந்து மீண்டும் அவர்கள் சரணாலய அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. பின்னர், மாணவ-மாணவிகளின் சுவாரசியத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டது.இதன் ஒருபகுதியாக மாணவர்களிடம் களிமண்களை கொடுத்த வனத்துறை அதிகாரிகள், வனவிலங்குகளின் உருவத்தை வடிவமைக்கும்படி கூறினர்.

    அப்போது மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் பாம்பு, பறவைகள் ஆகியவற்றின் உருவங்களை களிமண்ணால் வடிவமைத்து அசத்தினார்கள். மேட்டுப்பாளையம் முதுமலை புலிகள் சரணாலயத்தில் முதல்முறையாக பழங்குடியின மாணவ- மாணவிகள் யானை சவாரி மூலம் காட்டை சுற்றிப்பார்த்த சம்பவம், அந்த பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பழங்குடியினர் இன மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்காக இணையதளம் திறக்கப்பட்டுள்ளது.
    • மாணவர்களின் ஆதார் அட்டை, வங்கி கணக்கு மற்றும் தொலைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    பழங்குடியினர் இன மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்காக இணையதளம் (https://tnadtwscholarship.tn.gov.in) திறக்கப்பட்டுள்ளது.

    அனைத்து வகை கல்லூரிகளில் படிக்கும் பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை இணையவழியில் விண்ணப்பிக்கப்பட்டதை சம்பந்தப்பட்ட கல்லூரி பொறுப்பு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். அதே போல் மாணவர்களின் ஆதார் அட்டை, வங்கி கணக்கு மற்றும் தொலைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலும் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
    • 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலும் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியம், கீரைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி,

    1980-ல் அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலும் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.

    தோல்தூக்கி, வள்ளிமதுரை, வாழைத்தோட்டம், இந்திரா நகர், கீரைப்பட்டி புதூர், கீரைப்பட்டி, கௌப்பாறை, எல்லப்புடையாம்பட்டி, செல்வசமுத்திரம், குடுமியாம்பட்டி, ஒடசல்பட்டி, அச்சல்வாடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஏழை மாணவர்கள் இப் பள்ளியில் படிக்கின்றனர்.

    இங்கு படிக்கும் மாணவர்களில் 200 பேர் மலைவாழ் பழங்குடியின (எஸ்.டி) சமூகத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர்.

    கீரைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி 10-ம் வகுப்பு பொது தேர்வில் ஆண்டுதோறும் 100 சதவீத தேர்ச்சிப் பெறும் பள்ளியாகும். அரூர் வட்டாரப் பகுதியில் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு சிறந்த கல்வி வழங்கும் பள்ளியாக உள்ளது.

    இந்தப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் 17 வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், கழிப்பிட கட்டடங்கள், விளையாட்டு மைதானம், சுற்றுச் சுவர், குடிநீர் மற்றும் மின்சார வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன.

    இந்த மையத்தில் சித்தேரி அரசு மலைவாழ் பழங்குடியினர் நல மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், கீரைப்பட்டி, கெளாப்பாறை மற்றும் எல்லப்புடையாம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இந்த மையத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதுகின்றனர்.

    அரூரில் இருந்து சித்தேரி மலை கிராமம் 26 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சித்தேரி மற்றும் அரூரில் அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதைத்தவிர, இந்த 26 கிலோ மீட்டர் தொலைவுக்கு இடைப்பட்ட கிராமங்களில் அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகள் ஏதுமில்லை.

    கீரைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அனைத்து தகுதிகள் இருந்தும், நிதியுதவி இல்லாததால் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இப் பள்ளி தரம் உயர்த்தப்படவில்லை என அப் பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.

    தோல்தூக்கி, வள்ளிமதுரை, வாழைத்தோட்டம், இந்திரா நகர், கீரைப்பட்டி புதூர் ஆகிய கிராமங்களில் இருளர் மற்றும் மலைவாழ் பழங்குடியின (எஸ்.டி) பட்டியல் இனத்தை சேர்ந்த மாணவிகள் அதிகம் பேர் கீரைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கின்றனர்.

    இந்தப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு நிறைவு செய்யும் மாணவிகள் பலர், மேல்நிலைப் பள்ளியில் சேராமல் படிப்பை பாதியில் நிறுத்துகின்றனர். பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துவதால் பழங்குடியின சிறுமிகளுக்கு இளம் வயதில் திருமணம் செய்யும் நிலையுள்ளது.

    அரூர் கல்வி மாவட்டம், கீரைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த தமிழக அரசுக்கு வைப்புத் தொகையாக ரூ. 2 லட்சம் செலுத்த வேண்டும். கீரைப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமப் பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய மக்களால் ரூ. 2 லட்சம் நிதியை திரட்டி, தமிழக அரசுக்கு செலுத்த முடியாத சூழ்நிலையுள்ளது. உயர்கல்வி கிடைக்காத நிலையில், பழங்குடியின மாணவிகளுக்கு இளம் வயதில் திருமணம் செய்கின்றனர்.

    கீரைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் ரூ. 2 லட்சம் நிதியினை செலுத்த முடியாத நிலை இருப்பதாக அரூர் மாவட்ட கல்வி அலுவலருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். எனவே, தமிழக அரசு சார்பில் ரூ. 2 லட்சம் நிதியுதவி செய்து, பழங்குடியின மாணவர்களின் நலனுக்காக கீரைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் பள்ளி மாணவ, மாணவிகள் தருமபுரி மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×