search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
    X

    விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்

    தருமபுரியில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

    • விழாவில் சங்கத்தின் அறங்காவலர் குழு தலைவர் சச்சிதானந்தம், ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட அறங்காவலர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
    • 56 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினர்.

    தருமபுரி,

    தருமபுரி ராகவேந்திரா சுவாமி பிருந்தாவனம் கோவிலில் திருவாலங்காடு இம்முடி அகோரதர்ம சிவாச்சாரியார் நெருஞ்சிப்பேட்டை ஆயிர வைசிய மடத்தின் சார்பாக கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

    இந்த விழாவுக்கு தமிழ்நாடு ஆயிர வைசிய சங்க மாநில தலைவர் வேந்தர் விநாயகா மிஷின்ஸ் டாக்டர் கணேசன், ஆயிர வைசியர் சங்கம் மாநில செயலாளரும், தர்மபுரி மாவட்ட கவுரவ ஆலோசகருமான டாக்டர் ஜெயராமன் ஆகியோர் தலைமையில் நடந்தது.

    விழாவில் சங்கத்தின் அறங்காவலர் குழு தலைவர் சச்சிதானந்தம், ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட அறங்காவலர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் தர்மபுரி மாவட்ட ஆயிர வைசியர் சங்கத்தின் கவுரவ தலைவர்கள் புருஷோத்தமன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டம் சுற்றியுள்ள ஆயிர வைசிய சமுதாயத்தை சேர்ந்த 56 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினர்.

    விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஆயிர வைசிய சங்கத்தின் சேலம் மாவட்ட பொறுப்பாளர்கள் ராமசாமி மற்றும் பாலு, ஓசூர் நகர தலைவர் ராமலிங்கம், பாப்பம்பாடி கிளை தலைவர் ஞானசேகரன், சேலம் மாவட்டம் பொறுப்பாளர் மற்றும் உறுப்பினர்கள், ஆத்தூர் தலைவர் மதிவதனன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் திருக்கைவேல் உள்பட நிர்வாக உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட அறங்காவலர் நெருஞ்சிப்பேட்டை ஆயிர வைசியர் மடம் தலைவர் மணிகண்டன், மாவட்ட செயலாளர்கள் சதீஷ் என்கின்ற அருணாச்சலம், மாவட்ட பொருளாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×