search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி"

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வணிகவியல் சார்பில் கருத்தரங்கு நடந்தது.
    • இளங்கலை வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    சிவகாசி

    சிவகாசி, காளீஸ்வரி கல்லூரியின் இளங்கலை வணிகவியல் துறை சார்பில் இலக்கு நிர்ணயம் குறித்த கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துறைத்தலைவர் குருசாமி வாழ்த்தி பேசினார்.

    கல்லூரி முன்னாள் மாணவரும், சிவகாசி தனியார் நிறுவன மனித வள அதிகாரியான தீன தயாள் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டார். இலக்குகளை நிர்ணயம் செய்வதன் நோக்கம், குறிக்கோள்கள் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். 2-ம் ஆண்டு மாணவி ஜமுனா தேவி வரவேற்றார். 3-ம் ஆண்டு மாணவி ஸ்ரீமலர் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார். 2-ம் ஆண்டு மாணவி ஜெய ராசாத்தி நன்றி கூறினார். இளங்கலை வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் பாபு பிராங்கிளின் நிகழ்ச்சிக்கான 

    • கல்லூரியில் வணிகவியல் விரிவுரை நிகழ்ச்சி நடந்தது.
    • மாணவி ஜெய்தூண் நன்றி கூறினார்.

    மதுரை

    மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி வணிகவியல் நிறுமச் செயலரியல் துறை சார்பில் சிறப்பு விரிவுரை நிகழ்ச்சி நடந்தது. கல்லூரியின் தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார். முதல்வர் ராமசுப்பையா, சுயநிதி பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். செயலாளர் விஜயராகவன் வாழ்த்திப் பேசினார்.

    மாணவர் லோகேஷ் வரவேற்றார். விவேகானந்தர் கல்லூரி துணை முதல்வர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கல்லூரி வளாகத்திருந்து வேலை வாய்ப்பு அல்லது தொழில் முனைவோராக முன்னேறுவது குறித்து விளக்கிப் பேசினார். முடிவில் மாணவி ஜெய்தூண் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை ரங்கராஜ், பியூலா செய்திருந்தனர்.

    • அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.
    • முடிவில் முனைவர் சாந்தி நன்றி கூறினார்.

    தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் முதுகலை வரலாறு மற்றும் ஆராய்ச்சித்துறை சார்பாகப் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் முனைவர் ஜான் பீட்டர் தலைவர் வகித்து பேசினார்.

    வரலாற்றுத் துறைத் தலைவர் கார்குழலி வரவேற்றார்.

    அமெரிக்காவின் தென் கரோலினா மாகாணத்தில் அமைந்துள்ள கிளாபின் பல்கலைக் கழகச் சமூகவியல் பேராசிரியர் முனைவர் சாலமன் செல்வம் கலந்து கொண்டு பாலினச் சமத்து வமின்மையின் தொடக்கமும் அதன் சமூகத்தாக்கமும் ஒரு வரலாற்று அணுகுமுறை என்ற தலைப்பில் ஆய்வுரை வழங்கினார்.

    பூண்டி புஷ்பம் கல்லூரி வரலாற்றுத் துறை இணை பேராசிரியர் ரவிச்சந்திரன், மன்னர் சரபோஜி கல்லூரி வரலாற்றுத் துறை இணை பேராசிரியர் கோவிந்தராஜ், திருச்சி தந்தைப் பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரி வரலாற்றுத் துறை இணை பேராசிரியர் சீதாலெட்சுமி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

    கல்லூரியின் தேர்வு நெறியாளர் மலர்விழி, உள்தர உறுதிக்குழு ஒருங்கிணைப்பாளர் பானுகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    முன்னதாக முனைவர் பூங்கொடி கருத்தரங்க நோக்கவுரை வழங்கினார். முனைவர் மீனாட்சி நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.

    புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி தன்னாட்சி, தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் கல்லூரி, பூண்டி புஷ்பம் கல்லூரி ஆகியவற்றிலிருந்து பேராசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர். அனைவ ருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    முடிவில் முனைவர் சாந்தி நன்றி கூறினார்.

    • கமுதி நம்மாழ்வார் வேளாண்மை கல்லூரியில் மாநில விளையாட்டு போட்டி நடந்தது.
    • இதனை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கிவைத்தார்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பேரை–யூர் நம்மாழ்வார் வேளாண் மை தொழில்நுட்பக் கல் லூரியில் வேளாண்மை கல்லூரிக–ளுக்கு இடையே–யான மாநில அளவிலான விளை–யாட்டுப் போட்டி நடை–பெற்றது.

    இதில் சென்னை, கோவை உட்பட மாநில முழுவதிலும் இருந்து 14 வேளாண்மை கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கடந்த 14, 15 ஆம் தேதிகளில் கிரிக்கெட் போட்டிகளும், பூப்பந்து கூடைப்பந்து, மேஜைப்பந்து, கேரம், எரி–பந்து உள்ளிட்ட போட்டி–கள் நடைபெற்றன.

    நேற்று நடைபெற்ற போட்டிகளை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைதியை வலியுறுத்தும் வகையில் வெள்ளை புறாக்கள் பறக்க–விடப்பட்டன.

    இந்த நிகழ்ச்சிக்கு நம் மாழ்வார் வேளாண் தொழில் நுட்பக் கல்லூரி–யின் தாளாளர் அகமது யாசின் தலைமை தாங்கி–னார். கமுதி வட்டாட்சியர் சேதுராமன், முதுகுளத்தூர் காவல் ஆய்வாளர் இளவரசு, தி.மு.க. மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் பெருநாழி போஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் தனிக்கொடி, முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் போகர் துரைசிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்ன–தாக கல்லூரி முதல் வர் ஜெயக்குமார் வர–வேற் றார். துணை முதல்வர் திருவேணி நன்றி கூறினார்.

    • செல்போன் பார்த்ததை தாயார் திட்டியதால் பரிதாபம்
    • காலை வழக்கம்போல் நிலா கல்லூரிக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு வந்தார்.

    கன்னியாகுமரி:

    பூதப்பாண்டி அருகே உள்ள மேல ஈசாந்திமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கேசவப்பிள்ளை. இவரது மகள் நிலா (வயது18).

    இவர் ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் நிலா கல்லூரிக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு வந்தார். பின்னர் வீட்டில் அவர் நள்ளிரவு செல்போன் பார்த்துக் கொண்டிருந்தார்.

    இதை பார்த்த அவரது தாயார் கண்டித்தார். இந்த நிலையில் இன்று காலை நிலா வீட்டின் பின்பகுதியில் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து பூதப்பாண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணையில், நிலா தீக்குளித்து தற்கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது. கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக மாணவிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட நிலாவின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடக்கிறது.

    • முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு அறிமுகப் பயிற்சி நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளையும் கல்லூரியின் அனைத்து துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    கீழக்கரை

    கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறி வியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ மாணவி களுக்கான அறிமுகப் பயிற்சி மற்றும் ஈடுபாட்டுத் திட்டம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி பட்டறை கல்லூரி முதல்வர் ராஜசேகர் தலை மையில் நடந்தது.

    சிறப்பு விருந்தினராக இளையான் குடி டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரியின் தமிழ் துறை பேராசிரியர் அப்துல் ரஹீம் கலந்து கொண்டு சிறப்பித் தார். அவர் பேசுகையில், ஒவ்வொரு மாணவரும் தன்னுள் இருக்கின்ற தனித் தன்மையை வெளிக் கொணர்ந்தால் சிகரத்தைத் தொட்டு விட முடியும்.

    நீயா நானா என்று போட் டியிடு வதை விட நீயும் நானும் என வாழ்க்கையில் வெல்வதற்கு முதலில் ஒழுக்கம் மிக முக்கியம்.நல்ல ஒழுக்கம் இருக்கும்போது இன்பமான வாழ்க்கை அமையும். தீய ஒழுக்கம் எப் பொழுதும் துன்பத்தையே தரும்.

    ஒற்றுமையையும் ஒழுக் கத்தையும் வள்ளுவம் நமக்கு கற்றுத் தருகிறது. இதனை அனைவரும் உணர்ந்து கொண்டு அதன்படி நடந் தால் உங்களது கனவு நன வாகும் என்றார்.

    கல்லூரியின் முன்னாள் மாணவியும், ராமநாதபுரம் தடவியல் துறையின் சார்பு ஆய்வாளருமான வினோதா கலந்து கொண்டு மாணவ மாணவியரிடையே தன்னம்பிக்கை விடா முயற்சி புகையிலை மற்றும் போதைப் பொருளின் தீமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் முகமது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் பொறுப்பு செந்தில் குமார், ஆராய்ச்சி மேம்பாட்டு துறை முதன்மை யர் செல்வ பெருமாள், முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சேக் தாவூத் உள்பட பலர் கலந்து மாணவ, மாணவியருக்கு புத்தாக்க பயிற்சி அளித்த னர்.

    இந்நிகழ்ச்சி முடிவில் கல்லூரியின் வணிகவியல் துறை பேராசிரியர் செல்வ கணேசன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் அனைத்து முதலாம் ஆண்டு மாணவர் களும் பெற்றோர் களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதற்கான ஏற்பாடு களையும் கல்லூரியின் அனைத்து துறைத் தலைவர் கள் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    • மாணவர்கள் கல்வியில் முழுக்கவனம் செலுத்த வேண்டும்.
    • மாணவர்கள் உரிய நேரத்திற்கு கல்லூரி வரவேண்டும்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் இந்த கல்வியாண்டில் சேர்ந்த முதலாமாண்டு இளங்கலை, இளமறிவியல், இளவணிகவியல்.

    இளவணிக நிர்வாகவியல் மாணவர்களுக்குப் புத்தொளிப் பயிற்சியில்மா ணவர்களுக்கு கல்லூரியில் எவ்வாறு ஒழுக்கமாக இருக்க வேண்டும் பயிற்சி வகுப்பு இரண்டு நாட்கள் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர்மாதவி தலைமை தாங்கினார்.

    கல்லூரியின் மூத்த பேராசிரியர்கள் வேதியியல் துறைத் தலைவர் முனைவர்மீனாட்சிசுந்தரம், கணிதவியல் துறைத் தலைவர் முனைவர்குணசேகரன், தேர்வு நெறியாளர்சு ந்தரராசன், இந்தியப் பண்பாடு சுற்றுலாவியல் துறைத் தலைவர்தங்கராசு ஆகியோர் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்று எடுத்துரைத்தனர்.

    முன்னதாக கல்லூரி முதல்வர் தனது தலைமை யுரையில் "மாணவர்கள் கல்லூரி நாட்களில் சுதந்திரமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் கல்வியில் முழுக்கவனம் செலுத்த வேண்டும் என்றும், கல்வியால் மட்டுமே தனிமனித மற்றும் சமூக முன்னேற்றத்தை அடைய முடியும் என்றும்,

    கல்லூரிக்கு வரும் மாணாக்கர்களின் கண்ணியமான ஆடைகளை அணிவதோடு உரிய நேரத்திற்கு வரவேண்டும். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று கூறினார்."

    இந்நிகழ்வில் அனைத்துத் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர்.

    • கரூர் வேளாளர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளை வரவேற்கும் அறிமுக விழா நடைபெற்றது
    • விழாவிற்கு கல்லூரியின் தலைவர் ராஜேஸ்வரி கதிர்வேல் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் உப்புபாளையத்தில் உள்ள கரூர் வேளாளர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளை வரவேற்கும் விதமாக அறிமுக விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் தலைவர் ராஜேஸ்வரி கதிர்வேல் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். கல்லூரின் அறக்கட்டளை உறுப்பினர் பிரீத்தி கவுதமன் வாழ்த்துரை வழங்கினார்.கல்லூரியின் முதல்வர் மனோசாமுவேல் மாணவிகளுக்கு நல்லதொரு ஆலோசனைகளையும், கருத்துக்களையும் வழங்கினார். முதலாமாண்டு மாணவிகளுக்கு இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாணவிகள் ஊக்கமூட்டும் விதமாக மாணவிகளிடம் உரையாற்றினர். அதனை தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சி மற்றும் பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றது. விழாவின் நிறைவாக முதலாமாண்டு மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தனர். இதில் கல்லூரியின் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவிகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • உடல் மற்றும் உள்ளத்திற்கான நன்மைகள் மாணவ மாணவிகளுக்கு எடுத்துரை க்கப்பட்டது.
    • இயன்றவரை யோகா பயிற்சி செய்து பலன் பெற வேண்டும் என்றார்.

    அவினாசி:

    அவினாசி அரசு கலை -அறிவியல் கல்லூரி மற்றும் பரம்பொருள் அறக்கட்டளை சார்பில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. யோகா பயிற்றுனர் பெத்தண்ணசாமி வரவேற்றார். யோகா பயிற்சியின் அவசியம் குறித்தும், அதன் மூலம் ஏற்படும் உடல் மற்றும் உள்ளத்திற்கான நன்மைகள் மாணவ மாணவிகளுக்கு எடுத்துரை க்கப்பட்டது.

    கல்லூரி முதல்வர் நளதம் பேசுகையில் , வேலைப்பளு மற்றும் வாழ்வில் ஏற்படும் இன்னல்களால் ஏற்படும் மனச்சோர்வினை தடுக்கும் வகையில் யோகா உள்ளது. இயன்றவரை யோகா பயிற்சி செய்து பலன் பெற வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம், நாடி சுத்தி, மஹாரம் போன்ற யோக நிலைகள் , மன அமைதிக்கான தியான பயிற்சிகள் வழங்கப்பட்டது. அனைத்து துறை மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஒருங்கிணைத்த சர்வதேச வணிகத்துறை தலைவர் பாலமுருகன் பங்கு பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

    • கல்லூரியில் ஒரு அறையில் 45 கம்ப்யூட்டர்கள் வைக்க ப்பட்டு பூட்டப்பட்டிருந்தன.
    • 6 கம்ப்யூட்டர்களை திருடிக் கொண்டு தப்பி ஓடினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே மன்னர் சரபோஜி அரசு கல்லூரி அமைந்துள்ளது.

    இந்தக் கல்லூரியில் ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கல்லூரியில் ஒரு அறையில் 45 கம்ப்யூட்டர்கள் வைக்க ப்பட்டு பூட்டப்பட்டிருந்தன.

    இதனை அறிந்த மர்ம நபர்கள் நள்ளிரவில் பூட்டை உடைத்து அறைக்குள் புகுந்தனர்.

    அங்கிருந்து 6 கம்ப்யூட்டர்களை திருடிக் கொண்டு தப்பி ஓடினர்.

    இந்த நிலையில் பணிக்கு வந்த பேராசிரியர்கள் கம்ப்யூட்டர் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உள்ளே சென்று பார்த்த போது 6 கம்ப்யூட்டர்களை மர்ம நபர்கள் திருடி சென்றது அவர்களுக்கு தெரியவந்தது.

    இது குறித்து கல்லூரி முதல்வர் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 1,100 மாணவிகள் பட்டப்படிப்பு படித்து வருகின்றனர்.
    • எம்.பி.ஏ படிப்பதற்கு நீண்டதூரம் சென்று அதிக செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் பாரதிதாசன் மாதிரி உறுப்பு கல்லூரி கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

    இக்கல்லூரியில் பி.ஏ., பி.எஸ்.சி., போன்ற பட்ட படிப்புகள் உள்ளன.

    மேலும், இக்கல்லூரியில் கடந்த 2014-ம் ஆண்டு எம்.பி.ஏ வகுப்புகள் தொடங்கப்பட்டு கடந்த 2022-ம் ஆண்டு வரை நடைபெற்றது.

    இதில் 240 மாணவர்கள் எம்.பி.ஏ. பட்டம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், கடந்த ஆண்டு இக்கல்லூரி அரசு கல்லூரியாக மாற்றப்பட்டது. மேலும், கடந்த ஆண்டு முதல் இக்கல்லூரியில் எம்.பி.ஏ படிப்பு நிறுத்தப்பட்டது.

    இக்கல்லூரியில், தற்போது 1,270 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

    அதில் 1,100 மாணவிகள் பட்டப்ப டிப்பு படித்து வருகின்றனர்.

    கிராமப்புறத்தை மையமாக கொண்டு இயங்கி வரும் இக்கல்லூரியில் எம்.பி.ஏ படிப்பு நிறுத்தப்பட்ட தால் இங்கு பயிலும் மாணவ- மாணவிகள் எம்.பி.ஏ படிப்பதற்கு நீண்டதூரம் சென்று அதிக செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

    எனவே, கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி மீண்டும் இக்கல்லூரியில் எம்.பி.ஏ. பாடத்தை தொடங்க வேண்டும் என பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஸ்ரீ சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரி ஆண்டு விழா நடந்தது.
    • பேராசிரியை ராமலட்சுமி நன்றி கூறினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியின் ஆண்டு விழா கல்லூரி செயலாளர் திலீபன்ராஜா தலைமையில் நடந்தது. கல்லூரி முதல்வர் மல்லப்பராஜ் வரவேற்று ஆண்டறிக்கையை சமர்பித்தார். சிறப்பு விருந்தி னர், ஸ்ரீவில்லிபுத்தூர் துணை காவல் கண்காணிப் பாளர் சபரிநாதன் கலந்து கொண்டார்.

    விழாவில் கடந்த ஆண்டு பல்கலைக்கழக தேர்வில் கல்லூரி அளவில் முதலிடம் பெற்ற மாணவி செல்வகுமாரிக்கு கல்லூரியின் மக்கள் தொடர்பு அலுவலர் பாலகிருஷ்ணன் ரூ. ஆயிரம் ரொக்க பரிசை வழங்கினார். தமிழ் பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவி சீதாலட்சுமிக்கு கல்லூரியின் முன்னாள் தமிழ் பேராசிரியர் முருகேசபாண்டி சார்பில் பரிசு வழங்கப்பட்டது. வணிகவியல் பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவி கலாமணிக்கு கல்லூரியின் முன்னாள் நிர்வாகி ராஜசேகரன் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.

    ஆங்கில பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவி கவிஇந்திரா, கணிதப்பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவி துர்காதேவி, வரலாற்று பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவன் கனகராஜ், அறிவியல் துறையில் முதலிடம் பெற்ற மாணவி கள் தேவி, ஜனனி, மேனகா தேவி, கணிப்பொறி பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவி காளீஸ்வரி ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

    கலை இலக்கிய மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பரிசு பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன. பின்பு கல்லூரி அளவில் சிறந்த மாணவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவன் சந்துருவுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பல போட்டிகளில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்ற மாணவி அட்சயாவுக்கும் மாணவன் கார்்த்திக்ராஜாவுக்கும் நினைவுப்பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன.

    கல்லூரியில் பணிபுரியும் நிர்வாக அலுவலர், முதல்வர் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கல்லூரி செயலாளர் நினைவுப்பரிசு வழங்கினார். முடிவில் பேராசிரியை ராமலட்சுமி நன்றி கூறினார். நிகழ்ச்சியை மாணவிகள் மாதேஸ்வரி, முத்துப்பிரியா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

    ×