search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூர் வேளாளர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளை வரவேற்கும் அறிமுக விழா
    X

    கரூர் வேளாளர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளை வரவேற்கும் அறிமுக விழா

    • கரூர் வேளாளர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளை வரவேற்கும் அறிமுக விழா நடைபெற்றது
    • விழாவிற்கு கல்லூரியின் தலைவர் ராஜேஸ்வரி கதிர்வேல் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் உப்புபாளையத்தில் உள்ள கரூர் வேளாளர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளை வரவேற்கும் விதமாக அறிமுக விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் தலைவர் ராஜேஸ்வரி கதிர்வேல் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். கல்லூரின் அறக்கட்டளை உறுப்பினர் பிரீத்தி கவுதமன் வாழ்த்துரை வழங்கினார்.கல்லூரியின் முதல்வர் மனோசாமுவேல் மாணவிகளுக்கு நல்லதொரு ஆலோசனைகளையும், கருத்துக்களையும் வழங்கினார். முதலாமாண்டு மாணவிகளுக்கு இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாணவிகள் ஊக்கமூட்டும் விதமாக மாணவிகளிடம் உரையாற்றினர். அதனை தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சி மற்றும் பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றது. விழாவின் நிறைவாக முதலாமாண்டு மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தனர். இதில் கல்லூரியின் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவிகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×