அரசு கல்லூரியில் 6 கம்ப்யூட்டர்கள் திருட்டு

கல்லூரியில் ஒரு அறையில் 45 கம்ப்யூட்டர்கள் வைக்க ப்பட்டு பூட்டப்பட்டிருந்தன.6 கம்ப்யூட்டர்களை திருடிக் கொண்டு தப்பி ஓடினர்.
அரசு கல்லூரியில் 6 கம்ப்யூட்டர்கள் திருட்டு
Published on

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே மன்னர் சரபோஜி அரசு கல்லூரி அமைந்துள்ளது.

இந்தக் கல்லூரியில் ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கல்லூரியில் ஒரு அறையில் 45 கம்ப்யூட்டர்கள் வைக்க ப்பட்டு பூட்டப்பட்டிருந்தன.

இதனை அறிந்த மர்ம நபர்கள் நள்ளிரவில் பூட்டை உடைத்து அறைக்குள் புகுந்தனர்.

அங்கிருந்து 6 கம்ப்யூட்டர்களை திருடிக் கொண்டு தப்பி ஓடினர்.

இந்த நிலையில் பணிக்கு வந்த பேராசிரியர்கள் கம்ப்யூட்டர் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உள்ளே சென்று பார்த்த போது 6 கம்ப்யூட்டர்களை மர்ம நபர்கள் திருடி சென்றது அவர்களுக்கு தெரியவந்தது.

இது குறித்து கல்லூரி முதல்வர் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com