என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவிகள் யோகா செய்யும் போது எடுத்த படம்
அவினாசி அரசு கல்லூரியில் யோகா நிகழ்ச்சி
- உடல் மற்றும் உள்ளத்திற்கான நன்மைகள் மாணவ மாணவிகளுக்கு எடுத்துரை க்கப்பட்டது.
- இயன்றவரை யோகா பயிற்சி செய்து பலன் பெற வேண்டும் என்றார்.
அவினாசி:
அவினாசி அரசு கலை -அறிவியல் கல்லூரி மற்றும் பரம்பொருள் அறக்கட்டளை சார்பில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. யோகா பயிற்றுனர் பெத்தண்ணசாமி வரவேற்றார். யோகா பயிற்சியின் அவசியம் குறித்தும், அதன் மூலம் ஏற்படும் உடல் மற்றும் உள்ளத்திற்கான நன்மைகள் மாணவ மாணவிகளுக்கு எடுத்துரை க்கப்பட்டது.
கல்லூரி முதல்வர் நளதம் பேசுகையில் , வேலைப்பளு மற்றும் வாழ்வில் ஏற்படும் இன்னல்களால் ஏற்படும் மனச்சோர்வினை தடுக்கும் வகையில் யோகா உள்ளது. இயன்றவரை யோகா பயிற்சி செய்து பலன் பெற வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம், நாடி சுத்தி, மஹாரம் போன்ற யோக நிலைகள் , மன அமைதிக்கான தியான பயிற்சிகள் வழங்கப்பட்டது. அனைத்து துறை மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஒருங்கிணைத்த சர்வதேச வணிகத்துறை தலைவர் பாலமுருகன் பங்கு பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.






