search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலைத்திருவிழா"

    • சிவகங்கை மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா நிகழ்ச்சி நடந்தது.
    • இதில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாவட்ட அளவி லான கலைத்திருவிழா நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி ரவிக்குமார் (மானாமதுரை), மாங்குடி (காரைக்குடி) முன்னிலை வகித்தனர்.

    இதில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    முதலமைச்சரால் கல்வித்துறையில் அறிவிக்கப்பட்டு வரும் திட்டங்களின் அடிப்படையில், கல்வி பயில்வதில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    மாணவர்களின் திறனை வெளிக்கொணருவ தற்கென தற்போது பள்ளிக்கல்வி துறையில் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் கல்வி திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    அதில் சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் சுமார் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மாவட்டம் முழுவதும் அந்தந்த வட்டார அளவில் பங்கு பெற்றுள்ளனர்.

    இந்த கல்வித்திரு விழாவில் ஒவ்வொரு வகுப்புகளின் பிரிவின் அடிப்படையில் தனிப்போட்டிகளும், குழுப்போட்டிகளும் நடத்தப்பட்டு அதில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

    இதில் முதலிடம் பெறவுள்ள மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கிறார்கள்.

    அதில் வெற்றி பெறும் மாணவர்கள் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் கல்வி சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புக்களையும் பெற உள்ளனர். இதுதவிர, மாநில அளவில் கலந்து கொண்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு எனது சார்பிலும், ஊக்கத்தொகையாக முதல் பரிசாக ரூ.1 லட்சமும், 2-ம் பரிசாக ரூ.50 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும்.

    மாணவர்கள் அனைத்து துறைகளிலும் தலைசிறந்து விளங்கி, எதிர்கால இந்தியாவிற்கு வலு சேர்க்கும் வகையில் தங்களது பங்களிப்பை அளித்து வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன், ஆவின் பால்வளத்தலைவர் சேங்கை மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வெற்றி, தோல்வி என்பது இல்லாமல்தன்னுடைய தனித்திறமையை மாணவ, மாணவிகள்வெளிப்படுத்துவது சிறப்பானது ஆகும்.
    • குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாககுழந்தைகளின் திறமைகளை வெளிக்கொணர்வதன் மூலமாக கலைத்திருவிழா நடத்தப்படுகிறது.

    திருப்பூர் : 

    பள்ளி கல்வித்துறையின் சார்பில் திருப்பூர் ஜெய்வாபாய் மாதிரிநகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர்செல்வராஜ்தலைமையில், மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளை மேயர் தினேஷ்குமார் துவக்கி வைத்து, கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.

    அப்போது மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:- குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாககுழந்தைகளின் திறமைகளை வெளிக்கொணர்வதன் மூலமாக கலைத்திருவிழா நடத்தப்படுகிறது. இந்தக் கலைத் திருவிழா மாநிலம் முழுவதும் ஆங்காங்கே வட்டாரபகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது.

    மாவட்ட அளவில் போட்டிகள்துவக்கி வைத்து, போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாநில அளவில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள். திருப்பூர்மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் போட்டிகளில் பங்கு கொள்வது என்பது ஒரு சிறப்பான நிகழ்வு. வெற்றி, தோல்வி என்பது இல்லாமல்தன்னுடைய தனித்திறமையை மாணவ, மாணவிகள்வெளிப்படுத்துவது சிறப்பானது ஆகும்.

    கலை என்பது உடல், உள்ளம்இரண்டையும் ஒருங்கிணைந்து செயல்படுத்தக்கூடியது. இந்த கலைத்திருவிழா போட்டிகளில் பங்குபெறும் மாணவ ,மாணவிகளுக்கு எனதுவாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

    விழாவில் மண்டலத் தலைவர்கள் உமாமகேஸ்வரி,கோவிந்தராஜ், முதன்மைக் கல்வி அலுவலர்திருவளர்செல்வி, கவுன்சிலர் திவாகரன், உதவி ஆணையர் (பொறுப்பு )செல்வநாயகம், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர்கலந்து கொண்டனர்.

    • அரசு பள்ளி மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக் கொண்டு வர நடைபெறும் கலைத்திருவிழா நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
    • மாணவ, மாணவிகளின் திறனை மேம்படுத்துவதற்கு இன்னும் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது

    திருச்சி:

    அரசு பள்ளிகளில் தங்களின் பிள்ளைகளை சேர்க்கத் தயங்கும் இந்த காலகட்டத்தில் மேற்படிப்பை தொடர கல்லூரிகளில் அரசு கல்லூரி கிடைக்குமா என்ற ஏக்கம் நிறைந்து தான் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரின் வாழ்க்கை பயணம் தொடர்கிறது.

    ஆனாலும் இந்த கொரோனா காலகட்டத்திற்கு பின் அரசு பள்ளியில் சேர்ந்துள்ள மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் அரசு ஒரு புது யுத்தியை கையில் எடுத்திருக்கிறது.

    அரசு பள்ளியில் படிக்கக்கூடிய அனைத்து மாணவிகளுடைய தனித்திறமையை வெளிக்கொண்டு வருவதற்கான புது முயற்சியாக கலைத்திருவிழா என்ற நிகழ்ச்சி தமிழக முழுவதும் அரசு பள்ளிகளில் ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வருகிறது.

    பள்ளிக்கல்வித்துறையின் மூலம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை பொருத்தவரை முதலில் பள்ளிகளில் நடைபெற்றது.

    அதன் பிறகு வட்டார அளவில் ஒரு பள்ளியை தேர்வு செய்து அந்த பள்ளியில் நடைபெற்று முடிந்துள்ளது. இதைத் தொடர்ச்சியாக மாவட்டம், மாநிலம் என ஒவ்வொரு நிலைக்கும் வெற்றி பெற்றவர்கள் சென்று கொண்டே இருப்பார்கள்.

    இந்த கலைத்திருவிழாவை பொறுத்தவரை மாணவர்கள் தங்களிடம் உள்ள எந்த திறமையாக இருந்தாலும் அதை மேடையில் வெளிப்படுத்தலாம். அதன்படி பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, நடன போட்டி, இசை, நாடகம், ஊமை நாடகம், நாட்டியம் என மாணவர்கள் விரும்பியவாறு அவர்களின் திறமைகளை போட்டிகளில் காட்டலாம்.

    இப்படியாக நடைபெற்ற போட்டிகளில் அரசு பள்ளியில் பயிலக்கூடிய மாண,வ மாணவிகள் போட்டி போட்டுக் கொண்டு தங்களின் திறமைகளை வெளிக்காட்டி உள்ளனர்.

    அரசு பள்ளி மாணவர்களும் இவ்வளவு விஷயங்களை வைத்திருப்பவர்களா என்று சொல்லும் அளவிற்கு அவர்கள் அனைத்து போட்டிகளிலும் தங்களின் தனித்திறமையை வெகுவாகவே மெய்ப்படுத்திருக்கிறார்கள். அரசின் இந்த முயற்சிக்கு அனைத்து தரப்புகளில் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    படிப்பு மட்டுமின்றி மாணவர்கள் தங்களிடம் உள்ள தனித்திறமைகளை மேம்படுத்துவதற்கு அரசு பள்ளிகளில் முன்னெடுத்துள்ள இந்தத் திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்த நிலையில் அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் திறனை மேம்படுத்துவதற்கு இன்னும் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக அமைந்திருக்கிறது.

    • வட்டார அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் இன்று தொடங்கி உள்ளது.
    • மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க அழைத்து செல்லப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து அரசு நடுநிலை, இடைநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கவும், நமது பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறையினரிடம் உயிர்ப்புடன் வைத்திருக்கவும் கலைத்திருவிழா போட்டிகள் அரசு பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகின்றது.

    ஆடல், பாடல், மொழித்திறன், மனப்பாடம், இசை வாசித்தல், பலகுரல், ஓவியம் உள்ளிட்ட பல்வேறு வகையிலான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகள் அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு அதில் தேர்வான மாணவர்கள் வட்டார அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனர்.

    வட்டார அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் இன்று தொடங்கி உள்ளது.

    இதில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அந்தியூர் ஐடியல் பள்ளியிலும், 9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாமரத்துப்பாளையம் இந்து கல்வி நிலையத்திலும், பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு நந்தா பொறியியல் கல்லூரியிலும் நடைபெற்று வருகின்றது.

    போட்டிகளை நடத்த ஈரோடு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், ஈரோடு மாவட்ட கல்வி அலுவலர், கோபி கல்வி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்னர். இப்போட்டிகள் வரும் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    இதனையடுத்து மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க அழைத்து செல்லப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிக்கு புளியால் அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
    • தலைமையாசிரியர் நாகேந்திரன், பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் ஜோசப், உதவித் தலைமையாசிரியை விமலா மற்றும் பலர் பாராட்டினர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் புளியால் அரசு பள்ளி மாணவர்கள் அதிக போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றனர். தனிப்போட்டி பிரிவில் 7-ம் வகுப்பு மாணவர் தமிழ் அமுதன் பறை போட்டியில் முதலிடமும், டிரம்ஸ் போட்டியில் ஜெகதீசுவரன் முதலிடமும், ஒயிலாட்ட போட்டியில் ஜீவிதாஷிரி முதலிடமும் பெற்றனர்.

    9-ம் வகுப்பு மாணவர் வாசு பறை இசை போட்டியில் முதலிடமும், டிரம்ஸ் போட்டியில் அருண் முதலிடமும், கீ போர்டு போட்டியில் ஆல்வின் புஷ்பராஜ் முதலிடமும், செவ்வியல் நடனத்தில் சுருதி முதலிடமும், களிமண் சிற்ப போட்டியில் கமலேஷ் முதலிடமும், தனி நடன போட்டியில் முகிதா‌ 2-ம் இடமும், பானை ஓவியப் போட்டியில் ஜெயபாலா 2-ம் இடமும், தலைப்பை ஒட்டி வரைதல் போட்டியில் பால் தினகரன் 2-ம் இடமும், பல குரல் பேச்சு போட்டியில் ஹரி சதிஷ் 2-ம் இடமும் வெற்றி பெற்றனர்.

    குழுப் போட்டியில் விவாத மேடையில் ரித்திஷ்குமார் குழுவினர் முதலிடமும், சமூக நாடகத்தில் முகமது ஹாரிஸ்‌, நித்திஷ்குமார் குழுவினர் முதலிடமும், கிராமிய நடனத்தில் வைஷ்ணவி, நிஷா குழுவினர் 2-ம் இடமும் பெற்றனர். அனைவரும் சிவகங்கை வருவாய் மாவட்ட அளவிலான கலைப் போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சி அளித்த ஆசிரியர்கள் ஜோசப் இருதயராஜ், ஜெயந்தி ஆகியோரையும் தலைமையாசிரியர் நாகேந்திரன், பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் ஜோசப், உதவித் தலைமையாசிரியை விமலா மற்றும் பலர் பாராட்டினர்.

    • துறையூரில் கலைத்திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஸ்டாலின் குமார் எம்.எல்.ஏ. பரிசுகளை வழங்கினார்
    • நிகழ்ச்சியின் போது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கோலாட்டம், கும்மி, உள்ளிட்டவைகளுக்கு மாணவ, மாணவியர் சிறப்பாக நடனமாடினர்

    திருச்சி:

    தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை சார்பில் இந்த ஆண்டு முதல் முறையாக கலைத் திருவிழா என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை அதிகரித்தல், ஆங்கில பேச்சு பயிற்சி மற்றும் பிற துறைகளில் ஆர்வத்தினை உண்டாக்குதல் உள்ளிட்டவைகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று துறையூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் மார்ட்டின் வரவேற்றார்.

    துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் தலைமை தாங்கி கலைத்திருவிழா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன், மாவட்ட அறங்காவலர் நியமனத் குழு தலைவர் மெடிக்கல் முரளி, நகர் மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், ஒன்றிய குழு பெருந்தலைவர் சரண்யா மோகன் தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, மாவட்ட கல்வி அலுவலர் பாரதி விவேகானந்தன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    இதில் துறையூர் வட்டார கல்வி அலுவலரின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கநிலை முதல் மேல்நிலைப்பள்ளி வரை பயிலும் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் போது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கோலாட்டம், கும்மி, உள்ளிட்டவைகளுக்கு மாணவ, மாணவியர் சிறப்பாக நடனமாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பரமக்குடியில் சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளியில் கலைத்திருவிழா நடந்தது.
    • இதனை முருகேசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    பரமக்குடி

    ஒருங்கிணைந்த பள்ளி கல்வி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டார வள மையம் சார்பாக வட்டார அளவிலான கலைத்திருவிழா சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து தலைமையில், நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி முன்னிலையில், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் தொடங்கி வைத்தார். இந்த கலைத் திருவிழாவில் மாணவ, மாணவிகள் அழிந்து வரும் கலை வடிவங்களை மீட்டெடுக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில், பரமக்குடி மாவட்ட கல்வி அலுவலர் முருகம்மாள், வட்டார கல்வி அலுவலர்கள் ரவிக்குமார், சுதாமதி, சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நாகராஜன், வட்டார வளமைய ஒருங்கிணைப்பா ளர்கள் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலைத்திருவிழா போட்டிகள் நடந்தது.
    • 30 பள்ளிகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டனர்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டார அளவிலான 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் கலைத்திருவிழா போட்டிகள், புனித ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    கடந்த 22-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை பள்ளி அளவில் இப்போட்டிகள் நடைபெற்று, அதில் வெற்றி பெற்றவர்கள் இந்த 3 நாள் கலைத் திருவிழாவில் கலந்து கொண்டனர். கமுதி வட்டாரத்தில் உள்ள 30 பள்ளிகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டனர். இதில் 30 வகையான கலைபோட்டிகள் நடைபெற்றன.

    இவ்விழாவிற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஸ்ரீராம் தலைமை தாங்கினார். ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளியின் முதல்வர் ஜெனிட்டாமேரி, இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வட்டார வளமைய பயிற்றுநர்கள் ஜெகநாதன், கந்தசாமி, ராஜரஹீக், சந்தனகுமார், கவுசல்யா, நித்யா, நூருல்குதா மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் டேவிட், ராமச்சந்திரன், நாகராணி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் கலைத்திருவிழாவில் பங்கேற்க உள்ளனர்.
    • மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும்.

    திருப்பூர் :

    மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொண்டு வரும் வகையிலும், அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையிலும் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத்திருவிழா நடத்தப்படுகிறது. அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கலைசார்ந்த பயிற்சிகளும், 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகளும் நடத்தப்படவுள்ளது. பள்ளி அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு, வட்டார அளவில் தொடங்கி நடந்து வருகிறது. வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் கலைத்திருவிழாவில் பங்கேற்க உள்ளனர்.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாவட்டத்தின் அமைச்சர்கள், கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட ஊராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் ஆகியோர் பங்கேற்க செய்ய வேண்டும். மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், வருகிற 7 மற்றும் 9-ந் தேதிகளில் காலை 9 மணிக்கு போட்டிகள் தொடங்கும் என கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • அண்ணாதுரை எம்.பி. தொடங்கி வைத்தார்
    • பல்வேறு போட்டிகள் நடந்தது

    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் கலைத்திருவிழா நடைபற்றது.

    பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கான வட்டார அளவிலான போட்டிகள் கீழ்பென்னாத்தூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கியது. விழாவிற்கு, வட்டார கல்வி அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார்.

    மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம், ஒன்றிய குழு தலைவர் அய்யாக்கண்ணு, பேரூராட்சி தலைவர் சரவணன், கீழ்பென்னாத்தூர் ஒன்றிய ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்க தலைவர் செந்தில்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆசிரியர் கூட்டுறவு சங்க துணை தலைவர் சி.ஏ.முருகன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சி. என்.அண்ணாதுரை எம்.பி கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில், பரதநாட்டியம், வயலின் இசை, பறை இசை, பேச்சு, ஓவியம், கட்டுரை போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

    போட்டிளில் மாணவர்கள் கலந்து கொண்டு கலை திறன்களை வெளிபடுத்தினர். விழாவில், வட்டார வளமைய பொறுப்பாளர்கள், கலை திருவிழா நிர்வாகிகள் பொய்யாமொழி, வேலு, வெங்கடேசன், அய்யாசாமி, முருகன், குமார், ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கீழ்பென்னாத்தூர் ஒன்றிய அளவில் நடைபெறும் கலைத் திருவிழா போட்டிகள் வருகிற 5-ந்தேதி வரை நடைபெறும் என விழா குழுவினர்கள் தெரிவித்தனர்.

    • கலை ஆர்வத்தை வெளிப்ப டுத்தும் மொழித்திறன், வாய்ப்பாட்டு, நடனம், நாடகம், இசைக் கருவிகள் இசைத்தல், கவின் கலை, நுண்கலைகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.
    • அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 1,300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    திருவையாறு:

    திருவையாறு ஒருங்கி ணைத்த பள்ளி கல்வித்துறை மற்றும் வட்டார வள மையம் சார்பில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கலைத்திறனை வளர்க்கும் கலைத்திருவிழா நடந்தது.

    அரசு பெண்கள் மேல்நி லைப்பள்ளி தலைமையாசிரியர் ஹேமலதா, வட்டார கல்வி அலுவலர்கள் விர்ஜின் ஜோனா, தங்கதுரை ஆகியோர் கலை திருவிழாவை தொடங்கி வைத்தனர்.

    இதில் மாணவர்களின் கலை ஆர்வத்தை வெளிப்ப டுத்தும் மொழித்திறன், வாய்ப்பாட்டு, நடனம், நாடகம், இசைக் கருவிகள் இசைத்தல், கவின் கலை, நுண்கலைகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.

    திருவையாறு ஒன்றியத்துக்குட்பட்ட அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 1,300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள்மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை வட்டார வள மைய மேற்பா ர்வையாளர் சரவணன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • திருமங்கலத்தில் நடந்த கலைத்திருவிழாவில் 31 பள்ளிகள் பங்கேற்றன.
    • இந்த கலைத்திருவிழா திருமங்கலம் அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    திருமங்கலம்

    தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2022-2023ம் ஆண்டிற்கான கலைத்திருவிழா திருமங்கலம் அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் 31 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    6-ம் வகுப்பு முதல் முதல் 8-ம் வகுப்பு வரை வரையிலான மாணவர்க ளின் கலைநிகழ்ச்சிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தொடங்கி வைத்தார். பெற்றோர்-ஆசிரியர் சங்க தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தார்.

    மாவட்ட உதவித்திட்ட அலுவலர் கார்மேகம், மாவட்ட கல்வி அலுவலர் செல்வகணேஷ், வட்டார கல்வி அலுவலர்கள் சின்னவெள்ளைச்சாமி, நமச்சிவாயம், பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் ஸ்ரீதேவி சண்முகம் ஆகி யோர் விழாவில் கலந்து கொண்டனர்.

    விழாவில் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், நாடகம், வில்லுப்பாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கர்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    இந்த கலைதிருவிழாவில் 1500 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ- மாணவிகள் மாநில மற்றும் வெளிநாட்டு கலை நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறலாம் என்பதால் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    ×