search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் பேச்சு"

    • சேலத்தில் நடைபெறும் தி.மு.க. இளைஞரணி மாநாட்டுக்காக அமைச்சர் மூர்த்தி புல்லட்டில் சென்று பிரசாரம் மேற்கொண்டார்.
    • வைகை அைண நீர்மட்டத்தை பொறுத்து மேலூர் பகுதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    மேலூர்

    தி.மு.க. இளைஞரணி மாநாடு சேலத்தில் 17ந்தேதி நடக்கிறது. இதற்காக மேலூர் பகுதியில் அமைச்சர் மூர்த்தி புல்லட்டில் சென்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரை மாவட்டத்திற்கு ஜூன் 1-ந்தேதி இரு போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டிய நிலையில், 3 மாதம் கழித்து தற்போது தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    அதே நிலையில் மேலூர் மற்றும் திருமங்கலம் பகுதிகளை சேர்ந்த ஒரு போக பாசன விவசாயிகள் கேட்டுக் கொண்டதின் பேரில், தற்போது குடி நீருக்காக வைகை அணையில் இருந்து 14 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேலூர் பகுதி களைச் சேர்ந்த ஒரு போக பாசன விவசாயிகள் தற்போது பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்ற னர்.

    தற்போது வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட பகுதிக்கு தரவேண்டிய தண்ணீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், அனைத்து பகுதிக்கும் ஏக போகமாக தண்ணீர் திறந்தால் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும்.

    அதனால், வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்திற்கு உரிய தண்ணீர் வழங்கப்பட்ட பின்னர் பருவமழை மற்றும் அணையின் தண்ணீர் அளவை பொருத்து மேலூர் பகுதி ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க அதிகாரிகளின் ஆய்விற்கு பிறகு அரசு உரிய நடவடிக்கையாக முடிவெடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மேலூர் நகர்மன்ற தலைவர் முகமது யாசின், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், சுபேதா அப்பாஸ் ஒன்றிய கழக செயலாளர்கள் குமரன், பாலகிருஷ்ணன், ராஜேந்திர பிரபு, ராஜ ராஜன், கிருஷ்ணமூர்த்தி, பழனி, மாவட்ட கவுன்சிலர் நேரு பாண்டியன், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் நாவினிபட்டி வேலாயுதம், வல்லாளப்பட்டி பேரூராட்சி துணை தலைவர் கலைவாணன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • விருதுநகரில்2-வது புத்தக திருவிழா தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
    • நேரம் கிடைக்கும் போதெல்லாம் புத்தகம் வாசித்து பழக வேண்டும் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் விழாவில் பேசினார்.

    விருதுநகர்

    விருதுநகரில்2-வது புத்தக திருவிழா தொடக்க நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். சீனிவாசன் எம்.எல்.ஏ., சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு புத்தக திருவிழாவை தொடங்கி வைத்தார்.

    பின்னர் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் சார்பில் பரதநாட்டியம், சிலம்பம், தப்பாட்டம், ஓவியம், நாதஸ்வரம், கரகாட்டம், தெருக்கூத்து, வாய்ப்பாட்டு, நாடகம், கிராமிய பாடல், மரக்கால் ஆட்டம், தவில், ராஜா ராணி ஆட்டம், தவில், வில்லிசை, எருது கட்டும் மேளம் உள்ளிட்ட கலை களில் சிறந்து விளங்கிய மொத்தம் 30 கலை ஞர்களுக்கு 2022-23-ம் ஆண்டு மற்றும் 2023-24-ம் ஆண்டுக்கான கலை இளமணி, கலை வளர்மணி, கலைச்சுடர்மணி, கலை நன்மணி, கலை முதுமணி ஆகிய விருதுகள், பொற்கிழிகளை அமைச்சர் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் 2-வது முறையாக கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள பொருட் காட்சி மைதானத்தில் 16.11.2023 முதல் 27.11.2023 வரை 12 நாட்களுக்கு மாபெரும் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. நமக்கு பொது அறிவு, பழைய நினைவுகள், நிகழ்ச்சிகள், புதிய கவிதைகள் இதெல்லாம் கிடைப்பதற்கு புத்தகங்கள் தான் சரியான ஒரு தேர்வு ஆகும். பய ணங்களின் போதும், நேரம் கிடைக்கும் போதெல் லாம் புத்தகங்கள் வாசித்து பழக வேண்டும்.இப்புத்தக திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன. இதில் பல்வேறு துறைகள் சார்ந்த புத்தகங்கள், போட்டித்தேர்வு வழிகாட்டி புத்தகங்கள், பாடநூல் புத்தகங்கள் என, லட்சக் கணக்கான புத்த கங்கள் குவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பாரம்பரிய இசைப் பொருட்கள் கண் காட்சி, அறிவோம் பயில் வோம் பயிலரங்கம், தொல்லியல் துறை மூலம் வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக் கப்பட்ட தொல் பொருட்களின் கண்காட்சியும் இடம் பெற்றுள்ளது. அனைவரும் இந்த புத்தக திருவிழாவில் கலந்து கொண்டு, புத்த கங்களை வாங்கி பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், திட்ட இயக்குநர் தண்டபாணி, விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன், விருது நகர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுமதி ராஜ சேகர், சிவகாசி மாநகராட்சி துணை மேயர் விக்னேஷ் பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கலையரங்கத்தில் உரிமைத்தொகை வழங்கும் விழா நடந்தது.
    • விழாவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார்.

    விருதுநகர்

    விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கலையரங்கத்தில் 2-ம் கட்ட மகளிர் உரிமைதொகை விநியோக தொடக்க நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். சீனிவாசன் எம்.எல்.ஏ., சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து ெகாண்டு புதிய பயனாளிகளுக்கு உரிமைத் தொகை விநியோகத்தை தொடங்கி வைத்தனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் கள ஆய்வு நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு 17,417 புதிய பயனாளிகளுக்கு உரிமைத் தொகைக்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் சாத்தூர் ராமச்சந்திரன் பேசிய தாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 3 லட்சத்து 6 ஆயிரத்து 919 பெண்களுக்கும், இன்று 2-ம் கட்டமாக 17 ஆயிரத்து 417 பெண்களுக்கும் என மொத்தம் 3 லட்சத்து 24 ஆயிரத்து 336 பெண்களுக்கு இந்த கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

    பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கொடுப்பதும், பெண்களின் வாழ்வா தாரத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்க மாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார், விருதுநகர் நகர்மன்றத் தலைவர் மாதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பால் உற்பத்தியை பெருக்குவது கிராமங்களின் வளர்ச்சிக்கு அடிப்படையாகும்.
    • அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை சார்ந்த உறுப்பி னர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஊக்கத்தொகையை வழங்கினார். பின்னர் அமைச்சர் பேசியதாவது:-

    பால் உற்பத்தியாளர் களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு லிட்டருக்கு ரூ.33 என்று உச்சகட்ட விலையை நிர்ணயம் செய்யப்பட்டு, கூடுதல் லாபம் கிடைப்ப தற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பால் உற்பத்தி யாளர்கள், பொதுமக்கள் ஆகிய இருவருக்கும் சமமான அரசாக தமிழக அரசு இருந்து வருகிறது.

    பால் உற்பத்தியை பெருக்குவது கிராமப் புறங்களின் வருவாய் மேம்பாட்டு வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைகிறது. மேலும், பால் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றி யத்தின் சார்பில் ஆண்டு வருமான லாபத்தில் ஒரு லிட்டருக்கு ரூ.0.50 வீதம் உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிட வழிவகை செய்யப் பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் கடந்த 01.01.1983 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ஒன்றியத்தின் கீழ் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்க ளை எல்லையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இவ்வொன்றியத்தின் மூலம் கடந்த ஆண்டு ஈட்டப்பட்ட லாபத்தில் இரு மாவட்டங்களை சார்ந்த மொத்தம் 547 கூட்டுறவு சங்கங்களை சார்ந்த 11,832 உறுப்பினர்களுக்கு ரூ.1,35,35, 653.80 மதிப் பீட்டில் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

    அதேபோன்று இந்த ஆண்டிலும் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 411 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களை சார்ந்த 8,936 உறுப்பினர்களுக்கு ரூ.1,06,07,911 மதிப்பீட்டில் ஊக்கத்தொகை வழங்கப்பட வுள்ளது.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், ஆவின் பால்வளத்தலைவர் சேங்கைமாறன், சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரைஆனந்த், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய தலைவர் மஞ்சுளா பாலசந்தர், மானாமதுரை துணை பதிவாளர் (பால்வளம்) செல்வம், பொது மேலாளர் ஆவின் (காரைக்குடி) ராஜசேகர் காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பி னர்கள் செந்தில்குமார், ஆரோக்கிய சாந்தாராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புனித மைக்கேல் கல்லூரி வெள்ளி விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பேசினார்.
    • ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வி அளிக்க வேண்டும் என்றார்.

    காளையார் கோவில்

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் புனித மைக்கேல் பொறியியல் கல்லூரி உள்ளது .இந்த கல்லூரியை என்ஜினீயர் மைக்கேல் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் தொடங்கினார்.

    இந்த கல்லூரியின் வெள்ளி விழா செயலாளர் பாத்திமா மேரி தலை மையில் நடைபெற்றது. கல்லூரி சேர்மன் ஸ்டாலின் ஆரோக்கியராஜ் வரவேற்று பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி சிறப்புரையாற்றி னார். விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகரன், மாவட்ட காவல் கண்காணிப்பளார் அரவிந்த், லீமா ரோஸ்மார்டின், கல்லூரி சி.இ.ஒ. எஸ்.பிரிட்ஜெட் நிர்மலா ஆகியோர் வாழ்த்தி பேசினார்.

    நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் ஆசி ரியர் தொழில் பயிற்சி கல்லூரியாக தொடங்கப் பட்டது இந்த கல்லூரி. நாளடைவில் பொறியியல் கல்லூரி ஆக வளர்ந்துள் ளது. இதன் மூலம் 25க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளது. இவர்கள் இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாண விகளை பட்டதாரிகளாக்கி உள்ளார்கள்.

    பிற்பட்ட பகுதியில் இத்தகைய கல்லூரிகள் தொடங்குவதால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் இங்கு படிக்க முடியும். கல்லூரிகளும் தரமான நவீன கல்வியை அளிக்க வேண்டும்.இதனால் அவர்களது வாழ்க்கையில் இதன் மூலம் ஒளி ஏற்ற முடியும்.

    இந்த நிறுவனம் மேலும் வளர்ந்து கல்விக்கான நல்ல பணிகளை செய்திட வேண்டும் என்று வாழ்த்து கிறேன். மிகவும் சிரமமான சூழ்நிலையில் பொறியாளர் மைக்கேல் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த கல்லூரி தற்பொழுது வளர்ந்து வருவது பாராட்டுக்குரியதாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.ஆர். பெரியகருப்பன், பி.மூர்த்தி ஆகியோர் 25 ஆண்டுகளாக கல்லூரியில் பணியாற்றிய முதல்வர், பேராசிரியர் மற்றும் அலுவலர்களுக்கும் நினைவு பரிசுகளை வழங்கி னார்கள்.

    கல்லூரி முதல்வர் கற்பகம் நன்றி கூறினார். முன்னதாக கல்லூரி மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடை பெற்றது. வெள்ளி விழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரியின் சேர்மன் டாக்டர் எம்.ஸ்டாலின் ஆரோக்கியராஜ் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் கல்லூரி ஒருங்கிணைப் பாளர் விஸ்வநாதன் மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஜோன்ஸ்ருசோ உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • எத்தனை ஆண்டுகள் ஆனாலும் யாராலும் வீழ்த்த முடியாத இயக்கம் தி.மு.க. என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார்.
    • துணை அமைப்பாளர்கள் ரமேஷ் கண்ணா, குமரகுரு, சத்தி யேந்திரன், கோபிநாத், தௌபீக் ரகுமான் உள் ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் தி.மு.க. மாவட்ட இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. மாவட்ட அமைப் பாளர் சம்பத் ராஜா தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் ராஜா, இன்பா, ரகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்து ராமலிங்கம், பரமக்குடி முருகேசன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க.வின் நம்பிகை யாக இருப்பது இளைஞரணி.இளைஞரணி நிர்வாகிகள் வீடு, வீடாக சென்று தி.மு.க. ஆட்சியின் திட்டங்களை எடுத்துக்கூறி இளை ஞர்களை இணைக்க வேண்டும்.

    தி.மு.க.வை வீழ்த்தி விடாலாம் என நினைக்கி றார்கள். ஆனால் அது எத்தனை ஆண்டுகள் ஆனா லும் நடக்காது. யார் பெரியவன் என்ற சண்டையில் தான் பா.ஜ.க.-–அதி.மு.க. கூட்டணி முறிந்துள்ளது. இது நிரந்தரமல்ல. நாளையே சேர்ந்து விடுவார்கள். அதை பற்றி நமக்கு கவலையில்லை.

    முதல்-அமைச்சரின் செயல்பாட்டை மக்களிடம் கொண்டு சென்று 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் துணை அமைப்பாளர்கள் ரமேஷ் கண்ணா, குமரகுரு, சத்தி யேந்திரன், கோபிநாத், தௌபீக் ரகுமான் உள் ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மாநில இளைஞரணி மாநாட்டில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பது, தொகுதி வாரியாக கலைஞர் நூலகம் அமைப்பது, இல்லம் தேடி இளைஞரணி உறுப்பி னர்கள் சேர்ப்பது, மாரத் தான் போட்டி நடத்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டது.

    • குடும்பத்தினருடன் கலந்து கொண்டு தேவைகளை முதல்-அமைச்சரிடம் பெற்று பயனடைய வேண்டும்.
    • மண்டபத்தில் 18-ந்தேதி நடைபெறும் மீனவர்கள் மாநாட்டில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட–ரங்கில் மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச் சர் அனிதா ஆர்.ராதாகி–ருஷ் ணன் தலைமையில், கலெக் டர் விஷ்ணு சந்திரன் முன்னிலையில் மீனவர்களு–டனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் அமைச் சர் அனிதா ஆர்.ராதாகி–ருஷ்ணன் மீனவர்களின் கோரிக்கை குறித்து கேட்ட–றிந்தார். பின்னர் அவர் கூறி–யதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் ராமநாதபுரம் மாவட்டத் திற்கு 18.08.2023 அன்று வருகை தந்து மீனவர்களுட–னான மாநாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மீனவர்க–ளின் கோரிக்கைகளை நேர–டி–யாக சந்தித்து கேட்டறிகி–றார். மேலும், வளைகுடா பகுதியில் மீன்பிடி தொழி–லையே பிரதான தொழிலாக இருந்து வரும் மக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் பாது–காத்து நலன் காக்கும் முத–லமைச்சராக தமிழ்நாடு முத–லமைச்சர் இருந்து வருகிறார்.

    அவர் ராமநாதபுரம் வருகை தரும் தினத்தில் மீனவர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை வழங்க உள்ளார். அதன் முன்னேற் பாடாக ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் சங்க பிரதிநிதிகளை சந்தித்து அவர்களிடம் முக்கிய தேவை–களை குறித்து கேட்டறி–யப்பட்டது. இந்த–நிலை–யில் 20-க்கும் மேற் பட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

    அதில் குறிப்பாக மீன்பிடி இறங்கு தளத்தில் உட்கட்ட–மைப்பு மேம்படுத்துதல், டீசல் மானியம் உயர்த்தி தர வேண்டுதல், மீன்பிடி தடைக்காலம் நாட்களை குறைக்க வேண்டுதல், இலங்கை அரசால் பிடிக்கப் படும் படகுகளை மீனவர்க–ளுடன் சேர்த்து விடுதலை செய்ய வேண்டுதல், மீனவர் க–ளுக்கான ஓய்வூதி–யம் வயது வரம்பை உயர்த்து–தல், அரசு நலத்திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் பதிவு முறை இணையதளத்தில் ஏற்படும் தவறுகளை உட–னுக்குடன் சரி செய்திட வேண்டுதல்,

    நீண்ட நாளாக மீனவர்கள் குடியிருக்கும் பகுதியில் மீனவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டுதல் போன்ற கோரிக்கைகள் முன்வைத்ததில் இணைய–தளத்தில் பதிவேற்ற முறை–யில் ஏற்பட்டுள்ள தவறு–களை சிறப்பு முகாம் அமைத்து ஒருவார காலத்திற் குள் சரி செய்து அரசு நிவா–ர–ணத்தொகை பெறாத–வர்களுக்கு வழங்கிட நட–வடிக்கை மேற்கொள்ளப்ப–டும்.

    அதேபோல் மீன் இறங்கு தளம் மற்றும் மீனவர் குடி–யிருப்பு பகுதிகளில் மீன் வளம் மற்றும் மீனவர் நலத் துறையின் மூலம் உயர்மட்ட மின் விளக்குகள் அமைத்து தரப்படும், சாலை வசதிகள், குடிநீர் குழாய் இணைப்புகள் மாவட்ட நிர்வாகம் மூலம் செய்து கொடுக்கப்படும். மேலும் மீனவர்களுக்கான முக்கிய கோரிக்கைகள் மற்றும் முக்கிய திட்டப்ப–ணிகளை முதலமைச்சர் வழங்க உள்ளார்.

    எனவே 18.08.2023 அன்று நடைபெறுகின்ற மீனவர்கள் மாநாட்டில் குடும்பத்தினருடன் வந்து கலந்து கொண்டு தங்கள் தேவைகளை முதலமைச்சரி–டம் பெற்று பயனடைய வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து தங்கச்சிமடம் கடற்கரை பகுதியில் புதிய மீன்பிடி இறங்குதளம் அமைப்பதற்கும் மற்றும் குந்துகால், நாலுபனை, பாம்பன் பகுதியில் உள்ள மீன்பிடி இறங்குதளத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் (ராமநா–தபுரம்), செ.முருகேசன் (பரமக்குடி), சென்னை தலைமை பொறியாளர் மீன்பிடி துறைமுகம் வி.–ராஜூ, மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, கூடுதல் காவல் கண்காணிப் பாளர் காந்தி, உதவி கலெக் டர் (பயிற்சி) சிவானந் தம், மீன்வளத்துறை துணை இயக்குநர்கள் பிரபாவதி, காத்தவராயன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ரவிச்சந்திர ராமவள்ளி மற்றும் அரசு அலுவலர்கள், மீனவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சாலை விதிகளை பின்பற்றி மாணவர்கள் சைக்கிள்களை இயக்க வேண்டும் என்று விழாவில் அமைச்சர் பேசினார்.
    • சிவகங்கையில் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    சிவகங்கை

    சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு மாணவி களுக்கு சைக்கிள்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    விலையில்லா சைக்கிள் கள் வழங்கும் திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் 2022-23ம் கல்வியாண்டில் 11-ம் வகுப்பு பயின்ற மாணவ-மாணவி களுக்கான விலையில்லா சைக்கிள் வழங்கும் அடிப் படையில் மாவட்டத்திலுள்ள 68 அரசு பள்ளிகள் உள்ளிட்ட 105 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக ளில் பயிலும் 4,270 மாண வர்கள் மற்றும் 6,323 மாணவிகள் என 10 ஆயிரத்து 593 மாணவர் ளுகக்கு சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. இதில் மாணவிகளுக்கு தலா ரூ.4 ஆயிரத்து 760 மதிப்பீட்டிலும் மாணவர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் 900 மதிப்பீட்டிலும் என சைக்கிள்கள் வழங்கப் பட உள்ளன.

    அதன் தொடக்கமாக இன்றைய தினம் சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 210 மாணவிகளுக்கு ரூ.9 லட்சத்து 99 ஆயிரத்து 600 மதிப்பீட்டில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இதனைத்தொடர்ந்து, அனைத்து பள்ளிகளிலும் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.

    சூற்றுச்சூழலை பாது காப்பதற்கும் அடிப்படை யாக சைக்கிள்கள் விளங்கி வருகிறது. இன்றைய தினம் இந்நிகழ்ச்சிகளின் மூலம் விலையில்லா சைக்கிள் களை பெற்றுள்ள மாணவர் கள் அனைவரும் சாலை விதிகளை பின்பற்றி, முறையாக சைக்கிள்களை ஓட்ட வேண்டும்.

    இதுபோன்று மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் மூலம் பயன்பெற்று வரும் மாணவர்கள் திட்டங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.இந்நிகழ்ச்சியில், காரைக் குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி, சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மஞ்சுளா பாலசந்தர், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, நகர்மன்ற உறுப்பினர்கள் மகேஷ் குமார், விஜயகுமார், பள்ளி தலைமையாசிரியை சிவமணி, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    • முதல்-அமைச்சர் தொலைநோக்குடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்று அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
    • பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்வதற்கென நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள் என்றார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் ரூ.21.07 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 2 வளர்ச்சித்திட்ட பணிகளை அமைச்சர் பெரியகருப்பன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை தொலை நோக்கு பார்வையுடன் செயல்படுத்தி வருகிறார். அது மட்டுமின்றி, பொது மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்திடும் பொருட்டு, அனைத்துப் பகுதிகளிலும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கென துறை ரீதியான உத்தரவுகளை பிறப்பித்து, அதற்கான நடவடிக்கை களை சிறப்பாக மேற் கொண்டு வருகிறார்கள்.

    அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்கி வருவது மட்டுமின்றி, அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளிலும் அடிப்படை வசதிகளை மேம்பாடு அடையச் செய்வதற்கான பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பொதுமக்களின் அடிப்படைத்தே வைகளை நிவர்த்தி செய்வது ஒவ்வொரு மக்கள் பிரதி நிதிகளின் கடமையாகும். ஆகவே, தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் தங்களது கிராமங்களின் அடிப்படை கூடுதல் தேவைகள் குறித்து, எடுத்துரைத்து, அதனை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை பொது மக்கள் மேற்கொள்ள வேண்டும். அதில் தகுதியான கோரிக்கைகள் மீது உடன் நடவடிக்கைகள் மேற்கொண்டு அதற்கான பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி, சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஸ்குமார், சத்யன் மேலவண்ணாயிரிப்பு ஊராட்சி மன்றத்தலைவர் ஜோதி, ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் பழனிச்சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் சின்னம்மாள், உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் 342 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு பேசினார்.

    மதுரை

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு 2 ஆண்டு நிறைவு பெற்றது. இதையொட்டி அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மதுரையில் இன்று நடந்தது.

    கலெக்டர் அனீஷ்சேகர் தலைமை தாங்கினார். மேயர் இந்திராணி,மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு 342 பயனாளி களுக்கு ரூ.2 கோடியே 62 லட்சத்து 21 ஆயிரத்து 116 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கொள்கை வேண்டும். சமூகநீதி, சமத்துவம், எல்லோருக்கும் வாய்ப்பு, கல்வி எல்லோருக்கும் எல்லாம் என்று முதல்-அமைச்சர் கூறும் அடிப்படை இலக்கு எங்கள் அரசின் முக்கியமாகும்.

    நிதி பற்றாக் குறையில் இருந்த நிலையை மாற்றி நிதி பற்றாக்குறையை குறைத்து தி.மு.க. அரசு மேலும் ஒரு லட்சத்திற்கும் மேலான புதிய திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. இது தவிர சட்டமன்ற உறுப்பி னர்கள் மூலம் உண்மையான பயனாளிகளை தேர்வு செய்து அவர்களுக்கு உரிய பயன்களை பெற்று தருவதும் கடமையாகும்.

    அரசின் செயல்பாடுகள் ஒருபுறம் இருக்க நான் எனது சொந்த பணத்தில் ரூ.40 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைத்து தந்திருக்கிறேன். 54 மாற்று திறனாளி பயனாளிகளுக்கு உதவி செய்திருக்கிறேன். 18 மாற்று திறனாளிகளுக்கு 3 சக்கர நகரும் வண்டிகளுக்கு ஏற்பாடு செய்து தந்திருக்கிறேன்.

    தமிழக அரசு எல்லா வகையிலும் மக்களுக்கு சென்றடைய கூடிய திட்டங்களை செய்து வரு கிறது. ஆனால் மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான திட்டங்களை செய்து கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர் பாண்டிச் செல்வி மிசா பாண்டி, வக்கீல் பொன்வசந்த், மேலமாசிவீதி சரவணன், ராஜேந்திரன், ஐ.டி.விங் சதாம் உசேன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • தி.மு.க. ஆட்சியில் புதிதாக 25 அரசு தலைமை மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளது.
    • அரசு மருத்துவமனை புதிய கட்டிட அடிக்கல் நாட்டுவிழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.40 கோடி மதிப்பில் 227 படுக்கைகள் கொண்ட நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், சுப்பிரமணியன் ஆகியோர் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினர்.

    விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் 90 சதவீதத்திற்கும் அதிக மான மக்கள் தொழிலாளர்க ளாக உள்ளனர். அதனால் தான் பிற இடங்களில் மாவட்டத்திற்கு ஒரு தலைமை மருத்துவமனை உள்ள நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக் கோட்டை தலைமை மருத்துவமனையாகவும், ராஜபாளையம் அதற்கு இணையான மருத்துவ மனையாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கடந்த காலத்தில் 18 மாவட்ட தலைமை மருத்துவ மனைகளே இருந்தன. தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 22 மாதத்தில் ரூ.1,038 கோடி மதிப்பில் புதிதாக 25 அரசு தலைமை மருத்துவ மனைகள் உருவாக்க் பட்டுள்ளது. கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இந்தியாவிலேயே அதிக பயனாளிகளை கொண்டு தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ. தங்கபாண்டியன், தனுஷ்குமார் எம்.பி., சுகாதார பணிகள் இணை இயக்குநர் முருகவேல், நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஒன்றிய தலைவர் சிங்கராஜ், மாவட்ட விளையாட்டு மேம்பட்டு பிரிவு அமைப்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    எம்.எல்.ஏ. தங்கபாண்டி யன் தேர்தல் நேரத்தின்போது ராஜபாளையம் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும் என வாக்கு றுதி அளித்திருந்தார். அதன் அடிப்படையில் தற்போது ரூ.40 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணி நடந்தது. எம்.எல்.ஏ.வின் நடவடிக்கைக்கு தொகுதிமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • நூலக கட்டுமான பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம், பூதலூரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பேரூராட்சிகள் துறை சார்பில் பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    விழாவுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினாா். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.எல்.ஏ.க்கள் துரைசந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் பூதலூர், திருவையாறு, தஞ்சாவூர் ஒன்றியங்களைச் சார்ந்த 214 ஊரக குடியிருப்புகளுக்கு அதில் வசிக்கும்
    2 லட்சத்து 25 ஆயிரத்து 453 மக்கள் பயன்பெறும்வகையில் ஜல் ஜீவன் மிஷின் திட்டத்தின் கீழ் ரூ. 248.67 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம், திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, மேல திருப்பந்துருத்தி ஆகிய பேரூராட்சிகளில் நூல் நிலைய புதிய கட்டிட பணிகள், திருக்காட்டுப்பள்ளி மற்றும் திருவையாறு புதிய நவீன பஸ் நிலையங்கள் கட்டும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டி தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, மேலதிருப்பந்துருத்தி, நூலக கட்டுமான பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது. இடம் தேர்வு செய்து கொடுத்த உடன் பணிகள் தொடங்கும்.

    திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையத்துக்கு இடம் தேர்வு செய்து கொடுத்தவுடன் பணிகள் தொடங்கி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது கடந்த 20 மாதத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு குடிநீர் திட்டங்களுக்கு ரூ.38 ஆயிரத்து 801 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.

    கோவை, சேலம், திருநெல்வேலி, சங்கரன்கோ வில், புளியங்குடி, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க திட்டங்கள் தீட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இன்று அடிக்கல் நாட்டப்படும் குடிநீர் திட்டப்பணிகள் 2024 ஆகஸ்டு மாதத்தில் முடிக்கும் வகையில் திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

    திருவையாறு பேரூராட்சியை நகராட்சியாக்க வேண்டும் என்று கூறினார்கள்.

    இதுகுறித்து முதல்-அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். தஞ்சை மாவட்டத்தில் இருந்து எந்த கோரிக்கை வந்தாலும் அதை நிறைவேற்றுவதற்கு எதுவும் தடையாக இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் முரளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×